"

1

மறுபடியும் ஒரு காதல்

இன்று. . . .

நான் என் கடந்த கால வாழ்க்கையை மறந்துவிட்டு என் புதிய வாழ்க்கைக்கு மாறப்போவதற்கான நேரம். . . இந்த மூன்று வருடங்களாக என் தந்தைக்கும் எனக்குமான விவாதமும் வாக்குவாதமும் கடந்த மாதம் வேறு வழி இல்லாமல் என்னுடைய ஒற்றை வார்த்தையால் முடிவு பெற்றது
அந்த ஒற்றை வார்த்தை
“திருமணம்”. . .

நான் திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்ன சில நாட்களுக்குள்ளே எனக்கான மாப்பிள்ளையை அவர் முடிவு செய்து விட்டார். . .என் தந்தை எனக்காக பார்த்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி பல முறை அவரைப் பற்றி என்னிடம் சொல்ல முயற்சித்தார். . நான் அவர் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. . அவனது போட்டோ வை கடைசி வரை நான் பார்க்கவும் இல்லை. . . ஆனால் எனக்கு அவனுடைய பெயர் மட்டும் தெரியும் ..

அந்த பெயர் என் வாழ்க்கையிலேயே நான் மிகவும் வெறுக்கின்ற ஒரு பெயர். . அந்தப் பெயரை மட்டுமே கேட்டு வெறுப்பாகிப் போனதால் அதற்குமேல் அவனைப்பற்றி நான் எதுவும் தெரிந்துக்கொள்ள விருப்பப் பட வில்லை. .
ஆம் இந்த நொடி வரை என் அப்பாவின் மருமகனை நான் பார்க்கவும் இல்லை

நாங்கள் இருவரும் எங்களது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியதால் எங்கள் பெற்றோரும் திருமணத்திற்கு முந்தைய நாள் எங்களின் திருமண நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ள முடிவெடுத்தனர். . . ஆனால் இன்று காலையில் தான் அவன் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். .

“கீர்த்தி. . . நேரமாகுது இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க?”

“இதோ வந்துட்டேன் மா”

என் அம்மா எனது திருமணத்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார். . . ஆனால் எனக்கோ இந்த திருமணத்தில் எந்த ஈடுபாடும் இல்லை நம்பிக்கையும் இல்லை. . .

எது எப்படியோ நான் தற்போது என் கடந்த கால காதலை மறக்க வேண்டும் ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும் அது அவ்வளவு எளிதில் முடியாது என்று.

நிமிடங்கள் கடந்தன. . .

நான் திருமண மண்டபத்திற்கு வந்தேன் எல்லோர் கண்களும் என்னை மட்டுமே பார்த்தன. . ஆகையால் நான் சிறிது பதட்டம் அடைந்தேன். . நான் மண்டபத்திற்கு வந்த ஒரு சில நிமிடங்களிலே என்னுடைய செல்விப் பட்டம் இதோ திருமதி ஆகிவிட்டது. . மண்டபத்திற்கு வந்து என் வருங்கால கணவருடன் நான் மணமேடையில் ஏறி அவருக்கு அருகே அமர்ந்தேன். . .

அய்யர் மந்திரம் சொல்ல அதை அவர் பின்மொழிந்துக் கொண்டிருந்தார். .
நானும் அவரோடு இணைந்து மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன். . நான் அவரது பக்கத்தில் வந்து அமர்ந்தப் பின்பும் கூட இதுவரையில் அவரும் என்னுடன் பேசவோ என்னைப் பார்க்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. ஒருவேளை அவருக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ அல்லது என்னைப் பிடிக்கவில்லையோ

என்னுடைய இந்த சங்கடமான நிலை க்கு (திருமணம்) காரணமான என் தந்தை என் பக்கத்தில் பெரிய புன்னகையுடன் நின்றுக்கொண்டிருக்க என் தங்கையோ
“மாமாவப் பாரு !!!! அவர்கிட்ட பேசு !!!!! ”
என என்னை பார்த்து சிரித்துக் கொண்டு என்னை கேலி செய்துக் கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கு முன்பாக ஒரு தடவையாவது அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு திடீரென தோன்றவே நான் மெதுவாக அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். .

கடவுளே !!!! என் அருகில் மணமகனாக அமர்ந்துக் கொண்டிருந்தவன் வேறு யாரும் அல்ல. . ..

அது அவன் தான்!!!!!

யாரை என் வாழ்நாளில் நான் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ யாரை நான் முற்றிலும் மறந்து ஒழிய வேண்டும் என்று
இருந்தேனோ அவன் தான் என் அருகில் மணமகனாக அமர்ந்துக் கொண்டிருக்கிறான். ..

ஆம் அது அவன் தான்

“அஷ்வின்!!!!”

ஒரு காலத்தில் பைத்தியக்காரியாக நான் உருகி உருகி காதலித்த என் முன்னாள் காதலன் தான் இவன். . .. . நாங்கள் இருவரும் எங்கள் காதலை முறித்துக்கொண்ட அந்த நேரத்தில் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் இன்றும் என் நினைவில் இருக்கிறது

“நான் உன்ன மறுபடியும் பாக்கவே விரும்பல. . . ஐ ஹேட் யூ மோஸ்ட் இன் தி வேர்ல்டு அஷ்வின்!!!! பை. ..”

என்னுடைய அந்த வார்த்தைகள் இப்போதும் எனக்குள் எதிரொளித்துக் கொண்டே இருந்ன. . என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் உணரும் அந்த தருணத்திற்குள்ளே அவன் என் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சுகளை போட்டு முடித்தான். . .

அது எனக்கு தாலி கயிறாக தெரியவில்லை மாறாக அது என் தற்கொலைக்காக நானே ஏற்றுக்கொண்ட என் கழுத்தை இறுக்கும் தூக்கு கயிறாகவே எனக்குத் தெரிந்தது. . .இங்கே என்ன கொடுமை நடக்கிறது என கத்திக் கூச்சலிட வேண்டும் போல இருந்தது எனக்கு

என் தலையெழுத்தை என்னாலே நம்ப முடியவில்லை இந்த உலகத்தில் யாரை நான் அடிமனதில் இருந்து வெறுத்துக்கொண்டிருக்கிறேனோ அவனையே திருமணம் செய்துக்கொண்டேன். .. இந்த நேரம் இந்த நொடி எல்லோரும் என் அருகில் இருந்தும் நான் யாரும் இல்லாத ஓர் ஆதரவற்றவளாகவே உணர்ந்தேன். .

என்னால் நடப்பது எதையும் என்னால் தடுக்க முடியவில்லை . . என் கண்கள் முழுக்க வருத்தத்துடன் நான் அவனைப் பார்த்தேன். . அவனும் என்னைப் பார்க்க மூன்று வருடத்திற்குப் பின் எங்கள் இருவரின் பார்வைகளும் ஒன்றாக சந்திக்கின்றன. . .ஆனால் இந்த பார்வையில் என்னுடைய பழைய காதல் இல்லை என்பது மட்டும் நிச்சயம். .

அவனைப் பளாரென அறைந்து விட்டு என் தந்தையிடம் சென்று சண்டையிடவேண்டும் போல இருந்தது எனக்கு. . .ஆனால் இது என்னுடைய தவறு தான். . அஷ்வின் என்ற பெயரைக் கேட்டவுடனே நான் அவனைப் பற்றி விசாரித்து இருக்கவேண்டும். . முட்டாளாகிப் போய் அப்போது விட்டுவிட்டேன். .

காலம் கடந்துவிட்டப் பின்பு அதைப் பற்றி யோசித்து உணர்வதில் ஒரு பயனும் இல்லை. . . . நடந்து முடிந்துப் போன ஒன்றை இனி யாராலும் மாற்ற முடியாது. இப்போது இந்த நொடி நான் அவனுடைய மனைவி. .

அதன் பின்பு என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை உயிரற்ற ஒரு ஆன்மாவாகத் தான் நான் அங்கு நின்றுக் கொண்டிருந்தேன். . ஒரு அடியற்ற மரம் போல. . .

எல்லா சம்பர்தாயங்களும் முடிந்த பிறகு நாங்கள் எங்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டோம். . . பின்பு அந்த இரவு நான் ஒரு அறையில் அமர்ந்து அவனது வருகைக்கு காத்துக் கொண்டிருந்தேன் . . .அவனிடம் இதைக் கேட்டே ஆக வேண்டும் என்று என் மனதிலும் அறிவிலும் நிறைய விஷயங்களும் கேள்விகளும் ஓடிக்கொண்டு இருந்தன. . . சில நிமிடம் கழித்து அவன் உள்ளே வந்து என் அருகில் அமர்ந்தான். . .

எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. . . நான் வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருந்தேன் என்றும் கூட சொல்லலாம். . .நல்ல வேளையாக நான் பேச ஆரம்பிக்கும் முன்னரே அவன் பேச ஆரம்பிக்கிறான். . .

“நான் உன்ன என் முழு மனசோட கல்யாணம் பண்ணிக்கல. .என் அப்பா என்ன ரொம்ப கம்பல் பண்ணதால தான் நான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துகிட்டேன்.”

“ஏன் உனக்கு எந்த சென்ஸ் சும் இல்லையா? நான் தான் பொண்ணு னு தெரிஞ்சதும் எனக்கு இவள பிடிக்கல னு உங்க அப்பா கிட்ட உன்னால சொல்ல முடியாதா ?”
என நானும் கத்தினேன். . .

“ஆமா நான் சொன்னேன்!!! எவ்ளோவோ சொன்னேன்!!!! பட் என் அப்பா கேக்கவே இல்ல. . அது மட்டும் இல்லாம என் பாட்டி வேற உடம்புக்கு முடியாம ரொம்ப சிக்கா இருந்தாங்க. . அவங்க சாகறத்துக்கு முன்னாடியே என் கல்யாணத்த பாக்கணும்னு ரொம்ப ஆசப் பட்டாங்க. . .அதனால் தான் . . .!!!”

“ஓ அதனால நீ இப்டி என்ன சாகடிச்சிட்ட ல?”

“ஏன் இவ்ளோ பேசறியே நீ உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே இவன பிடிக்கல வேற மாப்ள பாருங்கணு?”
என அவனும் கோவமாக கேட்டான்.

“ஆரம்பத்துல இருந்தே இந்த கல்யாணத்துல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. .அதனால உன்னோட போட்டோவ கூட நான் பாக்கல. . கல்யாண மேடையில உக்காந்து இருக்கும் போது தான் பர்ஸ்ட் டைம் உன்ன நான் பார்த்தேன். . .அப்டி மொதல்லையே பாத்து இருந்தா நிச்சயமா நான் இதுக்கு சம்மதிச்சி இருக்கவே மாட்டேன். .!!!”

“இத என்ன நம்ப சொல்றியா நீ?”

“ஓ அப்போ நான் உம்மேல இருந்த அந்த முடிஞ்சி போன லவ் அண்ட் கேர் ல தான் உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேனு நீ நெனைக்கிறியா?”

இப்படியே ஒருவருக்கு ஒருவர் வாதம் செய்து எங்கள் இருவருக்கும் மிக பெரிய சண்டை நடந்து கொண்டே போக கடைசியாக அவன்

“சரி வாட் எவர் லீவ் இட். .!!! எல்லாமே நடந்து முடுஞ்சி போச்சு . . கொஞ்ச நாள் பொறுத்துக்கோ . . .அதுக்கு அப்புறம் நாம டிவோர்ஸ் வாங்கிக்கலாம். . தென் உன் வழிய நீ பாத்துக்கோ என் வழிய நான் பாத்துக்குறேன். . . யாரும் நம்மள கேள்வி கேக்க போறது இல்ல . . .!!!”

“என்ன ஆர் யூ கிட்டிங் அஷ்வின்? . . .நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்து கிட்டதே என் அப்பா அம்மா வோட சந்தோஷத்துக்காக மட்டும் தான். .. நீ சொல்ற மாதிரி டிவோர்ஸ் வாங்கி மனசால அவங்கள சாகடிச்சி நட பிணமா பாக்க சொல்றியா?”

“பட் நமக்கு வேற வழியே இல்ல. . அது உனக்கு புரியுதா?”

அவன் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். . .நாங்கள் இருவரும் வலுகட்டாயமாக இந்த பந்தத்திற்குள் தள்ள பட்டு விட்டோம். . .ஆயிரம் வெறுப்புகள் இருந்தாலும் எந்த முடிவுகளை எடுப்பதற்கும் இது சரியான தருணம் அல்ல என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. . .

“ஓகே நான் இப்போ என்ன பண்ணனும்?”
என நான் கேட்க அவன்

“கொஞ்ச காலம் போகட்டும். . நாம இத பத்தி அப்பறம் முடிவு பண்ணிக்கலாம். !!!”

நான் அமைதி ஆனேன். ..

“தென் நாம நாளைக்கு நம்ம வீட்டுக்கு போகனும். . நான் ரெண்டு நாள் தான் லீவ் போட்டு இருக்கேன் இதுக்காக. . .!!”

“உன்னோட வீடா?”

“ஆமா என் அப்பா அம்மா அங்க இருக்க மாட்டாங்க. . . நாம அங்க தனியாதான் இருக்க போறோம். ..!!! சோ அங்க நீ உன் வாழ்கைய உன் விருப்பப் படி வாழலாம் . . உன் இஷ்டபடி இருக்கலாம். . .!!!

அவன் அவ்வாறு சொன்ன பிறகே எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ..

ஒரு வேளை நான் அவன் தாய் தந்தையோடு இருக்க நேர்ந்தால் விருப்பமே இல்லாமல் நான் அவனோடு வாழபோகும் அந்த வாழ்கைப் பற்றி அவர்களுக்கு தெரிந்து விடும் வாய்ப்புகளை நானே உருவாக்கி விடுவேனோ என்று உள்ளுர ஒரு பயம் இருந்தது. .ஆனால் அவன் அவ்வாறு சொன்னதும் மனம் கொஞ்சம் அமைதி அடைந்ததை என்னால் உணர முடிந்தது. . .நான் அதை யோசித்து முடிக்கும் நேரம்

“எனக்கு இப்போ தூக்கம் வருது. . . . ஐ அம் சோ டயர்ட். . . .நான் தூங்க போறேன்!!! ”
என சொல்லிவிட்டு தலையணை யை எங்கள் இருவருக்கும் இடையே போட்டு விட்டு தூங்கினான். . . நானும் நிம்மதியாக உறங்கினேன். . .

அடுத்த நாள் காலை நான் அவனுடன் செல்ல தயார் ஆகினேன். . .ஆனால் என் அப்பாவும் அம்மாவும் நாங்கள் இன்னும் சிறிது காலம் அவர்களுடன் இருக்க பிரிய பட்டார்கள். . .அவன் அவர்களிடம் அவன் நிலையை எடுத்து சொல்ல அவர்கள் புரிந்து கொண்டார்கள். . .

“எங்க கூட வாதம் பண்ற மாதிரி அவர் கூடவும் வாதம் பண்ணிக்கிட்டு இருக்காத!!!! அவரோட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போக கத்துக்கோ பழகிக்கோ!!!!”
என என் அம்மா எனக்கு அறிவுரை கூறிக் கொண்டு இருந்தார். ..

அவனும் என் தந்தையுடன் என்னை நன்றாக பார்த்து கொள்வதாகவும் என் மீது மிகுந்த அக்கறை கொள்வது போலவும் உண்மையாக பொய் கூறிக் கொண்டு இருந்தான். . .

பின் சில நிமிடங்களில் நாங்கள் எங்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு 10 மணி நேர பயணத்திற்கு பிறகு அவனது வீட்டை அடைந்தோம். . அந்த வீடு பார்பதற்கே அவ்வளவு அழகா கவும் நல்ல முறையில் பராமரரிக்க பட்டும் இருந்தது. . .நான் எனக்கென ஒரு அறையை எடுத்துக்கொண்டு என் உடமைகளை அங்கே அடுக்கி சரி செய்து வைத்துக் கொண்டு இருந்தேன். . .

“அப்பறம் மறுபடியும் எப்போ உன் ஆபீஸ் ல ஜாயின் பண்ண போற?”
என அவன் மகிழ்ச்சியாக கேட்டான். .

“எனக்கு இந்த ஊரு ல இருக்க ஆபீஸ் ல டிரான்ஸ்பெர் கெடச்சிருச்சு. . .அவங்க ஒரு வாரம் கழிச்சு வந்து ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க. . பட் நான் நாளைக்கே ஆபீஸ் போறேன். . .!!”

“ரொம்ப நல்லது!!! நீ இந்த வீட்ல என்ன வேணும் நாலும் பண்ணிக்கலாம். . ஆனா எந்த காரணத்தக் கொண்டும் என் ரூம் குள்ள வந்துறாத அண்ட் என்னோட பர்சனல் லைப் ல இன்டெர்பியர் ஆகாத ஓகே. . .?”

அவனது பேச்சு என்னை மிகவும் எரிச்சலூட்டியது . . அந்த எரிச்சலுடனே அவனை நேராக ஒரு பார்வை பார்த்து விட்டு நான் என் அறைக்கு சென்று விட்டேன். . .

இப்படி தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம். . .

ஒரு வாரம் கடந்து போனது. . .

எங்களுக்குள்ளே எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. . . .ஏனெனில் நாங்கள் இருவரும் எங்கள் வேலையில மிகவும் பிசியாக இருந்ததால் சாதாரணமாகக் கூட நாங்கள் பேசிக்கொள்ள வில்லை. . .எனக்கு மனதில் நான் ஏதோ ஒரு அந்நிய உலகத்தில் வாழ்ந்துக் கொண்டு இருப்பதாகவே ஒரு உணர்வு . .

episode 2

ஒரு நாள் . . . .

நான் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். . .அப்போது அவன் ஆபீசில் இருந்து வந்து பக்கத்தில் இருந்த சோபா வில் அமர்ந்தான். .

“ஹே நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.!!!”
அவன் அமைதியாகவே சொன்னான். ..

நான் அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்க்க அவன் தொடர்ந்து பேசினான். ..

“என்னோட ஆபீஸ் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ட்ரீட் கேக்றாங்க ஏன்னா அவங்க யாரும் நம்ம மேரேஜ் கு வரல ல. . சோ ட்ரீட் குடுத்தே ஆகணும்னு கேட்டாங்க நானும் குடுக்குறேன் னு சொல்லிட்டு வந்துட்டேன். . !!! நாளைக்கு மதியம் லண்ச் க்கு அவங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு வராங்க. ..!!!”

“சரி இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லிடு இருக்க? நீ ட்ரீட் குடு இல்ல என்ன வேணும்ணாலும் பண்ணு என்கிட்டே ஏன் சொல்ற?”
என நான் எரிச்சலுடன் சொல்ல

“ஐ நோ தட்!!! பட் பாரு அவங்க நமக்காக வராங்க. . . அவங்களுக்கு நம்மள பத்தி ஏதும் தெரியாது. . சோ ப்ளீஸ் ஜஸ்ட் என் வைஃப் ஆ நடி ..அது போதும் ஓகே !!!”
என அவன் கோபமாக பதில் கூறினான். . .

“அவங்க உன்னோட ப்ரெண்ட்ஸ். . இது உன் ட்ரீட் அன்ட் இது உன்னோட ஹோம். . அவங்களுக்காக அத பண்ணு இத பண்ணு னு இங்க என்ன ஏதும் பண்ண சொல்லி கேக்காத ஓகே . . ?”
என நானும் கோபமாக சொல்லிவிட்டு என் அறைக்குள் சென்றேன். . .

எனக்கு தெரியும் அவன் மறுபடியும் என்னிடம் எதுவும் கேட்க மாட்டான் என்று. .

அடுத்த நாள். .

அடுத்த நாள் காலையில் நான் ஆபீஸ் சுக்கு கிளம்பி வந்து விட்டேன் ஆனால் என்னால் என் வேலையில் முழு கவனமாக செயல் பட இயல வில்லை. காரணம் அவன் என்னிடம் நேற்று கேட்ட அந்த சிறிய உதவி தான் என்னை செயல்படவே விட வில்லை. .

அவன் கேட்ட உதவியை நான் நிராகரித்தது எனக்கு உண்மையாகவே ஒரு உறுத்தலான மன நிலையை எனக்கு ஏற்படுத்தியது. . .அவனை எனக்கு பிடிக்காது தான் நான் அவனை வெறுப்பது உண்மைதான். . . ஆனால் அவனது நண்பர்களின் முன் நான் அவனை அவமானம் செய்ய விரும்ப வில்லை. . .

இப்போதைக்கு ஆபீசில் என் தோழி பூஜா தான். . . நான் ஆபீசில் அவளிடம் மட்டுமே பேசுவேன். . . அவளிடம் சொல்லி விட்டு நான் வீட்டிற்கு விரைந்து சென்றேன். . அவனை அவன் நண்பர்கள் முன்பு அவமதிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. . .

நான் வீட்டை அடைந்தேன். . அவன் தான் வந்து கதவை திறந்தான். . என்னை பார்த்ததும் அவன் முகத்தில் லேசான புன்னகை. .ஆனால் நான் அவனைக் கண்டு கொள்ள வில்லை. . .நேராக என் அறைக்கு வந்து விட்டேன். . .பின்னர் நான் குளித்து விட்டு தயாராகினேன். . .அவன் அவனது நண்பர்களுக்காக சில உணவுகளை தயார் செய்து வைத்து இருந்தான். . நானும் அவனுக்கு உதவி செய்தேன். .

அப்போது அவன் மீண்டும் என்னை எரிச்சலூட்ட ஆரம்பித்தான். . .

“என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப ஹேண்சம்மா இருப்பாங்க.!!!! வரவனுங்கள் ல உனக்கு யாரையாவது புடிச்சு இருந்தா தயங்காம எங்கிட்ட சொல்லு. . . நான் உங்கள சேத்து வைக்கிறேன். . .நம்ம டிவோர்ஸ் கு அப்புறம் நீ அவனோட ஹேப்பியா இரு. . . .. . !!!”

அவனது அந்த பேச்சு என்னை மிகவும் கோவப் படுத்தியது. .

“நீ இந்த மாதிரி ஓவரா பேசிகிட்டு இருந்தா நான் இங்க இருந்து போக வேண்டியது வரும் மைன்ட் இட். . .”
என கோவமாக சொன்னேன். .

“நீ எங்க இருக்கணும் னு ஒன்னும் நான் ஆச படல ஓகே. . உன்ன நம்பி தான் நான் இருக்கனும் அப்டிங்குற அவசியம் எனக்கு இல்ல. . .யூ ஆல் சோ மைன்ட் இட் ஓகே. . ..அவங்கள எப்டி மேனேஜ் பண்ணனும் னு எனக்கு தெரியும். . ஓவரா சீன் போடாத என்ன. .. .!!!”

“எஸ் இது எனக்கு தேவ தான். . . . . உன்ன உன் ப்ரெண்ட்ஸ் முன்னாடி அசிங்க படுத்த கூடாதுன்னு நெனச்சு வந்தேன் பாரு என்ன சொல்லணும். . நா ஆபீஸ் லையே இருந்து இருகண்ணும் . . என்னோட தப்பு தான் .ஒருத்தரோட அக்கறைய புரிஞ்சிக்கத் தெரியாத நீயெல்லாம் என்ன மனுஷன். . ச்சே. ..!!!”

“யாருக்கு வேணும் உன்னோட அக்கறை? இப்பவும் ஒன்னும் பிரச்சன இல்ல!!! நீ தாரளமா ஆபீஸ் கு போகலாம். . எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல ஓகே. . ”

அவனது பேச்சு எங்களுக்குள் மீண்டும் சண்டை யைக் கொண்டு வர எங்களது சண்டைக்கு நடுவே அழைப்பு மணி ஒலித்தது. . அவர்கள் வந்து விட்டார்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம். . நான் அவனை முறைக்க அவனும் என்னை முறைத்துத் கொண்டே கதவை திறக்க சென்றான். . . .

அவனது நண்பர்கள் வர ஆரம்பித்தனர் . . . நானும் சென்று அவர்களை வர வேற்றேன். . அவன் என்னை அவனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான். . வந்த அனைவரும் சாப்பிட்டு விட்டு சிலர் அவனுடன் சென்று பேசிக்கொண்டு இருந்தனர். . சிலர் அவனைப்பற்றி என்னிடம் சொல்லி கொண்டு இருந்தனர். . அவர்களுக்கு தெரியாது அல்லவா எனக்கு அவனை பற்றி எல்லாமே தெரியும் என்று. .

வேறு வழி இல்லாமல் அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தேன் . . .ஒரு 4 மணி நேரம் கழித்து அவன் நண்பர்கள் எல்லாரும் விடை பெற்றுச் சென்றனர். வீடு முழுவதும் குப்பைகளாக இருக்க நாங்கள் இருவரும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்தோம். . .

அப்போது அவனிடம் ஒரு கேள்வி கேட்க தோன்றியது. . . கேட்க வேண்டாம் என என் மனம் என்னைத் தடுத்து விடக் கூடாது என்று நினைத்து அந்தக் கேள்வி என் மனதில் உதித்த அடுத்த நொடியே அவனிடம் அந்த கேள்வியை கேட்டேன். . .

நான் டேபிளைத் துடைத்துக் கொண்டே

“காலேஜ் கு அப்பறம் நீ யாரையும் லவ் பண்ணலையா?” எனக் கேட்க அவன் என்னைப் பார்த்துக் கொண்டே பேசினான் . .நான் அவனைப் பார்க்காமல் கீழே குனிந்துக் கொண்டே வேலை செய்துக் கொண்டுருந்தேன். . .ஆனால் என் மனம் அவனது பதிலுக்காக காத்திருந்தது. . .

“இல்ல கேர்ள்ல்ஸ் ப்ரெண்ட்ஸ்ஷிப்பே வேணாம் னு தோனுச்சு அதான் யாரோடையும் ரிலேஷன்ஷிப் மெயின்டெயின் பண்ணல. . பிக்காஸ் இந்த பொண்ணுங்க எப்பவும் நம்ம கிட்ட இருக்க தப்ப தான் பாப்பாங்களே தவிர உண்மையா நம்மள எப்பவும் புரிஞ்சிக்கவே மாட்டாங்க!!!”

நான் அவனை முறைத்துக் கொண்டே

“போதும் ஸ்டாப்!!!!
என நான் அவனை நிறுத்தினேன். .

அவன் அவ்வாறு சொன்னதும் உண்மையாகவே என்னால் என் கோபத்தை அடக்கவே முடிய வில்லை இருந்தாலும் நான் அவனிடம் விவாதம் செய்து சண்டை போட விரும்ப வில்லை. .அவ்வாறு விவதம் செய்தால் கண்டிப்பாக இழப்பு எனக்கே.. . . . அதனால் அதற்கு மேல் அவனிடம் நான் பேச்சை வளர்க்க விரும்பாமல் அங்கிருந்து சென்றேன். . .

3rd episode

அடுத்த நாள். . .

அவன் என் அறையின் கதவுகளைத் தட்டினான். . .என்னால் என் படுக்கையில் இருந்து எழவே முடியவில்லை. . என் உடல் முழுக்க வலி. . .அவன் வெளியில் இருந்தே பேசினான். . . .

“ஹே கிட்சென் ல இருந்த கத்தியக் காணல நீ எங்கயாவது பாத்தியா?”

என்னால் என் கண்களைக் கூட திறக்க முடிய வில்லை. . இருந்தாலும் கஷ்டப்பட்டு எழுந்து கதவு வரைச் சென்று

“அது அந்த செகண்ட் ஷெல்ப் ல இருக்கும் பாரு”
என்று பதில் கூறி விட்டு வந்து மீண்டும் படுத்துக்கொண்டேன். . .

“நீ இன்னிக்கு ஆபீஸ் கு போகலையா?”
என என்னை மறுபடியும் அவன் கேள்வி கேட்க

நான்
“இல்ல எனக்கு உடம்பு சரி இல்ல . . நான் ரெஸ்ட் எடுக்கணும் !!”
என்று பதில் கூறினேன். . .

அவன் அதற்கு பின்பு என்னை எதும் கேட்கவில்லை மீண்டும் கிட்சனுக்குள் சென்று அவன் வேலைகளை கவனித்தான். . நான் மறுபடியும் கண்களை மூடி கொண்டு உறங்கினேன். . .

சில நிமிடம்கள் கழித்து என் மொபைல் ஒலித்தது. .
அழைத்தது அஷ்வின். .

“ஹலோ!!!”
என நான் பதில் கூற

அவன்
“ஹே நான் டோர் லாக் பண்ணல நீ எழுந்து வந்து லாக் பண்ணிட்டு தூங்கு. .!!!”
எனக் கூற

“சரி நான் லாக் பண்ணிக்கிறேன். .!!!”
என்று பதில் அளித்தேன். .

“சோ. . .. . ஹவ் டூ யு பீல் நொவ்?”
என அவன் கேட்டதும் அது அஷ்வின் தான என எனக்கே ஒரு சந்தேகம். . என் காதுகளை என்னால் நம்பவே முடியவில்லை. . .

“இப்போ பரவால்ல!!!”
என நான் மெதுவான குரலில் பதில் கூறினேன். .

நான் இன்னும் எதும் சாப்பிடவே இல்லை என அவனுக்குத் தெரியும் அதனால் என்னை சாப்பிட வைக்க அவன்

“நான் இன்னிக்கு னு பாத்து நெறய ஃபுட் சமச்சிட்டேன். .நான் அத வேஸ்ட் பண்ண விரும்பல. . உனக்கு விருப்பம் இருந்தா நீ சாப்டுக்கோ. . விருப்பம் இருந்தா . . .!!!!”
சொல்லி விட்டு அமைதி ஆனான். . .

