"

காட்டுப்பள்ளியின் செயல்பாடுகள் பற்றிய பதட்டத்தில் இருக்கிறேன் என்று ஸமீராவிடம் கலைத்தொப்பி கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மளிகைக்கடை ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். ஸமீரா அவரைப்பார்த்துவிட்டு, சாப்பிட என கூற, ஸமீரா வரும்போது, கலைத்தொப்பி மதுபானப்புட்டிகளை பொறுக்கி வைத்துக்கொண்டிருந்தார். எதற்கு எனும்போது, பள்ளிக்குத்தான் விளக்குக்கு பயன்படும் என்றார். ஸமீரா அக்மார்க் ஆண்பாவம் பாண்டியராஜ் போல முழித்தார். தணிந்த குரலில் கடுமையான இலக்கிய விசாரத்தினை பேசும் கலைத்தொப்பி ஆச்சர்யமானவர். தேநீர்காரனின் வெற்றி பற்றி பேசினார். எலைட் கார்ப்பரேட் காந்தி குல்லா கட்சி தோற்றதற்கான தார்மீக காரணங்களை கலைத்தொப்பி அடுக்கியபோது அதன் தலைவரான வாலுக்கு கூட அதெல்லாம் தோன்றியிருக்குமா என்று பயந்துபோனார் ஸமீரா. பேச்சு மலைகளில் உள்ளே நுழைவது குறித்து தொடங்கியது. கடைக்காரர் ஒருவர் தனக்கு விருப்பமான தலைப்பாக இதை எடுத்துக்கொண்டார். ஒருவரையும் தன்பேச்சில் உள்ளே விடவில்லை. கங்காணிச்சித்தன் வர இருநாட்களாகும் என்று கூறிய போது கலைத்தொப்பி ஆழமாக ஸமீராவை உற்றுப்பார்த்து புன்னகைத்தார். அது அப்படித்தான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book