39


கார்போகரிசி

1) மூலிகையின் பெயர் -: கார்போகரிசி

2) தாவரப்பெயர் -: PSORALEA CORYLIFOLIA.

3) தாவரக்குடும்பம் -: LEGUMINACEAE,
(PAPILLIONACEAE,
& FABACEAE)

4) முக்கிய வேதியப் பொருட்கள் -: சொரோலின்
மற்றும்ஐசோசொரோலின்.(PSORALEN)

.5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பழம்,விதை,
மற்றும் வேர் முதலியன.

6) வளரியல்பு – : கார்போகரிசி ஒரு செடி வகை
யைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் சைனாவிலும் இந்தி
யாவில் அதிகமாகக் காணப்பட்டது இது சுமார்
3 அடி உயரம் வரை வளரும். இது ஊட்டச்சத்
துள்ள மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும்.
இலைகள் அகலமாக இருக்கும், கொத்தாக
இருக்கும். ஒரு கிளையில் 8-12 பூக்கள் பூக்கும்.
அவை காயகி விதைகள் உண்டாகும். சுமார் 7-8
மாதங்களில் முதிர்ந்து விடும். இதன் விதையிலிருந்து
எண்ணெய் எடுப்பார்கள்(ரோகன் பாப்சி) இதன்
இலை,பழம், விதை, வேர் யாவும் மருத்துவப்
பயனுடையவை. இதை வணிக ரீதியாகப் பயிர்
செய்வார்கள். ஒரு எக்டருக்கு 7 கிலோ விதை
களை 2 அடிக்கு 2 அடி என்ற இடைவெளியில்
பண்படுத்திய நிலத்தில் நடுவார்கள். தண்ணீர்
விட்டு பயிர் பாதுகாப்புச் செய்து 7-8 மாதங்களில்
முதிர்ந்த பழுத்த சற்று பழுப்பக் கலந்த கருப்பாக
மாறி ஒரு வகை வாடை கண்ட பொழுது அறுவடை
செய்ய வேண்டும். பின் விதைகளை நிழலில்
உலர்த்த வேண்டும். ஒரு எக்டருக்கு சுமார்
2000 கிலோ காய்ந்த விதைகள் கிடைக்கும்.
இதிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். வருட
செலவு ரூ.30,000 வரவு ரூ.75000 வருமானம்
45,000 கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள்- ஆதிகாலத்தில் சைனாவிலும்,
இந்தியாவிலும் இதன் எண்ணெயை உடல் வெளி
பாகத்தில் தேய்த்து தோல் வியாதிகளைப் போக்
கினர் மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியூட்ட இதை
உபயோகித்தார்கள். இதன் வேர் பல் வியாதி
களுக்குப் பயன் படும். இலை அமீபாவால் வரும்
வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும்
வல்லது. இதன் பழம் வாந்தி, மூலம், இரத்த
சோகை, சுவாச சம்பந்தமான நோய்கள் குணப்
படுத்தும். முடிவளரவும் பயன் படுத்தப் பட்டது.
வயிற்று வலி, முதுகு வலி, கிட்னிகள் சம்பந்தப்
பட்ட நோய்களையும் குணப் படுத்தும். இது தாது
விருத்தியுண்டாக்கி உடல் வன்மை பெறப் பயன்
படும்.

இதன்விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை
இருதய சம்பந்தமான நோய்களுக்கும்,யானைக்கால்
வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்ட
சம்பந்தமான வியாதியை சீர் செய்யவும், தோல்
வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண்
குஷ்டம், குஷ்டம், “AIDS” க்கும் நல்ல மருந்தாகப்
பயன்படுகிறது.

கார்போகரிசியால் கடுவன், விரணம், பயங்கர
மான சர்ப்பகீட தாவர விஷங்கள், வாதசிலேத்
தும தொந்தம், தினவு, யானைச் சொறி, கிரந்தி
ஆகிய இவைகள் நீங்கும். பித்தம் அதிகரிக்கும்
என்பர்.

இதன் சூரணத்தை 5 – 10 குன்று எடை சர்க்
கரையுடன் கூட்டிக் கொடுக்கலாம். இது தீபத்தை
உண்டாக்கும். மலத்தைப் போக்கும். தோல்
சம்பந்தமான பல வியாதிகளைக் குணப் படுத்தும்.
விஷேசமாக இந்த சரக்கை வாசனைத் திரவியங்
களிலும் உபயோகப் படுத்துவதுண்டு.

சந்தனாதிச் சூரணம்– கார்போக அரிசி, நீரடி
முத்து, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு
சந்தனத்தூள், அகில் கட்டை, தேவதாரு, கற்
பாசி, வெட்டிவேர், குருவி வேர், ஆக பத்து
சரக்குகளையும் வகைக்குப் பலம் ஒன்றாக
இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு
ஸ்நானம் செய்யும் போது இச்சூரணத்தை நீர்
விட்டுக் குழைத்துத் தேகமெங்கும் பூசித்
தேய்த்து 5 – 10 நிமிடம் வரை ஊற விட்டுப்
பின் நன்றாய்த் தேய்த்துக் குளிக்கவும். இப்படி
ஒரு மாதம் செய்ய சொறி, சிரங்கு, நமைச்சல்,
படை, தவளைச் சொறி, கருமேகம், இரத்தக்
கொதிப்பனாலுண்டாகும் பல நிற வடுக்கள்
யாவும் போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book