"

டைட் ஆழமான இந்த சமுதாயம் நாம் இல்லையென்றால் என்ன ஆயிருக்கும்? என்று சிந்தனையில் சமைந்திருந்தபோது, லூசின் குதூகல குரல் கேட்டது. ஆ.. கட்டுமரம், ஆ.. மஞ்சத்துண்டு, ஆ.. கடலு என கானாமெட்டில் சித்தரைப்போல பாடிவந்தார்.

‘’பாத்தீங்களா டைட் தம்பி, கட்சு எப்படி கடுச்சிட்டான் பாத்தீகளா?’’

உடனே டைட் ‘’கட்சு இல்லடா கட்ஜூடா ஆரிய மண்டையா, அதென்னடா உங்களுக்கு மட்டும் இந்த தமிழ் மேல அப்படி ஒரு வெறி?’’

‘’இந்தாப்பாரு என்னப்பத்தி என் தலீவரப்பத்தி அவதூறு பண்ணுணீனா நா புரட்டொலிக்கு கடிதம் எழுதி உன்ன பத்தி கண்டபடி எழுதவப்பேன், அப்பறம் எதுக்கு வழக்குரைஞர் அணி, போடுவோமுல கேச யாருகிட்ட?

‘’ஆமா, தபால் அட்டையெல்லாம் கெடைக்கறதில்லையாமா? நிரந்தர முதல்வருக்கும், கட்டுமரத்துக்கும் மட்டும் எப்படி குறையாம இருக்குதாம்?’’

‘’ யோவ் என்ன தைரியம்யா உனக்கு, கொழுப்பு அப்படீங்கறயா? மவுண்ட்ரோட்ல மறியல், நாலு பஸ்ஸ ரெண்டு லிட்டர் பெட்ரோல் ஊத்தி கொழுத்துவம்டா ’’ என பெரும் கோபத்தில் திமிறினார் லூஸ்.

‘’டேய் இட்லிய ஏண்டா இடியாப்பமாக்கி அதிரசம் பிழியற? போஸ்ட் கார்ட சொன்னன்டா’’ என பம்மினார் டைட்.

‘’இங்கபாரு, தேசிய கட்சி ஏதாவது புத்தகத்த படிச்சிட்டு ஏதாவது லோலாயமா பேசினே …. வீட்டுக்கு ஆட்டோ வந்துரும் பாத்துக்க’’

‘’ஒத்த வார்த்தைக்கு எதுக்குடா.. ஆட்டோவல்லாம்.. நா பஸ்லயே போய்க்கறன்’’ என தன்னடக்கமாக மாறினார் டைட்.

‘’நீ ஏறிப்போறக்கு இல்ல நைனா ஆட்டோ, உம்மேல ஏறி முதிக்கற ஆளுக வருவாங்க பஸ்ல வந்தா எனர்ஜி லாசாயிடுமல்ல, பீ கேர்லஸ் தேசியம்’’ என்று ஜிலேபியை வாயில் அப்பி முழுங்கினார் லூஸ்.

ஆகா, வாயத்திறந்தா நம்மு மேல வான்தாக்குதல் அளவுக்கு வில்லங்கம் வளருதே என யோசித்தவரை சிந்தனையை கலைக்கிறார் லூஸ் கழுதைக்குரலில்.

‘’ஆட்டோ மட்டுமல்ல, ஷாக்கா படையும் தயாராயிச்சு, அவனவனெல்லாம் தம் பேரப்புள்ள வெச்சுருக்கற, முன்னாடி தான் பள்ளிக்கொடத்துக்கு போட்டுபோன துணிய தேடி எடுத்து போட்டுக்கிட்டு குச்சிய எடுத்துக்கிட்ட வந்து தெருவுல நிக்கிறானுகப்பா… இனி நீ காந்தின்னா ரத்தவாந்திதாம் பாத்துக்க’’

‘’எனக்கு இன்னுமே கட்டுமரம், கடலு, தண்ணி ஹேங்ஓவரே தீரலியேப்பா’’ என சியாவனப்பிரகாசத்தை வாயில் வழித்துப்போட்டு வெந்நீர் தேடி ஓடுகிறார் டைட்.

‘’ஹலோ மிஸ்டர் ஹெரிடேஜ் திராவிடன், ஏ இந்தப்புலம்பல் நாங்களே கட்டுமரத்த கல்ல கட்டி கடல்ல போடலாமுன்னு இருக்கறோம், நிச்சயம் மேல வராதுல்ல?’’ அப்பாவியாய் பேசுகிறார் லூஸ்.

‘’ திராவிடன் எல்லாம் செத்துட்டான்டா, அவம்பேரச்சொல்லி பொழைக்கறவனல்லா நம்மளுக்கு ஒரு ரூபாயில் இட்லி தின்னுட்டு ஆனந்தபவன்ல 30 ரூபாய்க்கு காபி குடிக்கிறான்டா, நீ நாயாட நரியாட நிகழ்ச்சியில யாருக்கு ஓட்டுபோடோணும்னு எங்கிட்ட கேட்கற’’ என உணர்ச்சியில் மாரத்தான் தலைவரையும் மிஞ்சுகிறார் டைட்.

‘’ அது டைட்டு நீ தெனமும் பேப்பரு படிக்கற என்னாச்சு, உனக்கு நெஞ்சுவலி வருது, ஆனா, என்னப்பாரேன் ஜாடி நம்பர் ஏக் பாக்கறன், வாழ்றனப்பா, இதெல்லாமே சலிச்சுக்கற விஷயமா, ஏ எமோஷன் நம்மு கடமப்பா, நிகழ்ச்சீன்னா யாராவது பாக்கவேண்டாமா? நீயே சொல்லு?’’

காலந்தாண்டா, பேசு…பேசு செரி அந்த ஷெல்பு பக்கத்துல இருக்கற அவரோதிரேகண லேகியத்த எடு சாப்புட்ற நேரமாச்சு என கூற லூஸ் திமிறி ஓடியதில் அமுல் புரோ பான டம்ளர் தரைநோக்கி சடுதியில் நெருங்கியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book