"

ஹெலன் கெல்லர் புத்தகங்களை விரும்பிப் படித்தார். அவர் பிரெய்லி எழுத்துக்களில் வெளிவந்த புத்தகங்களை வாங்கிப் படித்தார். ஆனி சல்லிவன் அரசியல், வரலாறு, தத்துவம் சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதோடு படித்தும் காட்டினார். புத்தகங்கள் தந்த இன்பம் ஹெலனுக்கு மகத்தானதாக இருந்தது.

“என் மவுனம் நான் வாசித்த

புத்தகங்களின் சாரத்தால் ஆனது.”

என ஹெலன் கெல்லர் புத்தகங்கள் வாசிப்பதையும், நேசிப்பதையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஜெர்மன், பிரெஞ்ச் இலக்கியங்களையும், சேக்ஸ்பியரின் நாடகங்களையும் படித்தார். கவிதைகள் என பலவற்றை விரும்பி படித்தார். மனிதனின் பரிணாமம், உலகம், மனிதனின் இடப்பெயர்ச்சி என பல சமூகம் சார்ந்த புத்தகங்களையும் படித்தார். புத்தகங்கள் அவரது வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் சிறந்தப் பேச்சாளராக மாறுவதற்கும் உதவியது.

License

Icon for the Public Domain license

This work (பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் by nat123 and ஏற்காடு இளங்கோ) is free of known copyright restrictions.

Share This Book