அவன் என்னோடு கல்லூரியில் பழகிய நாட்களில் கூட இப்படித்தான். . . . எப்போதும் அவனுடைய அன்பையும் அக்கறையையும் நேரடியாக காண்பிக்கவே மாட்டான் .. .அப்படி ஒரு முட்டாள் அவன். . . . .

“ஓகே ஐ வில் ஈட்!!!!”
என நான் என் முகத்தில் படர்ந்த புன்னகையை மறைத்துக் கொண்டே அவனிடம் சொல்ல

அவன் “பாய்”
என அழைப்பை துண்டித்தான் . .

இப்படியே சில காலம் ஓடியது. . .பிறகு மழை காலம் வந்தது. .

ஒரு நாள் மழை எல்லா இடம்களிலும் அதிகமாக பெய்துக் கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் நான் பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டு இருந்தேன் . . . அன்றைய தினம் நான் ஏற்கனவே வீட்டில் இருந்து லேட்டாக கிளம்பியதால் என்னுடைய வழக்கமான பஸ்சையும் விட்டு விட்டேன். . .அடுத்த பஸ் எப்போது வரும் என்று கூட தெரியவில்லை . .. பஸ் வருகிறதா என்று எட்டி பார்த்து கொண்டு இருந்தேன். . .

அப்போது ஒரு கார் என் முன்பாக வந்து நின்றது. .எனக்கு தெரியும் அது அவனுடைய கார் தான் என்று. . .நான் அதைப் பார்த்து விட்டு பார்க்காதது போல திரும்பி நின்றுக் கொண்டேன். . .

என் போன் ஒலித்த து. . அது அவன் தான். . .

“ஹலோ !!!!”
என நான் கேட்க

“வா வந்து கார் ல உக்காரு . . மழை ரொம்ப ஹெவியா பெய்யுது. . .இப்போ பஸ் கூட வரது கஷ்டம் தான். . வா நான் உன்ன ட்ராப் பண்றேன்!!!”
என அவன் அமைதியாகவே சொன்னான். .

“தட் ஸ் ஓகே நான் ஆட்டோ ல போய்கிறேன். . உன் கருணைக்கு ரொம்ப நன்றி!!!”

“உனக்கு விருப்பம் இருந்தா வா!!! இல்லனா நான் போய்டே இருப்பேன் !!!
அவன் எரிச்சலுடன் பதில் கூறி விட்டு கிளம்பாமல் அங்கேயை நின்றுக் கொண்டிருந்தான். . .

நான் என் கண்களே சழற்றியடித்து அங்கே ஆட்டோ எதாவது வருகிறதா என்று பார்த்தேன் . .ஆனால் கண்ணனுக்கு எட்டும் தூரம் வரை ஏதும் வருவதாக தெரியவில்லை. . .வேறு வழியே இல்லை அவனது காரில் போய் விடலாம் என்று என் தன்மானத்தை சில நிமிடம்களுக்கு விட்டு கொடுத்து அவனது காரில் ஏறச் சென்றேன். . .காரில் ஏறிய பிறகு தான் தெரிந்தது முன் சீட்டில் அவனுடன் வேறு ஒரு பெண் அமர்ந்து இருப்பது. . .

நான் காரில் அமர்ந்ததும் அவனுக்கு ஒரே வார்த்தையில்
“தேங்க்ஸ்!!!”
என்று சொல்ல அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை. . .காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். .. ஒரு அரை மணி நேரத்திற்கு பின் நான் என் ஆபீசை அடைந்தேன். .

அவனுடன் இன்னொரு பெண் அமர்ந்து இருப்பதைப் பார்த்த பின்பும் கூட என்னால் எப்படி என் வேலையில் கவனம் செலுத்த முடியும். .

எனக்கு மனம் ஒரு மாதிரி இருக்கவே நான் இதை அவனிடம் கேட்டுவிட முடிவு செய்தேன். . இன்னொரு புறம் அவன் யாருடன் இருந்தால் எனக்கென்ன என்றும் தோன்றியது. . போக போக எனக்கு அந்த பெண்ணை நினைத்தது நெருடலாகவே இருக்க என் கௌரவத்தை விட்டு அவனிடம் அதைக் கேட்டு விட முடிவு செய்து அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். .

“ஹாய் டுடே என்னோட வொர்க் லோட் ரொம்ப கம்மி. . . ஐ தின்க் சீக்கிரம் வீட்டுக்கு வந்துருவேன் னு நெனைக்கிறேன். . பட் நான்
சாவிய கொண்டு வர மறந்துட்டேன். . நீ வர வரைக்கும் என்னால வெளிய காத்துட்டு இருக்க முடியாது. . சோ ப்ளீஸ் டுடே கொஞ்சம் வீட்டுக்கு சீக்கிரமா வர ட்ரை பண்ணு . . !!!!”

மெசேஜ் செய்து 5 நிமிடங்கள் ஆகியும் அவனிடம் இருந்து எந்த ரிப்ளையும் வர வில்லை ..

“யூ தேர்?”

“கொஞ்சம் ரிப்ளை பண்ண முடியுமா?”

“ஆர் யு பிஸி?”

என தொடர்ந்து வரிசையாக செய்தி அனுப்பியும் அப்போதும் அவனிடம் இருந்து எந்த ரிப்ளை யும் வரவில்லை . .. ஆனால் நான் அவனது மெசேஜ் காக காத்திருந்தேன். . .

ஒரு 15 நிமிடங்கள் கழித்தது என் மொபைலில் இருந்து மெசேஜ் பீப் சப்தம் கேட்டது. . . அவன் தான் ரிப்லை செய்து இருந்தான். . என மனம் முழுக்க சந்தோஷத்தோடு அவனது மெசேஜ் ஐ திறந்து பார்த்தேன். .

“ஒரு 5 மினிட்ஸ் கூட உன்னால வெயிட் பண்ண முடியாதா? ஹிம்ம்ம்ம்ம் ஓகே ஐ வில் ட்ரை டு கம் சூன் . . ”
என அவன் ரிப்ளை செய்திருந்தான். . .

எனக்கு அவனிடம் அதை எப்படி கேட்பது எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை . . . இருந்தாலும் கேட்டே ஆக வேண்டும் என்று எண்ணி நான் அவனது செய்திக்கு பதில் செய்தி அனுப்பினேன். . .

“தேங்க்ஸ். . . . சோ நீ உன் ஆபீஸ் கு போயி சேர்ந்துட்டியா?”

“உன் ஆபீஸ் கு ஒரு அஞ்சி பிளாக் தள்ளி தான் என்னோட ஆபீஸ் சோ . . .ஒரு 5 மினிட்ஸ் ல வில் ரீச்!!!”

“ஓகே ஓகே உன் கேர்ள் ப்ரெண்டையும் ஆபீஸ் ல ட்ராப் பண்ணிட்டியா?”

“கேர்ள் ப்ரெண்ட்டா யாரு?

“அதான் உன்னோட கார் ல ஒரு பொண்ணு உக்காந்து வந்தாளே அவதான்!!”

“அவ ஒன்னும் என்னோட கேர்ள் ப்ரெண்ட் இல்ல.. அவ எங்க ஆபீஸ் ல தான் வொர்க் பண்றா. உன்ன மாதிரி தான் அவளும் மழையில பஸ் ஸ்டாண்ட் ல பஸ் காக வெயிட் பண்ணிட்டு இருந்தா. . . . உனக்கு எப்டி லிப்ட் குடுத்தேனோ அப்டி தான் அவளுக்கும் லிப்ட் குடுத்தேன். . . வேற எதும் இல்ல. . .”

அவன் வார்த்தைக்கு வார்த்தை அந்த பெண்ணை என்னோடு சேர்த்து வைத்து ஒரு மூன்றாவது மனுஷியாக என்னை உருவகம் செய்து பேசி மேலும் என்னை வெறுப்பேற்றினான். . ..

என்னக்கு எக்கச் சக்க கோபம். .

“ஊரு ல எவ எல்லாம் பஸ் ஸ்டாண்ட் ல பஸ் காக வெயிட் பண்ணிட்டு இருகாளோ அவளுங்களுக்கு எல்லாம் லிப்ட் குடுக்கறது தான் உன் வேலையா?”
என அவனை கேட்க வேண்டு போல் இருந்தது. .

ஆனால் நான் இதை அவனிடம் கேட்க அவன் அந்த பெண்ணை அவனது காரில் எற்றியதற் காக நான் கோபம் கொண்டேன் என்றே நினைப்பான். . அவன் மீது எனக்கு அக்கறை இருப்பதாக நினைப்பான்; எதற்காக நான் அதற்க்கு இடம் கொடுக்க வேண்டும். .. அதனால்

“அவ உன்னோட கேர்ள் ப்ரெண்டானு சும்மா வெளயாட்டுக்கு தான் கேட்டேன். . .ஓகே ஜஸ்ட் ஃபார் ஃபன் ஒன்லி. . ஈவினிங் கம் சூன் டு ஹோம் பாய் !!!”
என்று என் மெசேஜ் ஐ முடித்தேன். . .

என்ன தான் நான் அவன் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லை என்ற எண்ணத்தை என் மனம் முழுக்க பரப்பி வைத்திருந்தாலும் அவனை வேறொரு பெண்ணுடன் பார்த்த அந்த நொடி சட்டென என்னையும் என் மனக் கட்டுப்பாடுகளையும் ஒரு கனம் அசைத்துப் பார்த்துவிட்டது. .

இல்லை இல்லை அவன் மீதுஎனக்கு எந்த அக்கறையும் அன்பும் இல்லை என்று நான் ஒதுங்கினாலும் என்னை அறியாமலே நான் அந்த பெண்ணின் மீது கொண்ட கோபம் தான் அவனிடம் அவ்வாறு கேள்வி கேட்கத் தோன்றியது. .

அவன் செய்த ரிப்ளைகள் எனக்கு கோபத்தைக் கொட்டிக் குடுத்தாலும் அந்த பெண்ணுக்கும் அவனுக்கும் இடையே எந்த உறவும் இல்லை என அவன் சொல்லாமல் சொல்லியதால் மனதின் ஏதோ ஓர் மூலையில் நிம்மதி. . .

4th episode. .

அவனுக்கு மெசேஜ் செய்து முடித்து விட்டு என் வேலையே கவனிக்கச் சென்றேன் அப்போது
“கீர்த்தி”
என என்னை யாரோ அழைக்க நான் திரும்பினேன். . .

அங்கே பூஜா

எதாவது பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?

“யா லைட்டா தல வலி!!!!”
என நான் அவளிடம் சொன்னேன். . .. நிஜமாகவே நான் கேட்ட கேள்விகளுக்கு அவன் அனுப்பிய ரிப்ளை களே எனது இந்த தலை வலிக்கு முக்கிய காரணம். .

“நீ தப்பா எடுத்துகல னா நான் உன்ன ஒன்னு கேக்கலாமா?”

“யா கேளு பூஜா நோ ப்ரொப்லெம். .”

எனக்கு தெரியும் அவள் என்னிடம் என்ன கேட்கப் போகிறாள் என்று. . . அவள்
தயங்கி கொண்டே

“உன்னோட மேரேஜ் லைஃப்ல நீ நெஜமாவே ஹேப்பியா தான் இருக்கியா கீர்த்தி? தப்பா எடுத்துக்காத கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் கழிச்சு ஆபீஸ் வந்தா போதும் னு M .D சொல்லியும் நீ ரெண்டாவது நாளே ஆபீஸ் கு வந்த. . . அப்பவே உங்கிட்ட கேக்கணும் னு இருந்தேன் . .

அப்புறம் புது கல்யாண பொண்ணு அப்டிங்குற அந்த சந்தோஷம் உன் மொகத்துல கொஞ்சம் கூட இல்ல. . .

தென் 5 மினிட்ஸ் பிரேக் கெடச்சாலே நான் என் பாய் ப்ரெண்ட் கிட்ட கடல போட போயிருவேன் . . நான் மட்டும் இல்ல இந்த ஆபிஸ் ல இருக்க எல்லாருமே இப்டி தான் அவங்க பாய் ப்ரெண்ட் இல்ல கேர்ள் ப்ரெண்ட் கிட்ட பேச போயிருவாங்க. . ஆனா நீ ஆபிஸ்ல உன் ஹஸ்பன்ட் கூட பேசறத இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல. . !!!

இது எல்லாமே நோட் பண்ணதுக்கு அப்புறம் தான் உங்கிட்ட இந்த கேள்விய கேக்கணும் னு முடிவு பண்ணேன்.. . தப்பா ஏதாவது கேட்டு இருந்தா சாரி டியர். . உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு இல்லனா நான் இதுக்கு மேல ஏதும் கேக்க மாட்டேன். . யு டோன்ட் வொரி !!!!!”

அவள் பேசி முடித்து விட்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். . .
எனக்கும் என் மனதில் இருப்பதை எல்லாம் யாரிடமாவது சொல்லி பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது . . . எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக மனதில் போட்டு புதைத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. .

எனக்கு ஆறுதலான வார்த்தைகள் இப்போது மிகவும் தேவைப்பட்டது அதனால் நான் என் சோகத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தது அவளிடம் பேச ஆரம்பித்தேன். . .

“எஸ் பூஜா எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல!!! அண்ட் இப்போ நான் சந்தோஷமாவும் இல்ல. .. !!!”

“ஹே அப்போ நீ கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணியா?”

“ஆமா லவ் பண்ணேன் பட் இப்போ அவன கம்ப்லிட்டா வெறுக்குறேன். . .!!!”

“அப்புறம் என்னடி லூசு அந்த லவ்வ மறந்துட்டு உன்னோட புது லைஃப் அ அஷ்வின் கூட ஸ்டார்ட் பண்ணலாமே . . கண்டிப்பா அஷ்வின் உன்ன புரிஞ்சிப்பான் . . !!!”

பூஜா இவ்வாறு சொன்னதும் எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரிய வில்லை. .

“பூஜா நான் இந்த அஷ்வின தான் என் காலேஜ் டேஸ் ல லவ் பண்ணினேன்.. . இப்போ அவன தான் நான் வெறுக்குறேன். . வெறுத்துட்டு இருக்கேன். .”

பூஜாவிற்கு என் வார்த்தைகளில் மிகுந்த குழப்பம். . முழு கதையையும் சொன்னால் தான் அவளால் என்னை புரிந்துகொள்ள முடியும் ஆகவே நான் என்னுடைய பழைய நினைவுகளை மீண்டும் தூசி தட்டி எடுக்க வேண்டியதாயிற்று அவளுக்காக. . .

இதோ கீர்த்தி தன்னுடைய வாழ்க்கையில் கடந்த போன நாட்களில் ஏற்பட்ட சந்தோஷம் துக்கம் இரண்டையும் பூஜா விடம் சொல்ல ஆரம்பிக்கிறாள். . .

கீர்த்தியின் ஃப்ளாஸ் பேக். . . .. . . . .

நான் என் தாய் தந்தைக்கு ஒரே பெண். . எனக்கு 7 வயதாக இருக்கும் போதே என் தாயும் தந்தையும் என்னை விடுதியில் கொண்டுவந்து சேர்த்துவிட்டனர். .. காரணம் அவர்கள் இருவருக்கும் அவரவர் வேலை ஒன்றே குறிக்கோளாக இருந்ததால் அவர்களுக்கு என்னை கவனித்துக் கொள்ள நேரம் இல்லை. .

இதற்கிடையே அவர்களுக்கு அடிக்கடி பணி இட மாறுதல்கள் ஏற்படவே வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ ஊரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். .

அவர்களின் பிசியான வாழ்க்கை ஓட்டத்தில் அவர்கள் இருவரும் எனக்காக செலவிடும் நேரம் ஒரு நாளைக்கு பத்து நிமிடமே. . சில சமயம் அவர்களிடம் டெலிபோனில் பேசும் அந்த பத்து நிமிடத்திற்காக நான் வாரக்கணக்கில் கூட காத்திருந்தது உண்டு. .

நான் படிப்பில் முதல் மதிப்பெண் வாங்கினாலோ அல்லது என் தனித் திறமையைக் காட்டி நான் ஏதேனும் பரிசோ பாராட்டோ பெற்றால் கூட அதை அவர்களிடம் நான் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன். .

ஏனெனில் அது அவர்களுக்குப் பெரியதாக தெரியாது. . நான் சொன்னாலும் அவர்கள் அதை கண்டு கொள்ளப் போவதில்லை என்னை உற்சாகப்படுத்தவும் போவதில்லை . . என்னுடைய வெற்றிகளையும் என் மகிழ்ச்சியையும் நான் பகிர்ந்துக் கொள்ளும் அந்த நேரம் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்தும் போது எனக்குள் ஏற்படும் அந்த வலிக்கும் வேதனைக்கும் பயந்தே அவர்களிடம் நான் எதையும் சொல்லிக் கொள்ள மாட்டேன். .

அதனால் பெரு வாரியான என்னுடைய சின்ன சின்ன சந்தோஷங்களை நான் இழந்தேன் அவர்களிடம். .எனக்கு உடம்பு சரி இல்லாமல் போனால் கூட என் ஆசிரியை தான் என் மீது அக்கறை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்துக்கொள்வார். .என் ஆசிரியர் என் மீது காட்டும் பாசத்தைக் கூட அவர்களிடம் இருந்து நான் பெற வில்லை என்பதே உண்மை. .

7 வயது முதலே தனியாகவே வளர்ந்தேன் . வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறைதான் என் தாய் தந்தையைப் பார்ப்பேன் . . ஏதோ ஒரு பாலைவனத்தில் நான் மட்டும் தனியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு என்னுள் எழ ஆரம்பித்தது . . அந்த உணர்வு என் மனதில் அழுத்தமாக பதியப் படவே இரவில் பல கெட்ட கனவுகள் வந்து பாதி இரவில் விழித்துக் கொள்வேன். . இது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. .

ஹாஸ்டலில் அனைவரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் நான் மட்டும் தனியாக அமர்ந்துக்கொண்டு ஒரு அனாதையைப்போல இடைவிடாமல் அழுதுக் கொண்டிருப்பேன். . பிறகு தான் எனக்கு புரிந்தது என் வாழ்வில் இனி எதும் மாறப்போவதில்லை இது தான் என் தலையெழுத்து என்று. .

அதனால் நான் என் தனிமையப் போக்கிக்கொள்ள நிறைய நண்பர்களுடன் பழக ஆரம்பித்தேன். . புதிய நபர்களுடன் நட்புக்கொள்ள ஆரம்பித்தேன். . . அதனால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். . அவர்களுடன் என் நாட்களை மிகவும் சந்தோஷமாக கழிக்க ஆரம்பித்தேன். .ஆனால் என் உள் மனது நான் எப்போதும் நான் எதையோ இழந்துக் கொண்டிருப்பதாக எனக்கு சொல்லிக்கொண்டே இருக்கும். .

பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறைக்கு நான் என் தாய் தந்தையுடன் இருப்பதற்காக வீட்டிற்குச் சென்றேன். . மிகவும் அரிதாக நான் பல நாட்கள் அவர்களுடன் கழித்தேன். .

என் பள்ளியில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர் குறிப்பாக நான் ரேணுதிவ்யா ஆதி மற்றும் விக்ரம் முடன் மிகவும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டேன்.. . அவர்களுடன் நான் என் பள்ளிப் பருவத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்தேன். ..

நான் பள்ளிப்படிப்பை முடித்த அந்த நேரம் என் அம்மாவிற்கு பயங்கரமான முதுகுவலி ஏற்பட்டதன் விளைவாக அம்மா அவரது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடனே தங்கிவிட முடிவு செய்தார். . அப்பாவிற்கு வேலை சென்னையில் என்பதால் நானும் அம்மாவும் அப்பாவுடனே சென்னையில் தங்கிவிட்டோம். .

12 வருட தனிமை வாழ்க்க என் தாய் தந்தையுடன் நிறைய நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள்ளே ஏற்படுத்த என்னுடன் அவர்களது நேரத்தை முழுவதுமாக செலவிட்டு என் அப்பாவும் அம்மாவும் முதல் முறையாக என்னை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கச் செய்தனர் . .

அவர்களுடன் இருந்த அந்த ஒவ்வொரு நாளும் நான் அனுபவித்து வாழ்ந்து ரசித்தேன் .. அந்த சந்தோஷத்தை இனி நான் இழக்க விரும்பாமல் என் கல்லூரிப் படிப்பை சென்னையிலேயே படிக்க முடிவுசெய்தேன். .

என் தோழி ரேணுவும் என்னுடன் நான் படிக்கும் கல்லூரியிலேயே சேர்ந்தாள் . . நாங்கள் இருவரும் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்தோம். .

என் வாழ்க்கையின் சோகப் பக்கங்கள் மறைந்து சந்தோஷமான இன்னொரு பக்கம் துவங்கியதாகவே நான் உணர்ந்தேன்

6
கல்லூரியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். .. . இருந்தாலும் நான் ரேணுவிடம் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வேன். . ..

எங்கள் நண்பர் குழுவில் பெரும்பாலான மாணவிகள் சென்னைக்கு புது வரவுகள். . .அதனால் ஒவ்வொருவார இறுதியிலும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அங்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்போம்
சில நேரங்களில் குழுவாக படிப்பதற்காக நான் தோழிகளுடன் ஹாஸ்டலில் இருந்ததும் உண்டு. . .

என் வகுப்பில் மொத்தம் 13 பெண்களும் 30 ஆண்களும் இருந்தனர் ஆனால் நான் எந்த ஆணுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொள்ளவில்லை. .
கல்லூரி வாழ்க்கை எனக்கு ஒரு புது வாழ்க்கையாக தெரிந்தது..

எங்கள் கல்லூரியில் ஆண்கள் பெண்களுடனும் பெண்கள் ஆண்களுடனும் பேச எந்த தடையும் அவர்கள் விதிக்க வில்லை . . அதனால் எங்கள் கல்லூரி முழுவதும் ஆண்களும் பெண்களும் ஜோடி ஜோடியாகவே திரிவார்கள். .

கல்லூரியில் எனக்கு மிகவும் பிடித்தமான என் பேவரைட் இடம் என்று சொன்னால் அது பேஸ்கெட்பால் க்ரௌண்ட் தான். . .மஞ்சள் நிறப் பூக்கள் செறிந்த பெரிய பெரிய மரங்கள் அந்த கிரௌண்டைச் சுற்றிலும் சூழ்ந்து பார்பதற்கே மிகவும் அழகாக காணப்படும். . . அந்த இடத்தில் சென்று அமர்ந்தாலே மனம் முழுக்க காற்றில் பறக்கும் அப்படி ஒரு அழகான இடம் அது. .

நான் என் சந்தோஷத்தையும் துக்கத்தையும் அந்த இடத்தில் தான் பகிர்ந்து கொள்வேன். . . தனிமையில் எனக்கான மிகச் சிறந்த நண்பர் அந்த பேஸ்கெட் பால் கிரவுண்ட் தான். . இப்படிசந்தோஷமாக என் கல்லூரி வாழ்க்கை ஆரம்பம் ஆனது. . .

சில நாட்களில் கல்லூரியில் இன்டர் காலேஜ் கல்சுரல்சுக்கு நடத்த கல்லூரி நிர்வாகம் ஏற்பாடுகள் செய்ய சீனியர் மாணவர்கள் அதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கினர். . . சில மாணவர்கள் எங்கள் வகுப்பிற்கு வந்து விழா நடத்துனர்கள் (வாலண்டியர்ஸ்) வேண்டும்
எனக் கேட்க நானும் ரேணுவும் எங்களது பெயர்களை பதிவு செய்தோம். ..

அன்றைய நாள் மாலை செமினார் ஹாலில் எங்களுக்கு இதைப்பற்றிய ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருக்க எங்களை மறக்காமல் வந்துவிடுமாறு அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றனர். .

கல்லூரி முடிந்ததும் நாங்கள் அந்த சந்திப்பில் கலந்து கொள்ளச் சென்றோம்
அங்கே மாணவ மாணவியர் கூட்டம் அதிகமாகவே இருந்தது நான் எதிர்பார்த்ததை விட முதலாம் ஆண்டில் இருந்து நிறைய மாணவர்கள் வந்திருந்தனர். . .

சீனியர் மாணவர் எங்கள் பெயரையும் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலைக்கான விவரத்தையும் மைக்கில் அறிவித்துக்குக் கொண்டிருந்தனர். .
“ரேணுதிவ்யா”
என அந்த சீனியர் அழைக்க ரேணு நான் இங்க இருக்கேன் என்பது போல கையை உயர்த்தினாள். . அவளுக்கு டெகரேட்டிங் அன்ட் சார்ட் வொர்க் ஒதுக்கப்பட்டது. .

எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் உண்மையிலேயே அந்த டெகரெட்டிங் வேலைக்காக தான் நான் என் பெயரைப் பதிவு செய்தேன். . ஆனால் அந்த பணியை சீனியர்கள் ரேணுவிற்கு ஒதுக்கினர். ..

“நீயும் வந்து எங்கூட ஜாய்ன் பண்ணிக்கோ கீர்த்தி!!! நீ தான இந்த டெக்கரெட்டிங் வொர்க்ல ரொம்ப ஆர்வமா இருந்த. . .!!”
என அவள் என்னிடம் கேட்டாள். . .

“உண்ம தான். . . பட் இதப்பத்தி நாம சீனியர்ஸ் கிட்ட பேச முடியாது . . .
நாம சொன்னா அவங்க ஏதாவது நம்மள டாமினேட் பண்ணுவாங்க நாம புதுசுனு . . சோ வேணா. . .நீ போ நோ ப்ராப்ளம்!!!”

பத்து நிமிடம் கழித்து சீனியர்

” கீர்த்தி”
என என என் பெயரை அழைக்க நான் முன்னால் வந்தேன். .. பிறகு அந்த சீனியர் மாணவர் இன்னொரு பெயரையும் அழைத்தார். . .

அந்த பெயர்
“அஷ்வின்”

ஹால் முழுவதும் அமைதி. .. பெயரை அழைத்தும் கூட யாரும் வர வில்லை. . மீண்டும் சீனியர் மாணவர்
“கே.அஷ்வின் . . .ஐடி டிபார்ட்மென்ட் பர்ஸ்ர் இயர்!!!”
என விவரமாக சொன்னதும் ஒரு மாணவன் முன்னே வந்து அவனுக்கு உடம்பு சரி இல்லாமல் இன்று கல்லூரிக்கு வர வில்லை நாளை வந்துவிடுவான் என சொல்லிவிட்டுச் சென்றான். . .

பின் சீனியர் என்னைப் பார்த்து

“ஓகே உங்க வொர்க் என்ன னா மத்த காலேஜ் பசங்கள நம்ம காலேஜ் கல்சுரல்ஸ்காக நீங்க போயி இன்வைட் பண்ணனும் . . . இதான் உங்க வேல!!! நீங்க நாளைல இருந்து அஷ்வின் கூட ஜாய்ன் பண்ணிக்கோங்க கீர்த்தி!!!”

என என்னைப் பார்த்து சொல்ல நான்

“அய்யோ அஷ்வினா? யாரு அவன்? நான் அவன முன்ன பின்ன பாத்ததுகூட கெடையாதே? அவன்கூட என்ன இப்டி கோத்துவிட்டாங்களே !!!”
என மனதில் புலம்பியபடி நிற்க ரேணுவோ

“யாரோ ஒரு பையன் கூட காலேஜே பர்மிஷன் குடுத்து உன்ன அபிஷியலா வெளிய சுத்த விடுறாங்க. . . ஜாலிதான்!!! . ஹே கீர்த்தி ட்ரீட் எப்போ?”

என என்னை கிண்டல் செய்து கொண்டிருந்தாள். .

“ஹே போதும் நிறுத்துடி. .. நான் இத பண்ண போறது இல்ல. . இந்த பொறுப்புல இருந்து நான் வெலகிக்கிறேன்!!!

“ஏன் கீர்த்தி?”

“நம்ம ப்ரெண்ட்ஸ் என்ன ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கடி !!!”

“ஹே லூசா நீ? அவங்கள நான் பாத்துக்குறேன். . இதுக்காலாம் போயி வெலகிக்கிறேங்குற?அவங்க நமக்கு வேற வேல மாத்தி குடுக்க போறதும் இல்ல. . . . நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஒரு ஒரு டியூட்டில இருக்கோம் நீ மட்டும் தனியா க்ளாஸ்ல என்ன பண்ண போற? ஒன்னும் இல்ல தைரியமா பண்ணு ஓகே!!!”

அவள் என்னை சமாதானம் செய்தாலும் யார் என்ன வென்று தெரியாத ஒரு பையனுடன் நான் வெளியில் செல்வது என்பது எனக்கே ஒருவித பயத்தைக் கொடுத்தது . . . .

“அவன் எப்டிப்பட்ட டைப்பா இருப்பானோ? கடவுளே என்ன பண்ண போறேனு தெரியல!!!!! வான்ட்ட டா நானே இப்டி வந்து வம்புல மாட்டிகிட்டேன்!!!!”
என எனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தேன் . . .

ஹாலில் அதிகம் பேச்சு சப்தம் கேட்கவே சீனியர் மாணவர்
“ஸ்டூடண்ட்ஸ் தயவுசெஞ்சி இங்க கவனிங்க. . . யாரும் பேசாதிங்க!!!”

இரைச்சல் சற்று அடங்கியது. . ..

