‘’ டேய் என்ன கலர் கலரா குர்தா போட்டுக்கிட்டு இருக்கற? ’’ என்று டைட் அப்போதுதான் உள்ளே வந்துகொண்டே கேட்க,
‘’ பிரதமரே ஏதாவது விஷயம் செய்யறத விட டிரஸ்ஸத்தான் மாத்தி போட்டு போட்டோ ஷூட் எடுக்கறாரு நாமளும் பெரியாளு ஆக வேண்டாமா? செரி நீங்களும் சீக்கரமா இந்த ரத்தசெவப்பு குர்தா போடுங்க, நானும் கமலா ஆரஞ்சு குர்தா போட்டுக்கறேன் ’’ என்று லூஸ் கர்ம சிரத்தையாகப் பேச,
டைட் ஏக கடுப்பானார். ‘’ ஏய் வென்று அந்தாளு போட்டோ எடுத்துட்டு கழட்டி வெச்சிருவாரு. அப்பிடி போட்டிருந்தாலும் ஏசி ரூமுல இருப்பாப்பல நீ இந்த வெய்யில கோமணத்தயே கழட்டி எறிஞ்சிக்கிட்டு இருக்கறவங்கிட்ட போயி குர்தா போடுன்னு அந்தப்பக்கம் போடா கொய்யால ’’ என்று டைட் எகிறினார். லூஸ் நிலைமைகளை சமாளிக்கும் திருட்டு முழியை உருட்டியபடி,
‘’ ஏய் என்னய்யா நீயி அகில உலக தாமர கட்சி வருங்கால தலைவர்கிட்ட பேசறோமுன்னு மரியாத துளி கூட இல்ல ’’ என்று சொல்ல, ‘’ அவங்கிட்டயல்லா சேராத மந்திரஞ் சொல்லச் சொல்லுவானுவ, உனக்கு செட்டாவாது. ஏதாவது தீனி கொடுத்தா ஒடனே அவம் பக்கம் பேச ஆரம்பிக்கறேடா இது எல்லா நியாயமா? ’’
‘’ ஆமா நீ செவப்பு கட்சிக்காரங்கிட்ட போவ, அவனுக எப்பவுமே பன்னும் டீயுந்தான தர்றானுவ, அதக்கூட மேக்ஸ் மேக்ஸ் னு பயமுறுத்தறானுவ. பள்ளிக்கொடத்துல அந்த பரிட்சீம்போதுதா செவுறேறி தப்பிச்சு வந்தன். ஆனா இவனுவ லட்டு, பாயாசமுன்னு தர்றானுகப்பா ’’
‘’ அது மேக்ஸ் இல்லடா மார்க்ஸ். சாமி வேல எடுத்து உங் கவட்டயில் சொருவீருவானுவடா இந்த ஆரஞ்சுக்கூட்டம் வேண்டாம் அவஞ்சகவாசம் பாத்துக்கோ… ’’
‘’ ஆமாண்டா லூசு போடி ஏதோ கைய விரிச்சு விரிச்சு அடுத்தவனோட கண்ண குத்தீர மாரி பேசறாப்பல… எக்சைஸூ கீது மேடையில பண்றாரா என்ன? ’’
‘’ வேல அதிகம்ல. யோகா பண்றதுக்கு நேரமிருந்திருக்காது. பாவமப்பா நம்மாளு. அதே நேரங்கெடைக்கறப்ப செஞ்சுக்கறதுதே. இதென்ன ஒரே கம்ளைன்டு மாதிரி சொல்றீங்க டைட் ‘’ டைட் நாளிதழ் படிப்ப முயற்சித்தார். லூஸ் சந்தேகமாய் அவரை பார்த்தான்.
காபி காரம் கச்சேரி – தீவிரமான கலந்துரையாடலை உருவாக்கும் பகுதிக்கு அனுசரணை வழங்குபவர்கள் மெட்ரோ மணி, கில்லர் கபாலி, கவுத்தி சித்தன்.
‘’ இன்னாடா கவுத்தி மெட்ராசுக்கு வந்தியே இவ்வளவு சுருக்கா கெளம்பிட்ட. நம்மளுக்கு ஒரு சவுண்டு விட்டிருந்தா தெருவே கலகலன்னு இருந்திருக்குமேடா ’’ என மெட்ரோ மணி தன் ஆருயிர் நண்பனான ஹெர்குலிஸ் வண்டியில் வந்திறங்கியபடி கேட்டார்.
