"

கைக்கட்சி நேயன் தன் எழுத்தின் மீதான் நம்பிக்கையை இழந்துவிட்டார். இது கூட தவறு. அவர் அதனை காகிதம் வழியே செய்யவிரும்புவதில்லை. திருமணம் குறித்த நெருக்கடிகள் இருக்கலாம். பல மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்.

எழுத்து என்ற ஊடகத்திலிருந்து காட்சி ஊடகத்திற்கு நகரும் சமயம் இதுதான் என்று தீர்க்கமாக நம்புகிறார். எனக்கென்னமோ அதில் நம்பிக்கை இல்லை. அவர் முயற்சி தவறென்பதில்லை.இது என் கருத்துதான். யாரும் எழுதுகிறார்கள். உழைக்கிறார்கள். என்ன மரியாதை கிடைத்துவிட்டது? என்று கூறுகிறார். உண்மைதான். ஆனால் தேர்ந்த சிறப்பான எழுத்தை தேர்ந்து படிக்கிறவர்கள் இன்றும் உண்டு. என்றுமே உண்டு.

இந்தமுறை அவர் பற்றி ஸமீரா எழுதியிருந்தது இவைதான், நம்பிக்கை இழந்த ஒரு ஆன்மாவை சந்தித்தேன். ஜோ.டி குரூஸ் பற்றிப்பேசினேன். பல்வேறு கோணங்களை அவர் பேசும்போது அறிய முடியும். அதுதான் அவரிடம் நம்மைத்தொடர்ந்து உரையாட ஆர்வமூட்டுகிற ஒன்று. அவர் சற்று சோர்வாக காணப்பட்டதால் நான் விரைவிலேயே திரும்பிவந்துவிட்டேன் என்று தன்நாட்குறிப்பில் எழுதியிருந்தார். பாருங்கள் ஒருவரது டயரியைத்திருடி படிப்பதில் எவ்வளவு விஷயங்கள் தெரிகிறது என்று.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book