"

தாராபுரத்து ஆண்டன் செகாவிற்கு படித்தவர்களின் மேல் புழுதியை மேல் அள்ளித்தெளித்தாற்போல சிறுகதை எழுதித்தள்ளியதற்காக கயமை இதழ் உஜாதா விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது. கும்சா விழாவிற்கு சென்று வந்தார். ஆண்டன் செகாவ் விருதுவாங்குவதை பார்க்கவில்லை என்று கூறினார். கூடவே நீ லெட்டரு எழுதாத. செகாவ் புலம்பித்தள்ளறாரு. அவர் எழுதிய கதையை படித்துவிட்டு நான் வருத்தப்படவில்லையா? என்றபோது பதிலில்லை.

விருதிற்காக எழுதுவது சிறந்த எழுத்தாக நிச்சயம் இருக்கமுடியாது. எழுத்தாளருக்கு மகிழ்ச்சி என்றால் சரிதான். காலம் தாண்டியும் ஒரு படைப்பு வாழுவது எழுத்துக்கான சிறந்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.

உண்மையான உழைப்பிற்கு விருது என்பதெல்லாம் கடந்துபோன இறந்துபோன நினைவுகளாகி விட்டன. தெரிந்தவர், சாதி, நட்பு, பதிப்பாளர் இப்படித்தானே விருதுகள் கிடைக்கின்றன. மீதமிருக்கும் வாழ்வுதான் எப்போதும் சிக்கலே. இப்போதெல்லாம் குஜய் டிவியில் தாம்பூலப்பை போல விருதுகள் தரப்படுகின்றன. அனைவருக்கும் வழங்கிவிட்டால் யாருக்கும் பிரச்சனையில்லை. இதுதான்யா சமதர்மம் அப்படீங்கறது! தாராபுரத்து எழுத்தாளர் விருது பெற்றதிற்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book