"

ஹெலன் கெல்லருக்கு நன்கு உணர்ந்து கொள்ளும் மோப்ப சக்தி இருந்தது. அவர் பொருட்களின் வாசனையை முகர்ந்துப் பார்த்து அது என்ன என்பதை எளிதில் கூறிவிடும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். அவருக்கு கைவிரல் எப்படி கண்ணாக செயல்பட்டதோ அது போலவே மோப்ப சக்தியும் பொருட்களைக் கண்டறிய உதவியது.

ஹெலன் கெல்லர் தான் சென்ற நாட்டின் மண்ணின் வாசனையைக் கொண்டு அது எந்த நாடு என்பதைக் கூறிவிடுவார். ஒருவர் நடந்து வரும் போது ஏற்படும் அதிர்வைக் கொண்டே அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விடுவார். நடந்து வரும் அதிர்வைக் கொண்டே குணத்தைக் கண்டுபிடித்து விடுவார். ஒருவர் தொடுவi கண்டு அவரின் குணத்தைக் கண்டுபிடித்து விடுவார். கையை குலுக்கும் போதே அவர் நல்ல எண்ணம் கொண்டவரா அல்லது கெட்ட எண்ணம் கொண்டவரா என்பதைக் கண்டுபிடித்து விடுவார்.

மோப்ப ஆற்றலைக் கொண்டு பொருட்களை கண்டுபிடிப்பது போல், அதிர்வுகளை கொண்டு ஆட்களையும், விலங்குகளையும் கண்டுபிடித்தார். அவர் மிருகக்காட்சி சாலைக்கு சென்ற போது கூண்டின் உள்ளே இருக்கும் விலங்கின் குரலை வைத்து அது என்ன விலங்கு என்பதைக் கூறிவிட்டார். அவரால் கேட்க முடியாவிட்டாலும், கூண்டின் கம்பியில் ஏற்படும் அதிர்வை வைத்து அது எந்த மிருகத்தின் குரல் என்பதைக் கண்டறிந்து கூறும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். சாதாரண மனிதர்களைவிட பார்வையற்ற, காது கேளாதவர்களுக்கு இது போன்று மோப்ப உணர்வும், அதிர்வை உணரும் ஆற்றலும் அதிகம் தேவைப்படுகிறது. இதனை சரியாக ஆளுமை கொள்வதன் மூலமே வாழ்க்கையை எளிமையாக நடத்த முடியும்.

License

Icon for the Public Domain license

This work (பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் by nat123 and ஏற்காடு இளங்கோ) is free of known copyright restrictions.

Share This Book