கில்லர் கபாலி அதைக்கடுமையாக மறுத்தபடி ‘’ இங்க பாருடா இந்த பயல நம்பினினா அம்மா மெஸ்சுக்கு கூட்டிட்டுப்போய் இட்லி வாங்கத்தருவாம் பாரு . ஆனா நம்மளுக்கு ஒரு தெருவே செம சப்போர்ட்டு கருவாட்டுக்கொழம்பு எப்படி இருக்குது? ’’ என கையை கவுத்தியின் மூக்கில் வைத்து தேய்த்தான்.
கபாலியின் கையை விலக்கியபடி, ‘’ அப்பா ஆருயிரு தோழர்களே, உங்கள பாக்காதது தப்புதா. நம்மள சொந்தமல்லா வெலக்கி வுட்டு நாளாவுது. அனுவோட ரூமுக்கு போயிட்டேன். எந்தப்பக்கம் திரும்பினாலும் உடனே செவுருடா.. உக்காந்து வேல பாத்தா பேண்டெல்லாம் ஒரு பொங்கச்சோறு ’’ என்ற கவுத்தியை படு சந்தேகமாக பார்த்த கி.கபாலி ‘’ என்ன பேண்டுல பொங்கல எதுனா டீவில கீது ஏதாவது புது ஐட்டம் பாத்தயா என்ன? ‘’ என்றவனை எரிச்சலாக பார்த்த மெட்ரோ ‘’யோவ் வெளக்கெண்ணெய் வெண்டக்காயி, அதுக்கெல்லா கொஞ்சனாலும் படிச்சிருக்கோணுமப்பா கபாலி, ஆமா லேகியமித்திரன்கிட்ட எத்தன மருந்து டப்பா வித்தே?
கி.க முகம் விகாரமாகியது. ஐயோ சாமி அவனல்லா மனுசனா என்ன?
‘’ காலயில திங்கறக்கு, தின்னது வெளிய வர்றதுக்கு, மறுபடி பசிக்கறக்கு, குசுவு வராத இருக்கறக்கு, வெளிக்கு அடைக்கமாக இளக்கத்துக்கு, கைகாலு வலுவா இருக்கறதுக்கு ஒவ்வொரு வெரைட்டியா கேட்டா நா என்ன பண்ணுவன்? இந்த வேகத்துல போனா திங்கறதும், வெளிக்கி போறதும் லேகியமாத்தே இருக்குமப்பா!!!‘’
மெட்ரோ மணி கி.க வைப் பார்க்காமல் வாயில் முனகிக்கொண்டே, ‘’ஏய்யா திருவண்ணாமலையில கங்காணி சித்தன் சோறு போட்டாப்பலயா.. இருக்க இருக்க அந்தாளு மாரியோ ஒடக்கமாரி ஆயிராத.. தம்பேரு பெருசா வரோணும்னு என்ன வேணும்னா பண்ணுவாப்பல…பாத்தியா அந்தாளுனால பாதிக்கப்பட்டவன் ஒருத்த எழுதி வெச்ச லெட்டரு ஒண்ண… ஆத்தாடி படுமோசமானவனாட்ட இருக்குதே..’’
கி.கா கவுத்தி கடுமையாக யோசிப்பது போன்றதைப் பார்த்து ஆத்தாடி ஆபத்து என்று ‘’ சும்மா இரு நயினா, மணி எதுக்குலே இம்புட்டு சீரியசா பேசறே… ஏதோ கூகூன்னு படமாமே.. பார்த்தவனல்லா கர்ச்சீப்பு நனையற அளவு அழுவறானுவளாம். அப்பிடி என்னடே படத்துல. எதுக்குடே இந்த அழுவாச்சி? ’’ என்ற கி.க வை முறைத்த
மெ.மணி ‘’ ஏதோ தெரியாம வந்துட்டமுன்னு உக்காந்திருந்திருப்பானுவ. அழுவாச்சி காச இப்படி தொலச்சுக் கட்டீட்டமுன்னுதே.. வேறென்ன. குனிஞ்சு நில்லுனு கடல்பழம் ஒரு படம் எடுத்தாப்பல. அரசாங்க செய்திப்படமாரி. நாம அழுவுலியா?
கவுத்தி தன்நெற்றியைத் தட்டியபடி ‘’ இங்க காதலிச்சு கல்யாணம் பண்றது எல்லாம் கஷ்டமப்பா.. படத்துல சேத்தி வெச்சா படம் ஹிட்டாயிருது. சம்பாரிக்க ஈஸியான வழி. கூகூ படத்துக்கு 150 ரூவா ஆயிருச்சு தெரியுமா மணியப்பா? ’’ என்றபடி பேசிய கவுத்தியை அதோ அங்க வருது மோசமான விலங்கு என்ற பார்வையுடன் பார்த்தார்கள் மணியும், கபாலியும் மெல்ல விடைபெற்றுக் கிளம்பினான் கவுத்திமலை.