மதவெறி உண்டு. ரத்தவெறி உண்டு. அங்கிள் சாமை சந்திக்க விசா இல்லை. என பல்வேறு அட்டிகள் உள்ளன. சர்ச்சைகள் இருந்தாலும் பிரதமராக அரியணை ஏறவிருப்பது போடி என்பது உறுதியாகிவிட்டது.
ஆட்சியாளர்களினால் தொழிலாளிகளுக்கு பெரிய நன்மை ஒன்றுமில்லை. அவர்கள் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று மைக்கில் முழங்கத்தான் போகிறார்கள். எப்போதும் போல ஏதாவது பேசினால் நீ ஒரு காவி தீவிரவாதி என வம்புக்கு இழுக்கிறார்கள் வெள்ளியங்கிரி நாத்திகர்கள். சில அறிவுஜீவிகளுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் மக்களுக்கு விரும்பமென்னவோ ஆம்பல்தான். வேறென்ன வாய்ப்பிருக்கிறது? துடைப்பம் எல்லாம் இங்கே விலைபோகாது. ஜனநாயகப்புளுகு எல்லாம் பத்திரிகை விற்க உதவும். முழுக்க அதிகாரம் ஒருவரின் கைக்குள்தான் இருக்கப்போகிறது. சர்வாதிகாரம்தான் மிச்சமாகிறது. அதைத்தான் அனைத்து நாடுகளும் வரவேற்கிறார்கள்.
பலரும் தேநீர் விற்பவர் ஏதாவது செய்வார் என்று வாக்களித்திருக்கிறார்கள். பல ஊடகங்களும் இனி தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு மௌனமாக காவி ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள். எனக்கு பயமெல்லாம் இனி ஒரு கூட்டம் கூறும் சாமிகளைத்தான் நாம் வணங்கவேண்டும் என்கிற நிர்பந்தம் வருமா? என்பதுதான்.
எல்லாவற்றையும் மாற்றியமைக்கப்போகிற நாள் வந்துவிட்டது. ஆம்பல் கட்சிக்கு என்றுமே பெரிய லட்சியக்கனவு எப்போதுமே இருந்தது கிடையாது. பிஎன்ஒய் போலத்தான் பணம் நிறைய கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் செய்வார்கள். நல்ல விஷயம் செய்வதற்கு முன் திருநீறு இட்டுக்கொள்வார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். வாழ்த்துக்கள் போடி. தயவுசெய்து வெளிநாடு சுற்றி வராமல் கிராமம் சுற்றி, வளர்ச்சி பெற உழைக்க முயலுங்கள்.