யார் இவர்? புள்ளிவிவரத்தை அடுக்கிறார். வந்தால் போதும். டி.வி, இன்ன பிற பரிசுகளை வாங்காமல் வரமாட்டார். மாற்றுசிந்தனை, மங்காத்தங்கம், கோட்டக்கல் ராஜா, சமூகநீதிப்போராளி, லேகியகாந்தி, கைகாரவேந்தன், சூரணச்சுந்தரன், அறக்கட்டளை அரசு என சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்.எம் தனது பள்ளிப்படிப்பிலே தன் எதிர்காலத்தை ஆசிரியரின் கண்ணில் குத்தி தெரிவித்தார். பனிரெண்டாவது வணிகம் படித்துவிட்டு, மருத்துவம் படித்துவிட்டு, மருத்துவம் படித்துவிட்டு பொறியியல் படிக்கலாம் என்று பொறியியலை மன்னித்துவிட்டு மருத்துவம் சேர கட் ஆப் மார்க் கூட்டிக்கொண்டிருந்தார். போனாப்போவுது என்று பள்ளியில் பாஸ்மார்க் போட்டது தெரிந்து மருத்துவத்தை தவிர்த்துவிட்டு, அடுத்த டார்கெட் பொறியியல்தான் என்று அதை படிக்கமுயன்றபோது, அந்த பாடங்களை எவ்வளவு முயன்றும் புரிந்துகொள்ள முடியாது லபாஷ்ட மருதம் லேகியத்தை வாங்கித்தின்றபோது தெரிந்துகொண்டார்.
அப்போதுதான் மலமிளக்கி மருந்தை தவறாக தின்றுவிட்டோமா என்று யோசிக்கும்போது, பத்துதடவை டவுன்லோடு ஆகியிருந்தது. அப்லோடு வேண்டாமா என்று பேதியிலிருந்து மீள நிவி திரிபலா சாற்றினை கோப்பையில் ஊற்றிக்குடித்து மலர்ச்சி பெற முயன்றார். அதற்குள் புரட்சிக்கட்சி மரகதமணி அழைத்தார். ‘’ சன்னி புள்ள படம் வந்திருக்குது. கேசட்டு வாங்கி வெச்சுட்டேன். முப்பிடாதி தைலமா, மூணுதழ தைலமா சொன்னியல்லோ. அதக்கொண்டாந்தீன்னா, எனக்கு எனக்கு பயங்கரமா யூஸ் ஆகும். எரக்டிகல் டிஸ்பங்ஷன் ஆனா நெலமய எப்படிய்யா சமாளிப்பேன்; ஆண்டவா கோட்டக்கல்லோன்தான் துணை என பேச, ஆர்.எம் எக்கச்சக்கமாக பதறினார். ‘’ அய்யோ, படத்த பாத்தறாதீங்க, நானும் வந்தர்றேன். உங்களுக்கு அதுதானே வேணும். டபுள் ஸ்ட்ராங் சோலமலயில வாங்கிட்டு வந்தர்றேன்.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ’’ அதற்குள் போனில் எக்குத்தப்பான காணொளி இரைச்சல்கள் கசிய, ஆகா, சிரிக்கறது பச்சபுள்ள மாதிரி, பண்றதெல்லாம் சிவராஜ் சிகாமணி மாதிரி என்றபடி வேட்டியை மாற்றி ஜீன்ஸை அணிந்துகொண்டு அஸ்வகந்தந்தாதி லேகியத்தை இரண்டு கரண்டி வாயிற்குள் இறக்கி, தண்ணீர் குடித்துவிட்டு,அஸ்மா சென்டை எல்லாபக்கங்களிலும் அடித்துக்கொண்டு 110சிசி புரவியை கிளப்பினார். டீக்கடையில் வெந்நீரை அள்ளிக்குடித்துவிட்டு, நாக்கை சப்பியபடி, வண்டியில் கிளம்பினார்.