வீட்டின் அருகே ஒரே பரபரப்பு. என் தங்கை முறை வரும் பெண் தன் நாற்பது வயதான மாமனை மணக்கும் பேராபத்தை தடுக்கும் பொருட்டு அருகிலுள்ள ஊரைச்சேர்ந்த ஒருவரை காதலித்து மணந்துகொண்டு விட்டார்.
பரபரப்பிற்கு ஏங்கிக்கிடக்கும் மனிதர்கள்தானே அனைவருமே. உற்சாகமாகிவிட்டது எங்களது சொந்த பந்தங்களுக்கு. அட அந்தப்புள்ளதே, உனக்கு தெரியாதா, பள்ளிக்கொட போயிட்டு வந்திக்கிட்டிருந்ததே ஆடு ஓட்டிக்கிட்டு வருமல்லோ அந்த ஆத்தாவோட பேத்திதே, என்று சொல்லி இன்ஸ்டன் அப்டேட் தந்து ஸமீராவீன் தாய் ஆவலாதி பறக்க அலைந்தாள்.
ஸமீராவின் சொந்தக்காரரின் கதையோ இன்னும் முடை நாற்றம் எடுப்பது என்றாலும், ஏலே அடுத்தவனுக்கு கஷ்டம்னா! சக்கரய எடு, வாயில போடு. ஆத்தா சொல்லியிருக்குல்லா! என்னா உற்சாகமப்பா. பய யாரு? என்ன சாதி? நிகழ்ச்சி நடந்த தேதி? இன்ன பல சிறப்பு செய்திகளை தார்சாலையில் சொம்பு வைக்காத குறையாத பேசி, அடிபம்பு தண்ணி நிறைத்து குடித்துவிட்டு பேசினார். ஆத்தாடியோவ். இவங்கள்ளா இருந்தா சன்டிவி இன்னேரம் பி.பி.சியாட்ட மாறியிருக்குமே. செய்வீர்களா? செய்வீர்களா?
குஸ்கா நியூஸ் என்ன சொல்லுதுன்னா, மாமங்காரன்னா கட்டுனா, அந்தப்புள்ள காலயில அள்ளற சாணிக்குப்ப காசு கூட அவளுக்கு கிடைக்காது. நிம்மதியா இருக்கமுடியாது அந்த சவங்களோட. தங்கள் வீட்டுப்புள்ளய கூட்டிட்டு வரப்போயிருப்பவர்கள் அனைவருமே பெண்டு பிள்ளைகளை அனுப்பிவுட்டு காலையிலேயே குடித்து தீர்ப்பவர்கள். ஆனா என்ன அந்தப்புள்ள கட்டுனவன் ஒழுங்கா இருக்கோணும் இல்லன்னா கஷ்டம்தானப்பா! அப்பத்தே அஞ்சப்பரு ஹோட்டலு இறாலு பிரியாணி மாரி வாழ்க்கை மணக்கும்.