"

நீங்க சென்னைக்கு போனீங்கன்னா பத்திரிக்கைய எப்படி பாத்துக்குவீங்க?

போயிட்டு வந்தர்றதுதான, இங்கயே எல்லா வேலயையும் செஞ்சுக்கலாம் இப்பல்லா.

சென்னைன்னா உங்களுக்கு நீங்க விரும்பற பொருள், ஆட்கள், புத்தகங்கள் எல்லாமே கெடைக்குமே?

அப்படி முன்னாடி ஒரு நெலம இருந்தது. ஆனா இப்ப அப்படிக் கெடையாது. ஏன்னா தொழிற்நுட்பம் அப்படி போயிட்டிருக்குது.

முன்னாடி நீங்க மெய் அண்ணா எல்லாருமே சென்னைல இருந்தீங்க இப்ப எல்லோருமே ஊருல இருக்கீங்க என்ற கேள்வியின் பொருள், தொனி சரியா என்று அப்பறமாக சொல்லுகிறேன்.

திரும்பி வந்துட்டமுன்னு சொல்லமுடியாது. ஆனால செய்யற விஷயத்த சென்னைலதா செய்யோணும்னு கெடையாது. வேணும்னா போய்ட்டு அப்பறம் திரும்பி வந்தர்றலாம். ஒண்ணும் பிரச்சனையில்ல.

என்று சொல்லியவர் வேறு யாருமில்லை. கான்பிடன்ஸ் சென்னிமலை சத்தியார்த்தி கவுண்டர்தான். எழுத்தோலை இதழின் நிறுவனர். இதுவே போதும் ஆசிரியரும் இவர்தான் என்று புரிந்துகொள்ள. பேசிவிட்டு பின்னர் கங்காணிச்சித்தருடன் ஷேர் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டார். நான் சென்னையிலிருந்து வந்துவிட்டது குறித்து ஏதோ அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி, தொனி இவற்றில் என்னுடைய விரக்தியான மனதின் சாயை தோன்றிவிட்டதா என்று என்னால் அறிய முடியவில்லை. மிக கவனமாக இருக்கவேண்டும் வார்த்தைகளில். அதைவிட அதிக கவனமாக உறவுகளிடம் பேச வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

மனதேசப் பாடல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book