“நாளைக்கு சாயங்காலம் காலேஜ் முடிஞ்சப் பெறகு அகேன் இங்க அசெம்பள் ஆகனும். . . நம்ம வொர்க்கப் பத்தி இன்னும் டீப்பா ப்ரீஃப்பா டிஸ்கஸ் பண்ணனும். .. இப்ப நீங்க போகலாம்!!!!”
என சொல்ல அனைவரும் அங்கிருந்து கலைந்தனர். .

நான் சோகமாக வர ரேணு என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தாள். .
6th episode

அடுத்த நாள்

மாலை கல்லூரி முடிந்ததும் மீண்டும் கான்பிரன்ஸ் ஹாலில் எங்களுக்கான மீட்டிங் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. . .நானும் ரேணுவும் கலந்துகொள்ளச் சென்றோம். .

அங்கே சென்றதும் ரேணு அவளது குழுவுடன் அவளுக்கென ஒதுக்கப்பட்ட வேலையை கவனிக்கச் சென்றாள். . மாணவர்கள் அனைவரும் அவர்களுக்காக கொடுக்கப்பட்ட வேலைகளை செய்ய ஆரம்பிக்க நான் மட்டும் அமைதியாக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு யாரென்றே தெரியாத அந்த அஷ்வினுக்காக காத்திருந்தேன். .

அப்போது என் பின்னால் இரண்டு மாணவர்கள் சப்தம் போட்டுக் கொண்டிருந்தனர். .நான் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். .

“என்னால இந்த வேலைய செய்ய முடியாது. . எனக்கு வேற வொர்க் மாத்தி குடுங்க ”
என ஒருவன் சொல்ல

“அதெல்லாம் முடியாது உனக்கு இஷ்டம்இருந்தா இந்த வேலைய செய். . இல்லையா இந்த வேலைய செய்ய நெறைய பேரு வெயிட் பண்ணிட்டிருக்காங்க . . . அவங்ககிட்ட பொறுப்ப ஒப்படச்சிருவேன். . நீ தாராளமா க்ளாஸ்ல போயி ஃபிரீயா இரு. . .”

என நேற்று மைக்கில் எங்களது பெயர்களையும் எங்களுக்கான வேலைகளையும் தெரிவித்துக்கொண்டிருந்த அந்த சீனியர் மாணவன் மிகவும் கோபமாக சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்த சீனியர் மாணவன் அங்கிருந்து சென்றதும் வேலையைமாற்றிக் கொடுக்குமாறு கேட்ட அந்த மற்றொரு மாணவன் கோபமாக வெளியே சென்றுவிட்டான். .

பின் ஐந்து நிமிடம் கழித்து அதே மாணவன் என் அருகே வந்தான். .

அளவான உயரம் மிதமான நிறம் கத்திப் போன்ற கூர்மையான கண்கள் வளையாத நதி போன்ற கூர்மையான மூக்கு அடர்ந்த புருவங்கள். . .முழுவதும் ஷேவ் செய்யப்பட்ட முகம். .மிகவும் மெலிதான தோற்றமும் இல்லை குண்டாகவும் இல்லை சரியான உடற்கட்டு பார்ப்பதற்கு மிகவும் ஸ்மார்ட் பாய் என்றே சொல்லலாம் அவனை. .

அவன் என்னிடம் வந்து

“நீங்க தான் கீர்த்தியா?”
என கேட்க நான்

“ஆமா நீங்க?”

“ஐ அம் அஷ்வின்!!!

என சொல்லிவிட்டு அங்கிருந்த மாணவர்கள் குழுவிடம் சென்று
கலந்துவிட்டான். .

அவன் சென்றதும் ரேணு என்னிடம் வந்து

“ஹே யாருடி அவன்?”
என மிகவும் ஆர்வமாக கேட்டாள். . .

“ம்ம்ம்ம் அவன் தான் அஷ்வின்!!!!”

“வாவ் செம ஸ்மார்ட்டா இருக்கான்டி. . என்ஜாய்!!!!”
என என்னை மீண்டும் கிண்டலடித்து விட்டுச் சென்றாள். .

சீனியரிடம் வேறு வேலை தருமாறு சண்டையிட்டது , என்னிடம் முகம் கொடுக்காமல் பேசியது என அவனது செய்கைகளைப் பார்க்கையில்
அவனுக்கு என்னுடன் இணைந்து வேலை செய்ய விருப்பமில்லை என்பதை உணர்ந்துக் கொண்டேன். .

என்னிடம் எதும் கலந்தாலோசிக்காமல் அவன் சீனியர்களிடமே விவாதம் செய்து பேசிக் கொண்டிருந்தான். . சீனியர்கள் எங்களை அவரவர்கள் குழுவில் சென்று நிற்குமாறு சொல்ல நான் அஷ்வினுக்கு அருகில் சென்று நின்றேன். .

சீனியர் எங்களிடம் எங்கள் வேலையைப் பற்றி மீண்டும் விளக்கினர். .

“நீங்க எல்லா காலேஜஸ் கும் மிஸ் பண்ணாம மெயில் அனுப்பிறனும். . அனுப்புறது மட்டும் போறாது சில முக்கியமான காலேஜஸ் கு நீங்க நேர்லையே போயி அவங்கள இன்வைட் பண்ணனும். . .
என பேசிக்கொண்டிருக்க நான்

“டேய் லூசு சீனியர்!!!! இவனுக்கு எங்கூட சேர்ந்து வொர்க் பண்ணவே பிடிக்கல. நீ என்னடானா லெக்சர் எடுத்துகிட்டு இருக்க? மென்டல்!!!! ஹ ஹா வேல ரொம்ப அழகா நடக்கப்போகுது பாரு!!! ”

என மனதில் நினைத்துக் கொண்டேன். .

சில நாட்கள் சென்றன. . .

மாலையில் எங்கள் கல்லூரி நேரம் முடிந்து நாங்கள் மற்ற கல்லூரிகளுக்கு மெயில் அனுப்புவதற்காக நானும் அவனும் ஒன்றாக அமர்வோம். . அவன் என்னிடம் பேசவே மாட்டான் . . .அப்படியே பேசினாலும் எங்களின் வேலையப் பற்றிய சந்தேகத்தை ஒற்றை வார்த்தையில் கேட்டு பேசுவானே தவிர தப்பி தவறி கூட அவன் வாயிலிருந்து வேறெதைப் பற்றிய பேச்சும் வார்த்தையும் வராது. .

அவனுக்கு நான் செல்லமாக வைத்தப்பெயர் “சிடுமூஞ்சி!!!”

எங்களது வேலை சம்பந்தமான பேச்சாக இருந்தாலும் அவனாக வலிய வந்து எதையும் பேசவே மாட்டான் . . அதனால் எப்போதும் நான் தான் பேச ஆரம்பிப்பேன். . நான் பேசி முடித்த பிறகு அவனுக்கு தேவையானவற்றை அவன் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான். .

இப்படித்தான் எங்களது வேலை சென்றுக்கொண்டிருந்தது. .

அன்றைய நாள் எங்கள் வேலையில் எனக்கு ஒரு சந்தேகம். . .

“எப்படியோ இவன் பேசப் போறது இல்ல. . நாம தான் பேசியாகனும் . . சிடுமூஞ்சி இவன வீட்ல எப்டி தான் வச்சிருக்காங்களோ தெரியல”
என நினைத்துக்கொண்டே இருக்க என்ன ஆச்சரியம் அவன் என்னுடைய பேச்சிக்காக காத்திருக்காமல் முதல் தடவையாக அவனாகவே என்னிடம் பேசினான். .

“உங்க கிட்ட இருக்க அந்த பேப்பர்ஸ் எனக்கு வேணும். . .!!!”
என கேட்க நான் அந்த பேப்பர்களை எடுத்துக்கொடுத்தேன். .

அவனாகவே என்னிடம் பேசி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்த தால் எனக்கு எழுந்த சந்தேகம் கூட எனக்கு மறந்துபோய் விட்டது. .

அவனாகவே என்னிடம் பேசியதால் எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து அவனாகவே பேசிவிட்டான் இப்போது நாம் பேசினால் அவனும் நிச்சயமாக என்னிடம் பேசுவான் என்ற நம்பிக்கையில் நானும் அவனிடம் பேச ஆரம்பித்தேன். .

“நீ ஏன் எங்கிட்ட பேசவே மாட்டேங்குற?”

“பேச மாட்றேனா இப்ப கூட பேசினேனே பேப்பர் கேட்டு!!!”

“ஓ பேப்பர் குடு , அந்த காலேஜ் மெயில் ஐடி என்ன? , இந்த காலேஜ்கு மெயில் பண்ணிட்டியா? , ஜிமெயில்ல பண்ணியா? , ஹாட் மெயில்ல பண்ணியா?, இதெல்லாம் தான் உனக்கு பேசறதா அர்த்தமா?”

என நான் கேட்க அவன் புருவங்களை உயர்த்தி
“வேற என்ன பேசனும்?”

அவன் அப்படி கேட்டதும் எனக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. . இருந்தாலும் நான் அமைதியாகவே

“நான் ப்ரெண்ட்லியா ஏதும் பேச மாட்டியானு கேட்டேன்!!!”

“ஐ அம் வெரி சாரி!!! நான் என்னோட ஸ்கூலிங் ஃபுல்லா பாய்ஸ் ஹையர் செகன்டரி ஸ்கூல்ல தான் முடிச்சேன் . . எனக்கு கேர்ள்ஸ் கிட்ட பேசி பழக்கம் இல்ல . . அந்த சான்ஸ் லாம் எனக்கு கெடைக்கவே இல்ல. . ஒரு பொண்ணு கூட சேர்ந்து பேசறதும் வொர்க் பண்றதும் எனக்கு இதான் பர்ஸ்ட் டைம். . .”
அவனும் அமைதியாகவே சொன்னான். .

“ஓ ஓகே ஓகே!!! இதான் ரீசனா? உனக்கு எங்கூட வொர்க் பண்ண பிடிக்கலையோனு தான் இவ்ளோ நாளா நெனச்சிட்டு இருந்தேன்!!!”

“ச்சே ச்சே அப்டியெல்லாம் இல்ல . . சோ ஹெசிஸ்டேஷன் தானே தவிர பிடிக்கலனு சொல்லமுடியாது.. . . அதுமட்டும் இல்லாம என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் பாதிப்பேரு இங்க தான் ஜாய்ன் பண்ணி இருக்காங்க . . .சப்போஸ் என் ப்ரெண்ட்ஸ் நான் உங்களோட பேசறத பாத்தா என்ன டீஸ் பண்ணியே சாவடிச்சிருவாங்க !!!
என அவன் சிரித்துக்கொண்டே பேசினான். .

அவன் என்னோடு பேசிய அந்த நேரத்தில் அவனது முகத்தில் எழுந்த அந்த முதல் புன்னகை எனக்கு மிகவும் பிடித்தது . . . .சிரிக்கும் போதும் அவன் ஸ்மார்ட் என அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். .

பேசி முடித்து விட்டு எங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தோம். . . அன்றைய தினம் பார்த்து எங்களுக்கு வேலை மிகவும் அதிகம். . . வேலை முடித்து வீட்டிற்கு கிளம்ப மணி 9 ஆகி விட்டது. . .

நான் வெளியில் என் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றுக் கொண்டு இருந்தேன். . பல முறை முயன்றும் அன்று பார்த்து அது ஸ்டார்ட் ஆகாமல் தொல்லைக் கொடுத்தது. . எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. .

அப்போது அஷ்வின் வெளியே வருகிறான். .

“ஹே இன்னும் கெளம்பலையா நீங்க?”

“இல்ல ஸ்கூட்டில ஏதோ பிரச்சன? ஸ்டார்ட் ஆகவே மாட்டேங்குது!!”

அவன் என்னை தள்ளிப்போகச் சொல்லிவிட்டு அவன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றான். . நான் அவ்வளவு நேரம் கிக் செய்து முயன்றும் ஸ்டார்ட் ஆகாத என் ஸ்கூட்டி அவனது மூன்றாவது கிக் கிலேயே ஸ்டார்ட் ஆனது. .

ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆனதும் அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். .

“கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கிக் பண்ணா ஸ்டார்ட் ஆகிரும். . ம்ம்ம் கெளம்புங்க. ..!!!”

“தேங்ஸ்!!!”

“தட்ஸ் ஓகே!!!”

நான் கிளம்பினேன். . .

அப்போது முதன் முறையாக அவன் என் பெயரை அழைத்து
“கீர்த்தி”
என உரக்கக் கத்தினான்..

நான் நிறுத்திவிட்டு அவனை திரும்பிப் பார்க்க

“ஷால் பறக்குது பாருங்க. . . அத ஒழுங்கா சரி பண்ணிட்டு போங்க!!!”

என சொல்ல நான் ஷாலை சரி செய்து கொண்டு அவனைப் பார்த்து சிரித்தேன்.

என்ன ஆச்சரியம் அவனும் பதிலுக்கு சிரித்தான். .

“பத்திரமா போயிருவிங்களா?”
என அவன் கேட்க

“ம்ம்ம் ஐ வில்!!!”
என நான் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினேன். .

எங்களுக்கு இடையே நடந்த இந்த நிகழ்வு என்னிடம் பழகுவதற்கான அவனது தயக்கத்தை கொஞ்சம் தளர்த்தியது. .
7th episode
அவனது தயக்கம் கொஞ்சம் விலகியவுடன் அவன் என்னிடம் சகஜமாக பேச ஆரம்பித்தான். . . அதன் பிறகு நாங்கள் எங்களின் குடும்பம் மற்றும் பல சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தோம். .

அவனுக்கு என்னிடம் பேசுவதிலும் பழகுவதிலும் இருந்த அந்த தயக்கம் முற்றிலுமாக விலகியது. . நாங்கள் இருவரும் இப்போது நண்பர்கள் ஆகிவிட்டோம். . கல்லூரியில் நானும் ரேணுவும் பேசிக் கொண்டிருந்தோம். . அவள் அஷ்வினை வைத்து என்னை மீண்டும் கலாய்க்க ஆரம்பித்தாள். .

“அப்புறம் கீர்த்தி. . . உங்க ரெண்டு பேருக்குள்ளையும் எல்லாம் நல்லபடியா போய்கிட்டிருக்குப் போல!!!”

“யார சொல்ற எனக்கு புரியல!!!”

“ஏய் நடிக்காத!!! டெய்லி கம்யூட்டர் லேப் குள்ள ஒரே பேச்சும் சிரிப்பும் தான். . . . ம்ம்ம் இப்ப நல்லா பேச ஆரம்பிச்சிட்டான் போல!!!”

“ஓ அஷ்வின் பத்தி கேக்றியா?”

“யா!!!”
எனக் கண் அடித்தாள். .

“நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்லமா. . . ரொம்ப கற்பன பண்ணிக்காத. . . நாங்க ஒன்னும் எப்பவும் அப்டி பேசிக்கறது இல்ல எப்பயாவதுதான்!!!!”

“அப்டியா அவன் அப்டி என்ன பேசுவான்? எதபத்தி பேசுவான்?”

“மோஸ்ட்லி அவன் ப்ரண்ட்ஸ் பத்தி. .. தென் கிரிக்கெட் பத்தி அப்றம் ஏதாவது மூவி பாத்தா அத பத்தி பேசுவான்!!!!”

“பெர்சனலா எதும் ஷேர் பண்ணிகறது இல்லையா?”

“எப்பயாவது தான்!!!”

“அவன் பேமிலி பத்தி ஏதாவது ஷேர் பண்ணி இருக்கானா?”

“ம்ம்ம்ம் அவன் அவங்க பேரண்ட்ஸ்கு பர்ஸ்ட் சன். . அவனுக்கு கீழ ஒரு தங்கச்சி இருக்கா!!! அவன் ஹாஸ்ட்ல்ல தங்கி படிக்கிறான். .. அவன் ஒரு ஃபுட் பால் ப்ளேயர் அப்பறம் அவனுக்கு அவன் ப்ரெண்ட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். . . தட்ஸ் ஆல்!!!”

“இவ்ளோதானா?”

“ஆமா வேற என்ன?”

“அவன் யாரையாவது லவ் பண்றானானு கேட்டியா?”

அவளது ஆர்வத்தை பார்த்து நான் அவளை ஒரு மாதிரியாக பார்த்தேன். .

“அவனபத்தி தெரிஞ்சிக்க உனக்கென்ன இவ்ளோ ஆர்வம்? ஒன்னும் சரி இல்லையே!!! ஏன் நீ அவன லவ் பண்ண போறியா என்ன?”

“ஹே ச்சீ அப்டியெல்லாம் இல்ல அவன் எனக்கு அண்ணன் மாதிரி!!!”

“போட்டாடா ஒரு பிட்ட!!!”

“சரி சரி சொல்லு அவன் யாரையாவது லவ் பண்றானாமா?”

“எனக்கு தெரியாது டி நான் அத பத்தியெல்லாம் அவங்கிட்ட பேசிக்க மாட்டேன்!!!”

“ஏன் உனக்கு அதப்பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இல்லையா?”

“எனக்கு எதுக்கு ஆர்வம் வரனும்? லூசா நீ?”

“பே நீ லாம் இருக்கறதே வேஸ்ட் !!!”
என என்னைத் திட்டிவிட்டு சென்றுவிட்டாள். .

ரேணு என்னிடம் கேட்ட பிறகுதான் இதைப் பற்றி அவனிடம் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் வந்தது. .

அன்று மாலை நான் விரைவாக அவனுக்கு முன்பாகவே கம்யூட்டர் லேபிற்கு சென்று என் வேலையை ஆரம்பித்தேன். .

பத்து நிமிடங்கள் கழித்து அவன் வந்தான். .

“ஹாய் !!!”
என சிரித்துக்கொண்டே வந்து அமர்ந்தான். .

“ஹாய்”
என நானும் புன்னகை செய்தேன். .

“என்ன இன்னிக்கு இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?”

“க்ளாஸ் சீக்கிரம் முடிஞ்சிருச்சி அதான்!!!”

“ஓ ஓகே ஓகே !!!”
என அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். .

அப்போது ரேணு என்னிடம் அவனைப் பற்றி கேட்ட கேள்விகள் எனக்கு நினைவுக்கு வரவே அவனிடம் அதைப் பற்றி கேட்க நினைத்து அவன் பக்கம் திரும்பினேன். ..

“அஷ்வின் நான் உங்கிட்ட ஒன்னு கேக்கலாமா!!!”

“கேளு கீர்த்தி!!!”
என அவன் சிஸ்டமை பார்த்துக் கொண்டே பதில் பேசினான். .

“உனக்கு கேர்ள் ப்ரெண்ட் இருக்காங்களா?”

அவன் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்து
“அன்னிக்கே சொன்னேன்ல உங்கிட்ட தான் நான் மொதல் மொதல்ல பேசவே செஞ்சேன். . அப்டி இருக்கும்போது என்ன பாத்து இப்டி ஒரு கேள்வி கேட்டியே!!!!”

“இல்ல காலேஜ் ஜாய்ன் பண்ணி மூனு மாசம் ஆகப்போகுது க்ளாஸ்ல யாரும் இல்லையா?”

அவன் சிரித்துக்கொண்டே

“இல்ல எனக்கு கேர்ள் ப்ரெண்ட்ஸ்லாம் யாரும் இல்ல. . சொல்லப்போனா இந்த கமிட்மென்ஸ்லாம் எனக்கு பிடிக்காது!!! ஆமா ஏன் திடீர்னு இப்டி கேக்ற?”

“சும்மா தான் !!!”
என நான் கம்யூட்டர் பக்கம் மீண்டும் திரும்பிக்கொண்டு என் வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். .

வேலை முடிந்து இருவரும் கிளம்பினோம்..

“ஓகே கீர்த்தி நாளைக்கு நாம மத்த காலேஜஸ்கு இன்விடேஷன் கொடுக்க வெளிய போகணும். . . நான் என் க்ளாஸ் கோ ஆர்டினேட்டர் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன் நீயும் நாளைக்கு பர்ஸ்ட் ஹார் குள்ள பெர்மிஷன் வாங்கிட்டு எனக்கு இன்பார்ம் பண்ணு!!!”

“ஓகே அஷ்வின் நான் ஈவினிங்கே சொல்லிட்டேன் நோ ப்ராப்ளம்!!!”

“ஓகே பாய்”
என வெளியே வந்தோம். .. அப்போது அவன் தயங்கிக்கொண்டே

“உன்னோட மொபைல் நம்பர் குடுத்தா உன்ன நான் போன் லயே கான்டாக்ட் பண்ணிப்பேன் கீர்த்தி. . . பிக்காஸ் ஒவ்வொரு தடவையும் அங்க இருந்து இங்க இங்க இருந்து அங்கனு அலைய வேணாம்ல. .. ”

“அதுக்கு ஏன் இவ்ளோ தயங்குற? ஃபோன் நம்பர் குடுனா குடுக்கப் போறேன்!!!!”

“இல்ல என்ன இருந்தாலும். … !!!!”

“சரி சரி விடு ரொம்ப வெக்கப்படாத!!!”
என நானும் என் நம்பரை அவனுக்கு கொடுத்தேன். . அவனது நம்பரையும் நான் வாங்கிக்கொண்டேன். .

9
அடுத்த நாள்

பிரின்சிபலிடம் இருந்து அனுமதி கடிகதம் வாங்கிக்கொண்டு நாங்கள்
கல்லூரியை விட்டுக் கிளம்பினோம். . வோறொரு கல்லூரிக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது

“ஹே அஷ்வின்”

என ஒரு பையனின் குரல் கேட்க இவன் திரும்பிப் பார்த்தான் . . அது அவனுடைய நெருக்கமான தோழன் ராம். . .

“இங்க என்னடா பண்ற?”
என அவனை கேட்டுக்கொண்டே என்னைப் பார்த்தான் . . .

அஷ்வின் என்னை அவனுக்கு அறிமுகம் செய்துவிட்டு பின் அவனை தனியாக கூட்டிக்கொண்டு பேசிக் கொண்டிருந்தான். . . அவர்களுக்கு சற்றுத் தொலைவில் நான் இருந்தாலும் அவர்களின் பேச்சு சப்தம் என் காதுகளை லேசாக எட்டியது. .

ராம் அஷ்வினை என்னை வைத்து கலாய்த்துக் கொண்டிருந்தான். . .

“டேய் யாருடா அந்த பொண்ணு? ஸ்கூல்ல ஆஞ்சநேயர் பக்தன் மாதிரி இருந்துட்டு காலேஜ் வந்து இப்டி பொண்ணு கூட சுத்துற மாதிரி இவ்ளோ மாறிட்டியா நீ?”

அஷ்வின் டேய் அப்டியெல்லாம் ஒன்னும் இல்ல நாங்க காலேஜ் வேலையா வந்தோம். . . !!!”

“காலேஜ் வேல!!!”
என ஒரு மாதிரியாக சிரித்துக்கொண்டே அவன் மீண்டும் என்னைப் பார்த்தான்.

“சத்தியமா காலேஜ் வேல தான்டா மத்தபடி ஒன்னும் இல்ல!!!”

அப்போதும் ராம் அவனை கிண்டலடித்துக்கொண்டே இருக்க

“போடா லூசு!!! அப்பறம் மீட் பண்றேன் பாய்!!!!”
என அவனிடமிருந்து கஷ்ட்ப்பட்டுத் தப்பித்து வந்தான். .

எனக்கு அவனைப் பார்ப்பதற்கே சிரிப்பாக இருந்தது. . ஆனால் அவன் என்னை நெருங்கியதும் என் சிரிப்பை நான் மறைத்துக்கொண்டேன். . பிறகு நாங்கள் நிறைய கல்லூரிகளுக்கு சென்றோம் எங்களது அந்த ஒவ்வொரு பயணமும்
எங்களுக்குள் மிகவும் நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். .

நாங்கள் பேருந்துகளில் பயணம் செல்லும் போது அவன் என் அருகில் அமரவே மாட்டான் தனியாகவே அமர்வான். . என் பக்கத்தில் இடம் இருந்தாலும் கூட அவன் என் பக்கத்தில் வந்து அமரவே மாட்டான். . இதுபோன்ற அவனிடம் இருந்த சில ஒழுக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. . . .அவைகள் என்னை அறியாமலே என்னை அவனை நோக்கி இழுத்துச் சென்றன. . .

ஆரம்ப நாட்களில் குட்மார்னிங் அன்ட் குட்நைட் மெசேஜ் மட்டும் ஒரு ஸ்மைலியுடன் போட்டு துவக்கிய எங்கள் மொபைல் சேட் நாட்கள் செல்ல செல்ல குட்மார்னிங்கில் ஆரம்பித்து குட் நைட் சொல்லும் வரை தொடர்ந்தது. .
அவன் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள்ளே வர ஆரம்பித்தான். . .

கல்சுரல்ஸ் சிறப்பாக நடந்து முடிந்தது. . அதற்குள் தேர்வுகளும் நெருங்கி வந்துவிட்டன. . எங்கள் இருவருக்குமே ஒரு சில பாடங்கள் ஒரே மாதிரியானவை அதனால் அந்த ஒரே மாதிரியான பாடங்களை அவனுடன் சேர்ந்து படித்தேன். . மற்ற பாடங்களை என்னுடைய தோழிகளுடன் படிப்பேன். . .

கல்சுரல்ஸ் முடிந்துவிட்ட பிறகு எங்களால் தினமும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. .அதனால் மாலை எங்கள் கல்லூரி முடிந்ததும் நாங்கள் சந்தித்துப் பேசிக் கொள்வோம். .

நான் அன்று காலை முதல் மாலை வரை வீட்டில் மற்றும் கல்லூரியில் என்னென்ன நடந்ததென்று ஒன்று விடாமல் அவனுடன் பகிர்ந்து கொள்வேன். . நான் என்ன சொன்னாலும் எவ்வளவு பேசினாலும் அவன் கொஞ்சமும் சலித்துக்கொள்ளாமல் அமைதியாகவே கேட்டுக்கொள்வான். .

அதன் பிறகு நாங்கள் கல்லூரியில் எங்கள் உணவு இடைவேளையிலும் சந்தித்துக்கொண்டு என் உணவை நாங்கள் இருவரும் பகிர்ந்து உண்ண ஆரம்பித்தோம். .

அவன் பேசும்போது என் கண்களைப் பார்த்துக்கொண்டே தான் பேசுவான் அது எனக்கு மிகவும் பிடித்தது. . நானும் அவன் கண்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தால் ஒரு விஷயத்தையும் என்னால் அவனிடமிருந்து மறைக்கவே முடியாது. . அவன் கண்களை பார்க்கையில் என்னால் பொய் பேசவும் முடியாது. . அவனுடைய கண்கள் என்னை அப்படி மயக்கிவிடும். .

நாட்கள் கடந்து செல்ல செல்ல நாங்கள் மிகவும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டோம். . . இருந்தாலும் அவன் தெரியாமல் என்னைத் தொட்டு விட்டாலோ அவனை அறியாமல் அவன் கைகள் என்மீது பட்டு விட்டாலோ உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவான். . .பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் அவனது அந்த குணம் அவனிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். .

பிறகு நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அவனது அபிப்பிராயம் கேட்க ஆரம்பித்தேன். . அவன் என்ன சொல்கிறானோ அந்த வார்த்தையே என்னுடைய இறுதி முடிவாகியது. . அவன் என் அருகில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். .

அவனுடன் இருக்கையில் தனிமை என்பதை நான் அறிந்ததே இல்லை
இப்படியே எங்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகியது. . கல்லூரியில் இருக்கையில் காலை மதியம் மாலை என பாதி நேரம் அவனுடனே கழித்தேன்
கல்லூரி விடுமுறை நாட்களில் மெசேஜ் மற்றும் கால்களில் அவனுடன் என்னுடைய முக்கால்வாசி நேரத்தைக் கழித்தேன். . .

என் வாழ்கையில் நுழைந்த இரண்டே வருடங்களில் என்னையும் என் மனதையும் அவன் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான். .

நான் பார்க்கிற எல்லாமே எனக்கு மிகவும் அழகாக தெரிந்தது. . ஒரு புறம் அப்பா அம்மாவின் அன்பு இன்னொரு புறம் அஷ்வினின் அரவணைப்பு. . . வாழ்க்கை ஏழு வண்ண வானவில்லாக மாறியது. . எந்த கவலையும் இல்லாமல் வானத்தில் மகிழ்ச்சியாக பறந்து திரியும் பறவையைப் போல மாறினேன். . என் கவலைகள் என்னை விட்டுக் காணாமல் போயின. . என் கடந்த கால சோகங்கள் என்னை விட்டு முற்றிலும் மறைந்தே போயின. . .. எல்லாவற்றிற்கும் காரணம் என் அஷ்வின் . . .

அவனிடம் எனக்கு பிடிக்காத இரண்டு குணங்கள் உண்டு. .ஒன்று எங்களுக்குள் ஏதாவது சண்டையோ புரிதல் இல்லாமல் பிரச்சனையே வந்தாலோ அவனே அதற்கு முழுக் காரணமாக இருந்தாலும் தவறு அவன் மீது இருந்தாலும் சமாதானம் ஆகவே மாட்டான். . அதற்காக வருந்தவும் மாட்டான். .

நானாக இறங்கிவரும் வரை அவன் காத்துக் கொண்டு இருப்பான். .
எவ்வளவு நேரம் ஆனாலும் நான் பேசும் வரை அவன் என்னிடம் பேசவே மாட்டான். .

