"

நீங்கள் எல்லோரும் வெட்கப்படத்தான் வேண்டும். என்னைப்பாருங்கள். எனக்கு பன்னாட்டு வங்கியில் கடும் சம்பாத்திய வேலை இருக்கிறது. நான் இந்த வேலையைப் பெற என் அப்பன் நிறைய செலவு செய்தான் உண்மைதான் அதனாலென்ன, இன்று இருட்டில் கண்மங்கி கிடக்கிறான் கிராமத்து வீட்டில். மக்கிச்சாவட்டும் தாயோழி.

எனக்கு கல்யாணம் செய்து வைத்து தன் சேமிப்புகளை சோறாய் வைத்து இறைத்தது இன்று பராரிகளாய் கிடப்பவர்கள்தான். என் பணத்திற்கு அவர்கள் வாழ்வு தகுதி உடையதா? இன்றைய நிலையில் எச்சிலைகளை நக்கும் நாய்களைப்போலத்தான் அவர்கள். நான் இன்று பெறும் பணம் அவர்கள் கொடுத்த பணத்தின் அடிப்படையில் அதிகம்தான்.

நான் இப்படி என்னை உயர்த்திக்கொள்ள உதவிய ஒரு புள்ளை பூச்சியை இதோ கேஎப்சியில் பக்கெட் சிக்கனை சுவைத்துக்கொண்டே யோசிக்கிறேன். அட! பக்கத்து டேபிளில் இருப்பவளின் முன்பக்க செழுமை என் கவனத்தை தன்பால் இடையறாது இழுக்கிறது. தன்னியல்பாக என் குறி ஜாக்கியினுள் விரைக்கிறது.

திட்டமிட்டு அவனை என் இருப்பிடத்திற்கு படிக்க அழைத்தேன். குருட்டு பயல் நம்பி வந்தான். எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உண்டு செரித்தேன். தேநீர் உள்ளவரைதான் கப்பிற்கு பெருமை. இல்லாதபோது கசக்கி எறியவேண்டியதுதான். படிப்பை முடித்தவுடன் வேலை தேடி திரிந்தான். அப்போது எனக்கு பார்த்திருந்தவள் பார்க்க விகாரமாக இருந்தாலும், என்னால் அவளது உடலை கையாளமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என்னை பயன்படுத்திக் கொண்டவளை பழிவாங்க அவளது திருமணத்திற்கு முன்பே இவளை மணம் செய்ய முடிவெடுத்தேன்.

எனது தம்பி வேறு இங்கேயே தங்கியிருந்தது எனக்கு கடுமையான எரிச்சலாக இருந்தது. இந்த பரதேசி நாயிற்கு நான் செலவு செய்யவேண்டுமா என்ன? அவனை சிறுவயதிலேயே பலமுறை கடுமையாக காயப்படுத்தி, அடித்திருக்கிறேன் என்றாலும் அவனை முழுமையாக மனதின் நம்பிக்கையை இழக்கச்செய்து தற்கொலை செய்துகொள்ள வைக்க முடியவில்லை. அதற்கு சரியான ஆளை என் மனைவிதான் என்று விரைவில் புரிந்துகொண்டேன்.

மாநகரில் இருந்து வந்து திருமணத்திற்கு சரியாக வந்துவிட்டேன் என்றாலும் பத்திரிக்கை கொடுப்பது எல்லாம் முகம் கறுத்துவிடும் என்பதால் என் தம்பியை வைத்து உதவி செய்வதாக கூறி காரியம் சாதித்துக்கொண்டேன். முதலிரவில் வெகுநேரமாக இனக்குழு நாய்களிடம் மொய் பணம் வாங்க நின்றுகொண்டிருந்ததால் சோர்ந்து போய் விட்டேன்; உடலுறவிற்காக தின்ற பல லேகியங்கள் எனக்கு கண்ணில் பல தேவதைகளைப் பறக்க விட கண் அயர்ந்து விட்டேன். இதை வெகுநேரமாக கவனித்து சுவரில் சாய்ந்து கவனித்து எரிச்சலான என் உலகப்புகழ்பெற்ற மூக்கு மனைவி எனது ஆண்மை குறித்து பேசியவை பற்றி உலகப்புகழ்பெற்ற மரு.சிவராஜ் அவர்களின் வாயில் கூட கேட்டதில்லை. பின் இயங்குவதற்கு வேறு என்ன வார்த்தை தேவை. இப்போதே டிஸ்னியில் வரும் சூனியக்காரி போல இருக்கிறாள். குணமும் அப்படியே. சரி, இரவிற்கு என அங்கீகரிக்கப்பட்ட நீண்ட கால விபச்சாரி இவள் என்று வைத்துக்கொண்டு நாகரிகத்திற்கு ஏற்றவளை அலுவலகத்தில் கண்டுகொண்டேன். அலுவலகப்பெண் உடையை கழற்றாதபோதே பெரும் எழுச்சியினை கனவுகளில் எழுப்ப வல்லவள். மனைவியின் உடலோ வெடித்துபோன நிலம்போல.

