ஆம். பேப்பர்பையன் உதவி புள்ளியலாளராக பணியில் அமர்ந்துவிட்டார். செய்தியை அழைத்து தெரிவித்தபோது போனவாரத்தில் அவன் இருந்த மனநிலையை நினைத்தேன். எல்லாம் அவ்வளவு எளிதாக மாறிவிட்டது. ஆச்சர்யம்தான். வேலை கிடைத்துவிட்டது என்றதும் அவனின் பொறுப்புகளை சுமைகளை ஏற்க இயற்கை எப்படி அவரை மெல்ல தயார் படுத்துகிறது என்று நினைத்தேன்.
எனக்கு அவர் வேலைக்குச்சென்றது பெரிய மகிழ்ச்சி. அவன் எவ்வளவு நாள் இதற்காக காத்து கிடந்தார் என்று நானறிவேன். அதற்கான முயற்சி, உழைப்பு, கிடைத்த வசைகள், நம்பிக்கையின்மை இடையோ போராடிக்கொண்டிருந்தார். அவனின் போராட்ட காலத்தில் பெரிய உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், அவரோடு உடனிருந்திருக்கிறேன். தோற்றுப்போனதை கண்டுகொள்ளாமல் விடுகிற இந்த சமூகம் வெற்றி பெற கையாண்ட வழிகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வது எப்படி?
இனி அவர் தன் கடன்களை அடைத்துவிட்டு சிறிது நிம்மதியாக இருக்கலாம். இதன் பின் பெரும் நெருக்கடிகள், போராட்டங்கள் உள்ளனதான். ஆனால் அவர் அதனையும் சமாளித்து வென்றுவர வாழ்த்துக்களை கூறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.