அவ்வாறு அவன் என் மீது கோபம் கொண்டு என்னிடம் சண்டையிட்டு பேசாமல் போகிற காலம் எனக்கு எதையோ இழந்ததைப் போலவே இருக்கும். எதன் மீதும் கவனம் செல்லாது. . அவனது பிரிவு மட்டுமே என் கவனத்தில் ஓடிக் கொண்டிருக்கும். . ரொம்பவும் கஷ்டப்பட்டு நிமிடங்களும் நொடிகளும் கடப்பதாகவே உணர்வேன். .

அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போதெல்லாம் எவ்வளவுதான் என்னை திசைத்திருப்ப முயன்றாலும் என்னால் முடியாது. .எங்கு பார்த்தாலும் அவன் முகம் மட்டுமே தெரியும். . மிகவும் தடுமாறிவிடுவேன். . .

அதனால் எத்தனைச் சண்டைகள் வந்தாலும் நான் தான் என் ஈகோவை விட்டு முதலில் அவனிடம் இறங்கிச் சென்று பேசி சமாதானம் ஆவேன். . எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நான் தான் இறங்கி வந்து அவனிடம் பேச வேண்டும் என எண்ணும் அவனது ஈகோவுடன் பின்னிப் பிணைந்திருக்கும் அவனது அந்த பிடிவாத குணம் எனக்கு சுத்தமாக பிடிக்காது. . என்றாவது ஓர் நாள் அவனது இந்த பிடிவாத குணம் அவனை விட்டு விலகும் என நம்பினேன்.

இரண்டாவது அவனுடைய புகைப்பழக்கம். . .எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் அந்த சிகரெட் பழக்கத்தை மட்டும் விடவில்லை. .இது அவனிடம் நான் வெறுக்கும் இரண்டாவது குணம். . இதையும் எனக்கா ஓர் நாள் மாற்றிக் கொள்வான் என நினைத்து அமைதியானேன். .

சில நாட்களில் வகுப்பில் இருக்கும்போதே மெசேஜ் செய்ய ஆரம்பித்தோம்.
வீட்டிற்கு சென்றபிறகும் இரவெல்லாம் விடிய விடிய போனில் பேசிக் கொண்டிருப்போம். . அவ்வாறு இரவு முழுவதும் பேசிவிட்டு வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் தூங்கும் வழக்கமும் ஆரம்பம் ஆனது. . . அவன் இல்லாத வாழ்வு வெறுமையாகவே எனக்கு தோன்றியது. .

அவன் என்னிடம் பேசும் போது அவன் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும்
விஷயத்தில் கவனம் செல்வதை விட அவன் முகத்தைப் பார்ப்பதிலே தான் என் கவனம் அதிகமாக செல்லும். . கொஞ்சம் கொஞ்சமாக அவன் என் வாழ்க்கையின் உள்ளே நுழைந்து இன்று அவன் தான் என் வாழ்க்கை என ஆகிவிட்டான். . அவனது அன்பில் நான் என்னையே அவனிடம் முழுவதுமாக தொலைத்து விட்டேன். .

அஷ்வின் என சேவ் செய்திருந்த அவனது மொபைல் நம்பரை ஸ்வீட்ஹார்ட் என மாற்றி சேவ் செய்து கொண்டேன். . அவனிடம் மொத்தமாக நான் காதலில் விழுந்துவிட்டேன். .

ஒருநாள் உணவு இடைவெளியில் அவனிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்ல அவனுக்காக காத்திருந்தேன். .

சில நிமிடங்களில் அவனும் வந்து என் அருகில் அமர்ந்தான் நான் என்னுடைய உணவை அவனுடன் பகிர்ந்து கொண்டு இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். .

9th episode

“எங்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்ன?
அவன் சாப்பிட்டுக்கொண்டே என்னைக் கேட்டான் . .

“ஹிம் ஆமா!!!”

“என்ன சொல்லு?”

“உனக்கு ஷக்திய தெரியுமா?”

“ஓ தெரியுமே!!! உங்க க்ளாஸ்ல தான படிக்குறான்!! ஹைட்டா ஹேன்சமா இருப்பானே!!!! பாத்து இருக்கேன்!!!”

“ஆமா அவனேதான் !!! நீ அவன பத்தி என்ன நெனைக்கிற அஷ்வின்?”

“ஹிம் நல்ல பையன்!!! ஸ்மார்ட்டா இருக்கான்!! நல்லா படிப்பானு கேள்விபட்டிருக்கேன்!!!”

“ம்ம்ம் வேற?”

“வேற என்ன?. . . .. . லூசா நீ? அவன் உன் க்ளாஸ் மேட் எங்கிட்ட வந்து அவனப் பத்தி கேட்டுட்டு இருக்க? ஆமா இப்போ ஏன் இதெல்லாம் கேக்ற?”

“நேத்து நைட் அவன் எனக்கு கால் பண்ணி என்ன லவ் பண்றதா சொல்லி எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணான்!!!!”

என மிகவும் லேசான குரலில் நான் சொல்ல அவனுக்குள்
சிறு தடுமாற்றம் அதை எனக்கு காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே இருப்பது போல இருந்தான். ..

“எப்போ சொன்னான்?”

“நேத்து டின்னர் முடிச்சிட்டு போறேன் அவன் கால் பண்ணினான்!!! அப்போ தான் எல்லாம் சொல்லிட்டு ஐ லவ் யூ னு சொன்னான்!!!”

“நேத்து நைட் 3 மணி வர நாம பேசிகிட்டு தான இருந்தோம்!!! அப்பறம் ஏன் இத நீ நேத்திக்கே எங்கிட்ட சொல்லல? ”

“உங்கிட்ட நேர்ல சொல்லி ஒரு சஜெஷன் கேட்டு அப்பவே அத அவங்கிட்ட சொல்லலாம்னு தான் நேத்து சொல்லல!!! சொல்லு இப்ப நான் அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?”

நான் சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு கோபம் வந்துவிட்டது. . அவன் அவ்வாறு கோபப் படுவதை நான் முதன் முதலாக பார்க்கிறேன். . எனக்கு ஆச்சரியம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் பயம். .

அவனது கோபத்தை அடக்கிக்கொண்டு மீண்டும் என்னிடம் பேசினான். .

“சோ நீ இன்னும் அவனுக்கு எந்த பதிலும் சொல்லல ரைட்?”

“ஆமா சொல்லல!!!”

“இங்க பாரு உனக்கு அவன பிடிச்சிருந்தா அவனுக்கு ஓகே சொல்லு. . . நான் க்ளாஸ் கு போரேன் !!! ஆல்ரெடி லேட் ஆகிருச்சி. . . நீயும் சீக்கிரமா சாப்டு க்ளாஸ்கு கெளம்பு!!!”

“நான் என்ன பண்ணனும்னு நீ இன்னும் எனக்கு ஒழுங்கான பதில் சொல்லல. . . நீ பதில் சொல்லு அப்பறம் நான் சாப்பிடறேன்!!!”
என சொல்லிவிட்டு நான் அவனைப் பார்க்காமல் மற்ற இடங்களில் என் பார்வையை செலுத்தினேன். .

சில நிமிடங்கள் கழித்து அவன் என்னைப் பார்த்துக்கொண்டே நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிபன் பாக்சை என்னை நோக்கி தள்ளி வைத்துவிட்டு

“அவன்கிட்ட நோ சொல்லிரு. .. உனக்கு அவன பிடிச்சி இருந்தாலும் இனிமே அவன்கிட்ட பேசாத!!! ம்ம் இப்போ சாப்டு!!!”

அவன் அவ்வாறு சொன்னதும் எனக்கு சிரிப்பை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை அவன் கோபத்தில் கூட எனக்கு அழகாகவே தெரிந்தான். .
வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். .

அந்த வார இறுதியில் அவனுக்கு பிறந்த நாள். .

எனக்கு ஆண்கள் வெள்ளை நிற சட்டையும் வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும்
அணிந்திருப்பது மிகவும் பிடிக்கும். .. அவனையும் அந்த உடை யில் உடுத்தி நான பார்க்க வேண்டும் என நினைத்து அவனது பிறந்த நாளிற்காக
அந்த உடைகளை வாங்கினேன். .

அதுமட்டும் இல்லாமல் அந்த நாள் முழுவதும் அவனை என்னுடன் மட்டுமே இருக்கும் படியாகவும் ஒரு அன்பு கட்டளையும் இட்டேன். .

அன்று அவனுடைய பிறந்த நாள். .

காலையிலேயே அவனை நேரில் சென்று வாழ்த்திவிட்டு என்னுடைய கிப்டை அவனுக்கு வழங்கினேன். . அவனும் சில நிமிடங்களில் அந்த உடையை உடுத்திக்கொண்டு என் முன்னே வந்து நின்றான். .

அந்த அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை நாளுக்கு நாள் அவன் என் கண்களுக்கு அழகாக தெரிந்தான். .

நாங்கள் வெளியில் செல்ல கிளம்பினோம் அதுதான் எங்களுடைய முதல் டேட்டிங். . முதலில் கோவிலுக்கு சென்றோம் பிறகு மதிய உணவை ஒன்றாக சேர்ந்தே சாப்பிட்டு முடித்து திரைப்படம் பார்ப்பதற்காக தியேட்டர் சென்றோம். .

மாலைப் பொழுது வந்தது

அவனுடன் சேர்ந்து கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் விளையாடிவிட்டு அங்கேயே இருவரும் அமர்ந்தோம். . அவன் எனக்கு மிகவும் நெருக்கமாக என்னருகில் அமர்ந்து இருந்தான். .

அந்தத் தருணம் என்னுள் ஏதோ மாற்றம் ஏற்படுவதை நான் உணரக் கண்டேன்
எனக்கு அவன் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது சற்றும் யோசிக்காகமல் மெதுவாக அவன் தோளின் மீது சாய்ந்துக்கொண்டேன். . .

அவனுடனான இந்த நெருக்கத்தை என் மனம் ஏனோ விரும்பிக்கொண்டே இருந்தது. .. அந்த நெருக்கம் என் வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை என்னுள்ளே கிளறிவிட அப்போதே என் கண்ணில் நாங்கள் இதே போல எப்போதும் ஒன்றாக எங்கள் நாளைக் கழிப்பதுப்போல பல வண்ணக் கனவுகளைக் கண்டுக் கொண்டிருந்தேன். .

அப்போது அவன் என்னை அழைத்தான்/. . .

“கீர்த்தி”

ஆனால் அவன் குரல் என் காதில் விழவில்லை. ..

பிறகு

“ஹே கீர்த்தி”

என என்னை அசைத்தான். .

அப்போதுதான் நான் கண்டுகொண்டிருப்தெல்லாம் வெறும் கனவுகள் என்று எனக்குப் புரிந்தது. .

“என்னாச்சி ஆர் யூ ஆல்ரைட்?”

“யா அஷ்வின் ஐ அம் ஆல் ரைட்”

“டைம் ஆச்சி கெளம்பலாமா?”

“சரி நான் இங்கையே ஆட்டோ புடுச்சி போறேன். . .. நீ ஹால்டல் கு கெளம்பு”

என நான் சொல்லிவிட்டு நடக்க அவன் என் பின்னாலே அமைதியாக நடந்து வந்தான். . அப்போது அவன்
“கீர்த்தி”
என என்னை அழைத்தான் நான் திரும்பி பார்த்தேன். . .

“உன் வீடு வரைக்கும் நானும் உன்னோட வரட்டுமா?”

என கேட்டுவிட்டு அவனது அழகான பார்வையால் என் பதிலுக்காக காத்திருந்தான். .

“வேண்டாம்”

என என்னால் எப்படி கூற முடியும்? புன்னகை செய்தே அவனுக்கு அனுமதி கொடுக்க அங்கே என் வீட்டிற்கு செல்லுவதற்கான பேருந்து வந்து நின்றது. .
நான் அதில் ஏறினேன். . ஒரு சீட்டில் அமர்ந்து அஷ்வினுக்காக என் பக்கத்தில் இருந்த இடத்தை தட்டிவிட்டு அவனை திரும்பிப் பார்த்தேன். .

அவன் எப்போது பஸ்ஸில் என் அருகில் அமர்ந்திருக்கிறான்? இடம் இருந்தாலும் நின்று கொண்டுதானே வருவான். . . .
என நினைத்து சோகமாக திரும்பிக் கொண்டேன். . .அதற்குள் வேறொரு பையன் என் பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்துக்கொண்டான்.

அப்போது திடீரென நானே எதிர்பார்க்காமல் அஷ்வின் அங்கே வந்து அந்த பையனிடம்

“எக்ஸ்கியூஸ்மீ சார்!!! நீங்க அந்த ஷீட் ல உக்காந்துகுறீங்களா? அவங்க கிட்ட நான் பேசனும் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க!!!”
என பணிவாக கேட்க அவனும் எழுந்துச் சென்றுவிட்டான். .

எதிர்பாராத இன்பம் போல முதன் முதலாக பஸ்ஸில் அவன் என் அருகே வந்து அமர்ந்தான். . அவனும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக்கொள்கிறான் என்பது எனக்கு தெரிந்தது. . .

பிறகு அவன் என்னிடம்

“உங்க வீட்டுக்கு முன்னாடி ஸ்டாப்பிங்கே இறங்கி அங்க இருந்து வீடு வரைக்கும் நடந்து போயிறலாம்!!!”
என அவன் சொல்ல எனக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் . . பேச வார்த்தைகள் வராமல் சந்தோஷத்தில் தலையை மட்டும் ஆட்டினேன் . .

சிறிது நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வரவே அவன் சொன்னபடி இறங்கி நடக்க ஆரம்பித்தோம். ..

லேசான இருட்டு. . இதமான சூழல் . . . .ஈரப்பதமுள்ள காற்று. . . ஆள் நடமாட்டமே இல்லாத அந்த பாதை. . . அமைதியாக நாங்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தோம்!! நாங்கள் தான் பேச வில்லையே தவிர எங்கள் மௌனம் மட்டும் பாஷைகளைப் பரிமாற்றம் செய்துக் கொண்டிருந்தது. .

நான் அவனது கைகளைக் கோர்த்து நடக்க ஆரம்பித்தேன். . மனதில் ஆயிரம் எண்ணங்கள். . .

“அவனது கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பதாலும் அவனிடம் நெருக்கம் காட்டுவதாலும் அவன் என்னை தவறாக நினைப்பானோ? ”

“ஏன் அவன் தினம் தினம் என் கண்களுக்கு அழகாக தெரிகிறான்?”

“ஏன் அவனைப் பற்றிய எண்ணங்கள் மட்டும் என் மனதில் வழிந்து ஓடுகின்றன?”
என பல யோசனைகள் எனக்குள். . . .

அந்த யோசனைகளுக்கு நடுவிலும் இந்த பாதை இப்படியே முடியாமல் தொடர வேண்டும் என என் மனதில் கடவுளைப் பிராத்தனை செய்ததுக் கொண்டிருந்தேன் !!! என் வேண்டுதல் முடியும் முன்னரே நாங்கள் எங்கள் வீட்டை நெருங்கி வந்துவிட்டோம்!!! அவன் என் கைகளை பிடித்து இழுத்து எங்கள் பயணத்தை முடித்தான். .

“பை”

என்ற ஒரு வார்த்தையை அவனிடம் சொல்ல எனக்கு வாய் வரவே இல்லை. . மௌனமாகி நான் நிற்க அவனும் என்னிடம் எதுவும் பேசாமல் என் கைகளை விட்டு பின்னோக்கி நகர்ந்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான். .

நான் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். . ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. .

“நண்பர்கள் என்ற எல்லையை நாங்கள் கடந்துவிட்டோம் என்று. ..!!!”

11

வார இறுதி நாட்களோடு சேர்த்து எங்களுக்கு அப்போது 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. . எங்கள் வகுப்பு நண்பர்ரள் மகாபலிபுரத்திற்கு ஒரு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தனர். .

ஞாயிற்றுக்கிழமை செல்வதாக முடிவு எடுக்கப்பட்டு வகுப்பில் உள்ள அனைவருக்கும் தகவல் கொடுத்தனர். . அதனால் இந்த தகவலை அஷ்வினிடம் சொல்ல சனிக்கிழமை இரவு நான் அஷ்வினுக்கு கால் செய்தேன். .

இரண்டு ரிங் சென்ற பிறகு அழைப்பை ஏற்றுப் பேசினான். .

“ஹலோ சொல்லு கீர்த்தி!!!”

“என்ன பண்ணிகிட்டு இருக்க அஷ்வின்?”

“இப்ப தான் அப்பா அம்மாவோட டின்னர் சாப்டு முடிச்சேன் நௌவ் மொட்ட மாடியில இருக்கேன்!!! ஆமா நீ சாப்டியா?”

“இன்னும் இல்ல இனிமே தான்!!! அஷ்வின் நாங்க நாளைக்கு மஹாபலிபுரம் போறதா ப்ளான் பண்ணி இருக்கோம்!!!”

“ஓ அப்டியா சரி பாத்து பத்திரமா போ !!!! எனக்கு டெக்ஸ்ட் பண்ணிட்டே இரு அன்ட் சீக்கிரமா வீட்டுக்கு ரிடர்ன் போ டோன்ட் டிலே!!!”

“ம்ம் கண்டிப்பா அஷ்வின். . இதுதான் பர்ஸ்ட் டைம் நாங்க மொத்த க்ளாஸ்சும் சேர்ந்து ஒரு ட்ரிப் போறது!!! இதுவரைக்கும் இப்டி போனதே கெடையாது!!!”

“வாட் க்ளாஸ் ஆ? அப்போ நீ உன் ப்ரெண்ட்ஸ் கூட போகலையா?”

“இல்ல இல்ல க்ளாஸ் ல இருக்க 65 பேரும் போறோம்!!!”

“யாரு இந்த ப்ளான் போட்டது? என்ன திடீர்னு?”

“ஷக்தி தான் இந்த ப்ளான் போட்டான்.. . . அடுத்த வருஷம் நாமெல்லாம் ப்ராஜக்ட் வொர்க்ல பிசி ஆகிருவோம்ல
அதனால தான்!!!

“வேணாம் கீர்த்தி நீ போகாத!!!!! நான் உங்கிட்ட அன்னிக்கே சொன்னேன் அவன்கிட்ட பேசாத அவாய்ட் பண்ணுனு . .. பட் நீ இன்னும் அவனோட பேசிகிட்டு தான் இருக்கியா!!!”

“நான் பேசறது இல்ல அஷ்வின். . அவன் காமனா எல்லா கேர்ள்ஸ்சும் வரணும்னு தான் சொன்னான். . என்ன மட்டும் வானு கூப்பிடல!!!
அன்ட் அஷ்வின் அவன் எல்லாத்தையும் மறந்துட்டான் சோ டோன்ட் வொறியா!!!”

“ஓ அப்டியா!!!! இப்ப அவன் உன்ன அவனோட தங்கச்சியாவா நெனக்கிறான்?
இல்ல உங்கிட்ட சொன்னான நான் எல்லாத்தையும் மறந்துடறேன் கீர்த்தினு!!! நீ பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல கீரத்தி!!! ஏன் மாசத்துல ஒரு வீக் என்ட் கூட உன்னால வீட்ல இருக்க முடியாதா?”
அவன் பயங்கரமாக கத்தினான். .

“ஏன் அஷ்வின் இப்டியெல்லாம் பேசற? நான் ஒன்னும் ஷக்தி கூட டேட்டிங் போறதுக்காக போகல ஓகே. . !! ஹோல் க்ளாஸே போகுது நான் மட்டும் எப்டி அஷ்வின் போகாம இருக்க முடியும்? உன் க்ளாஸ் இந்த மாதிரி ட்ரிப் போகும் போது நீ மட்டும் இப்டி போகாம தனியா இருப்பியா அஷ்வின்?”

“நீ போறது எனக்கு பிடிக்கல கீர்த்தி அப்பறம் உன் இஷ்டம்!!!”

“சரி நான் போகல . . . .போதுமா!!! நான் இப்போ பேசற மூட்ல இல்ல பை !!!”
என காலை வேகமாக கட் செய்தேன். .ஆனால் அவன் தொடர்ந்து எனக்கு கால் செய்து கொண்டே இருந்தான் . . நான் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தூங்கிவிட்டேன். .

காலை 6 மணிக்கு யாரோ ஒரு தெரிந்த குரல் என்னை எழுப்ப நான் அரை தூக்கத்தில் எழுந்து பார்த்தேன் அது ரேணு!!!

“நேத்து நைட்ல இருந்து உனக்கு எத்தன தடவ கால் ட்ரை பண்ணேன் தெரியுமா ஏன்டி ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க?”

“சாரிடி சார்ஜ் இல்லனு நெனக்கிறேன்!!”

அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு

ஓகே சீக்கிரம் எழுந்து ரெடி ஆகு!!! நேத்து நைட் அஷ்வின் கால் பண்ணி இருந்தான் அவனும் நம்மளோட டூர் வரானாம்!!!

“அஷ்வினா? அவன் நேட்டிவ்கு போயிருக்கானே அவன் எப்டி வருவான்?”

“அதெல்லாம்எனக்கு தெரியாது நேத்து நைட் அவன் எனக்கு கால் பண்ணி அவனும் நமளோட வரதா சொன்னான்!!!! அவ்ளோதான் எனக்கு தெரியும் மத்த டீடெயில்ஸ்லாம் நீ கால் பண்ணி கேட்டுக்க!!”

ரேணு என்னை ரெடியாக சொல்லிவிட்டு வெளியே என் அம்மாவுடன் பேச சென்றுவிட்டாள். . நான் அஷ்வினுக்கு கால் செய்தேன். .. . அவன் என் அழைப்பை ஏற்று கோபத்தோடு பேசினான். . .

“இப்போ எதுக்கு கால் பண்ண?”

“நான் தான் ட்ரிப் கு போகலன்னு சொல்லிட்டேனே அப்பறம் எதுக்கு நீ வர? சோ எம்மேல உனக்கு சந்தேகம். .. போகமாட்டேனு சொல்லிட்டு எங்க போயிருவேனோ னு அப்டித்தான. . .!!!”

என நானும் கோபத்துடனே பேசினேன் . . .

“ஏன் இப்படி எல்லாம் பேசற கீர்த்தி? நீ தான சொன்ன பர்ஸ்ட் டைம் எல்லாரும் சேர்ந்து போறோம் னு. . .உன்னோட குட் டைம் என்னால கெட வேணாம் னு நெனச்சேன். . . . அதே நேரம் அந்த ஷக்தியும் உன்னோட வர்றது எனக்கு ஒரு மாதிரி இருக்கு. . . அதனால தான் நான் வரேன். .. மத்தபடி உன்ன நான் எந்த தொல்லையும் பண்ண மாட்டேன். . நீ உன் பிரெண்ட்ஸ் கூட ஹேப்பியா என்ஜாய் பண்ணு நான் விஜய் கேங்க் கூட இருந்துப்பேன். .. !!!”

“எப்போ கெளம்பி இங்க வந்த நீ?”

“நேத்து நீ கால் கட் பண்ணது கொஞ்ச நேரம் உனக்கு மறுபடியும் கால் ட்ரை பண்ணிட்டு இருந்தேன் . . .பட் நீ சுவிட்ச் ஆப் பண்ணிட்ட. . . எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. . அதான் அம்மா அப்பா கிட்ட ப்ரெண்டுக்கு ஆக்சிடன்ட் அவன பாக்க போறேன்னு பொய் சொல்லிட்டு வந்துட்டேன்!!!

அவனது அமைதியான அந்த பேச்சு என் கோபத்தை சற்றே குறைத்து . . பின் சில மணி நேரங்களில் எங்கள் பயணம் துவங்கியது பஸ்ஸில் அஷ்வினும் நானும் எங்கள் கோபத்தை மறந்து பல முறை ஒருவரை ஒருவர் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தோம். . .

நான் கடலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதும் என் தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் போதும் அவன் என்னை சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டு இருந்தான். . . கோபத்துடன் கிளம்பிய நாங்கள் மீண்டும் வீடு திரும்பும் போது எங்கள் சண்டையை மறந்து மகிழ்ச்சியாக திரும்பினோம். . . .

சில நாட்களுக்கு பின் எங்கள் கல்லூரியில் ஒரு நேஷனல் கன்பிரன்சுக்கு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது . . எல்லா கல்லூரி களும் அதில் பங்கு பெற எங்கள் கல்லூரிக்கு வருகை புரிந்தனர் . . நான் கான்பிரன்சில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவிகளின் பெயர்களை ரெஜிஸ்டர் செய்யும் பணியில் இருந்தேன். .

கல்லூரியின் ஆணைப்படி பணியில் ஈடு பட்டிருந்த அனைவரும் புடவையில் வந்து இருந்தோம். . .நான் அப்போது மயிலின் நீல நிறத்தில் ஒரு புடவையை அணிந்து வந்திருந்தேன். . . இந்த 20 வயதில் இது வரை நான் யார் கண்களுக்கும் அழகாக தெரிய வேண்டும் என்று நினைத்ததே இல்லை. .

ஆனால் முதல் முறையாக அஷ்வின் என்னை பார்த்து அசந்து போக வேண்டும் அவன் கண்களுக்கு நான் அழகாக தெரிய வேண்டும் என்று விரும்பி பல வித ஒப்பனைகளையும் ஆடம்பரமான அலங்காரங்களையும் செய்து கொண்டு அஷ்வினுக்காக காத்திருந்தேன். .அவன் தான் என்னை முதலில் பார்க்க வேண்டு என்று மிகவும் விரும்பினேன். . என் கண்கள் அவனை மட்டுமே தேடிக்கொண்டு இருந்ததன. . .

நான் அவனுக்கு

“எங்கே இருக்கிறாய்?

“என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

என பல மெசேஜ் களை அனுப்பியும் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. . . எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது ஆனால் அவன் வரவே இல்லை. . கோபத்தில் நான் மெசேஜ் செய்வதை நிறுத்திக் கொண்டேன். . .

ஒரு மணி நேரத்திற்கு பின்பு அவன் அந்த இடத்திற்கு வந்து என் அருகில் நின்றான். .. நான் அவனிடம் ஏதும் பேச வில்லை. . அவன் நான் இருந்த இடத்தையே சுற்றிக்கொண்டு இருந்தான். . . . அதுமட்டும் இல்லாமல் என்னையே தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். . . .நானும் அவன் என்னை தவிர்த்து மற்ற இடத்தைப் பார்க்கும் அந்த சிறு இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு அந்த நேரத்தில் அவனை பார்த்தேன். .

அவன் சட்டென்று என்னை திரும்பி பார்த்தால் நான் அவனை பார்க்காதவள் போல வேறு பக்கம் பார்பேன். . .ஒரு கட்டத்தில் அவன் என் அருகே வந்து என்னிடம் பேசினான். .

“ஹாய் கீர்த்தி!!!! நான் இப்போ தான் உன் மெசேஜஸ் பாத்தேன். ”

நான் அவனுக்கு எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாகவே இருந்தேன். .

“ஹே ஏன் என்கிட்டே பேச மாட்டேங்குற. .?”

“இங்க பாரு கீர்த்தி ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு . !!!. மேத்ஸ் கிளாஸ் போயிட்டு இருந்துச்சு கீர்த்தி அதான் என்னால ரிப்ளை பண்ண முடியல ஐ அம் சாரி. . .!!!”

“என்கிட்ட பேசு கீர்த்தி அம் சாரி !!!”

என அவன் என்னையே சுற்றிக்கொண்டு என்னுடன் தொடர்து பேசிக்கொண்டே இருந்தான். . .

ஆனால் நான் அவனிடம் பேசவில்லை காரணம் அவன் என்னிடம் இவ்வாறு கெஞ்சி கெஞ்சி கொஞ்சி பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். . ஏன் என்றால் அது அடிக்கடி நடப்பதில்லை எப்பவாவது தான் நடக்கும் . . அதனால் முடிந்த அளவிற்கு அவனை அவ்வாறு பேச விடுவேன். . .

ஒரு பத்து நிமிடங்கள் இப்படியே என்னிடம் பேசிக்கொண்டே இருந்தான் நான் அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேச வில்லை. . அதன் பிறகு அவன் எனக்கு எதிரே சென்று அமர்ந்துக் கொண்டு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தான். .

“சோ என்னோட பேச மாட்டல?”

“ஓவரா பண்ணாத கீர்த்தி. .!!!”

“நெஜமா நான் மொபைல் பாக்கல பேக்ல போட்டு கிளாஸ் தான் கவனிச்சுகிட்டு இருந்தேன் நம்பு கீர்த்தி. . !!”

“என்ன கோவ படுத்தாத!!”

அவன் எனக்கு எதிரில் அமர்ந்து என்னையே பார்த்து கொண்டு மெசேஜ் செய்து கொண்டிருந்தான் . . .ஆனால் நான் அவனை பார்க்கவே இல்லை. .அதுவும் அவனை வெறுப்பாக்கியது. .

“ஹே என்ன பாக்க கூட மாட்டியா நீ?”

“வா வந்து என் பக்கத்துல உக்காரு ப்ளீஸ். . .!!”

“உனக்காக நான் என்ன வேணும் நாலும் பண்ணுவேன் கீர்த்தி என்ன நம்பு தயவுசெஞ்சி. . மெசேஜ் கு ரிப்ளை பண்ணு . .. !!”

இப்போது நான் ரிப்ளை செய்ய வேண்டிய நேரம் என புரிந்து கொண்டு நான் அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்பினேன் . .

என் மெசேஜ் ஐ புன்னகை செய்து கொண்டே அவன் திறந்து பார்த்தான். .
எங்களுக்குள்ளே நடந்த மெசேஜ் உரையாடல் . .

“சோ எனக்காக என்ன வேணும் நாலும் பண்ணுவ ல?”

“கண்டிப்பா பண்ணுவேன் கீர்த்தி பிலிவ் மீ!!!”

