இது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக எழுதினேன். பலரையும் கவர்ந்தது இந்தப் பதிவுகள். அதையே இந்த மின்னூலின் முதல் கட்டுரையாகப் போட்டிருக்கிறேன். ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ போலவே இதுவும் படிப்பவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
ரஞ்சனி நாராயணன்