ஆள் நல்ல கிரேன் மனோகர் போல இருப்பார். கட்டைகுட்டையான உடல்தான் என்றாலும் நல்ல வலுவான உறுதியான தேகம் நம்பிக்கை மிளிருகின்ற முகம் அவருக்கு. நமக்குத்தான் பேச்சு என்றாலே உதறல்தான்.
‘’தோழர் சாப்பிட்டீங்களா?’’
‘’ எப்போ?’’ என கோணலான சிரிப்புடன் கேட்டார்.
முட்டைபோண்டாவும், டீயும்தான் காலை உணவு.
‘’கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதாங்க’’
‘’ அப்ப சாப்புட்டுடீங்க?’’
எங்கள் அப்பத்தான சத்தியமாக இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவரது துணைவி என் முகத்தில் பேய் போல அலைந்த கண்களைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
கங்காணிக்கு மேற்கோளைத்தேடி எடுப்பதிலே உயிரே போய்விடும் போல் இருந்தது. இதோ இப்போது வெளிக்கு வந்துவிடும் என்று பயந்தபடி சேகுவேரா லுபூம்பா, களறி என்று தமிழர் வாழ்வியலுக்கு சர்வதேச சொற்களை தேடிப்பிடிக்க முயன்று கொண்டிருந்தார். எப்போதுமே நான் கடவுள் வேடத்தில் இருப்பார். ஏதோ பெண் கூறித்தான் செம ஷார்ப்பாக தலைமுடி வெட்டி பாலிஷாக இருந்தார். இரண்டாவது முறையாக சுக்கு காபியை கையில் வைத்தபோதுதான் சிலம்பத்தலைவர் மாதேஸ்வரன்தான் என்னிடம் கேள்வி கேட்டவர் என்று தெரிந்தது. கூடவே சிலம்ப வகையறா மாணவர்கள் அண்ணாச்சியை சுற்றி வந்து வைக்கும் ப்ளெக்ஸ் பேனருக்கு நாலுக்கு ஆறு, ஆறுக்கு எட்டு ஏதோ செயற்கைக்கோள் விஞ்ஞானக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்கள். பொரிக்காரர் நானும் வரவா என்பது போல குரல் கொடுக்க மாதேஸ் அண்ணாச்சி பொரி வாங்கலாமாடா என்று தன் சிஷ்யர்களிடம் கேட்டார்.
வாய்ப்பிற்குத்தானே காத்திருக்கிறோம் என்று சிஷ்யர்கள் பாய்ந்து சென்று வாங்கினார்கள். அந்த ஓட்டத்தை உசேன்போல்ட் கூட ஓடியிருக்கவில்லை என்றால் பாருங்கள். மாதேஸ்வரன் அவர்களை பார்த்தால் ஏதோ நெல்லைஸ்டோரில் பொட்டுக்கடலை மடித்துதருபவர் போல் இருந்தாலும் பல புகைப்படங்களில் சிலம்பக்குச்சியை வைத்துக்கொண்டு உருமாலை கட்டியபடி போட்டோஷீட் நடத்தி பயமுறுத்தி பார்ப்பவனையெல்லாம் அண்ணன்டா.. என நம்பிக்கையில் வைத்திருந்தார்.
கலைத்தாய் அறக்கட்டளை வழியே பல மாணவர்களுக்கு விலையில்லாமல் சிலம்பு சொல்லித்தருகிறாராம். மிக நம்பிக்கையான இளைஞர் படை ஒன்று ஈரோடு மாநகரில் திரள்கிறது.