“அப்போ இந்த வீக் என்ட் நாம ரெண்டு பெரும் அனிமேஷன் மூவிக்கு போறோம் ஓகே”

அனிமேஷன் மூவி என்றால் அவனுக்கு பிடிக்காது ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். . . அதனால் தான் அவனிடம் அனிமேஷன் படத்திற்கு போகலாம் என்று கேட்டேன். . இல்லை இல்லை கட்டளை இட்டேன். . .

அவனும்

“ஓகே போலாம்!!!”
என பதில் அனுப்பினான். .

“அப்பறம் நீ உன்னோட ஸ்மோகிங் அண்ட் டிரிங்கிங் ஹேபிட் ரெண்டையும் விடனும். !!”

“ஓகே நான் ட்ரை பண்றேன். .!!”

“ட்ரை எல்லாம் கெடையாது ஜஸ்ட் எஸ் ஆர் நோ ஒரே பதில் சொல்லு. . !!”

“ஹே கண்டிப்பா நான் ட்ரை பண்றேன் கீர்த்தி. . ஒரே நாள் ல எல்லாம் விட்டுற முடியாது . . .அது கொஞ்சம் கஷ்டம். . . . பட் கொஞ்ச கொஞ்சமா நான் கொறச்சி முழுசா விட்டுடுறேன். . .!!!”

“நான் சமாதானம் ஆகி விட்டு அவனை ப் பார்த்து சிரித்தேன். . நான் சமாதானம் ஆகி விட்டேன் என்று தெரிந்ததும் அவனும் சிரித்துக் கொண்டே அவன் வேலையைப் பார்க்க சென்று விட்டான். . நானும் என் வேலையில் பிஸி ஆகி விட்டேன். . .!!!”

தொடரும். . .

அன்று கல்லூரியில் நிகழ்ச்சி முடிய நேரம் மாலை 6 ஆகிவிட்டது. . . ஒரு கட்டத்தில் . .. கையை கவனித்த போது தான் என் கையில் நான் கட்டி இருந்த என்னுடைய பிரேஸ்லெட் காணமல் போயிருந்தது எனக்கு தெரிந்தது. . பங்ஷன் முடிய சில மணி நேரத்திற்கு முன்பாக நான் ரெஸ்ட்ரூம் சென்று கையில் இருந்த என் பிரேஸ்லெட் ஐ கழட்டி வைத்து விட்டு என் முகத்தை கழுவி ரெப்ரெஷ் ஆனது என் நினைவிற்கு வரவே பதறி அடித்து கொண்டு ரெஸ்ட் ரூமிற்கு சென்று தேடினேன் . .

ஆனால் அங்கும் என் பிரேஸ்லெட் இல்லை. . அது தொலைந்து விட்டது. இல்லை இல்லை நானே என் கவனக்குறைவால் தொலைத்து விட்டேன். . என் பிறந்த நாளுக்காக என் தந்தை முதல் முதலாக எனக்காக வாங்கி கொடுத்த பரிசு அந்த பிரேஸ்லெட். . 17 ஆண்டுகளாக நான் தவறவிட்ட என் தந்தையின் அன்பை ஈடு செய்யும் ஒரு பொக்கிஷமாக அந்த பிரேஸ்லெட் எனக்கு தெரிந்தது. .

இன்று அதை தொலைத்து விட்டு நிற்கிறேன். . . கண்களில் கண்ணீர் முட்டியது. அழுகை ஆற்றுவெள்ளமாக பெருக்கெடுத்தது. . . நான் அழ என் தோழிகள் என்னை சமாதனம் செய்ய ஆரம்பித்தனர். . ஆனால் எனக்கு அழுகை நின்ற பாடு இல்லை. . . . .நான் அழுது கொண்டு இருப்பதை அஷ்வின் பார்த்து கொண்டே என் அருகில் நின்றுக் கொண்டு இருந்தான். . .

பதினைந்து நிமிடம் கழித்து என் அழுகை நின்றது. . அப்போது தான் என்னை சுற்றி அத்தனை பேர் நின்று கொண்டு இருந்ததை நான் கவனித்தேன். .ஆனால் அப்போது அங்கு அஷ்வின் இல்லை. . என் அழுகை தான் நின்றதே தவிர என் சோகம் மறையவில்லை. . நான் ஹாஸ்டலில் ரேணு வின் ரூமிற்கு சென்று முகத்தை கழுவி வீட்டிற்கு கிளம்ப எண்ணி ரெடி ஆகி கொண்டு இருந்தேன் சோகமாக. . அப்போது ரேணு

“அஷ்வின் கால் பண்ணி இருக்கான். . . .
உங்கிட்ட பேசனுமாம் !!!!”

என்று மொபைலை என்னிடம் கொடுத்தாள். . .

“சொல்லு ”
என நான் கேட்க

அவன்
“நீ ஹாஸ்டல் லையே தங்க போறியா என்ன. . . . ? ”

“இல்ல வீட்டுக்கு போகணும். .!!!”

“சரி சீக்கிரம் கெளம்பு!!!! இப்பவே டைம் 7 ஆச்சு. . எப்ப வீட்டுக்கு போயி சேரலாம் னு இருக்க நீ? ”
என கோபமாக கேட்டான். . .

என் துக்கம் தெரியாமல் அவன் என்னிடம் அவ்வாறு கோபமாக பேசியது எனக்கும் அவன் மீது கோபத்தையே வரவைத்தது. …

“ப்ளீஸ் அஷ்வின் ஏற்கனவே நான் வொர்ஸ்ட் மூட் ல இருக்கேன் என்ன கோவ படுத்தாத. . . நான் வீட்டுக்கு தான் கெளம்பிட்டு இருக்கேன். . என்னும் 5 மினிட்ஸ் ல இங்க இருந்து கெளம்பிருவேன் போதுமா?!!”

“உன்ன தனியா அனுப்ப எனக்கு மனசு இல்ல. . சரி நீ கீழ வா நான் அரவிந்த் பைக் ல உன்ன ட்ராப் பண்றேன். . !!!”

“எனக்கு தனியா போக தெரியும் அஷ்வின் . . .!!! ”

“நான் கீழ வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்!!! நீ வர அவ்ளோ தான் பை !!!”
என அவன் அழைப்பை வேகமாக துண்டித்தான். . .

நான் என் தோழிகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். .

அஷ்வின் ஹாஸ்டலின் அருகிலே நின்று கொண்டு இருந்தான். . நான் வேகமாக அவனை பார்த்தும் பார்க்காதது போல நடந்து செல்ல அவன் என் பின்னாலே வந்து கொண்டு இருந்தான். . .எனக்கு விருப்பமான பேஸ்கட் பால் கிரௌண்ட் வந்தது. .அப்போது அஷ்வின் என்னை அழைத்தான். . .

“கீர்த்தி. .!!!”

நான் அவனை திரும்பி பார்த்தேன். . .

“நாம அங்க கொஞ்ச நேரம் உக்காரலாமா ப்ளீஸ். . .!!!!”
என அங்கிருந்த ஒரு பெஞ்சை குறிப்பிட்டு கேட்டான். .

பிறகு நாங்கள் இருவரும் அங்கு சென்று அமர்ந்தோம். . .

“நீ அழறத முதல் தடவையா பாக்குறேன் கீர்த்தி. . .உன்ன இந்த மாதிரி என்னால பாக்கவே முடியல. . .டோன்ட் வொரி உனக்கு கண்டிப்பா உன்னோட பிரேஸ்லெட் கெடைக்கும் கவலை படாத ஓகே. .!!!”

நான் தலையை கீழ போட்டு கொண்டு கலங்கிய கண்களுடனே தலையை ஆட்டினேன். . ..

அவன் முதல் முறையாக என் கைகளை தொட்டு அவன் கைகளோடு கோர்த்துக் கொண்டான். . .அந்த நேரம் நானும் அவன் தோளின் மீது சாய்ந்து கொள்ள அந்த நொடியில் நான் வெகு காலமாக கிடைக்க எண்ணி ஏங்கி கொண்டிருந்த ஏதோ ஒன்று எனக்கு கிடைத்த உணர்வு . .

என் கண்ணீர் துளிகளால் அவன் சட்டை நனைந்து கொண்டு இருந்தது. . அதற்கு மேல் அவனால் என் அழுகையை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை . .அவன் பேச ஆரம்பித்தான் .. . அவன் தோள்களின் மீது நான் சாய்ந்து கொண்டிருக்க அவன் என் தலையோடு அவன் தலையை சேர்த்து செல்லமாய் மெதுவாக இடித்துகொண்டே கேட்டான். .

“ஹிம்ம்ம் . .. என் கீர்த்திய சிரிக்க வைக்கறதுக்காக நான் என்ன பண்றது ?”
என யோசித்துக்கொண்டே அவன் தலையை இப்படியும் அப்படியும் அசைக்க அதனால் என் தலையும் அசைந்தது. .. .

நான் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தேன். . .

“நீ எதுக்காகவும் பீல் பண்ண கூடாது கீர்த்தி. . . உனக்கு தேவையானத விட அதிகமான சந்தோஷத்த நான் குடுப்பேன். . .நான் இருக்கும் போது நீ எதுக்கு அழற!!!!”
என மெதுவான குரலில் கவிதையாய் பேசினான். . .

நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். .
“எந்த மூவி ல இருந்து காப்பி அடிச்ச இந்த டயலாக்க. . .!!!”

அவன் செல்லமான கோபத்துடன்

“ஹே இது என்னோட சொந்த வார்த்த. . உனக்க்கவே யோசிச்சது. . .!!!”
என சொல்லி கொண்டே என் கைகளை பிடித்து சில்வரில் ஆனா ஒரு பிரேஸ்லெட்டை என் கையில் போட்டு விட்டு என் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டே

“இது உனக்கு பிடிச்சு இருக்கா கீர்த்தி ?”
என கேட்டான். .

“என்ன அஷ்வின் இது எதுக்காக இத வாங்கின?”

“இந்த சில்வர் பிரேஸ்லெட் உங்க அப்பா உனக்கு வங்கி குடுத்த கோல்ட் பிரேஸ்லெட் கு ஈடு ஆகாது தான். . பட் கொஞ்ச டேஸ் பொறுத்துக்கோ . .. நான் என்னோட பர்ஸ்ட் சேலரி வாங்கின உடனே நீ மிஸ் பண்ண அதே ப்ரேஸ்லெட்ட உனக்கு நான் வாங்கி தரேன். . .அதுவரைக்கும் இந்த பிரேஸ்லெட் உன் கையிலேயே இருக்கட்டும் ஓகே. . . .!!!”

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை வார்த்தைகள் பேச முடியாத ஊமை ஆகி நின்றேன் அவனது அன்பில். .. . அந்த தருணம் எனக்கு
அவனை கட்டி பிடித்து கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. . .
பிடித்து கொண்டு இருந்த என் கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டே

“நீ சேரில இன்னைக்கு ரொம்ப அழகா இருந்த கீர்த்தி. .!!!”
என அழகான அவனது சிரிப்புடன் சொல்ல அவனிடம் இருந்து எனக்கு கிடைத்த முதல் ரசனையான வார்த்தை அது. .

வெட்கம் என்னை சூழ நான் அவன் தோள்களில் என் முகத்தை புதைத்து கொண்டேன். . .

“நான் ஏன் அழனும் என்னோட எல்லா சந்தோஷமும் என்னோட கையில இருக்கும் போது நான் ஏன் அழனும் ?”
என என் மனதையே கேட்டு கொண்டு மௌனமாக பேசிக் கொண்டு இருந்தேன். . .

அவனுடனான இந்த நெருக்கம் அவனுடைய இந்த பாசம் அன்பு அக்கறை என் வாழ்வின் இறுதி வரையில் வேண்டும் என்று ஆசை கொண்டேன். . என்னுடைய எல்லா ஏற்றங்களுக்கும் இறக்கங்களுக்கும் அவன் என்னுடன் இருக்க வேண்டும் மொத்தத்தில் என் உலகத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருந்து என்னை ஆள வேண்டும் . . .

என்னுடைய காதலை உணர வைத்து என்னை மேலும் அழகாக்கியவன். . நான் என்ன செய்தாலும் அதை ரசிப்பவன். . . என் கண்ணீரை கண்டு துடிப்பவன். . என்னை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது என்று நினைப்பவன் அவன் தான் என் அஷ்வின். . .

அஷ்வின் இது வரை என்னிடம் எதையும் வெளிப்படியாக சொன்னது கிடையாது. . ஆனால் எனக்கு நன்றாகவே புரிகிறது நான் இருந்தால் அவனுக்கு நேரம் போவதே தெரியாது. . .என்னை எனக்கு தெரியாமலே ரசித்து கொண்டு என்னை அவன் அன்பால் நனைய வைத்து கொண்டு இருக்கிறான். ..

அவனுக்கு நான் எப்போதும் அவனுடனே இருக்க வேண்டும் அவன் இதை வாய் விட்டு தான் சொல்லவில்லை. . .மற்றபடி அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனது எண்ணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. .

இப்போதும் அவன் என்னை காதலிக்கிறானா இல்லையா என்பது எனக்கு
தெரியாது ஆனால் நான் அவன் மீதான காதலில் என்னையே தொலைத்து விட்டு நிற்கிறேன். .. ஆம் அவனை நான் பைத்தியக்காரத் தனமாக காதலிக்கிறேன் என்பதை அன்று புரிந்து கொண்டேன். . .அவன் என்னுள் மிகவும் ஆழமாக சென்று விட்டான். ..

“லவ் யு அஷ்வின். . .”

என நான் மெதுவாக எனக்குளே சொல்லிகொண்டேன். ..

பிறகு சரியாக 8 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 9 மணிக்கெலாம் அவன் என்னை பத்திரமாக என் வீடு வரை கொண்டு வந்து விட்டு பிரியா விடை பெற்றான். ..

12th episode

ஒருநாள் நான் அஷ்வின் மீதான என் காதலைப் பற்றி ரேணு விடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். . . அப்போது

“எனக்கு அப்பவே தெரியும் டி. . . கேடி. . .. ஒரு நாள் நீ இப்டி தான் சொல்லிக்கிட்டு வந்து நிப்பனு. . . ”
என அவள் என்னை கலாய்க்க ஆரம்பித்தாள். ..

“ஹே போதும் டி டீஸ் பண்ணது. . . சொல்லு நான் அவன் கிட்ட என்னோட லவ்வ சொல்லிரட்டுமா ரேணு. . .!!!!! எவ்ளோ டேஸ் தான் எனக்குள்ளயே வச்சுக்கறது . .. ஒவ்வொரு நிமிஷமும் அவன பாக்கும் போதெல்லாம் சொல்லிரணும் னு தோணுது ரேணு. . .!!!”

“அவசரப் படாத கீர்த்தி!!!! . . . ஒரு வேள நீ சொல்லி உன்னோட லவ்வ அவன் ஏத்துக்காம போயிட்டானா நீ என்ன பண்ணுவ?”

“ஹே என்னடி ஆச்சு உனக்கு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே இப்டி நெகடிவா பேசற ? ”
என நான் சோகம் ஆனேன். .

“லூசு கீர்த்தி. .. அவனுக்கு உன்ன பிடிக்கும் உம்மேல ரொம்ப கேர் ஆ இருக்கான் ஓகே பட் இதெல்லாம் வச்சு நீ லவ் னு உன் இஷ்டப்படி முடிவுக்கு வர கூடாது . . ஒரு வேள நீ அப்டி உன்னோட லவ்வ சொல்லும்போது இல்ல கீர்த்தி நான் உன்னோட அந்த இன்டென்ஷன் ல பழகல னு அவன் சொல்லிட்டான்னா அத உன்னால அச்செப்ட் பண்ணிக்க முடியுமா? முடியாது ல. . !!!!”

“சரி இப்போ நான் என்ன தான் பண்றது. . . ”

“அதுக்கு தான் சொல்றேன் . .இதுல அவசரபடாத. . . காலேஜ் முடுஞ்சி உங்களுக்குனு ஒரு ஜாப் ல பர்ஸ்ட் செட் ஆகிட்டு அப்புறம் இத பத்தி பேசு. . .அது வரைக்கும் இன்னும் அவனோட க்ளோசா பழகு. . .அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கோ ஓகே. . .”

“ம்ம்ம்மம்மம்ம்ம்ம்”

“குட் கேர்ள் . ..”

“ரேணு!!!”

“சொல்லு கீர்த்தி”

“அஷ்வின் என்னோட லவ்வ ஏத்துப்பான் ல. ..?”

“உன் லவ்வ வேணாம் னு சொல்ல எந்த பாய் கும் மனசு வராது கீர்த்தி . . . அஷ்வினுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் . .. அவனுக்கு பெர்பெக்ட் மேட்ச் நீ தான் கீர்த்தி. . . அது அவனுக்கும் நல்லா தெரியும் சோ அவன் கண்டிப்பா உன்ன ஏத்துப்பான். .. இதுக்கு அப்பறம் அவன் உன்ன வெறும் ப்ரெண்டா பாக்றானா இல்ல அவனோட லைப் பார்ட்னரா பாக்குறானா னு தெரிஞ்சிக்க ட்ரை பண்ணு சரியா. .இனிமே அதான் உன் வேல. . .!!!”

நானும்
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
என தலையாட்டினேன். .

ரேணு சொல்வது எனக்கும் நியாயமாகவே பட்டது. . .. அதனால் அவன் மனதில் நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்ட பிறகு அவன் மீதான என்னுடைய காதலை அவனுக்கு தெரிவிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தேன். ..

நாட்கள் செல்ல செல்ல அவன் என் மீது அதிகமான அக்கறையையும் அன்பையும் காட்டினான். . .எப்போதும் அஷ்வின் என்னுடைய பாதுகாப்பை பற்றியே யோசிப்பான். .நான் எங்காவது செல்கிறேன் என்றால் குறைந்தது இருபது முறையாவது டேக் கேர் சொல்லி அனுப்பி வைப்பான். .. நான் பத்திரமாக வீட்டிற்கு சென்று சேரும் வரை என்னிடம் எங்கே இருக்கிறாய் என விசாரித்து கொண்டே இருப்பான். . .

சில நேரங்களில் இதற்காகவே எங்களுக்குள் சண்டை வருவதும் உண்டு. . . .அவனுக்கு என்மீது இருந்த அந்த அதிகமான பொசசிவ்நெஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. . நான் சாதரணமாக எந்த பையனிடமும் பேசினால் கூட அவனது முகம் வேறு கோணத்திற்கு போய்விடும் . . . .

கல்லூரியின் எங்களது இறுதி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே நான் முழுவதுமாக அவனுடைய ஆளுமையின் கீழ் வந்து விட்டேன். . .கடைசி வருடம் என்பதால் படிப்பில் மட்டும் இல்லாமல் வேலைக்காண கேம்ப்பஸ் இண்டர்வியூ விற்கும் எங்களது தயாரிப்புகள் இருந்ததால் கல்லூரி நேரங்களில் எங்களால் அதிகமாக சந்தித்து கொள்ள முடியவில்லை. . .அதனால் கல்லூரி முடிந்த பிறகு சில மணி நேரங்கள் நாங்கள் சந்தித்து பேசிவிட்டு தான் செல்வோம். . .

நான் வீடிற்கு செல்வதற்கே மணி இரவு 8 மணி ஆகி விடும். . .அதனால் நான் என் அம்மா அப்பாவிடம் நானும் ரேணு வும் கேம்பஸ் இன்டர்வியூவிற்காக ப்ராக்டிஸ் எடுப்பதாக பொய் சொல்ல வேண்டிய கட்டாயம். . . ஆகையால் வீட்டில் என்னை அம்மாவும் அப்பாவும் ஏதும் கேட்பதில்லை. . . எவ்வளவு நேரம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தாலும் அஷ்வின் என் வீடு வரை வந்து என்னை விட்டு விட்டு தான் செல்வான். ..

நான் அஷ்வினுடன் நெருங்க நெருங்க என்னுடைய பள்ளி தோழமைகளையும் என்னுடைய மற்ற கல்லூரி நட்புகளையும் ஒதுக்க வேண்டியதாகிவிட்டது. .. . நான் வேண்டும் என்றே ஒதுக்க வில்லை எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் நான் அஷ்வினுடனே கழிப்பதால் என்னால் மற்ற நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை . . .

அதனால் அவர்கள் அனைவரும் என் மேல் சிறு வருத்தத்தில் இருந்தனர். . நான் மெசேஜ் மற்றும் கால் இரண்டிலும் தொடர்பில் இருக்கும் ஒரே நபர் என்றால் அது அஷ்வின் மட்டும் தான். .

நான் மற்ற ஆண் நண்பர்களை பற்றி பேசுவது கூட அவனுக்கு பிடிக்காது. . அதே சமயம் அவன் என்னோடு இருக்கையில் நான் அவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பான் . .அவனோடு இருக்கும் அந்த சமயத்தில் நான் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்தாலோ அல்லது செல்லில் யாருக்காவது மெசேஜ் செய்து கொண்டு இருந்தாலோ அவன் டென்ஷனாகி விடுவான். . .

வேலை செய்து கொண்டு இருந்தால் அதை அவனே கலைத்து விடுவான். மெசேஜ் செய்து கொண்டு இருந்தால் என் மொபைலை வாங்கி அவன் பாக்கெட்டுக்குள் வைத்து கொள்வான். . .

எங்கள் வகுப்பில் கேம்பஸ் இன்டர்வியூ பற்றிய தகவல் களுக்காகவும் அதை பற்றிய மற்ற கருத்துக்களை எல்லாருக்கும் தெரிவிக்கவும் இரண்டு பேரை பொறுப்பாக தேர்வு செய்தார் எங்கள் வகுப்பு கோ – ஆர்டினேட்டர். . அவர் தேர்வு செய்த அந்த இரண்டு பேர் யார் தெரியுமா?

நானும் ஷக்தியும் தான். . .

இவ்வாறு எங்கள் இருவரையும் பொறுப்பாக போட்டதால் நாங்கள் இருவரும் பல நேரங்களில் ஒன்றாக இருக்க வேண்டிய சூழ்நிலை அவ்வாறு நாங்கள் ஒன்றாக இருக்கும் சமயத்தில் ஷக்தி பல தடவை அவனது காதலை என்னிடம் வெளிபடுத்த நினைத்து என்னிடம் பேச வருவான். .அந்த சமயங்களில் எல்லாம் நான் அவனை திசை திருப்பி விட்டு பேச வரும் விஷயத்தையே மாற்றி விடுவேன்

ஒரு கட்டத்தில் நான் இவ்வாறு செய்வது எனக்கே சங்கடமாக இருந்தது காரணம் ஷக்தி மிகவும் நல்லவன். . அவன் இதுவரை எந்த பெண்களிடமும் தவறான எண்ணத்தில் பழகியது கிடையாது மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வான் அப்படி பட்டவனை ஏமாற்றவோ சங்கடபடுத்தவோ
விரும்பாமல் ருநாள் நான் அஷ்வின் மீதான என்னுடைய காதலை பற்றி அவனிடம் சொல்லிவிட்டேன். . .

அவன் ஆரம்பத்தில் மிகவும் வருத்தப்பட்டான். . பிறகு அவனே அவனை மாற்றிக் கொண்டு ஒரு நல்ல நண்பனாக இருப்பேன் என்ற உறுதியை எனக்கு கொடுக்கவே அப்போது தான் மனம் சற்று நிம்மதி அடைந்தது. . .

அஷ்வினுக்கு நான் ஷக்தியுடன் இருப்பது பிடிக்கவில்லை. . .அவன் என்னுடைய இஞ்சார்ஜ் பதவியை விட்டு விடும் படி பல தடவை கூறினான் . ஏன் சண்டை கூட போடுவான். . . . . அவன் சண்டைப்போடும் போதெல்லாம் பெரும் பாடு பட்டு அவனை சமாதானம் செய்வேன். . நான் சொல்லும் போது அமைதியாய் இருந்து விட்டு பிறகு மீண்டும் அவன் அதை பற்றியே பேசுவான்.

எங்கள் இருவருக்குமே காதல் மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டே போனது. . . காதல் மட்டும் அல்ல சில சமயங்களில் சண்டையும் தான். பொசசிவ்நெஸ் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தால் அங்கே சண்டையும் அதிகமாக தானே இருக்கும். . எங்களுக்கும் அப்படித்தான். .

அதுபோல எங்களுக்குள் சண்டை வரும்போதெல்லாம் முதலில் போனில்
கால் கட் செய்து சுவிட்ச் ஆப் செய்வது நானாக தான் இருப்பேன். .அதேநேரம் எப்போதும் சண்டையை ஆரம்பிப்பது அவனாக தான் இருப்பான். அவன் அவனது பொசசிவ்நெஸ் ஆல் என்னிடம் நிறைய விஷயங்களுக்காக வாக்கு வாதம் செய்வான். . .அந்த நேரங்களில் நான் என்ன சொன்னாலும் அவன் சமாதானம் ஆகவே மாட்டான். .

ஏன் அவனையே அவனால் கட்டுபடுத்த முடியாத அளவிற்கு பேசுவான். . இவ்வாறு நாங்கள் எவ்வளவு தான் வாக்கு வாதம் செய்தாலும் எவ்வளவு தான் சண்டைப் போட்டாலும் இரவு உறங்கும் முன்பாகவே சமாதானம் ஆகிக்கொள்வோம். . அஷ்வின் எப்பாடு பட்டாவது என்னை சமாதானம் செய்து விடுவான். . .

அவன் கோபத்தின் உச்சத்தில் இருந்தாலும் என் கண்ணீரை கண்டதும் அவன் கோபம் பனி போல உருகி காணமல் போய்விடும். .என்னை சமாதானம் செய்ய ஆரம்பித்து விடுவான். .. ஆரம்பத்தில் அவனை சமாதனம் செய்து எங்களின் சண்டையை நிறுத்தவே நான் அவ்வாறு அழுதுவிடுவேன் . . .

ஆனால் போக போக என்னுடைய அந்த அழுகை நிஜமானது. .. அவனது அக்கறையை அவனது பொசசிவ்நெஸ் பின்னுக்கு தள்ள ஆரம்பித்தால் நாளுக்கு நாள் எங்கள் சண்டைகள் அதிகமாக என் பொய்யான அழுகை நிஜமானது. ..

