"

கங்காணியின் நண்பரான இரா. குந்தானத்தை சந்தித்து பேசினேன். வேலூரில் மாரத்தான போட்டி தொடங்க உள்ளாராம். முப்பது நாள் இருக்க அதற்கான ப்ளெக்ஸ் வாசகங்கள் ப்ரவுச்சர் வடிவமைக்க கங்காணியின் உதவியை நாடி வந்தேன் என்றார். கங்காணியோ இடதுகளில் சகவாசத்திற்கு பரிகாரம் தேடவே நேரமில்லை. மூன்று நாட்கள் குந்தானம் தங்கியிருந்துவிட்டு ஒரு இரவு பதினொரு மணிபோல கிளம்பிச்சென்றார்.

நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொண்டார். பெரியார், மாட்டுக்கறி, சிவன், கிரிவலம், நம்பிக்கை, உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு, வேலை, இளமை என அத்தனை தலைப்புமே குமுதத்தில் வந்தால் எப்படியிருக்கும் அவ்வளவு எளிமையாகத்தான்.

சுப.சூரபாண்டியன்(குலைஞர் டிவி புகழ்) அவரின் உதவியாளராக ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறார் மூன்று ஆண்டுகள். பின் நெல்லையில் ஒரு நூலகம் ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கிறார். மிக எளிமையான களப்பணி செய்யக்கூடியவர். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருமுறை பணியாற்றியவர் இவர்.

முப்பத்தாறு வயதாகும் இவர் எது குறித்தும் தன் அனுபவத்தில் உணர்ந்தவற்றை மட்டுமே பேசுகிறார். அதுவே இவரது பேச்சினைக் கேட்கத்தூண்டுகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book