கூழாங்கற்களின் வீட்டில் இருப்பதால் எப்படியோ, இணைய இணைப்பு வாய்ப்பு கிடைத்ததால், சில படங்கள், இயக்குநர்கள் குறித்த விவரங்களை வேர்டு கோப்புகளாக மாற்றி வைத்துள்ளேன்.
படிக்க புத்தகங்களே இல்லாத நிலையில் ஏதாவது செய்யவேண்டாமா,பேயோன் பக்கம் சென்று கிடைத்த நூல்களை தரவிறக்கம் செய்தேன். ஸமீரா எழுதியுள்ள நூலை ஒரு தளத்தில் கொடுத்து மின்னூலாக மாற்றிக்கொள்ளலாமா என்று நினைத்துள்ளேன்.
தனியாக புத்தகம் போட்டு விற்பது எல்லாம் முடியாத ஒன்று. ஸமீராவும் இதற்கு அனுமதியளித்துவிட்டார். பிறகென்ன? அனுப்பி வைத்துவிட வேண்டியதுதான். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் வெளியில் பரவும்.
அமைப்பில் இயங்குவது குறித்து கடும் சங்கடம் ஸமீராவிற்கு இருக்கிறது. அது அவரின் முகத்திலேயே நான் பார்த்தேன். தனிநபரின் குற்றச்சாட்டு அவரின் நிர்வாகத்தின் கீழுள்ள அமைப்பின் நம்பகத்தன்மையை குலைக்க போதுமானது என்று கூழாங்கல் கண்ணீர் விட்டு கரைந்தார்.
கூழாங்கல்லும்,கலைத்தொப்பியும் இணைந்த புள்ளி முக்கியமானது. பணம் என்ற சொல்லையே கேட்காமல் தான் அன்பு என்ற பெயரில் சங்கிலி போட்டு கட்டுப்பாட்டிற்குள் வைத்து உறிஞ்சப்படுவதை உணராதவர். பொதுநல ஆன்மா பள்ளிக்காக ஊர் முழுக்க கடன் வாங்குகிறார் என்று என்னவொரு புகழ்ச்சிப்பாடல்கள், கலைத்தொப்பி பிள்ளைத்தமிழ் பலரும் இயற்றுகிறார்கள். இவருக்காகத்தான் நான் வேலை செய்கிறேன் கங்காணிக்காக அல்ல என்கிறார் கூழாங்கல். நிஜமாகவும் இருக்கலாம்