13th episode
அன்று சன்டே. . . என் தோழிகள் அனைவரும் சேர்ந்து ஷாப்பிங் மால் செல்ல விரும்பினர். .. அவர்கள் என்னையும் வரும்படி அழைக்க நான் அஷ்வினிடம் இதை பற்றி கூறி மெசேஜ் செய்தேன். . அவன் உடனே எனக்கு கால் செய்தான்.
“எப்போ மால் கு போற?”
“டுடே ஈவ்னிங்”
“போயிட்டு எப்போ ரிட்டன் வருவ?”
“எப்போ வருவன்னு தெரியல. . அவளுங்க போற பிளான் மட்டும் தான் சொன்னளுங்க. . . ரிட்டன் பிளான் பத்தி ஏதும் சொல்லல!!!”
“உன்னோட எல்லா ப்ரெண்ட்ஸ்ம் உன்னோட வறாங்களா?”
“ஆமா”
“அப்போ ஓகே நீ போயிட்டு வா!!! பட் எட்டு மணிக்கெலாம் வீட்டுக்கு வந்துரு அதுக்கு மேல டிலே பண்ணாத . .!!”
“என்ன விளையாடுறியா அஷ்வின்? நாங்க கெளம்புறதே ஈவ்னிங் தான். . . அவ்ளோ சீக்கிரம் எப்டி அஷ்வின் ரிட்டன் கெளம்பி வர முடியும். .. ?”
“அப்டினா மால் கு சீக்கிரம் கெளம்புங்க. .. சீக்கிரமா வீட்டுக்கு ரிட்டன் வந்துரலாம் ல. . ”
“என் ஒருத்திக்காக அவங்க மொத்த ப்ளான் ம் மாத்த முடியுமா அஷ்வின் . .. லூசு மாதிரி பேசாத. . .?”
“எப்பவும் ஏன் கீர்த்தி நீ இப்டியே பண்ற? நான் என்ன உன்ன போக கூடாதுனா சொல்றேன். . . வீட்டுக்கு லேட் நைட் வரதானு தான் சொல்றேன் இதுல என்ன தப்பு இருக்கு . . உன்னோட நல்லதுக்கு தான சொல்றேன். . .!!”
“எல்லாரும் என்னோட தான் இருக்காங்க அஷ்வின் சோ என்னோட சேப்டி பத்தி நீ கவலை படாத. . .!!”
“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறத பர்ஸ்ட் ஸ்டாப் பண்ணு. . உனக்கு உன் பிரெண்ட்ஸ் கூட போகணும் னு ஆசனா அத மார்னிங்கே போக வேண்டியது தான. . எப்பவும் நைட் ல ஊரு சுத்தினா தான் உங்களுக்கு வெளியில போயிட்டு வந்த மாதிரி இருக்கா? ”
“அஷ்வின் ப்ளீஸ் இப்டி எல்லாத்துக்கும் என்ன கொழந்த மாதிரி ட்ரீட் பண்றத பர்ஸ்ட் நீ ஸ்டாப் பண்ணு. .நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும் உன் அட்வைஸ் எனக்கு தேவ இல்ல. . .நான் நைட் 10 க்கு தான் வருவேன். .. ”
“சரி அட்லீஸ்ட் ஒரு 8.30 குள்ளயாச்சும் வீடு வந்து சேரு கீர்த்தி ”
“ஓகே நான் ட்ரை பண்றேன்”
“நான் உனக்கு 8.30 க்கு கால் பண்ணுவேன் நீ அப்போ வீட்ல இருக்கணும் . . இருக்குற !!! மைன்ட் இட்”
“எப்பவும் என்ன சந்தோஷமா எதையும் செய்யவே விட மாட்டியா அஷ்வின்?”
“ஆமா நீ சந்தோஷமா இருக்கறது எனக்கு பிடிக்கல அதனால தான் இப்டி உன்ன ரெஸ்ட்ரிக்ட் பண்றேன். . . நீ எப்போ கீர்த்தி நான் சொல்ல வரத ஒழுங்கா புரிஞ்சி கிட்டு இருக்க . நான் உன்னோட இருந்தா நீ மிட் நைட் ல கூட வீட்டுக்கு வா உனக்கு பாதுகப்பா நான் இருப்பேன். .பட் இப்டி பிரெண்ட்ஸ் கூட போயிட்டு லேட் நைட் வராத . .எல்லா நேரமும் நமக்கு ஃபேவரா இருக்கறது இல்ல கீர்த்தி . . .நாம தான் பாதுகாப்பா இருந்துக்கனும் !!!”
“எல்லாத்துக்கும் இதையே சொல்லி சொல்லி என்ன மூட் அவுட் பண்றதே உனக்கு வேலையா போச்சு ல. . ச்சே பை. .”
என நான் கால் கட் செய்து விட்டேன். .
எனக்கு தெரியும் அவன் என்னுடன் இருக்கையில் எனக்கு எதுவும் ஆகாது என்று. . .ஆனால் என் ஈகோ அவன் என்னுடன் இவ்வாறு வாதிடும் போது எனக்கு கோபத்தையே கொட்டி கொடுக்கிறது. . .நான் மிகவும் சுதந்திரமாக இருந்து பழகியவள். . பள்ளி வருவம் முடியும் வரை என்னை கேள்வி கேட்க யாருமே இல்ல. ..
நீ இப்படி தான் இருக்க வேண்டும் நீ இதை தான் செய்ய வேண்டும் என்று என்னை யாரும் அதிகாரம் செய்தது இல்லை. . .எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் நான் செய்வேன். .அதை கேள்வி கேட்கும் உரிமையை நான் யாருக்கும் தரவில்லை அப்படியெல்லாம் வாழ்ந்து பழகியவள் இப்போது அஷ்வின் என்னை அதிகாரம் செய்கையில் அதை என்னால் சட்டென்று ஏற்று கொள்ள முடியவில்லை. .
என் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளவும் முடியவில்லை. . .முடிந்த வரை நான் அவனுக்கு ஏற்ற மாதிரி போக முயற்சிக்கிறேன் என்னால் முடியாத பட்சத்தில் இவ்வாறு கோபப் பட்டு கத்தி விடுகிறேன். . .
பிறகு நான் என் தோழிகளுடன் மால் கு சென்று மகிழ்ச்சியாக சுற்றி விட்டு சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல எல்லோரையும் அவசர படுத்தி கொண்டு இருந்தேன். . .நான் 8.30 மணிக்கெலாம் வீட்டில் இருந்தாக வேண்டும். . . அதானால் நான் சீக்கிரமாகவே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். . எல்லோரையும் கிளம்பவும் வைத்து விட்டேன். . .
ஆனால் விதி அந்த தருணத்தில் மிகவும் விளையாடிவிட்டது. . . அன்று பார்த்து நாங்கள் சென்று கொண்டு இருந்த வழியில் முழுவதும் டிராபிக் ஜாம் ஆகி வாகனகள் போகாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தன. . .
அஷ்வின் அடிக்கடி கால் செய்து என்னை எங்கிருக்கிறாய் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். . .ஒரு கட்டத்தில் அவனுக்கு பதில் சொல்ல பயந்து கொண்டே நான் அவனது கால் ஐ அட்டென்ட் செய்யாமல் இருந்தேன். . . நான் வீட்டிருக்கு சென்று சேரும் வரை கிட்டத்தட்ட பத்து முறை அவன் எனக்கு கால் செய்தான். . .
நான் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் என் அம்மா அவர்களுடைய சொந்தகரர்களை பற்றி ஏதோ என்னிடம் சொல்லி கொண்டு இருந்தார். . அதை அவர் சொல்லி முடிக்கும் வரை அம்மாவுடன் அமர்ந்து கொண்டு இருந்தேன் பின்பு என் அறைக்கு சென்றேன். .என் போன் முழுவதும் அவனுடைய மெசேஜ் மற்றும் மிஸ்டு கால் களால் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. . ..நேரம் சரியாக 9.45 நான் என் ரூமிற்கு வந்த உடனே அவனுக்கு கால் செய்தேன். . ..

“அஷ்வின் நான் வீட்டுக்கு வந்துட்டேன். . .”
“எப்போ வந்த?”
“8.45”
“சரி போயி ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்து பேசு”
“நீ எம்மேல கோவமா இருக்கியா?”
“நீ போயி ரெப்ரெஷ் பண்ணிட்டு வா அப்புறம் பேசலாம்”
“ப்ளீஸ் அஷ்வின் இப்போவே பேசு”
“நீ வீட்டுக்கு வந்ததும் வந்து சேர்ந்துட்டேன் னு உன்னால ஒரு மெசேஜ் கூட அனுப்ப முடியாதா கீர்த்தி”
“வந்ததும் அம்மா என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க அஷ்வின். . அதான் சொல்ல முடியல”
“மெசேஜ் டைப் பண்றதுக்கு ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா கீர்த்தி!!. . .தயவு செஞ்சி ரீசன்ஸ் தேடாத. . . .. வாட் எவர். . . நீ போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வந்து பேசு பை”
என அவன் வேகமாக கால் ஐ கட் செய்தான். . .
அடுத்த நாள் என்னுடைய பிறந்த நாள். . .நான் என்னுடைய பிறந்த நாளை அவனுடன் சண்டையோடு ஆரம்பிக்க விரும்ப வில்லை. . .எப்படியாவது அவனை சமாதானம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேக வேகமாக ரெப்ரெஷ் ஆகி கொண்டு அவனுக்கு கால் செய்தேன். . .
“ஹிம்ம் சொல்லு!!!”
என அவன் பதில் அளித்தான் . . அவனது இந்த வார்த்தையிலேயே தெரிந்து கொண்டேன் அவன் என் மீது கோபமாக தான் இருக்கிறான் என்று. ..
“இன்னும் எம்மேல கோவமா இருக்கியா அஷ்வின்?”
“வேற எதையாவது பேசு கீர்த்தி ”
“டின்னர் முடுஞ்சதா?”
“ஹிம்ம் முடுஞ்சது”
இது மட்டும் அல்ல நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அவன் இவ்வாறே விருப்பம் இல்லாமல் ஒரே வார்த்தையில் பதில் அளித்துக் கொண்டு இருந்தான். . .நேரம் இரவு 11 ஐ நெருங்கியது. . இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் இந்த சண்டையை முடித்தே ஆக வேண்டும். . அதனால் நானே சமாதானப் பேச்சை ஆரம்பித்தேன். ..
“அஷ்வின் உனக்கு எம்மேல கோவம் னா தயவுசெஞ்சி என்ன திட்டிரு . ..அதர் வைஸ் இப்டி இஷ்டமே இல்லாம பேசாத ரொம்ப கஷ்டமா இருக்கு அஷ்வின் எனக்கு. . ”
“வேற எப்டி பேச சொல்ற. . .நான் தான உன் சந்தோஷம் எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிக்கிட்டு இருக்கேன்”
“ப்ளீஸ் அஷ்வின் நான் கோவத்துல சொல்ற வார்த்தைங்கள எல்லாம் நீ சீரியஸா எடுத்துக்காத ”
“ஏன் நீ எத்தன தடவ இப்டி நான் கோவத்துல பேசறத சீரியஸா எடுத்துகிட்டு என்கிட்ட சண்ட போட்டு இருப்ப. . நீ பண்ணா நான் ஏத்துக்கணும் பட் நான் அத பண்ண கூடாது அப்டித்தான?”
“ஓ அப்போ நான் என்ன பண்ணாலும் நீ அத திருப்பி பண்ணுவ. .? டிட் ஃபார் டேட் ஆ அஷ்வின்”
“நீ எப்பவும் இப்டிதான் கீர்த்தி . . .நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்கவே மாட்ட. . எப்பவும் உன் இஷ்டத்துக்கு உன் வழியில கற்பன பண்ணிப்ப. .. ”
“ஆமா எப்ப பாத்தாலும் நான் தான் தப்பு என்னையே ப்ளேம் பண்ணு”
என மீண்டும் எங்களுக்குள் சண்டை ஆரம்பிக்க அது விவகாரமாக போக ஆரம்பித்தது. . .குறையும் என்று நினைத்த அவனது கோபம் அதிகமாகி கொண்டே போனது. . . . நேரம் 12 ஐ நெருங்கியது. .. வாக்கு வாதம் அதிகமாகவே அவன் மிக அதிகமான கோபத்தால் அவன் கால் ஐ கட் செய்து விட்டான். . நானும் கோபத்தில் என் மொபைல் ஐ தூக்கி தூர வீசினேன். . .
ஆனால் அடுத்த 2 நிமிடத்தில் தூக்கி போட்டதால் சிதறிய என் போன் பாகங்களை ஒன்று சேர்த்து போன் இல் செலுத்தி மீண்டும் என் மொபைலை சுவிட்ச் ஆன் செய்து அவனது அழைப்புக்க காத்துக் கொண்டு இருந்தேன். . என் பிறந்த நாள் என்பதால் அவன் சில நிமிடங்களில் அவன் கோபம் எல்லாம் மறந்து மீண்டும் என்னை அழைப்பான் அப்போது அவனது கால் ஐ நான் தவற விட கூடாது என்றே மீண்டும் என் உடைந்த பாகங்களை ஒன்றாக்கி அவனது அழைப்புக்காக மொபிலையே பார்த்து அவன் பெயர் வருகிறதா என மொபில் ஸ்கிரீனையே இமைக்காமல் பார்த்து ஏங்கிக் கொண்டு இருந்தேன். . . . .
அவன் தான் என்னை முதலில் அழைக்க வேண்டும் என்று நான் காத்து கொண்டு இருந்தேன். . . 12 மணி ஆவதற்கு இன்னும் 5 நிமிடங்கள் தான் இருந்தது. . . அந்த 5 நிமிடங்களில் சென்ற ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகமாக இருந்தது என்றே சொல்லலாம் . . அவனது அழைப்புக்காக நான் என் வாழ்நாள் முழுவது காத்துக் கொண்டு இருக்க தயாராக இருக்கிறேன் ஆனால் இந்த தருணம் மிகவும் முக்கியமானது. . .அது அஷ்வினுக்கும் புரியும் என்கிற நம்பிக்கையில் நான் காத்து இருந்தேன். . .
ஆனால் அவனுக்கு அது எப்படி புரியாமல் போனது என்று எனக்கு தெரியவில்லை. ..12 மணியும் ஆனது. .என் தோழிகள் நண்பர்கள் அனைவரும் எனக்கு கால் செய்து என்னை வாழ்த்தினர். . . ஆனால் நான் அவனது வாழ்த்துக்காகவும் அவனது காலுக்காகவும் தான் ஏங்கி கொண்டு இருந்தேன். . .
அவன் எனக்கு கால் செய்யவே இல்லை. . . அந்த துக்கத்தால் எனக்கு அழுகை முட்டியது. . .என் கண்ணீர் துளிகள் விழுந்ததால் என் தலையணை முற்றிலும் நனைந்து ஈரமானது . . சின்ன குழந்தை போல நான் அழுது கொண்டிருந்தேன். . எல்லாரும் வாழ்த்தி முடித்து விட்டனர். .ஆனால் அப்போதும் அஷ்வினிடம் இருந்து அழைப்பு வரவே வில்லை. . .
என் ஈகோ என்னை அவனுக்கு கால் செய்ய விடவில்லை. . . ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை நான் என் செல்லை எடுத்து அவனிடம் இருந்து அழைப்பு வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். . . இப்படியே பார்த்து பார்த்து என் கண்கள் தான் வீங்கி ஏங்கி போனது. .. எப்படி தூங்கினேனே என்று தெரியவில்லை. . .
தூங்கி விட்டு அதிகாலை 5 மணிக்கெலாம் எழுந்து விட்டேன். . . எழுந்ததும் வேகமாக என் மொபைலைத் தேடி எடுத்துப் பார்த்தேன். . இரண்டு மிஸ்டு கால் மற்றும் ஒரு மெசேஜ் வந்து இருந்தது. . அது இரண்டும் அஷ்வினிடம் இருந்து தான். .
“சாரி கீர்த்தி நான் எவ்ளவோ ட்ரை பண்ணினேன் பட் எனக்கு மூணு மணிக்கு தான் உன்னோட லைன் கெடச்சது. .ஆனா நீ அட்டென்ட் பண்ணல. . நீ தூங்கிட்டு இருப்பேன்னு நெனச்சேன். .நெஜமா சொல்றேன் நான் வேணும்னு பண்ணல கீர்த்தி ஹேப்பி பெர்த் டே டியர். .. ”
என மெசேஜ் செய்து இருந்தான். ..
ஆனால் அவனது அந்த மெசேஜ் ஐ படித்த பிறகும் கூட எனக்கு துளி கூட மகிழ்ச்சி இல்லை. .. இந்த வாழ்த்தை நான் எதிர்பார்த்த தருணம் சென்று முடிந்து விட்டது. . மீண்டும் அந்த தருண திற்காக நான் இன்னும் ஒரு வருடம் காத்து இருக்க வேண்டும் அல்லவா . . .
அவனது சூழ்நிலை எனக்கு புரிகிறது ஆனால் என் மனம் சமாதானாம் ஆகாமல் தவித்தது. .. ஏன் அவன் நான் எதிர்பார்த்த நேரத்தில் எனக்கு கால் செய்ய வில்லை என்ற எண்ணத்தை மட்டுமே என்னுள் ஓட விட்டது. . . .
நாம் ஒரு சிறப்பான தருணத்திற்காக காலம் முழுக்க காத்து கொண்டு இருந்து அந்த நேரத்தில் அது நடக்காமல் போனால் எப்படி இருக்கும். . நான் எதிர்பார்த்த நேரத்தில் எனக்கு கிடைக்காத சந்தோசம் இனி எப்போது கிடைத்தால் எனக்கென்ன. . இதற்கு அவன் எனக்கு வாழ்த்து சொல்லாமலே இருந்து இருக்கலாம் என்றே எனக்கு தோன்றியது அவனது பிறந்த நாள் வாழ்த்தை மெசேஜில் படிக்கும் போது. .
என்னால் இந்த வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை . . .இதயம் உடைந்து விட்டதை போன்ற ஒரு உணர்வு. . . . .ஏதோ ஒரு பெரிய ஏமாற்றம். . என் வாழ்வில் இப்படி யாருக்காகவும் நான் ஏங்கியதும் காத்திருந்ததும் இல்லை. ..
எப்போதும் மகிழ்ச்சி சந்தோஷத்துடன் ஆரம்பிக்கும் என் பிறந்த நாளை முதல் தடவையாக அழுகையோடும் சோகத்தோடும் நான் ஆரம்பித்தேன். . . அதிகமான எதிர்பார்ப்பு தான் அதிக வலி யையும் தரும் என்று அன்று நான் உணர்த்து கொண்டேன். . .. . .
14

இவ்வாறாக எங்களுக்குள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சண்டை . . .. .அதை தீர்த்து முடிக்கவே நேரம் சரியாக இருந்தது. . . .சண்டைகளால் உண்டான பிரிவுகளின் போது தான் எங்களுக்குள் இருக்கும் அந்த அன்பை எங்களால் ஆழமாக உணர முடிகிறது.

ஆரம்பத்தில் இது ஆரோக்கியமனதாக தான் இருந்தது ஆனால் போக போக அதுவே எனக்கு பெரும் பாரமாக இருக்க ஆரம்பித்தது . . .ஒவ்வொரு நாளும் எங்களுக்கும் சண்டை வரவே கூடாது என விழிப்பாக இருக்கவே எனக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது, .. . . .அதிலும் என்னுடைய கல்லூரியின் கடைசி வருடம் போல மோசமான வருடம் இது வரையில் எனக்கு இருந்தது இல்லை . .

நாளுக்கு நான் எங்களது சண்டை அதிகமாகி கொண்டே போனது. . . எங்களுக்குள் நடக்கும் எல்லா சண்டைகளையும் நான் ரேணு விடம் சொல்லி வருத்தப்படுவதும் உண்டு. . .

எங்களது கேம்பஸ் இண்டர்வியூ நெருங்க நெருங்க அதற்க்கான தயாரிப்புகளில் நாங்கள் பிசி ஆனோம். .. .நான் தான் ப்ளேஸ்மென்ட் இன்சார்ஜ் என்பதால் எனக்கு பொறுப்புகளும் அதிகமாகியது . . .அதனால் ரேணு என்னை எல்லாவற்றையும் மறந்து விட்டு கேம்பஸ் இன்டர்வியூ வில் என் கவனத்தை திருப்ப சொன்னாள். . . .

எங்களுக்கு ப்ராஜெக்ட் வொர்க் வேறு இருப்பதால் அதிலும் நான் என்னை ஈடுபடுத்தி ஆக வேண்டும் . இவ்வாறு பொறுப்புகள் பல இருந்ததால் என்னால் அஷ்வினுடன் பழைய மாதிரி நேரத்தை செலவிட முடியவில்லை. . ஏன் அவனுடன் பேச கூட எனக்கு நேரம் இல்லை ..சில சமயங்களில் மதிய உணவிற்கும் என்னால் அவனுக்கு கம்பெனி குடுக்க முடியாத நிலைமை கூட ஏற்படும்.

எனக்கு இருக்கும் பரபரப்பான வேலைகள் மற்றும் பொறுப்புகள் தான் அஷ்வினுக்கும் இருக்கும் ஆனால் அவன் என்ன வேலை இருந்தாலும் எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் எனக்காக நேரத்தை ஒதுக்கி என்னிடம் பேசுவான் என்னுடன் இருப்பான் . . .

ப்ளேஸ்மென்ட் மற்றும் கேம்பஸ் இன்டர்வியூவிற்கு நானும் ஷக்தியும் இன்சார்ஜ் என்பதால் நான் ஷக்தியுடன் அதிக நேரம் இருக்க வேண்டிய கட்டாயம் . .நாங்கள் இருவரும் இணைந்து பல வேலைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை. . .இந்த நிஜத்தை அப்படியே என்னால் அஷ்வினிடம் சொல்ல முடியவில்லை. . ஏற்கனவே எங்களுக்குள் சண்டை அதிகமாகி கொண்டே இருக்கிறது இதில் இதை பற்றி வேறு கூறி விட்டு மேலும் மேலும் சண்டையை பெரிதாக்க நான் விரும்பாமல் அஷ்வினிடம் பொய் சொல்ல ஆரம்பித்தேன். . .

வீட்டில் இருந்து லேட் ஆக கிளம்பினேன் நண்பர்களுடன் கேம்பசுக்கு தயார் செய்து கொண்டு இருந்தேன். . ப்ராஜெக்ட் வொர்க் என்றும் ஷக்தியுடன் நான் செலவிட்ட நேரத்தை சொல்லாமல் இது போன்ற பொய் களை கூறி அவனை சமாளிக்க வேண்டிய நிலை. . .. வேறு வழி இல்லை மனதை கல்லாக்கிக் கொண்டு அவனிடம் பொய் சொல்ல ஆரம்பித்தேன். . .

அவ்வாறு அவனிடம் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் பொய் கூறுவது எனக்கு மிகவும் உறுத்தலாக இருக்கவே செய்ததது. . . ஆனால் அந்த பொய்களால் எங்களது சண்டைகள் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது அந்த சிறு ஆறுதல் மட்டுமே என்னக்கு. . .

ப்ளேஸ்மென்ட் வொர்க் கில் எங்களுக்குள் ஏற்பட்ட நல்ல புரிதலால் ஷக்தி எனக்கு ஒரு நல்ல நண்பன் ஆனான். . . நான் எப்போதும் அவனிடம் அஷ்வினை பற்றித்தான் பேசி கொண்டே இருப்பேன்.. . ஆனால் ஷக்தியால் எங்களுக்குள் ஏற்படும் சண்டைகளைப் பற்றி நான் ஷக்தியிடம் சொல்ல வில்லை. . .

சொல்வது நன்றாக இருக்காது. .அவ்வாறு சொல்லி அவனையும் கஷ்டபடுத்தி எங்களது நட்பை உடைக்க நான் விரும்ப வில்லை. . அதனால் நான் ஷக்தி யை பற்றி அஷ்வினிடம் எதுவும் சொல்ல மாட்டேன். . ஏன் நான் ஷக்தியுடம் அதிக நேரம் இருப்பது கூட அஷ்வினுக்கு தெரியாது. . .

ஆனால் நான் ஷக்தியிடம் அஷ்வினை பற்றி மட்டுமே பேசுவேன். . .நான் ஷக்தியிடம் எங்களது நட்பை பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என சொல்லி வைத்து இருந்தேன் . . .நான் ஷக்தி யுடனானஎன் நட்பை அஷ்வினிடம் இருந்து மறைத்து கொண்டே வந்தேன். . .

நானும் ஷக்தியும் ஒன்றாக இருப்பதை பார்த்து எங்களை இணைத்து நாங்கள் இருவரும் காதலிப்பதாக நிறைய வதந்திகள் எங்கள் டிபார்ட்மென்ட்டிலும் ப்ளேஸ்மென்ட் சென்டேரிலும் வலம் வந்தன. . ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கவலை கொள்ள வில்லை. . . ஏன் என்றால் என் அஷ்வினுக்கு என்னை பற்றி தெரியும் அவன் இதை எல்லாம் நம்ப மாட்டான். .

ஒரு வேளை இந்த வதந்திகள் அஷ்வின் காது களை எட்டினாலும் அவன் என்னை நம்புவான் என்கிற அந்த தைரியம் எனக்குள் நிறையவே இருந்ததால் நான் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் பட வில்லை. . அஷ்வின் என்னை நம்புவான் எனக்கு அது போதும் என்கிற மன நிலையிலேயே இருதேன். . .

ஆனால் இது போன்ற வதந்திகளை அஷ்வின் அவன் காதால் கேட்டு விட்டால் அஷ்வினுக்கு பயங்கரமான கோபம் தான் வரும் என் மீது அல்ல.. . இவ்வாறு பேசுபவர்கள் மீது. . .என்னை பற்றி யார் தவறாக பேசினாலும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. .அதனால் இது போன்ற பேச்சுகளை அவன் கேட்கும் போதெல்லாம் என்னிடம் ஷக்தியிடம் பேச வேண்டாம் என்றே எச்சரிக்கை செய்வான். . .

ப்ளேஸ்மென்ட் முடிந்து நாங்கள் அனைவரும் நல்ல கம்பெனி களில் வேலை பெற்றோம். .ப்ளேஸ்மென்ட் முடிந்ததும் எங்கள் ப்ராஜெக்ட் ரிவ்யூவும் முடிந்தது கடைசியாக எங்கள் தேர்வுகள் ஆரம்பம் ஆனது. . அதற்கு தயார் செய்ய ஆரம்பித்தேன் . . . அந்த நேரம் எதிர்பார்க்ககாமல் என் அப்பா மைசூருக்கு பணி இட மாற்றம் செய்ய பட்டார். . .

எனவே அப்பா எங்களுக்கு முன்பே மைசூருக்கு சென்று விட்டார். . .என் தேர்வுகள் முடியாத காரணத்தால் தேர்வுகள் முடியும் வரை நானும் அம்மாவும் சென்னையிலேயே இருந்தோம் என் தேர்வு முடியும் நாளுக்கு அடுத்த நாள் மைசூருக்கு அம்மா எங்களுக்கு டிக்கெட்டுகளை ரிசர்வேஷன் செய்து வைத்து இருந்தார் . ..

அதனால் என் தேர்வு முடிந்த உடனே அதாவது நான் மைசூர் செல்வதற்கு முன்னரே என் காதலை நான் அஷ்வினிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து கொண்டு என் தேர்வு முடியும் நாளுக்காக காத்திருந்தேன். . .தேர்வு முடியும் கடைசி நாள் அன்று என் காதலை எந்த தயக்கமும் இன்றி அஷ்வினிடம் சொல்லிவிட ஆவலுடன் அந்த கடைசி நாளை எதிர்ப்பார்த்து கொண்டு இருந்தேன். .

அந்த கடைசி நாளும் வந்தது. . . எங்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வுகள் நடந்தன. .. என் காதலை சொல்ல சரியான இடம் என்று நான் தேர்வு செய்தது கடற்கரையை. . . ஏன் என்றால் அவன் மீதான என் காதலை உணர வைத்து இந்த கடற்கரை தானே. . .அதனால் நான் அந்த அழகான கடற்கரை மணலில் அவன் தோள்களின் மீது சாய்ந்து கொண்டே என் அன்பை அவனிடம் வெளிபடுத்த வேண்டும் என்று விரும்பினேன். . .

தேர்வு முடிந்ததும் என்னை வந்து சந்திக்குமாறு நான் அஷ்வினிடம் கூறி இருந்தேன். . .நான் அஷ்வினுக்காக ஒரு பரிசு (வாட்ச்) ஒன்றும் வாங்கி வைத்து இருந்தேன். . என் காதலை நான் சொல்லி அதை அவன் ஏற்றுக்கொள்ளும் அந்த தருணம் இந்த வாட்சை அவனது கையில் நானே கட்டி விட வேண்டும் என்று பல பல கனவுகளில் மிதந்து கொண்டு இருந்தென். . .

தேர்வும் முடிந்தது. . அவனும் வந்தான். . நாங்கள் இருவரும் ரயிலில் ஏறினோம். .அதில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. . நான் ஒரு புறம் நிற்க அஷ்வின் வேறு ஒரு புறம் நின்று கொண்டு இருந்தான். . .சில நிறுத்தங்களுக்கு பிறகு எனக்கு உட்கார இடம் கிடைத்தது நான் அமர்ந்தேன் ..அஷ்வின் எனக்கு சற்று தூரமாக நின்று கொண்டு இருந்தான். . .அந்த நேரம் ஷக்தி எனக்கு மெசேஜ் செய்தான். . நான் அவனுடன் சேட் செய்ய ஆரம்பித்தேன். . .

அஷ்வின் தூரத்தில் நின்று கொண்டு இருந்ததால் அவன் என்னை கவனிக்க வாய்ப்பு இல்லை. . அதனால் நான் தைரியமாக ஷக்தியுடன் சேட் செய்து கொண்டு இருந்தேன். .நான் இன்று அஷ்வினுக்கு என் காதலை சொல்ல போகும் விஷயம் ஷக்திக்கு தெரியும் அதனால் அவன் என்னை தைரியப் படுத்திக் கொண்டு இருந்தான். . .

ஒரு நல்ல நண்பன் என்கிற பொறுப்பில் எனக்கு சில அறிவுரை களையும் சொல்லி என்னை உற்சாக படுத்தி கொண்டு இருந்தான். . . சில நிமிடங்களில் நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. . .நானும் அவனும் இறங்கி நடக்க ஆர்மபித்தோம். . . .

தொடரும் . . . .

என் காதலை சொல்ல பெரும் ஆவலோடு நான் காத்திருந்தேன். . கடற்கரையும் வந்தது. . . நான் எந்த இடத்தில் என் காதலை உணர்ந்தேனோ அதே இடத்தில் நாங்கள் இருவரும் சென்று அமர்ந்தோம். . .இந்த தருணத்திற்காக தன நான் நான்கு வருடமாக காத்துக் கொண்டு இருந்தேன். .. இந்தோ இன்னும் சிறிது நேரத்தில் என் மனதில் உள்ள அவன் மீதானா எல்லா உணர்வுகள் பற்றியும் அவனிடம் மனம் திறந்து பேசப் போகிறேன். . .

எப்படி ஆரம்பிப்பது எப்படி காதலை சொல்வது என நான் முன்னேற்பாடாக எந்த ஒத்திகையும் பார்க்க வில்லை. . . அவ்வாறு தயார் செய்து வந்திருந்தால் நிச்சயமாக நான் ஒத்திகை பார்த்தது போல நடக்காது. . வேறு மாதிரியாக தான் நடக்கும் . . அவ்வாறு வேறு மாதிரியாக நடந்தால் நான் சிறிது குழப்பம் அடைவேன். . அந்த பிரச்சினையே வேண்டாம் என்றே நான் எப்படி என் காதலை சொல்வது என்று எந்த ஒத்திகையும் செய்யவிலை. . . . அதனால் நான் இயல்பாகவே வந்து இருந்தேன். . .

எனக்கு அவன் என் காதலை ஏற்பான ஏற்க மட்டானோ என்கிற பயமும் இல்லை அவன் என் காதலை ஏற்று கொள்வான் என்கிற எண்ணமும் எனக்கு இல்லை. . எனக்கு இருந்த ஒரே குறிக்கோள் என் காதலை அவனிடம் வெளிபடுத்துவது தான். . .அதன் பிறகு அவன் எப்படி நடந்து கொள்வான் என்பதை பற்றி நான் சிந்திக்க வில்லை. . .இதுவரை நான் என் மனதிற்க்குள் போட்டு மறைத்து வைத்திருந்த என்னுடைய எல்லா உணர்வுகளையும் என் காதலையும் சொல்லி விட வேண்டும் என்கிற துடிப்பே எனக்குள் அதிகமாக இருந்தது. . .

அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று நான் எடுத்த இந்த முடிவு சரியோ தவறோ என்று எனக்கு தெரியாது ஆனால் நான் இன்று அதை அவனிடம் சொல்லியியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம். .. நாளை அதிகாலையே நான் இந்த ஊரில் இருக்கப் போவதில்லை. . இந்த ஊரை விட்டு போகின்ற அந்த நேரம் நான் அஷ்வினின் காதலியாக தான் போக வேண்டும் அதனால் இன்று என் காதலை நான் சொல்லப் போகிறேன். .

என்னுடைய காதலை இன்னும் எத்தனை நாளுக்கு தான் நான் மட்டும் தனியாகவே சுமந்துக் கொண்டு இருப்பேன். . .இனி அவனும் என்னோடு சேர்ந்து என் காதலை பகிர்ந்து கொண்டு இந்த சுகமான சுமையை சேர்ந்து சுமக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. . .அவன் என்னை பார்க்கும் போது நான் மிகவும் சாதரணமாக தான் இருந்தேன் ஆனால் உள்ளுக்குள்
என்னுடைய இதய துடிப்பு மிக வேகமாக அடித்து கொண்டு இருந்தது . . .

.என் தலை முதல் கால் வரை ஏதோ பதற்றம் என்னை ஒட்டிக்கொண்டது. அப்பப்பபா ஐ லவ் யூ என்கிற அந்த மூன்று வார்த்தையை அவனிடம் சொல்ல நான் படும் அவஸ்தை இருக்கிறதே . .அதை என்னால் உணர மட்டுமே முடிகிறது வார்த்தைகளால் சொல்ல இயல வில்லை. . இந்த பதற்றம் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் நாங்கள் பழகிய அந்த அழகான நாட்களின் நினைவுகள் எல்லாம் என் மனதில் கவிதையாய் ஓடிக்கொண்டு இருந்தன. . .

எங்களது மௌனம் கலைகிறது அவன் பேச ஆரம்பித்தான். . நானும் இந்த காற்றில் பறந்து கொண்டு இருந்த என் நினை வுகள் எல்லாவற்றையும் மீண்டும் ஒன்று திரட்டி அவன் மீது கொண்டு வந்தேன். .

“ட்ரெயின் ல யாருக்கு டெக்ஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்த கீர்த்தி. .. ?”

நான் அவனிடம் இதுவரை அவன் கண்களை பார்த்து பொய் சொல்லியதே கிடையாது. .. மொபைல் சேட் மற்றும் மொபைலில் பேசும் போது மட்டும் தான் பொய் சொல்லி இருக்கிறேன். நான் ஏற்கனவே சொல்லியது போல தான் அவன் கண்களைப் பார்க்கும் போது என்னால பொய் சொல்ல இயலாது. .எனக்கு வரவும் வராது. . .அதனால் அஷ்வின் கேட்கும் போது சட்டென்று என்னால் பொய் கூற முடியவில்லை. .

அதே நேரம் ஷக்தி யுடன் தான் நான் மெசேஜ் செய்து கொண்டு இருந்தேன் என என்னால் தைரியமாகவும் சொல்ல முடியவில்லை. . தவித்து கொண்டு இருந்தேன் . . .ஷக்தி என உண்மையை சொல்லிவிட்டால் எல்லாமே நாசமாகி விடும் அதனால் இந்த நேரத்தில் பொய் தான் என்னை காப்பாற்றும் என்று தோன்றியது . ..

இது தான் அவனிடம் நான் சொல்லும் கடைசி பொய் என்று ஒரு புறம் நினைத்தாலும் மறு புறம் நான் ஆரம்பிக்க போகும் என்னுடைய புது காதல் உறவை பொய்யுடன் ஆரம்பிக்க வேண்டுமா என்று என் மனம் என்னை சரா மாரியாக கேள்வி கேட்க அந்த குற்ற உணர்விலே நான் ஷக்தி என்று மெதுவாக உலரிவிட்டேன். . .

நான் ஷக்தி என்று மெதுவாக சொன்னாலும் அது அவன் காதில் நன்றாகவே விழுந்து இருக்கும். .இருந்தாலும் அவன்

“எனக்கு சரியா கேக்கல மறுபடியும் சொல்லு”
என கேட்டான். .அவனது அந்த குரலில் கோவம் தெரித்தது. . .

மனதில் தைரியத்தை வர வைத்துக் கொண்டு நானும் என் குரலை உயர்த்தி
“ஷக்தி”
என கூறினேன். .

அவன் அமைதி ஆனான். . அவனது கோபம் அவன் கண்களில் தெரிந்தது. . எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. . .. . தவறு என்னுடையது தான் அதனால் நான் அவனுடம் வாதம் செய்ய விரும்பவில்லை அவனது பேச்சுக்காக காத்திருந்தேன் ஆனால் அவன் அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேச வில்லை. .

“ஐ அம் சாரி அஷ்வின்”

என நான் அவனை சமாதனம் செய்தேன். . இந்த சமாதானம் இந்த தருணத்திற்கு போதுமானது இல்லை தான் வேறு என்ன செய்வது அதை தவிர. நான் அழகான நாளாக அமையும் என்று நினைத்து வந்தேன். . அனால் இங்கு நிலைமை வேறு மாதிரி போய்க் கொண்டு இருக்கிறதே என்று உள்ளுக்குள்ளே பயந்து கொண்டு இருந்தேன். .

நான் மன்னிப்பு கேட்ட பிறகும் அவன் அமைதியாகவே இருந்தான். அந்த சமயம் என் மொபைலில் மெசேஜ் பீப் சவுண்ட் கேட்டது. . . நான் அதை எடுத்து பார்க்கும் முன்னரே அஷ்வின் என் கையிலிருந்த என் மொபைலை வேகமாக பிடுங்கி வந்த மெசேஜ் ஐ திறந்து பார்க்கிறான். . .பார்த்து விட்டு அந்த மெசேஜைப் படித்து விட்டு மொபைலை என்னிடம் கொடுத்தான். . அந்த மெசேஜ் ஐ பார்த்த பிறகு அவன் கோபத்தில் உச்சிக்கே சென்று விட்டான் என அவன் முகத்தையும் கண்களையு பார்த்த பிறகு புரிந்து கொண்டேன். . .

அப்படி என்ன அந்த மெசேஜில் என நானும் மெசேஜை திறந்து பார்த்தேன். . கடவுளே மீண்டும் என் விதி என்னிடம் பயங்கரமாக விளையாடி விட்டது. . அந்த மெசேஜ் ஷக்தி இடமிருந்து தான் வந்து இருந்தது. .

அதில் ஷக்தி இவ்வாறு அனுப்பி இருந்தான்.

“சாரி கீர்த்தி நான் கொஞ்சம் பிஸி யா இருந்தேன் வீட்ல கொஞ்சம் வேல அதான் என்னால ரிப்ளை பண்ண முடியல .. . தைரியமா புரசீட் பண்ணுடா . . நீ எதுக்கும் கவல படாத டியர் . . .எல்லாம் நல்லதா தான் நடக்கும். . .நீ வீட்டுக்கு வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணு. . உன்னோட மெசேஜ் காக்க நான் காத்துகிட்டு இருப்பேன் . .”

அவ்வளவு தான் என் சந்தோசம் முடிவிற்கு வந்து விட்டது என நான் புரிந்து கொண்டேன். . .நான் என் காதலை எப்படி அஷ்வினிடம் வெளிபடுத்துவது என்று பயத்தில் இருந்தேன் அதற்காக தான் ஷக்தி என்னை தைரியப் படுத்தி கொண்டு இருந்தான். . .ஆனால் இது வரை ஷக்தி என்னை டியர் என்று அழைத்ததி இல்லை. . இது தான் முதல் முறை என்னை அவன் டியர் என்று சொல்லி இருப்பது. .

அஷ்வின் ஐ தவிர என்னை வேறு யார் டியர் என்று அழைப்பதும் எனக்கு பிடிக்காது என்பது ஷக்தி க்கு நன்றாகவே தெரியும் பிறகு ஏன் அவன் என்னை டியர் என்று அழைத்தான் என என்னக்கு புரியவில்லை. . .ஆனால் அந்த ஆராய்ச்சி இப்போது முக்கியம் இல்லை. . நான் அஷ்வினிடம் இதை பற்றி பேசியே ஆக வேண்டும் அவனுக்கு ஷக்தியின் மெசேஜ் ஐ பற்றி விளக்கம் சொல்லியே ஆக வேண்டும். .

ஆனால் என்ன தான் நான் விளக்கம் கூறினாலும் அவன் அதை காது கொடுத்து கேட்க வேண்டுமே என்று சோகத்தோடே அவனைப் பார்த்தேன் ஆனால் அவன் முகத்தை கோபத்தோடு திருப்பி கொண்டான். . அது மட்டும் இல்லாமல் எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்தான். . .நான் பதற்றம் கொண்டு அவன் முன்னே நின்று அவனை மேலும் நடக்க விடாமல் தடுத்தேன். .

“அஷ்வின் ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு அஷ்வின். . வந்து உக்காரு ஒரு அஞ்சி நிமிஷம் நான் சொல்றத கேளு அஷ்வின் என்ன நடந்ததுன்னு நான் உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்றேன். . ”
என சொல்லியும் அவன் அதை காதில் வாங்காமல் சென்று கொண்டே இருந்தான். . .

நான் அவன் கைகளைப் பிடித்து நிற்க வைத்து

“ப்ளீஸ் அஷ்வின் ஐ அம் ரியலி சாரி. . .நான் சொல்றத கொஞ்சம் கேளு அஷ்வின் ப்ளீஸ் ”

அவன் என் கைகளை தட்டி விட்டான். .

“என்ன கேக்கணும் . .ஏன் கேக்கணும். நீ யார் கூட வேணும்னாலும் பேசு அத பத்தி எனக்கென்ன. . என்கிட்ட எதுக்கு வெளக்கம் தர. .?”
என அவன் கத்தினான். .

“அஷ்வின் என்ன இருந்தாலும் நாம உக்காந்து பேசலாம் அஷ்வின் எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க ப்ளீஸ் வா!!!”

“எனக்கு மத்தவங்கள பத்தி எந்த கவலையும் இல்ல, . யாரு வேணாலும் பாக்கட்டும் ஐ டோன்ட் கேர் . . .நீ அவன் கூட நல்லா என்ஜாய் பண்ணு. . என்னைவிட அவன் உன்னோட அவ்ளோ க்ளோஸ் போல. . அவன் உன்ன டியர் னு சொல்ற அளவுக்கு அவன நீ அலோ பண்ணி இருக்க. . இன்னும் அவன என்ன லாம் பண்றதுக்கு நீ அல்லா பண்ணி இருக்கியோ எனக்கு தெரியல!!”

“அஷ்வின் ஏன் இப்டியெல்லாம் பேசற? . .அவனோட என்ன சேர்த்து வச்சு சந்தேக படுறியா நீ.?”

“உன்னோட கற்பனைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது. . நான் மெசேஜஸ் பத்தி மட்டும் தான் சொன்னேன். . எப்பவும் நீ தப்பா தான் புரிஞ்சிப்ப. . தப்பு நீ பண்ணிட்டு இப்போ என்கிட்ட கத்திகிட்டு இருக்க. . நல்லா இருக்கு மா உன் நியாயம்!!”

“ஓகே ஓகே அஷ்வின். .என்ன மன்னிச்சிரு. . ஐ அம் சாரி. . வா நாம உக்கார்ந்து பேசலாம். . இத பெருசு பண்ணி மோசமான பிரச்சனையா மாத்த வேணாம் அஷ்வின் . .பிளீஸ் ”

“பெருசு பண்ண வேணாமா? . எத பெருசு பண்ண வேணாம்ணு சொல்ற. .அவனோட நீ மெயின்டெயின் பண்ற ப்ரெண்ட்ஷிப்ப நான் பெருசு பண்ண கூடாது அப்டித்தான. . .எத்தன தடவ படிச்சு படிச்சு சொல்லி இருப்பேன். அவன் கூட பேசாத அவனோட ரிலேஷன்ஷிப் மெயின்டெயின் பண்ணாதனு. . என் வார்த்தைக்கு கொஞ்சமாவது நீ ரெஸ்பெச்ட் பண்ணியா கீர்த்தி. .

சொல்லும் போதெல்லாம் என்னோட ஆர்கியூ தான் பண்ணிக்கிட்டு இருப்ப. . நாம ஆர்கியூ பண்ணி முடிக்கும் போதெல்லாம் நீ என்கிட்ட என்ன சொல்லுவ. சரி நான் அவன்கிட்ட பேச மாட்டேன் போதுமா னு என்ன சமாதானம் பண்ற மாதிரி நடிச்சு அவன் கிட்ட இப்பவும் நீ பேசிகிட்டு தான் இருக்க ல. . டியர் சொல்ற அளவுக்கு அவனோட அவ்ளோ நெருக்கமா? எனக்கு தெரியாம எத்தன நாளா இந்த கள்ள பழக்கம் உனக்கு அவனுக்கும் . . ”

அவன் கத்தினான். .

அங்கிருந்த எல்லோரும் எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தனர். . அவன் கோபத்தில் பேசிக்கொண்டே நடக்க நாங்கள் மெயின் ரோட்டி ற்கு வந்து விட்டோம். .

என் மீது தவறு தான் ஆனாலும் நான் அவனுக்கு இணையாக கத்தி கோபத்தோட பேசினேன். . ஏன் என்றால் அவன் வார்த்தைகளின் எல்லை மீறிப் போனது. . என் நடத்தை பற்றி மோசமான வார்த்தை களை அவன் பேச அதன் பிறகு என்னால் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும் அவ்வாறு அமைதியாக இருந்தால் அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகி விடாதா?

“வேணாம் அஷ்வின் தயவுசெஞ்சு அசிங்கமா பேசாத?”

“இதுல என்ன அசிங்கம். . . நீ எனக்கு தெரிய கூடாது தான சீக்ரெட் ரிலேஷன் ஷிப் மெயின்டெயின். . பண்ணிட்டு இருந்த. . இத வேற என்ன சொல்ல. . ”

“ஹார்ட் இல்லாதவன் மாதிரி பேசாத அஷ்வின் சண்ட சண்ட சண்ட னு நம்ம உறவு போய்கிட்டு இருக்கு. . ஆனா அதப் பத்தியெல்லாம் உனக்கு ஒரு கவலையும் இல்ல. . எப்பவும் உனக்கு உன் கோவம் தான் முக்கியம். . உனக்கு சந்தோஷமான மூட் ஆ இருந்தா ஹேப்பியா பேசுவ அதே மூட் அவுட்னா நான் எவ்ளோ சமாதானம் பண்ணாலும் சமாதனாம் ஆகறது இல்ல. . .ஒவ்வொரு சண்டைக்கு அப்புறமும் நான் எப்டி இருப்பேன்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்து இருக்கியா நீ? . .

ஒரு நாள் கூட நான் அழாம படுத்ததே இல்ல அஷ்வின். . கோவத்துல நீ எவ்ளோ ஹார்ஷான மோசமான வார்த்தைங்கள எம்மேல கொட்டினாலும் அதையெல்லாம் மறந்து அடுத்த நாள் உங்கிட்ட நார்மலா பிஹேவ் பண்ணுவேன். . இப்டி இருக்காத அஷ்வின்னு உங்கிட்ட இத பத்தி சொன்னாலும் நீ லிசன் பண்ணிகறதே இல்ல. . ஏன் உனக்கு இதெல்லாம் தெரியாத. . . ஒவ்வொரு நாளும் நீ என்னோட சண்ட போடும் போதெல்லாம் நான் எவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆகி நொந்து போறேன்னு உனக்கு தெரியுமா? . . .

நமக்குள்ள சண்ட வந்தா என்னால ஒரு வேலையும் பண்ண முடிய மாட்டேன்குது அஷ்வின். . மனசலளவுலயும் உடம்பலவுளையும் நான் ரொம்ப வீக் ஆகி நான் நானாவே இருக்க மாட்டேன்குறேன். . .இதெல்லாம் தேவையான்னு தான் நான் எல்லாத்தையும் உங்கிட்ட ஹைட் பண்ணேன் . . சத்தியமா இது மட்டும் தான் அஷ்வின் காரணம். .

நீ நெனைக்கிற மாதிரி எல்லாம் ஏதும் இல்ல . . அவன் எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட் அவ்ளோ தான். . அவனுக்கு தெரியும் இந்த மாதிரி டியர் யூஸ் பண்ணி மெசேஜ் பண்றது எனக்கு பிடிக்காதுன்னு . .ஆனா அவன் ஏன் அப்டி டெக்ஸ்ட் பண்ணாணு எனக்கு தெரியல அஷ்வின் .. இதான் பர்ஸ்ட் டைம் அவன் இப்டி மெசேஜ் பண்ணது. . .நம்பு அஷ்வின் ப்ளீஸ். .
என கண்ணீரோடு என் நிலைமையை நான் அவனுக்கு எடுத்து கூறினேன். . அனால் அவனுக்கு தான் கோபம் உச்சத்தில் இருக்கிறதே. . அவன் என் பேச்சை ஏற்றுக் கொள்வானா என்ன? .. .

14

என் சமாதானங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் அவன் இல்லை. . . அவன் இப்போது கோபத்தின் உச்சியில் இருக்கிறான். . நான் என்ன சொன்னாலும் இப்போது அவனுக்கு என்னுடைய வார்த்தைகள் கோபத்தை மட்டுமே கொடுக்கும். . .இருந்தாலும் மனத்தின் ஓரத்தில் சிறு நம்பிக்கை இருந்தது. . . எவ்வளவு தான் சண்டைப்போட்டு கத்தினாலும் அவனது கோபம் சிறிது நேரத்தில் விலகி விடும் என்று. . . .

“நல்லா பேசற நீ . .. . .!!!! நம்ம போடுற சண்டையால நீ இவ்ளோ ஹர்ட் ஆகறனு என்கிட்ட ஒரு தடவையாவது சொல்லி இருக்கியா? நீ எதாவது சொன்னா தான எனக்கு தெரியவரும். . .எல்லாத்தையும் உனக்குள்ளே வச்சுக்கிட்டு இப்போ என்ன கொற சொல்லிக்கிட்டு இருக்க? உம்மேல நான் வச்சு இருந்த என்னோட நம்பிக்கைய நீ முழுசா ஒடச்சிட்ட. . எல்லாம் போச்சு. தப்பு எல்லாத்தையும் உம்மேல வச்சுக்கிட்டு என்ன ப்ளேம் பண்ணாத கீர்த்தி. .”

“நீ எப்போ அஷ்வின் என்ன நம்பி இருக்க? . . எத்தன தடவ எம்மேல சந்தேகப் பட்டு திரும்ப திரும்ப ஷக்தி கிட்ட பேசறியா பேசறியா னு கேட்டு இருப்ப . . . நீ எம்மேல நம்பிக்க இல்லாம கேக்கும் போதெல்லாம் எனக்கு எவ்ளோ இர்ரிடேட் ஆகும் தெரியுமா? இருந்தாலும் எல்லாத்தயும்
கன்ரோல் பண்ணிக்கிட்டு நீ கேக்கும் போதெல்லாம் என் மனச கல்லாக்கிட்டு நான் பேசறது இல்லன்னு பொய் சொன்னது அவனோட எந்த தொல்லையும் இல்லாம நான் பேசி பழகறதுக்கு இல்ல. . உன்னோட எந்த சண்டையும் இல்லாம ஹோப்பியா இருக்கணும் னு தான் அஷ்வின். ..

சண்ட போட்டு போட்டு உன்ன தெனமும் நான் எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா? அந்த சண்டைய அவாய்ட் பண்றதுக்கு எனக்கு இந்த பொய்ய விட்டா வேற வழி தெரியல அஷ்வின் அதான் மறச்சேன் . .. உன்னோட சந்தோஷமா இருக்கணும் உன்னோட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ணும் உன்னோட சண்ட போட கூடாதுன்னு தான் அஷ்வின் நான் மறச்சேன். . என்னோட சந்தோஷத்த விட உன்னோட சந்தோசம் எனக்கு முக்கியம் அஷ்வின் ஷக்தி கிட்ட பேசிட்டு இருக்கேன்னு சொல்லி உன்ன நான் கஷ்டபடுத்தி டென்ஷன் பண்ண விரும்பல. .அதனால தான் மறச்சேன். . !!!!”

“என் சந்தோசம் முக்கியம்னு நெனச்சு இருந்தா நீ அவன் கூட பேசியே இருக்க மாட்ட கீர்த்தி. . .சும்மா என்கிட்ட வாக்கு வாதம் பண்ணனும் னு கண்டத பேசிகிட்டு இருக்காத. . .உண்மைய சொல்லணும்னா நீ என்ன முட்டாள் ஆக்கி இருக்க. . . என்ன சொன்ன உன்ன நம்பாம அத்தன தடவ கேட்டேனா சொல்ற. ஆமா கேட்டேன் என் ப்ரெண்ட்ஸ் எல்லாருமே சொன்னானுங்க அவங்க ரெண்டு பெரும் பேசிகிட்டு தாண்டா இருக்காங்க னு ஆனா நான் அவங்க சொல்றதலாம் நம்பாம உன்ன நம்பினேன். . .

எனக்கு இது தேவைதான். . கடைசியில அவங்க சொன்னது தான் கரெக்ட். . நான் தான் லூசு. . . உன்ன கண்மூடி தனமா நம்பி ஏமாந்து போயிட்டேன். . ஆல் ரைட் இதோட முடிச்சுக்குறேன். . .நான் தான் உங்க ரெண்டு பேருக்கு நடுவுல டிஸ்டர்பன்சா இருக்கேன் போல. . .ஐ அம் சாரி. . .அவன் உன்னோட மெசேஜ் காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான். .போ போயி அவனுக்கு மெசேஜ் பண்ணு. . . ”
என கோபமாக சொல்லிவிட்டு என்னுடைய கிபிட் மற்றும் என் மொபைலை ஐ தூக்கி தூர வீசி விட்டு நடக்க ஆரம்பித்தான். . .

என்னால் அவனது வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடிய வில்லை. . என் அஷ்வின் என்னை சந்தேகப் பட்டுவிட்டானே. . என்னை ஷக்தியோடு சேர்த்து இவ்வளவு மோசமாக பேசி விட்டானே. . .என்னால் நம்பவே முடியவில்லை. . .நான் மீண்டும் அவனை கேட்டேன் . .

“சோ நான் அவன . . அவன லவ் பண்றேன்னு நீ நெனைக்குறியா அஷ்வின்.? நான் அவன லவ் பண்றதா நீ நம்புறியா? ”
என அவனிடம் கேட்டேன். .

என் மனதில் ஆயிரம் பயம் கஷ்டம் சோகம் இருந்தாலும் நான் அஷ்வினிடம் எதிர்பார்த்த அந்த பதில் ஒன்றே ஒன்று தான். .
“நோ ”
அவன் அவ்வாறு இல்லை என்று சொல்லி விட்டால் போதும். . .அவன் என் மீது கொட்டிய அனைத்து கொடுமையான மோசமான வார்த்தைகளையும் நான் மறந்து போவேன். . .

“ப்ளீஸ் அஷ்வின் திரும்பி நோ னு சொல்லு டியர்”
என என் மனதிற்குள்ளே நான் ஏங்கிய ஏக்கம் அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

அவன் நடப்பதை நிறுத்தினான் . .. ஆனால் திரும்ப வில்லை. . அப்படியே நின்று பேசினான். .

“நேத்து வரைக்கும் நான் அத நம்பல. . .ஆனா இவ்ளோ டேஸ் நீ என்கிட்ட பொய்யா பிஹேவ் பண்ண விதம் என்ன நம்பசொல்லுது. . இதுக்கு மேலையும் நான் முட்டாளா இருக்க விரும்பல. . .அட்லீஸ்ட் அவன் கிட்டையாவது உண்மையா இரு. . .”
என அவன் சொல்லிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.. அவன் என்னை திரும்பி பார்க்கவும் இல்லை. . . என் முகத்தை பார்க்க அவன் விரும்பவும் இல்ல. . ..

அங்கிருந்த எல்லோருமே என்னை மட்டுமே பார்த்தார்கள். . எவ்வளவோ முயன்றும் அஷ்வின் கடைசியாக சொன்ன இந்த வார்த்தைகள் கொடுத்த வலியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடிய வில்லை. . அவன் என்னை விட்டு விலகி நடக்கையில் சிறு குழந்தை தாயை இழந்து கதறுவது போல அழுதேன். . . . இந்த உலகத்தில் யாருமே இல்லாத ஒரு அனாதையாகிப் போன உணர்வு எனக்கு. ..

அவன் சென்று விட்டான் ஆனால் எனக்கே தெரியவில்லை எவ்வளவு நேரம் நான் சிலை போல அந்த இடத்திலே நின்று கொண்டு இருந்தேன் என்று. . . அழுது அழுது கண்களின் ஈரம் காய்ந்து போனது. . இதயம் உடைந்து சிதறியது.
அவன் தூக்கி வீசியதால் என் மொபைல் சிதறி போனது . . . நான் அதை எடுத்து ஒன்றாக்கி மொபைல் ஐ ஆன் செய்தேன். . சரியாக அந்த நேரத்தில் ரேணு எனக்கு கால் செய்தாள். .

அவள் என்னிடம் பேச ஆரம்பிக்கும் முன்னரே நான் அவளிடம்

“ரேணு இப்பவே பீச் வர உன்னால வர முடியுமா?”

“ஹே என்னடி ஆச்சி”

“ப்ளீஸ் நீ பர்ஸ்ட் கெளம்பி வா. ”

“ஓகே ஓகே நான் வரேன். .ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு நான் வந்துடறேன். . .”

பத்து நிமிடத்தில் ரேணு வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அன்று இரவு என்னை அவளுடனே தங்க வைத்து கொள்ள ரேணு என் அம்மாவிடம் அனுமதி கேட்டாள் .. . . . . இது தான் சென்னையில் நான் இருக்கப் போகும் கடைசி இரவு இதன் பின் ரேணுவும் அவளது ஊருக்குச் சென்று விடுவாள் நானும் மைசூர் சென்று விடுவேன் எனவே அம்மா என்னை ரேணுவுடன் இருக்க சம்மத்திதார். . .

ரேணு என்னை அவளது ரூமில் இருக்கச் சொல்லி விட்டு எங்களுக்காக டின்னர் வாங்கி வர வெளியில் சென்றாள். .பின்பு அவள் வந்ததும் என்னை சாப்பிட அழைத்தாள். . அப்போது நான் அழுது கொண்டு இருந்தேன். . ரேணு என் அருகில் வந்து அமர நான் அவள் மீது படுத்துக் கொண்டேன். . என்னால் அவன் பேசிய வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. .

எனக்கு அழுகை அதிகமாக வரவே ரேணு என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டாள் .நான் என் அழுகையை சிறிது நேரம் நிறுத்தி விட்டு நடந்த எல்லா விஷயத்தையும் ரேணு விடம் சொல்லி முடித்து மீண்டும் அழ ஆரம்பித்தேன். ..

ரேணு என் மொபிலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு என்னை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள். . . ஆனால் அவள் பேசிய ஒரு வார்த்தைக் கூட என் காதில் விழ வில்லை. . . நான் சோகமாகவே இருப்பதை பார்த்து ரேணு என் பள்ளி தோழர்கள் ஆதி மற்றும் விக்ரம் இருவரையும் அழைக்க மொபைலை எடுத்தாள். .

ஆனால் நான் அவளைத் தடுத்து விட்டேன் . . நிச்சயமாக அவர்கள் இருவரும் என் மீது கோபமாக இருப்பார்கள் என்று எனக்கு தெரியும். . ஏன் என்றால் அஷ்வினிடம் பழக ஆரம்பித்ததில் இருந்து நான் அவர்கள் இருவருடனும் சரியாக பேச வில்லை. . நான் அவர்களுடம் பேசாமல் அவர்களை புறக்கணித்த காரணத்தால் சில சமையங்களில் கோபம் கொண்டு அவர்கள் இருவரும் என்னிடம் நேரிலே வந்து என்னையும் அஷ்வினையும் திட்டி விட்டு செல்வார்கள். .

அந்த அளவிற்கு என் மீது வெறுப்பாக இருந்தனர் என் நெருங்கிய பள்ளி தோழர்கள் ஆதி மற்றும் விக்ரம். அவர்கள் கோபத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்தது. . இந்த தருணத்தில் அவர்களை இங்கே வர வைத்து அவர்களது பேச்சுகளையும் நான் சுமக்க விரும்பாமல் அவர்களை அழைக்க வேண்டாம் என ரேணு விடம் சொன்னேன். .

எல்லா கஷ்டத்திலும் கடைசிவரை உடன் இருப்பது நண்பர்கள் தானே. . .நான் ரேணு வீட்டில் இருப்பதை அறிந்துக் கொண்டு ஆதியும் விக்ரமும் என்னை பார்க்க வந்து விட்டனர் . . நடந்ததை எல்லாம் ரேணு அவர்களிடம் சொல்லி முடித்தாள். . .கோபம் கொண்டு திட்டுவார்கள் என நினைத்தேன் ஆனால் அவர்கள் என் சோகத்தை அதிகப்படுத்த விரும்பாமல் என்னை சமாதானம் செய்ய ஆரம்பித்தனர். . .

அவனோடு சேர்ந்து அவனது நினைவுகள் எல்லாவற்றையும் மறந்து விடுமாறு என்னை அறிவுறுத்தினர் . .. .மூன்று பேரும் என்னை சமாதானம் செய்து எனக்கு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தனர் ஆனால் என் மனதிலும் எண்ணத்திலும் அஷ்வின் என்னிடம் கடைசியாக சொன்ன
“அட்லீஸ்ட் அவன் கிட்டயாவது உண்மையா இரு”
என்ற அந்த வார்த்தை மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது.

