ஆயில்ய அகோரி அனுப்பிய சித்தர் பற்றிய கடிதம் முதலில் படிக்க சில எழுத்துரு பிரச்சனைகள் இருந்தது என்றாலும் பிறகு, வீட்டில்கொண்டு வந்து படித்தேன்.
சித்தன் பற்றிய அனைத்தும் தெரிந்த கவனித்த ஒருவர் மட்டும்தான்இதனை எழுதியிருக்க முடியும் என்பது உடனே புரிந்தது. ஆராய்ச்சி புகைப்படம் இதனை வெளிப்படையாக புலம்பித் தீர்த்துவிட்டார். ஏறத்தாழ அவரும் விலகின மாதிரிதான்.
கலைத்தொப்பியின் லட்சியங்களுக்கு அவர் உழைப்பது சரி. மற்றவர்கள் அவமானங்களைத் தாங்கிக்கொண்டு ஏன் தேயவேண்டும்? ஏன் குறிப்பிட்ட பெண்ணின் பெயர் அனைத்து சித்தர் ஈடுபடும் பணிகளிலும் வருகிறது தெரியுமா? என்று ஆராய்ச்சி புகைப்படம் சிரித்துக்கொண்டே கேட்டார். லேட் ஸ்கூப் நியூஸ் பீட்டராச்சே? தெரியவில்லை என்றேன். ஆட்டுக்குட்டிடா நீயி. அறுத்துருவாங்க கொஞ்ச நாள்ல என்றார். ஸமீராவைத்தான் முதலிலேயே அறுத்தாச்சேப்பா!
‘’விலங்குப்பண்ணையின் ஆட்சியாளர்களாக பன்றிகள் தம்மை நியமித்துக்கொள்ளும். அது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் தொக்கூ இயங்குகிறதோ? வேலை செய்பவன் கேள்வி கேட்காமல் அடிமை வேலை செய்யவேண்டும். போடுவதை தின்றுவிட்டு, அர்ப்பணிப்பாக அடுத்தவர்கள் முன்னேற நாம் உழைக்கவேண்டும். ஏதாவது கேள்வி எழுப்பினால் உடனே அவர்களைப்பற்றி அவதூறு அனைத்து இடங்களிலும் பரப்பப்பட்டு வெளியே துரத்தப்படுவார்கள்’’ என்று ஸமீராவின் குறிப்பிலிருந்து அறிந்தேன்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு தாண்டிய ஆன்மாக்களின் கையில் ஒரு அமைப்பு இயங்குவது வரம்தான். அப்படி யாரும் தொக்கூவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்தக்கடிதம் தெளிவாக கூறுகிறது. தன்னை நம்புபவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை பரிசளிப்பார்கள் சித்தரும் இதர தன்னமில்லா பேரொளிகளும் என்று கூறப்பட்டுள்ளது. ஸமீராவின் நாட்குறிப்பிலிருந்து இது உண்மையாகவே இருக்கக்கூடும் என்று உணர்கிறேன். கீழ்மையான எண்ணம் கொண்டவர்களின் விளையாட்டுக்களமாக பலரும் உருண்டோடுகிறார்கள். சோதனைக்காலம்தான் இது.