புத்தகத்திருவிழாவில் புத்தகம் வாங்க பார்த்துக்கொண்டு இருக்கையில் நிலநடுக்கம் வந்ததுபோல உணர்வெழ, இந்தியன் போலீசைக்கேட்டேன். ‘’ என்னாச்சுங்க’’ என்று. ‘’அடப்பாவி தலைவர் இடிமுழக்கம் பேசறாரு, உனக்குத்தெரியாதா?அவருதே விழாவ நடத்துறதே’’ என்றவர் ஃபேஸ்புக்கில் கவிதை எழுதியபடி, பெண்களின் அசைவுகளையும் சென்சார் போல கவனித்துக்கொண்டு வந்தார். மீண்டும் ஒருமுறை தரை அதிர்ந்தடங்கியது.கடைகளின் மெல்லிய மர அட்டைகள் எல்லாம் நெளிந்து நீள்வதாக தோன்றியது.
‘’முக்கிப்பேசறதுல நம்மு தலைவர் போடியையும் மிஞ்சீறுவாரு’’ என்று இந்தியன் போலீஸ் சொல்லி முடிக்கவில்லை. தலைவர் இடிமுழக்கம் கத்துனாரு பாருங்க!, அடேங்கப்பா 64 ஸ்பீக்கர் தியேட்டர் எல்லாம் என்னத்துக்கானது!! கொய்யால, அப்படியே கொய்ங்குது காது, நிலமே வளையறாப்பல இருக்குதுன்னா பாருங்களேன் தலைவரு பேச்சோட எழுச்சியின் வலிமை என்ன சொல்றது நானு! ஸ்பீக்கர்களே கழிந்துவிடும் பயத்தில் அம்புட்டு பவர் அண்ணனோட பேச்சு. மைக்கே நொறுங்கிப்போய்விடும் தன்மை கொண்ட உணர்வெழுச்சிப்பேச்சு பொதுவுடைமையாளனின் தனிச்சொத்து என்று பேராயக்கட்சி கூறினார். இருக்கட்டும் அதுக்காக வருகிறவர்களையெல்லாம் பயமுறுத்தவேண்டுமா என்ன? மெர்சலாகுதல்ல தலீவா!
இந்தியன் போலீஸ்காரர் மீட்டர் மட்டும் வைத்திருந்தால் பெண்களை அளந்தே விடும் முனைப்பில் கணக்கிட்டுக்கொண்டு இருந்தார். சித்தர் பதிப்பகம் வேறு எப்போதும் போல மாறுவேஷப்போட்டிக்கு தயாராக இருப்பது போல் நின்றார்கள். ஹெரிடேஜ் தமிழனின் பசு தொண்டுப்பட்டி போல ஸ்டால் இருந்தது. மேடம் ‘அ’ கம்பீரமாக நாங்க இருக்கோம் என்று கையைக்கட்டி ஸ்டாலின் மத்தியில் ஹீரோயின் சென்ட்ரிக் படம்போல நின்றார். சித்தருக்கு எப்போது கும்பி எரிச்சல் தாளாது போகிறதோ அப்போது எல்லாம் எவனையாவது கூப்பிட்டு, நம்மைப்பற்றி, இவர் இந்த சைக்கிள நல்லா பெண்டு எடுப்பாரு. அது வீலு பெண்ட் எடுக்கிற அழகு இருக்குதே என வத்தி விடுவார். எதிரில் இருப்பவனுக்கு விழி பிதுங்கிவிடும். அதுதானே அதுதானே வேணும். மாரத்தான் னு சொன்னாவே, அது ஆப்பிரிக்காவுல இருக்கற நாடுதான என்று கேட்கிற அறிவுச்சுண்ணாம்புகளாச்சே யாருகிட்ட? ஆண்டா ஆ.ஆ ஆ..னு சித்தன் சவுண்டு கேட்டாலே போதும்; இப்பல்லா அலர்ட் ஆகி ஒரே ஓட்டம்.