ஸமீராவிற்கு தபாலில் புத்தகங்களோடு ஏதோ தேடல் பற்றி ஒரு புத்தகம் வந்திருந்ததாம். எப்படி என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள் தங்களின் மின்னூலினைப்பார்த்துவிட்டு யாரோ அனுப்பியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துச்சொன்னோம். ஸமீரா அதைத் திறந்து பார்த்தால் அப்புத்தகத்தின் முன்னட்டையிலேயே அன்பனே சந்தா இரண்டுவருடம் 200 அனுப்பிவை என்கிறார். படித்தால் செந்தமிழிலக்கியம் தொல்காப்பியத்திலிருந்து சிறியபகுதியை பிட்டு வைத்தது மாதிரி இருந்திருக்கிறது. உடனே எங்களது புலனாய்வு பகுதியினை நாடியிருக்கிறார்.
ஆனால் நாங்கள் ஆராய்ந்து பார்த்தபோது, அவர் புத்தகத்தை பாகுல் தல்வாரிஸ் என்ற பெயரில் அனுப்பியிருக்கிறார். ஸமீராவின் நண்பரான தபால்காரர் சின்னக்குறி என்ன எங்கிட்ட கூட சொல்லாம பேர மாத்தீட்டயேப்பா…என்று கேட்டிருக்கிறார். என்ன சொல்வது? இலவசமாக கொடுத்தால் கூட கைசக்தி கண்ணன் கூட வாங்கமாட்டேங்கிறான் என்று ஸமீரா வருத்தப்படுகிறார். ஆமாம், யார் பலியாவது இதுபோன்ற புத்தகத்திற்கு? சந்தாத்தொகையைக் கேட்டதோடு, கட்டுரை ஒன்றினையும் அனுப்பிவைக்க கேட்டிருப்பது அவருக்கு நெஞ்சுவலியைத்தரும் என்பதால் மறைத்துவிட்டோம்.
தமிழ் இலக்கணப்பகுதி போல ஒரு புத்தகத்தினை உருவாக்கி அதற்கு ஏதோ தேடல் என்று தலைப்பிட்டு கட்டுரை அனுப்பு என்றால், ஏம்ப்பா ஏய் அது இலக்கிய புக்கா இல்ல ஆட்டோகிராப் புத்தகமா? என துக்கம் நெஞ்சையடைக்க பைப்பில் புகையிலையை நசுக்கிப்போட்டு, தீப்பெட்டியை வைஜயந்தின் மகள் ஷாம்பவியிடம் கடன் வாங்கினேன்.
என்னவேணா இருக்கட்டும். இதோ ஒரு கிளையண்ட் வருகிறாள். என்ன அபாயகரமான வளைவு நெளிவு அழகு. அய்யோ நரேந்திரனிடம் போகிறாளே? செரி இதை ஒரு மணி நேரம் கழித்துப்பார்ப்போம். முதலில் இந்தப்பெண்ணை கேமிராவில் பார்த்துவிட்டு வருகிறேன். ஹேய் ஜான், இங்கே வா!