கங்காணியுடன் பணிசெய்வது என்றால் நம்மை எங்கே கொண்டுபோய் நிறுத்துவார் என்று அவருக்கே தெரியாது? கல்யாண வீட்டு மக்கள் வெளிவரும் இடத்தில் ஆத்திச்சூடி, அகநானூறு, பிள்ளைத்தமிழ் எனத் தேடிப்பிடித்து துணிப்பைகளில் அச்சடித்து அதில் தேங்காயைப்போட்டு தர நம்மை அழைப்பார். இறுதியில் மிஞ்சுவது கல்யாண வீட்டு சாப்பாட்டு மகிழ்ச்சி மட்டும்தான். அதையும் சீக்கிரமாக சாப்பிட்டு வரவேணும் என்பார். அட இங்க நின்ன கங்காணி எங்கப்பா என்றால் பக்கத்து மண்டபங்களிலும் தாம்பூலப்பைக்கு இன்சார்ஜ் ஆகி, மக்களுக்கு பை வழங்கி சேவையாற்றிக்கொண்டிருந்தார். நம்மு மண்டபம் இது இல்ல சித்தரே வாங்க போவோம் என்றால் தாம்பூலப்பை ஒண்ணுதான? இது நமக்கு போதைபோல என்று என்று ஏதோ கவிதை வரிகளை, லத்தீன் பாரசீக வரிகளை கூறுவார்.
ஆண்டா.. ஆ ண்டா … ஆ.. செல்வம் வந்திருடா என்று பேசும்போது மட்டும் அருகில்போகக்கூடாது அவரது சிஷ்யன் குருணை செல்வம் கூறினார். ஏனுங்க அது ஓர் உயிர்க்கொல்லி நோய் போல. பத்திரமாக பாத்துக்கங்க என்றபடி கிளம்பினார் செல்வம்.