"

இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது உலக அமைதி வேண்டும் எனக் குரல் கொடுத்தார். இரண்டாம் உலக யுத்தத்தில் காயமடைந்த, உடல் ஊனமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் தொடருங்கள் என தெம்பு ஊட்டினார்.

அணு ஆயுதங்கள் வேண்டாம் எனக் கூறினார். அணு சக்தியை ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதுவே சர்வதேச அளவில் உலக அமைதியை ஏற்படுத்தும். அணு சக்தி ஆக்கத்திற்கே, அழிவிற்கல்ல என உலகம் முழுவதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆதரவு திரட்டினார். ஹெலன் கெல்லர் இதற்கு ஆதரவு தெரிவித்தார். கட்டுரைகள் எழுதினார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு அவர் டிசம்பர் 17, 1947 இல் நன்றி தெரிவித்து ஹெலன் கெல்லருக்குக் கடிதம் எழுதினார்.

ஒரு நாள் ஹெலன் கெல்லரை அவரது நண்பர் பார்க்கச் சென்றார். உங்களுக்கு விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும் என அவர் கேட்டார். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று சொல்வார் என அந்த நண்பர் எதிர்ப்பார்த்தார். இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என ஹெலன் கெல்லர் பதில் அளித்தார். யுத்தத்தை அவர் வெறுத்தார். உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்பினாார்.

License

Icon for the Public Domain license

This work (பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் by nat123 and ஏற்காடு இளங்கோ) is free of known copyright restrictions.

Share This Book