விகடனில் பாரதி தம்பி எழுதுகிற கற்க கசடற விற்க அதற்குத்தக குறிப்பிட்ட இக்கட்டான தருணத்தில் எழுதப்படுகிற சரியாக விலைபோகிற, அதே தருணத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிற கட்டுரையுமாகும். இது குறித்து ஆர்.எம் இது நம் நாட்டிற்கு மட்டுமல்ல பல நாடுகளிலும் உலகமயம், தாராளமயம் சூழல் உண்டு. அது கொள்கை அல்ல என்று கூறினார்.
உண்மையாகவும் இருக்கலாம். இதில் குறிப்பிடுவது கல்வி என்ற விஷயத்தில் தனியார் பள்ளிகள் அதிகமாவதல்ல. அதில் சேர்க்கும் மக்களின் நுகர்வுப்பசி பெரிதாகிக்கொண்டே போவதுதான். கல்வியில் சிறந்த இடம் வகிக்கும் பல நாடுகள் கல்விமுறையை பின்பற்ற நினைக்கும் நாடு பின்லாந்து. அங்கு காகிதத்தில்தான் எழுதி கற்பிக்கிறார்கள். தொழில்நுட்பங்கள் நமது பணியை எளிதாக்குகின்றன. ஆனால் அது பார்க்க அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இங்கேதான் நடைபெறுகிறது இல்லையா? தனித்துவத்திறன்கள், மற்றவர்களை விட மேலே என்பது காலம் செல்ல ஒரு இனவெறி போலத்தானே மாறுகிறது.
அரசு ஏறத்தாழ அனைத்தையும் கைவிட்டுவருகிற நிலையில் நாம் என்ன செய்வது? ஆர்வமிருப்பவர்கள் சிறிய அளவிலான குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர முயற்சிக்கவேண்டியதுதான். சமத்துவம் பேசியவர்களை விட பேசாதவர்களாக செயல்பட்டவர்களினால்தான் நாம் பல விஷயங்களை இன்று அனுபவிக்கிறோம். அவரவர்க்கு ஒரு தர்மம். அறம் என்பது எங்கே எழப்போகிறது?
அரசு செய்யாததை தனியார் எப்படி அர்ப்பணிப்போடு செய்வார்கள்? இறுதிக்கு வந்துவிட்டது அரசு குறித்த நம்பிக்கைகள் அனைத்துமே. இதோ பாடுவோமா தேசியம் காப்பாற்ற, ஜனகனமண அதிநாயக ஜயகே!