"

கைக்கட்சிக்காரரிடம் வர்கீஸ் குறித்த மொழிபெயர்ப்பை ஸமீரா கேட்டார். பின்பு, அவரே அற்புதமாக தெரிந்த விஷயங்களை எழுதிவிடுவார் என்று தோன்ற, அதையே ஸமீராவும் பின்னர் கூறியபோது, அவர் எப்போதும்போல எந்த உறுதியும் இல்லாத பதிலைக்கூறினார். கங்காணிச்சித்தன் ஒத்துக்கொண்டால் குரியன் பற்றிய நல்ல ஒரு பதிவாக பதிப்பகத்தின் மூலம் செய்யமுடியும். ஆனால் அவர்கள் தங்கள் பெயரையே முன்னுக்கு கொண்டுவர எண்ணுபவர்கள். எப்படி முடியும் சொல்லுங்கள்?

கைக்கட்சிப்போராளி சிறந்த எழுத்தாளர், தன் ஆர்வத்தினால் சிறந்த நூல்களின் வாசிப்பினால் தன்னை திடமாக உருவாக்கிக்கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் தேர்ந்த மொழியில் கூற வந்த விஷயங்களை தெளிவாக எடுத்துவைப்பன. எந்தவொரு கடினமான விஷயம் புரியாத ஆட்களைக்கூட அமைதியாக கவனிக்கவைக்கும் சொற்களை எழுதுவது மட்டுமல்லாமல் பேசவும் செய்யும் துணிச்சல்காரர்.

கிடைக்கிற வாய்ப்புகளில் கைக்கட்சிகாரர் போன்ற சிறந்த படைப்பாளிகளை கௌரவப்படுத்த ஆசை உண்டு என்றாலும் எந்தப்பணியிலும் இல்லாத உதவாக்கரையான ஸமீரா என்ன செய்துவிடமுடியும்? மனச்சோர்வினை குறைக்க சிறு உரைகளை அவர் கடிதம் வழியே போராளிக்கு அனுப்புவதுண்டு. பிரசுர வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவர் எழுத்து தடைப்பட்டு போவது பெரிய இழப்பு என்று முந்தைய கடிதத்தில் ஸமீரா எழுதியிருந்ததாக கூறினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book