89


87.குண்டுமணியிலை.

1. மூலிகையின் பெயர் :-குண்டுமணி.

2. தாவரப்பெயர் :- ABRUS PRECATORIOUS AY-BRUS.

3. தாவரக்குடும்பம்L :- FABACEAE (PEA OR LEGUNA FAMILY)

4. வகைகள் :- சிகப்புக்குண்டுமணி மற்றும் வெள்ளைக் குண்டுமணி.குனிறி மணி.

5. வளரியல்பு :- இது தமிழ் நாட்டில் எங்கும் வளரக்கூடியது. இது செடி, புதர்,
மரம் இவைகளைப்பற்றிப் படரக் கூடிய கொடிவகையைச் சேர்ந்தது. இது
அவரைக் காய் போன்று காய்விட்டு முற்றி வெடித்து விதைகள் சிதறிவிடும்.
விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. இதன் விதை குன்றிமணி தங்க
எடைக்கு ஒப்பிடுவர்.

6. குண்டுமணி யின் மருத்துவ குணம் :-

பெண் ருதுவாக.

ஒரு சில பெண்கள் 16 முதல் 20 வயதாகியம் கூட ருது
வாக மாட்டார்கள். இத்தகைய பெண்களில் பலருக்கு, வாலிபப்
பெண்களுக்கு உடலில் ஏற்படக்கூடிய அத்தனை மாற்றங்களும்
எற்பட்டிருக்கும். ஆனால் ருதுவாக மாட்டார்கள். இப்படிப்பட்ட
பெண்கள் ருதுவாக குண்டுமணி இலை நன்கு பயன் படக்
கூடியதாக இருக்கிறது.

தேவையான அளவு குண்டுமணி இலையைக் கொண்டு
வந்து அதே அளவு சுத்தம் செய்த எள்ளையும், வெல்லத்தையும்
சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்து ஒரு எலுமிச்சம்பழ
அளவு எடுத்து ஒரு நாளில் எந்த நேரத்திலாவது தின்னக்
கொடுத்து விட்டால் 24 மணி நேரத்திற்குள் ருதுவாகி விடுவாள்.
ஒரு சில பெண்களுக்கு ஆரம்பத்தில் அதிக இரத்தம் வெளியேறும்
இது உடல் வாசியைப் பொறுத்தது. அதிக அளவில் இரத்தம்
வெளியேறினால், வாழைக்காயின் தோலை சீவி விட்டு காயை
மென்று தின்னச்செய்தால், இருத்தப் போக்கு படிப்படியாகக்
குறைந்து விடும். அதன் பின் மாதாமாதம் ஏற்படக்கூடிய மாத
விடாய் ஒழுங்காக நடைபெறும்.

இந்த மருந்தை ஒரு முறைதான் கொடுக்க வேண்டும்.
மறுமுறை கொடுக்கக்கூடாது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book