கலைத்தொப்பிக்காரரோடு ஒரு விவாதம் ஏற்பட்டது. ஹிட்லர் கெட்டவன், மோசம் என்றெல்லாம் முழுக்க தீர்மானித்துவிட முடியாது. நல்ல விஷயங்களும் உள்ளன என்று சாமிநாத சர்மா எழுதிய ஹிட்லர் சுயசரிதையை முன்வைத்து சிலவற்றை யோசித்து புரிந்துகொண்டு ஸமீரா கூறினார்.
ஆனால் கலைத்தொப்பிக்கு ஏகப்பட்ட ஆவேசம் கிளர்ந்தெழுந்துவிட்டது. ஒலிம்பிக் விளையாட்டில் கூட கறுப்பின வீரனுக்கு கைகொடுக்க மறுத்தவன்தான் அந்த ஹிட்லர் தெரியுமா? என்றார். ஹிட்லரின் மீது முழுக்க ஒட்டுமொத்த வாழ்விற்கான வெறுப்பை அவர் கொண்டிருந்ததால் மேலும் ஸமீரா நீயா? நானா? சாடலை நிகழ்த்தவில்லை.
ஹிட்லரால் அழிந்தவர்களை விட பைபிளால் பல அறிவாளிகள், ஒட்டுமொத்தமாக உலகம் சந்திக்கும் சவால்கள் அதிகம். இதைச்சொன்னால் உங்கள் நிறம் காவி என்கிறார்கள். எப்படி ஒருவரை முழுக்க இதுதான் என்று அடையாளப்படுத்த முடியும்? அப்படி ஒருவர் உருவாகிறார் என்றால் அதற்கு சமூகத்தின் பங்கு சிறிதும் இல்லையா? அறிவு, புத்தி இவற்றின் நோக்கத்தை சமூகமும் அதன் சூழலும் மாற்றியமைக்கிறது உண்மைதானே!
சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவுகள் பெரியவன் ஆனபிறகும் உங்களை பின்தொடரும். மனதில் உறைந்த நஞ்சல்லவா, காயம் அல்லவா. ஹிட்லருக்கும் அதுபோல ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. போரில் தளபதியாக பணியாற்றியவர் போரின் பின் பட்டினியால் வாடி, ஒரு ரொட்டித்துண்டுக்காக பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம் ஒரு யூதர் உணவகத்தில் உணவை பாதி சாப்பிட்டுவிட்டு, அதன் விலையாக 2000ரூபாய் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். ஏன் இப்படி என்ற கேள்விக்கு ஒரு கோணத்திலான தேடலின் விடையாக ஹிட்லரின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. வென்றவர்கள் எழுதுகிற வரலாறுதானே இங்கே அனைவரின் கையிலும் இருக்கிறது. தோற்றவர்களின் முனகல் கூட இங்கே எடுபடுவதில்லை.