அடித்து மழை பெய்த நாளிலும்
தொட்டிச்செடிகுக்கு
தேவைப்படுகிறது சிறிது நீர்.
குப்பையை குப்பைத்தொட்டியில்
போடு என்றார் ஆசிரியர்.
எனது கை தயங்காது
கவிழ்த்தது ஆசானின்
சிரசில்.
எப்படி இவரால்
சிரிக்கமுடிகிறது.
உதடுகளே இல்லாது
பல் தெரியும் ரண
இளிப்பு.
பேச வழியேயில்லை
கண்கள் உறைந்து
பொம்மையாய்…
கைகள் இடையறாது
எனது நெஞ்சில்
பாய்ச்சுகிறது கூரிய
வாளை…
குற்றம் ஏதுமில்லை
என் கண்களை மட்டும்
பார்த்துவிடாதே…
தற்கொலைப்பாடல்கள் தொகுதி – 1