"

தொப்பிக்காரருக்கும், கூழாங்கல்லுக்குமான நேசமான தொட்டுத்தொடரும் அட்டு உறவை தொக்கூ பற்றிய பேச்சின்போது, தெரிந்துகொண்டேன். கலைத்தொப்பி பற்றி தனிப்பட்ட மாதிரி நிகழ்ச்சிகள் இல்லையென்றாலும், ஸமீராவிற்கு இரண்டு முறை சோறிட்டவர். கனவுக்குள் கனவு கண்டுகொண்டே என தன் ஓல்டு ஹோண்டாவில் பயணிப்பவர். இதை சத்திய அருளாளனும் அப்பீல் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். கலைத்தொப்பியின் கண்களை பார்த்து பேசினால் தலைசுற்றிப்போகும். அங்கே பார்ப்பார். காலர் நுனியைப்பார்ப்பார். தரையைப்பார்ப்பார். திடீரென கண்களைப்பார்ப்பார். டீக்கடைக்காரர் வயிற்றைப்பார்ப்பார். இப்படியே மயக்கமருந்து கொடுக்காமலே நமக்கு மயக்கம் வந்துவிடும்.

கூழாங்கல்லுக்கு கலைத்தொப்பிக்காரரை பிடித்திருப்பது ஏதோ சில உதவிகள் செய்திருப்பது என்பதால்தான் என்பது தெரியாத ஒன்று கிடையாது. கலைத்தொப்பிக்காரரின் அன்புதான் என்னை இங்கே தங்க வைத்திருக்கிறது என்று கூறினார். அன்புதான் எல்லோரையும் பேதமில்லாமல் நதிநீர் போல நனைத்து உயிர்ப்புள்ளவர்களாக்குகிறது.

பணமில்லை என்றாலும் மனதை இலகுவாக வைத்துக்கொள்வது கூழாங்கல்லுக்கு சற்றும் பழக்கமில்லாதது போல படுகிறது. விரைவிலேயே கோபம் கொண்டு விடுகிறார். இருந்தாலும் இதையெல்லாம் ஸமீரா சற்றும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book