இந்த நூல் இதுவரை இல்லாத ஒரு தன்மையைக்கொண்டுள்ளது. வெளிப்படையான சில விமர்சனங்களை வைக்க முயல்கின்றது. இது யாருடைய மனதிலும், யாரைப்பற்றியுமான மோசமான கருத்தை உருவாக்குவதை நோக்கமாக கொள்ளவில்லை. குறிப்பிட்ட சூழலில் சிலரின் அறிவு, அவர்களின் வெளிவரும் ஆன்மாவின் தன்மை பற்றியது. எந்த முன்முடிவுகளோடு எழுதப்படவில்லை என்பதே இதை வாசிக்க ஒரு காரணமாக கொள்ளலாம். குறையாத அங்கதமும், சுய எள்ளலும்தான் இவற்றின் அம்சங்களாக வாசிப்பவர்கள் கூறக்கூடும்.
எங்கள் இருவருக்குமே இது ஒரு புதிய அனுபவம் என்று கூறலாம். லாய்ட்டர் லூன் ஒரு உல்லாச பேர்வழி பெரும்பாலும் அவர் படு கிண்டலான சம்பாஷனைகளை உருவாக்க மெனக்கெட்டார். பெண்களின் பேச்சு கேட்டால் ஒரே ஓட்டம்தான். அப்புறம் எங்கே எழுதுவது? அதனால்தான் மனதேசப்பாடல் கேட்க இவ்வளவு நாட்களாகிவிட்டது.
இருவரும் இணைந்து எழுதியதில் இது குறிப்பிட்ட வடிவம் பெற்றிருக்கிறது. வாசித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள். இதை எழுத உதவிய சபர்மதி அறக்கட்டளை தலைவர் இரா. முருகானந்தம், எழுத்தாளர் என்.ஸ்ரீராம், வெளியிட்ட ஆரா பிரஸ் குழுவினருக்கும் நன்றி.
ப்ரியங்களுடன்
ஜேம்ஸ் பாம்பிரே
லாய்ட்டர் லூன்