"

இந்த வார்த்தையை வின்சென்ட் கூறியதும் எழுத்தோலை ‘’ அப்படீன்னா நிச்சயம் ஏதோ ஒண்ணு இருக்குது. இரண்டு பேர்கிட்டயும் ஏதோ ஒண்ணு சொல்லாம வெச்சிருப்பீங்க என்று கூறியது வின்சென்டிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

என்ன இந்தாளு பெரிசா ஜோசியம் சொல்றாப்பல போலயே. இப்படி ஆதாரமில்லாம பேசறாரு என நினைத்தபடி பேச்சில் கவனம் கொள்ளவேண்டி ஸமீரா கூறியதை நினைவுபடுத்திக்கொண்டார்.

மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பேச்சை அவர் வாழ்வின் உணர்ந்த அனுபவங்களிலிருந்து பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பேசவேண்டும் என்று மறைமுகமாக கங்காணிசித்தர் எச்சரித்தார். எழுத்தோலையும் அதை மறைமுகமாக வலியுறுத்தினார்.

பேச்சு என்பது ஒரு வலைமாதிரி. விரித்த நாமே அதில் விழும் வாய்ப்பு அதிகம் எனவே சாமர்த்தியமாக இருவர் பேசும்போது மற்றவர்கள் குறித்து அதிகம் பேசுவது இதன் பொருட்டுதான். பிரச்சனை இல்லாமல் பேசலாம் அல்லவா! திருப்பூராரின் ஆளுமை பற்றி பேசும்போது, எழுத்தோலை குறுக்கிட்டு ‘’ நானும் பாத்துட்டன். எங்கிட்ட பேசுன இருபது பேருக்குமேல அவரப்பத்தி ஏதோ ஒண்ணு சொல்லறாங்க ஆனா ஒண்ணுதா புரியமாட்டேங்குது நீங்க எல்லா எதுக்கு அவரப் புரிஞ்சுக்க முயற்சி பண்றீங்க? சைலண்டா இருக்கறது அவனோட இயல்பாக இருக்கலாமுல. உங்க போக்குப்படி நீங்க வாழலாமே?

இதற்கு என்னால் உண்மையாக பதில் சொல்ல முடிந்தால் ஒருவன் பாதுகாப்பின்மைதான். நான் என்னைப்பற்றி உங்களிடம் கூறுகிறேன் என்றால் நீங்கள் என்மேல் நம்பிக்கை கொண்டு உங்களைப்பற்றி ஏதாவது கூறியிருப்பீர்கள். இது அந்நியோன்யம் சார்ந்த ஒன்று. நான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் வழிப்போக்கன் வழியில் காணும் பெயர் தெரியாத மரம் போல பாவிப்பது இல்லை. நான் வழிப்போக்கனாக இருந்தால் மரம் பற்றிக்கேட்பேன். பெயரை தேடி அறிவேன். நிழலில் ஆறுவேன். மனிதர்களை உள்வாங்க முயற்சிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு முகமூடி மாட்ட விரும்புவதில்லை. எழுத்தோலையிடம் பேசுவது போல்தான் திருப்பூராரிடம், அண்ணாநகர் எழுத்தாளரிடம் பேசுவேன். இதுவரை அப்படித்தான். இனி எப்படியோ?

ஆனால் ஒன்று. என் மனதின் குப்பைகளை இனி யாரிடமும் இறைக்க கூடாது. ஒரு மரத்திடம், கொடியிடம், செடியிடம் கூட பகிரலாம். மற்றோரு மனித மனம் என்பது குப்பைக்கிடங்கு அல்ல. அதனை நான் புரிந்துகொண்டுவிட்டேன். ஸமீரா மாதிரி இலக்கியப்போராளிக்கு இதெல்லாம் ச்சீ என்றிருக்கும். அவர் வார்த்தைகளில் கற்பனையில் வாழ்பவர். நானோ யதார்த்த மனிதர்களின் பேச்சுகளில் மனமிழப்பவன். வாழ்வே சிறந்தாயிருக்கும்போது, இலக்கியம் எதற்கு எழுத என்ன தேவை என்றிருப்பவன் நான். நான் இப்படிக்கேட்பது ஸமீராவுக்கு தெரிந்துவிட்டால் பத்து பக்கத்திற்கு எழுதி பிரதி எடுத்து தரவா?!!! என்பான். அவரவர் காலடி நதிதானே ஓடும் நதியிலும் கைக்கு கிடைக்கிறது!!! கல்யாணி எப்போதுமே நம்பிக்கை தருகிறதில் முன்னாடி நிற்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book