என் அதிகாரம், சம்பளம் எல்லாம் குறிப்பிட்ட எல்லையிலேயே அடங்கி விடுகிறதே என்ன செய்வது? இலக்கியம்தான் என்க கண்ணில் பட்டது. தெரிந்த மண்ணின் மைந்தனான எழுத்தாளரின் கதைகளைத் திரும்ப திரும்ப படித்து அதிலிருந்து மலிவான ஒரு பிரதியை தயார் செய்து, சில காதல் கடித விஷயங்களை சேர்த்து, கருணை, காதல் நன்றாக வெந்திருக்கிறதா என்று பார்த்தேன். சரி வெளியிட ஒரு இதழ் வேண்டுமே. பத்திரிக்கையில் உள்ள மதுபானப்பறவை ஒருவன் உதவிக்கு வந்தான் நிபந்தனைகளோடு. குற்றெழுத்து இதழில் கதை வெளியாக, மண்ணின் மைந்தனான எழுத்தாளரே மிரண்டுபோய் என்னை மாதிரியே எழுதியிருக்கறயே என்று கூறுமளவு நகலின் சேர்மானம் மிகத்தெளிவாக வந்திருந்தது. அவரின் அதிர்ச்சியை ரசித்தபடியே, அவரின் வீட்டில் வட்டலில் இருந்த ரசத்தை உறிஞ்சிக்குடித்தேன்.

தந்திரம் பழகுங்கள் நண்பர்களே. அப்போதுதான் எங்கேயும் பிழைக்கமுடியும். அவனா? இவனா? என கருத்துபிழைப்பு நடத்தும் நிகழ்ச்சியல் ஆசிரிய தலித் எழுத்தாளரை வியப்படைய வைத்தது, பன்னாட்டு வங்கியில் பணிபுரிவதோடு, சாயல் கதைகளை எழுதி தக்க வைத்திருந்த இலக்கியபிம்பம்தான். யாரையும் பயன்படுத்திக்கொண்டு புகழ், பணம் கொண்ட ஏணியில் ஏறிவிடவேண்டும். மனசாட்சியா? மயிறு உதிர்ந்து போச்சு என்று என்றாவது கவலைப்படுவீர்களா? நாம் முன்னேற யாரையும் ரத்தம் கசியாது காயம் படாது அடித்து உடனே சாகாதவாறு நொறுக்கவேண்டும். இதை எனக்கு அறச்சலூர் குரு எனக்கு கற்றுக்கொடுத்ததோடு, இன்று வரையும் பயன்படுத்தி விஸ்வரூப வெற்றிகளை பெற்றுவருகிறார். அவர் தளம் புத்தியும் விரிந்த வன்மமான, வக்கிரமானது.

என் இளையவனின் நம்பிக்கையை குலைக்க பல விஷயங்கள் செய்தேன். கிடைக்கின்ற வாய்ப்புகளிலெல்லாம் கடும் வார்த்தைகளினால் துவைத்தெடுத்தேன். அவனின் நம்பிக்கையை வற்றச்செய்யவேண்டும் என்பதுதான் முதல் அஜென்டா. பின்னர் உடல் வலிமையை. அதை நான் அழிக்கவேண்டியதில்லை. அவன் முதலிலேயே சோனிப்பயல்தான். வேண்டுமென்றே தாமதமாக எழுந்து சோறு எதுவும் தயாரிக்காமல் வகுப்பிற்கு செல்லுமாறு செய்தேன். பிஸ்கட் வாங்கிச் சாப்பிட இருபது ரூபாய் தருவேன். இரவு வரை அவன் அதைக்கொண்டே சமாளிக்கவேண்டும். பஸ்ஸில் ஏறவெல்லாம் நான் விடுவேனா! நாயிக்கு இது ஒரு கேடா, நடந்து செல்ல வைத்து மிச்ச சக்தியை அழித்தேன். ச்சீ இதெல்லாம் நினைத்தால் சிக்கன் சாப்பிடமுடியுமா சொல்லுங்கள். இருங்கள் ஏதோ ஒரு காம்போ ஆபர் இருக்கிறதாம். வாங்கிவிட்டு வந்துவிடுகிறேன்.

வகுப்பிற்கு போய்விட்டு வந்தபின் என் துணிகளை கவனமாக துவைக்கச்சொல்லிவிடுவேன். நான் ஏன் துவைக்கவேண்டும்? அடிமை இருக்க முதலாளி ஏன் வேலை செய்யவேண்டும்? பைத்தியக்காரன் நான் சொல்லுவதையெல்லாம் நம்பினான். அப்பனோ நான் சொல்லுவதையெல்லாம் நம்பி பணத்தை தாராளமாக அனுப்ப நான் என் பிற்கால வாழ்க்கைக்காக அதை சேமித்து வைத்தேன். இந்தப் பரதேசி பயலுக்கு எதற்கு கொடுக்கவேண்டும்? சாவட்டும் சவலைப்பயல்.

