தொக்கூ பள்ளியின் நோக்கம் பற்றி கலைத்தொப்பி அண்ணன் கூறியபோது, எனக்கு அப்போதே பேதி ஏற்படுமோ என்று பயமாக இருந்தது. தொக்கூவில் சிறுவர்களும், பெரியவர்களும் வசிப்பார்கள் என்று கூறப்படுவது பிறப்பு இறப்பு இரண்டையும் குறித்து குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கலைத்தொப்பி கூறியதை காலச்சுவடில் பதிப்பித்தால் நிச்சயம் நாலுபக்கம் நிச்சயமாக வரும். இருத்தலில் இருந்து இருப்பிற்கு திருப்பும்போது நிச்சயம் என் வாழ்வு முடிந்திருக்கும்.
கலைத்தொப்பி பேசுவதை கேட்டிருப்பீர்களோ என்னவோ நேருக்குநேர் ஒருவன் தன் காதலியை மிகநெருக்கமாக நெருங்கி முத்தம் கொடுக்கும் தூரத்தில் வைத்து பேசினால் எப்படி இருக்கும். அது மாதிரி கண்களை உருட்டி உளவியல் வைத்தியர் போல பேசி மிரட்சி உண்டுபண்ணுவார். வசீகரமான கண்களை கூறியே ஆகவேண்டும்.
தொக்கூவில் பயிலும் அனைவரும் அவர்கள் உருவாக்கும் அனைத்தும் அவர்களாலேயே உருவாக்கப்படவேண்டும் என்று கூறியதோடு, நீ கண்டிப்பா வரோணும்யா என்றார். முதலில் மாட்டுக்கொட்டாய் ஒன்று அமைத்து பின் தங்குவதற்கான குடில் அமைக்கவேண்டும் என்று சிந்தனைப்புகையை ஊதினார். பின் நூலகம் பற்றி விரிவாகப்பேசி, மொழிபெயர்ப்பு பற்றியும், என்னைப்பற்றியும் கேட்டறிந்தார். ஒன்றைத்தேர்ந்தெடுத்து அதில் ஆழமாக பயணித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று தேநீர் குடிக்கும்போது சொன்னார். கண்களைப்பார்த்துக்கொண்டும், கைகளைப்பிடித்துக்கொண்டும் எத்தனைபேர் பேசுகிறார்கள், சொல்லுங்கள். நெகிழ்ச்சி அப்படியே உச்சி முடி முதல் அடி நகம் வரை ஊறி வழிந்த நாள்