இவள் நம்மைப் பேணும் அம்மை என்று காரைக்கால் அம்மையாரைப் பற்றிச் சிவன் உரைத்ததாகக் கூறுகிறது பெரிய புராணம். உண்மையில் அவர் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார். அவரது வாழ்வும் வாக்கும் பற்றிய ஒரு ஆய்வு நூல் இது.
நூல் ஆசிரியர் அறிமுக உரை- ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்- 1 வேதநெறியும் சைவத்துறையும், 2 காரைக்கால் அம்மையார், 3 பாரதி செய்த வேதம். இவற்றில் முதல் இரண்டும் சில மாற்றங்களுடன் மின்னூல்களாகவும் freetamilebooks.com ஆதரவி்ல் வெளிவந்துள்ளன. இது தவிர திருவாசகத்தை தருமபுர ஆதீன வெளியீட்டுக்காக ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இருப்பிடம் சென்னை.
தொடர்பு எண் 9884583101