அவனை ஊருக்கு துரத்தியபின், ஏனோ டேனியலின் பாடல்களைக்கேட்க வேண்டும் போல் இருந்தது. குற்றவுணர்வை மறக்க இவனை விட சிறந்த உதாரணம் வேறு எங்கும் இல்லை. தன் இனம் சாக எங்கோ சாமி சிலை வேலை செய்து கொடுத்தானாம். சரி அவன் பணம். நான் இல்லையா? மிலிட்டரி ஹோட்டலில் கறிச்சோறு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். கைபேசியில் காமம் கிளர்ச்சி பரிமாறுகிறவர்களின் தளங்களை பார்வையிட்டேன். குறையாத ஆசை. ரத்தம் சுண்டும் வரை இல்லையா? முன்பு காதலித்த பெண்ணுக்கு சிசு கருவிலே கலைந்து போய்விட்டதாம். சாவட்டும் தேவா..பெண்.அன்று என் அறைத்தோழர்களுக்கு கேக் வாங்கிக்கொடுத்ததோடு, கல்லூரி நண்பர்கள் மற்றும் அவளுக்கு நெருக்கமாக இருக்கும் மற்ற நண்பர்களை அழைத்து விசாரித்தேன். இருந்தும் என் மகிழ்ச்சி குரலில் தெரிந்துவிட்டது.

மறுமுனையில் சில நொடி மௌனங்களுக்கு பிறகு சம்பிரதாயமாக பேசி வைத்துவிட்டான் என் நெருங்கிய கவிதை நண்பன். பின் அதனை பலரிடமும் சாடைமாடையாக பகிர்ந்துகொண்ட பின்தான் எனக்கு நிம்மதியான தூக்கம் வந்தது. எனக்கு கிடைத்திருக்க வேண்டிய உடலல்லவா அது? ஒரு முறை சந்தில் நெருங்கியபோது, பீரியட் என்றாள். ‘’எத்தன நாளா ஒனக்கு ஒழுகுது?’’ என்றேன். அவள் திரும்பிக்கொண்டாள். செலவுக்கு நானு, கிட்டவந்தா லீக் ஆவற கத… இன்னைக்கு டால்டா விக்கறவனோட ************ முடிந்தவரை அவள் உள்நுழையும் இடங்களில் அவளுடன் நான் இருக்கும் போட்டோக்களை அனுப்பினேன். வேண்டுமென்றே இரவில் அவள் எண்ணுக்கு அழைப்பது, ஆபாசமாக எழுதி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது என்று செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நான் கெட்டவன் என்று நினைக்காதீர்கள். மாநகரின் வெயிலுக்கும் சூழலுக்கு அப்படி ஒரு குணம் உண்டு. என் மேல் மட்டுமா பிழை!!!

மாநகரத்தில் குற்றவுணர்வை மறைப்பதற்கு என்று பல கட்டிடங்கள் பெரிதாக கட்டியுள்ளனர். பூங்கா செல்லுங்கள். மால் செல்லுங்கள். ஐநாக்ஸில் திரைப்படம் பாருங்கள். கைபேசியில் பிரேசர் தளம் பாருங்கள். என் கால்களில் புதிய பன்னாட்டு ஷூ ஐந்து நாட்களுக்கு முன்பு வாங்கியது அணிந்திருக்கிறேன். அடுத்தவாரம் வேறு வாங்க முடிவு செய்திருக்கிறேன். கைகள் வழிய பணம் பெறுகிறேன். என் கால்கள் சராசரி மனிதரை விட ஒரு அடி மேலே மண்ணிலிருந்து இருக்கிறது. இதோ அவள் பனியனில் மார்பகங்களை பந்தாக கருதி விளையாட அழைக்கும் வாசகம் இருக்கிறது. என்ன மாதிரியான திரட்சி! அப்பா அதற்குத்தான் மால் வந்து உயரமான இடத்தில் இருந்து கீழே வரும் பெண்களை செங்குத்தாக பார்க்க வேண்டும். திகைப்புதான். பெரும் திகைப்பு. எதைபற்றியும் எனக்கு கவலையில்லை. எனக்கு மதிப்பு தர பன்னாட்டு வேலை இருக்கிறது. மற்றவர்கள் மதிக்க எழுத்தாளனாக ஒரு பிம்பம் உருவாக்கிக்கொண்டது இருக்கிறது. வேறென்ன? அந்த பைத்தியக்கார நாய்கள் எங்காவது செத்தொழிந்தால் சரிதான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book