இதை எழுதியவரை கண்டுபிடித்து என் கையாலேயே கொல்லவேண்டும் என்று ஆத்திரம், ஆவேசம், கோபம் வருபவர்களுக்கு மூச்சா யோக தந்த்ராவினை அறிமுகம் செய்யவிருக்கிறோம். நன்றாக அடிவயிறு அர்ணாக்கயிறில் அழுத்தப்படும்வரை தண்ணீர் குடியுங்கள். பிறகு நூறுவரை எண்ணுங்கள். அதற்குள் சிறுநீர் வயிற்றில் முட்டத் தொடங்காவிட்டால் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். நாளடைவில் இதுவே பெரிய வேலையாக போய்விட மற்றபடி கோபத்திற்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே இந்த நூலைப்படிக்கும் வரை இதனை கண்டிப்பாக தொடரவேண்டும். நன்றி!
சிவகிரி அரசு சித்தமருத்துவர் அடிசில் நம்பிராஜன்