அதிகாலை எனக்கு ட்ரெயின் என்பதால் நான் வீட்டிருக்கு கிளம்பினேன். .என் நண்பர்களும் என்னை வழி அனுப்ப என்னுடன் வந்தனர்.. . . எங்களுடைய ட்ரெயினும் வந்தது. . . . . நான் ட்ரெயினிற்கு அருகில் என் நம்பர்களோடு நின்றுக் கொண்டு இருந்தேன். . அப்போதும் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒழங்காக இருக்குமாறு எனக்கு அறிவுரைகளை கூறிக்
கொண்டே இருந்தனர் .

ஆனால் அப்போதும் கூட என் கண்கள் என்னை அறியாமலே அவனைத் தேடின. . அவன் அவ்வளவு பேசிய பின்பும் என் மனம் அவனை தேடியது. . அவன் என்னைப் பார்க்க வர மாட்டானா என்று ஏங்கியது. . . எனக்குத் தெரியும் அவன் வரமாட்டான் என்று. . இருந்தாலும் என் மன உணர்வுகளை என்னால் கட்டு படுத்த முடியவில்லை. . ஆனால் ஒன்று அது தான் நான் அவனுக்காக காத்திருந்த அந்த கடைசி தருணம். . .

15
நான் சில மணி நேர பயணத்திற்கு பின்னர் மைசூரை அடைந்தேன். .
மைசூர் புதிய ஊர் புதிய இடம் புதிய வீடு. . என்னதான் புதிய இடத்திற்கு வந்தாலும் புதிய மனிதர்களை சந்தித்தாலும் என் வாழ்கையின் கடந்த கால நிகழ்வுகளை எதுவும் மாற்ற இயல வில்லை. . .

நான் ட்ரெயினில் வந்து கொண்டு இருந்த பொது நான் அழுவதை என் அம்மா பார்த்து விட்டார்கள் .. . வேறு வழி இல்லாமல் நான் எல்லாவற்றையும் என் அம்மா விடம் சொல்லி விட்டேன். அவனது பெயரைத் தவிர. . .அம்மா என்னுடைய எல்லா நண்பர்களை யும் அவர்களுடன் என்னுடைய உறவையும் துண்டிக்குமாறு கூறினார். . நானும் என்னுடைய வலி களை மறக்க அம்மாவின் அறிவுரை உபயோகமாக இருக்கும் என்று நம்பி என் நம்பர்களுடன் பேசுவதையும் அவர்களுக்கு மெசேஜ் செய்வதையும் நிறுத்திக் கொண்டேன். . .
சென்னையை விட்டு கிளம்பும் போதே நான் என்னுடைய சிம்கார்டை தூக்கி வீசி விட்டேன். . .

என்னுடைய அறையில் கொண்டு வந்து வைக்க பட்ட என்னுடைய உடமைகள் எல்லாமே இன்னும் திறக்க படாமலே இருந்தன. . சாப்பிடுவதற்காக மட்டுமே நான் என் அறையை விட்டு வெளியேறுவேன். . .சில நேரங்களில் தூங்குவதை போல நடித்து என் அறையிலே தங்கி விடுவேன்.

என்னுடைய இரவுகள் அனைத்தும் என் தூக்க்கத்தால் நிரம்ப வில்லை என் கண்ணீராலே நிரம்பின . . தூக்கம் இழந்து வெறும் கண்ணீரோடு என் இரவுகள் கடந்து சென்றன. .சில நேரங்களில் தூங்கினால் என் பள்ளி பருவத்தில் எனக்கு வரும் கெட்டக் கனவுகள் மீண்டும் வந்து என்னை தூங்க விடாமல் செய்து விடும். . . .

போனில் யாருடனும் பேசுவதில்லை யாருக்கும் மெசேஜ் செய்வது இல்ல. .. எதையோ இழந்ததை போல நான் இருப்பதை பார்த்த என் தந்தை அம்மாவிடம் என்னை பற்றி விசாரித்தார். .. அம்மா நான் என் நண்பர்களை பிரிந்த சோகத்தில் இருப்பதாக கூறி அப்பாவை சமாளித்தார். . .என் அம்மாவும் பல முறை என்னை சமாதனம் செய்து என்னை என் சோகத்தில் இருந்து மீட்டு வர முயற்சித்தார். . . .

ஆனால் எந்த அறிவுரையும் என்னை தேற்ற வில்லை. . எப்போதும் ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு எதை எதையோ நினைத்து என்னுடைய முழு நாளையும் கழித்து விடுவேன். . .

காலம் செல்ல செல்ல நான் அவன் மீது வைத்திருந்த என்னுடைய அன்பும் காதலும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாற ஆரம்பித்தது. . . என் அம்மா முன்பை விட என்னை அதிக அக்கறையுடன் கவனிக்க ஆரம்பித்தார். . . . இப்போது செய்வதை அவர்கள் என்னுடைய குழந்தை பருவத்திலே செய்திருந்தால் நான் என்னுடைய தனிமையை உணர்ந்து இருக்கவே மாட்டேன். ..

அது மட்டும் இல்லாது அன்புக்காக ஏங்கிய நான் அஷ்வின் என் மீது காட்டிய அன்பினால் அவனது அன்பிற்கு அடிமையாகவும் ஆகி இருக்க மாட்டேன். . . இன்று இவ்வாறு எல்லா வற்றையும் இழந்தவள் போல நான் இருந்து இருக்கவே மாட்டேன். . .

என் குழந்தை பருவத்தில் அம்மாவும் அப்பாவும் என்னை ஒதுக்கி வைத்தது , நான் தனிமையில் தவித்தது , அஷ்வின் என் வாழ்வில் வந்தது , அவனது அன்பில் நான் தொலைந்தது , அவன் என் காதலை புரிந்து கொள்ளது என்னை கேவல படுத்தியது . .. இதில் நான் செய்த தவறு எது என்று தெரியவில்லை. . ஆனால் இவர்கள் செய்த தவறுக்கு நான் இன்று விதியால் தண்டிக்க பட்டு கொண்டு இருக்கிறேன் . .

இந்த சோகங்களையே நினைத்து கொண்டு என் உடல் நிலையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. . என் உடல் நிலை மிகவும் மோசம் ஆனது. . உடலில் ரத்தம் இல்லாமல் நடப்பதற்கும் கூட முடியாமல் எல்லா வற்றுக்கும் என் தாயை எதிர்பார்க்கும் நிலைமைக்கு நான் தள்ளப் பட்டேன். . மருத்துவர் என்னை திரவ உணவை மட்டுமே உட்கொள்ள சொல்லி அறிவுறுத்தினார். . அந்த அளவிற்கு என் உடல் நிலை நொந்து போனது. . . அஷ்வின் நினைவுகளே என்னை கொன்றுக் கொண்டு இருந்தன. ..

என்னுடைய இந்த நிலைமையை கண்டு என் அப்பா அம்மாவுடன் சண்டையிட ஆரம்பித்தார். . என்னைப் பார்த்து கொள்வதை தவிர உனக்கு வேறு வேலை என்ன என கேட்டு அம்மாவை திட்ட ஆரம்பித்தார். . நாளுக்கு நாள் அவர்களது அந்த சண்டை என்னால் அதிகமாகிக் கொண்டே போனது . . என் அம்மா வும் அப்பா வும் என் உடல் நிலையை கண்டு மிகவும் வருத்தம் கொண்டனர். . .

இவ்வாறு நான் அவனையே நினைத்து என்னை வருத்திக் கொள்வதால் எதுவும் மாறப் போவ தில்லை என்பதும் இதனால் நான் என் தாய் தந்தையை தினம் தினம் நோகடித்து அவர்களது நிம்மதியையும் சந்தோஷத்தையும் பறித்துக் கொண்டு இருக்கிறேன் எனவும் மெதுவாக எனக்கு புரிய ஆரம்பித்தது. . .

நான் எதற்காக அவனுக்காக இப்படி என்னையும் எனது தாய் தந்தையையும் வருத்திக் கொண்டு இருக்க வேண்டும். . என்னுடைய அழகான வாழ்கையை அவனை நினைத்து நினைத்து நான் கெடுத்து கொண்டது தான் மிச்சம். . . நான் என்னை மட்டும் வருத்தி கொள்வது மட்டும் இல்லது என் தாய் பெற்றோர் களில் சந்தோஷத்தையும் குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கிறேன் .

அவர்களின் சிரிப்பையும் என் சோகத்தால் நான் மறைத்துக் கொண்டு இருக்கிறேன். . . அவர்களின் மன வலி க்கு நானே காரணமாகிக் கொண்டு இருக்கிறேன். . ஆனால் அவன் நான் ஷக்தி யுடன் சந்தோஷமான ஒரு வாழ்கைய வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைத்துக் கொண்டு இருப்பான். . .

நான்கு வருடம் அவனுடன் பழகியும் அவன் ஒரு துளி அளவிற்கு கூட என்னை நம்பாமல் அத்தனை பேருக்கு முன்பாக என்னையும் என் குண நலன்களையும் கேவல படுத்தி விட்டு என்னை நடத்தை கேட்டவள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றான். . அதன் பிறகு கூட அவன் என்னை பற்றி நினைத்துப் பார்க்க வில்லை. . ஆனால் நான் மட்டுமே இங்கு இப்படி வருந்தி கொண்டு இருக்கிறேன். . .

இதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது அவன் மீது எனக்கு வெறுப்பே வந்தது. . எப்படி அவனை அணு அணுவாக காதலித்தேனோ அதே அளவுக்கு அவனை வெறுக்க ஆரம்பித்தேன். . அவன் நினைவை எனக்கு கொண்டு வரும் எல்லா வற்றின் மீதும் நான் வெறுப்பையே கொட்டினேன். . .என் தாய் தந்தை என்னுடன் இருகின்றனர். . எனக்கு அவர்கள் போதும் என்ற முடிவிற்கு வந்தேன். . .

கேம்பஸ் இன்டர்வியூ வில் என்னை வேலைக்கு நியமனம் செய்த அந்த கம்பெனியில் இருந்து எனக்கு வேலைக்கு அழைப்புக் கடிதம் வந்தது. . அவர்கள் சென்னையில் இருக்கும் அவர்களது பிரிவிற்கு என்னை நியமித்து இருப்பதையும் ஒன்றரை மாதத்திற்கு பின்பு வந்து கம்பெனியில் சேர்ந்து பணி புரிய ஆரம்பிக்குமாறும் அதில் தெளிவாக கூற பட்டு இருந்தது. . .

ஒரு மாதம் முடிந்தது என் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. நான் என் தாய் தந்தையரிடம் முன்னர் போல சகஜமாகவும் சந்தோஷமாகும் பேச ஆரம்பித்தேன் .. இது என் மகிழ்சிக்காக அல்ல. .. அவர்களின் சந்தோஷத்திற்காக. . . ஏனெனில் நான் சிரித்துக் கொண்டு நலமாக இருந்தால் தான் அவர்கள் இருவரும் சண்டையில்லாம் இருப்பார்கள். . . .

மைசூர் வந்த பிறகு நான் எந்த நண்பருடனும் தொடர்பில் இல்லை. . ஏன் ரேணு விற்கு கூட நான் கால் செய்ய வில்லை. . நான் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் .. அது தான் எனக்கு இப்போதைய மருந்து என்று நினைத்து கொண்டு சென்னைக்கு செல்வதற்காக என்னுடைய எல்லா உடமைகளையும் எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். . .

நான் இவ்வாறு சென்னை வருகிறேன் என்று கூட என் நண்பர்களுக்கு நான் சொல்ல வில்லை. . . சென்னை சென்ற பிறகும் கூட அவர்களுடன் எந்த பேச்சும் வைத்து கொள்ள வில்லை. .

16
ஒருவருடம் கடந்து விட்டது. .

நான் சென்னையில் இந்த ஆபீசில் பணி புரிவதை எப்படியோ தெரிந்து கொண்டு ஒருநாள் அஷ்வின் என்னுடைய அலுவலகத்திற்கு என்னைப் பார்க்க வந்து இருந்தான். .ஆனால் நான் அவனைப் பார்க்க விரும்ப வில்லை. . அவன் ரிஷப்ஷனில் எனக்காக காத்துக் கொண்டு இருந்தான். . நான் ரிசெப்ஷனிஸ்ட் அறையில் இருந்த போனுக்கு கால் செய்து போனை அவனிடம் கொடுக்குமாறு கூறினேன் அவனும் பேசினான். . .

“ஹலோ கீர்த்தி”

“ப்ளீஸ் நான் உங்கிட்ட ஏதும் பேச விரும்பல. . . இந்த உலகத்துல நான்
உயிரோட இருக்கணும்னு நீ நெனச்சா தயவு செஞ்சி இங்க இருந்து போயிரு. . நான் உன்ன மறுபடியும் பாக்கவே விரும்பல அஷ்வின் . . உன்ன நான் சொல்ல முடியாத அளவுக்கு வெறுக்குறேன். . குட் பை . .கெட் லாஸ்ட்”

என கோபமாக பேசி விட்டு நான் அழைப்பை துண்டித்தேன். . .

இதன் பிறகு நான் அந்த ஆபீசில் வேலை செய்யவும் விரும்ப வில்லை. எனக்கு தெரியும் அவன் மறுபடியும் இங்கு வருவான் அவன் அவ்வாறு வருவதற்குள் நான் இங்கிருந்து சென்று விட வேண்டு என்று நினைத்து ஒரு வருடமாக நான் வேலை செய்து கொண்டு இருந்த ஆபீசில் எனக்கு முதுகு வலியால் என்னால் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை என மெடிக்கல் செர்டிபிகேட் கொடுத்து விட்டு வேலையில் இருந்து விலகி மைசூருக்கே திரும்பிச் சென்றேன். .

நான் மைசூரிலே வேலை தேடிக்கொண்டு இருந்தேன். . இரண்டு மதங்களுக்கு பிறகு எனக்கு டெல்லி யில் வேலை கிடைத்தது. . .எங்கு இருந்தாலும் பரவாயில்லை நான் செல்ல வேண்டும் என்னால் வீட்டில் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்க முடியவில்லை. . என் பெற்றோரை சமாதானம் செய்து விட்டு நான் டெல்லி க்கு கிளம்பினேன். .

டெல்லியில் நான் வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தேன். . நான் என்னுடைய வேலையில் மட்டுமே என் கவனத்தை செலுத்தினேன். . சில சமயங்களில் ஒரே வேலை செய்து கொண்டு இருக்க சலிப்பு ஏற்படும் அந்த சமயத்தில் தனியாகவே வெளியில் செல்வேன். . யார் துணையையும் நாடுவதில்லை. .

அவ்வாறு நான் ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போதெல்லாம்
அவனது அந்த கடைசி வார்த்தை தான் என் நினைவிற்கு வரும். .
நான் யாருடனும் எந்த நட்பையும் வளர்த்து கொள்ள வில்லை. . என்னுடைய இரண்டு வருடங்கள் டெல்லியிலேயே கழிந்தது. . .

சில சமயங்களில் என் பெற்றோருக்கு கால் செய்ய என் மொபைலை தேடுவேன். . ஏன் என்றால் நான் என் மொபைலை என் கையில் வைத்திருக்கவே மாட்டேன். . .ஒரு காலத்தில் மொபைலே கதி என்று இருந்தவள் இன்று போனை கண்டாலே வெறுக்கும் அளவிற்கு மாறி விட்டேன். .

என் தந்தை எனக்காக தீவிரமாக மணமகன் வேட்டை நடத்தி கொண்டுக் இருந்தார். .. அவர் காட்டிய அனைவரையும் நான் காரணமே இல்லாமல் வேண்டாம் என்று நிராகரித்தேன். .

ஒரு சமயம் என் தந்தை இவ்வாறு நான் எல்லோரையும் நிராகரிப்பதை நினைத்து என் மீது கோபம் கொண்டு என்னிடம் சண்டை போட்டார். . எப்படியாவது வாக்கு வாதம் செய்து இந்த திருமணப் பேச்சை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயன்றும் இந்த முறை என்னால் என் வாதத்தில் வெற்றி பெற முடியவில்லை. . .

ஒரு பெரிய போராட்டம் நிறைந்த அந்த சண்டைக்குப் பிறகு நான் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தேன். . .அதுவும் என் தாய் தந்தைக்காக மட்டும் தான். . .எனக்கு அந்த திருமணத்தில் துளி அளவிற்கும் விருப்பம் இல்லாதல் நான் என்னை திருமணம் செய்து கொள்ளும் நபரைப் பற்றி எதுவும் தெரிந்துக்கொள்ள விருப்பப் பட வில்லை. . .

கடைசியாக மன மேடையில் தான் எனக்கு தெரிந்தது நான் திருமணம் செய்து கொள்ள போகிறவன் இந்த
“அஷ்வின்” தான் என்பது. .

என் கதையை சொல்லி முடிக்க இவ்வளவு நேரம் அதை எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக ஆச்சர்யத்துடன் கேட்டு கொண்டு இருந்ததாள் பூஜா. . .

19
இப்போது வாயைத் திறந்து பேசினாள். .

“சோ அஷ்வின தான் நீ கட்டிக்க போறனு உனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வர தெரியாதா? ”
என ஆச்சர்யமாக கேட்டள் .

“இல்ல. . தெரியாது”

“இப்போ நீங்க ரெண்டு பெரும் அட்லீஸ்ட் ஒழுங்கா பேசிக்க வாச்சும்
செய்றிங்களா?”

“இல்ல . . . மோஸ்ட்லி எங்க பேச்சே ஆர்கியூமென்ட் தான். . .”
பூஜா சில நிமிட மௌனத்திற்கு பிறகு என்னிடம் கேட்டாள். .

“அவன் மேல தப்பு இருக்குனு நீ நெனைக்கிறியா கீர்த்தி?”

“இல்ல தப்பு எம்மேலதான். . நான் ஷக்தியோட காண்டாக்ட் ல இருந்தத அவன் கிட்ட சொல்லி இருக்கணும். . ஆனா அதுக்காக அவன் என்ன பத்தி பேசின வாரத்தைங்க எல்லாமே சரியா? அதும் எல்லார் முன்னாடியும் என்ன நம்பாம எவ்ளோ மோசமா பேசிட்டான். . . . ”

“எது எப்டியோ இப்போ நீங்க ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆகிட்டிங்க . .எல்லாத்தையும் மறந்துட்டு புது லைப் ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க. .. ”
என சிரித்து கொண்டே சொன்னாள். ..

“நோ. . .என்னால முடியாது. . நான் அவன கல்யாணம் பண்ணிகிட்டதால ஏதும் மாறிட போறது இல்ல. அவன சமாதானம் பண்ணனும்னு எனக்கு அவசியமும் இல்ல . .தப்பு அவன்மேல ஆனா இந்த நிமிஷம் வர அவன் தப்புக்காக அவன் கொஞ்சம் கூட வருத்தப் பட்டதா எனக்குத் தெரியல. . இப்பவும் என்ன தான் திட்டிகிட்டு இருக்கான். .. ”

பூஜா என்னை பார்த்து சிரித்து கொண்டே அவளது கேபினுக்கு செல்கிறாள். .

“நோ என்னால முடியவே முடியாது. . . அவனோட சமதானமா போற எண்ணமே எனக்கு இல்ல. . எப்டி பூஜா இப்டி சொல்லலாம். . நான் அவனோட வாழப் போறதுக்கான சந்தர்ப்பமே இல்ல. .மொத்தல்ல அவன் கிட்ட இருந்து நான் டிவர்ஸ் வாங்கணும் . . . ”
என நினைத்து கொண்டு இருக்கும் போது என் மொபைல் ஒலித்தது. . அழைத்தது அஷ்வின் தான். . .ஆனால் அவன் எதற்காக எனக்கு கால் செய்ய வேண்டும் என்கிற கேள்வியுடனே மொபைலை ஆன் செய்து பேசினேன். .

அஷ்வின் எனக்கு கால் செய்ய நான் மொபைலை ஆன் செய்து பேசினேன்
“ஹலோ”
விருப்பமே இல்லாமல் பேசுவது போல் பேசினேன். .

“எங்க இருக்க நீ?”
அவன் கோபமாக கேட்டான். .

“இந்த நேரத்துல எங்க இருப்பேன். ஆபீஸ் ல தான். . .!!!”

“டைம் இப்போ 6. .. என்ன சீக்கிரமா வர சொல்லிட்டு நீ இன்னும் ஆபீஸ் ல இருந்து வரவே இல்லையா. .. எனக்கு என்ன வேல வெட்டி இல்லனு நெனசுகிட்டு இருக்கியா? உனக்காக நான் என் வேலையெல்லாம் விட்டுட்டு வந்தா நீ ஹாயா ஆபீஸ் ல இருக்கேனு சொல்ற. .என்ன வெறுப்பேத்தி பாக்குறியா என்ன .”
கோபமாக பேசினான்.

அப்போது தான் என் வாட்சை பார்த்தேன் நேரம் ஆறு மணி. . .என் கடந்த கால கதையை பூஜா விடம் சொல்லிகொண்டு இருந்ததால் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. . .இன்று வீட்டில் எனக்கும் அவனுக்கும் மூன்றாம் உலகப் போர் நிச்சயம் என்று நினைத்துக் கொண்டேன். . . நான் என்னுடைய வேலையை முடிக்க வில்லை. .

“ஹிம்ம் சாரி ஆக்சுவலி இப்போ என்னால வர முடியாது . .. எனக்கு நெறைய வொர்க் இருக்கு. ,. .. சோ சாரி. . ”

“நீ என்ன தான் நெனசிகிட்டு இருக்க. . . நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல . .நீ தான எனக்கு சீக்கிரம் வர சொல்லி மெசேஜ் பண்ண. . . . இப்போ வேல இருக்குனா என்ன அர்த்தம். . எனக்கு தெரியாது இன்னும் 30 நிமிஷத்துல நீ வீட்ல இருக்க . . இல்ல நான் உன் ஆபீஸ் கே வந்துருவேன். .

வந்து நான் தான் உன்னோட ஹஸ்பண்ட்னு உங்க ஆபிஸ்ல இருக்க எல்லாருக்கும் என்ன இண்ட்ரோ குடுத்துப்பேன். . அப்பறம் நீ என்னோட வைஃப் ஆ அவங்ககிட்ட நடிக்க வேண்டியது வரும் அது உனக்கு பரவால்லையா?
என அவன் சாதரணமாகவே சொல்லிக்கொண்டு இறந்தான். .

என்னையே அதிகாரம் செய்யும் அளவிற்கு அவனுக்கு என்ன தைரியம். . . . எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போது எல்லாவற்றையும் திருப்பி கொடுத்தது நானும் அவனுக்கு பதிலடி கொடுப்பேன். .. அவன் இப்போதும் கல்லூரியில் பார்த்த அதே அஷ்வின் தான். . இன்னனுமும் கொஞ்சம் கூட அவனது பிடிவாதத்தை மற்றிக்கொள்ளாமல் அப்படியே தான் இருக்கிறான். .

“சரி நான் வரேன். . ”
சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தேன். . .

இன்றைக்கு முடிக்காமல் போன என்னுடைய வேலைகளை நாளைக்கு காலை விரைவாக வந்து முடித்து விட வேண்டும். . .

அரை மணி நேரத்திற்குள்ளே நான் வீட்டை அடைந்தேன். .

வீட்டிற்குள் நுழைந்தேன். . அவன் சிப்ஸ் சாப்பிட்டு கொண்டே டி.வி பார்த்துக் கொண்டு இருந்தான். . எனக்கு வந்த கோவத்திற்கு அவனை அடித்து உதைக்க வேண்டும் போல் இருந்த்தது. . இப்படியே அவன் என்னை வெறுப்பேற்றி கொண்டு இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் அவனை நான் அடித்தே தீருவேன்..

என்னைப் பார்த்ததும் அவன் லேசாக புன்னகை செய்தான் .ஆனால் நான் அவனை வெறுப்பாகவே பார்த்தேன். . .

“ஹே எதாவது சாப்டியா? ”
என என்னை பார்த்து சிரித்து கொண்டே கேட்டான். . அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நான் என்னுடைய ரூமிற்கு சென்று விட்டேன். .

சிறிது நேரம் கழித்து நான் ரெப்ரெஷ் ஆகி கொண்டு வெளியில் வந்தேன். .

“உன்னோட வொர்கிங் டைம் என்ன?”
அவன் என்னிடம் கேட்டான். .

9 டு 6

“உங்க ஆபீஸ் ல நைட் ஷிப்ட் இருக்கா? அப்டி இருந்தா கேப் பெசிலிட்டீஸ் இருக்குமே?
என மிகுந்த அக்கறையுடன் கேட்டான் . . .

எதற்காக திடீரென்று என் மீது இவ்வளவு அக்கறை. .. என்பது போலவே நான் அவனைப் பார்த்தேன் . . .

“இல்ல. . நைட் ஷிபிட் இல்ல. . சில நேரத்துல வேல அதிகமா இருந்தா வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும். . ஏன் கேக்ற?”

“ஒன்னும் இல்ல. .நீ இப்டி லேட்டா வந்தா பாக்றவங்க அஷ்வின் வைஃப் இப்டி தெனமும் வீட்டுக்கு லேட்டா வரான்னு தான் பேசுவாங்க. . நான் தான் அதுக்கு பொறுப்பு. . ஆமா தானா?
சொல்லிவிட்டு அவன் ஒரு மாதிரியாக சிரித்தான். ..

“ஹே என்ன உனக்கு பிரச்சன? இப்ப எதுக்கு இப்டி தேவ இல்லாம பேசிக்கிட்டு இருக்க? என்ன குடிச்சிருக்கியா?”
“நோ நோ நான் எதார்த்தமா இருக்குற பேக்ட் தான் சொன்னேன். .. நான் ஸ்மோக்கிங் அண்ட் டிரிங்கிங் ரெண்டையும் நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு. . .”

அவன் இந்த இரண்டு பழக்கத்தையும் நிறுத்தி விட்டேன் என மிகவும் சந்தோஷமாக சொன்னான். எப்படி அவன் இதை இரண்டையும் விட்டான். . என்கிற ஆச்சர்யம் எனக்கு . . அதே சமயம் . . நான் தான் அவனுடன் இருக்கப் போவதில்லையே பிறகு அவன் எதை விட்டால் எனக்கென்ன என்று என்னுடைய ஆச்சர்யத்தை அவனிடம் காட்டிக் கொள்ள வில்லை. .

“கல்யாணம் ஆனா பர்ஸ்ட் டே டிவர்ஸ் பத்தி சொன்னியே அது என்ன ஆச்சு. . எனக்கு எப்போ டிவர்ஸ் கெடைக்கும். . .?”
வெறுப்புடன் அவனைக் கேட்டேன். .

“என்னது டிவர்ஸ் ஆ
என அவன் சிரித்துக் கொண்டே என்னிடம் பேசினான். .

ஆமா டிவர்சே தான். .

“என் தங்கச்சி க்கு இப்ப தான் மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு இந்த சமயத்துல நான் உங்கிட்ட இருந்து டிவர்ஸ் வாங்கிட்டா அது என்னோட தங்கச்சி வாழ்கையை யும் என்னோட ஒட்டு மொத்த பேமிலி யையும் பாதிக்கும். ..ஒரு வருஷம் வெயிட் பண்ணு. . அப்றம் தரேன்

முதலில் அவன் அவனது பாட்டிக்காக என்னைத் திருமணம் செய்து கொண்டான். . இப்போது அவனது தங்கைக்காக க ஒரு வருடம் நான் அவனுடன் வாழ வேண்டுமா . . .இல்லை அது என்னால் முடியாது. . .

“என்னால உன்னோட ஒரு வருஷம் வர வாழ முடியாது. . எனக்கு இப்பவே டிவர்ஸ் வேணும்”

“என்னாலையும் இப்போதைக்கு உனக்கு டிவர்ஸ் குடுக்க முடியாது. . அவ்ளோ தான். .. ”
கத்தி விட்டு அவனது ரூமிற்கு சென்றான். . .

ஒரு வருடம் அவனுடன் வாழ வேண்டுமா? . . .இந்த ஒரு வருடத்தில் எங்கே நான் அவனுடம் மீண்டும் பழைய மாதிரி நெருக்கமாகி விடுவேனோ என்று மனதிற்குள் ஒரு சிறிய பயம் எழ ஆரம்பித்தது. . என்ன தான் அவனை நான் முற்றிலுமாக வெறுத்தாலும் என் மனதின் ஒரத்தில் எங்கோ அவன் மீது சிறிய காதல் ஒட்டி கொண்டு தான் இருக்கிறது அதை நான் மறுக்க வில்லை. . ஆனான் எங்கே அந்த காதல் மறுபடியும் என் மனதை முழுவதுமாக ஆக்கரமித்து விடுமோ என்று எனக்கு பயமாக இருந்தது. . .

என் மனதின் ஓரத்தில் உள்ள அந்த காதல் மீண்டும் அவனிடம் என்னை காதலில் விழ வைத்து விடுமோ. . .இல்லை. .. . நான் மறுபடியும் மறுபடியும் தவறிழைக்க விரும்ப வில்லை. . .நான் நடந்த பிரச்சனைகளுக்காக இதுவரை
அவனிடம் மன்னிப்பு கேட்டதில்லை. . .ஆனால் நான் அவனுடன் இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் என் மனம் மாறிவிடும். . அவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவனுடன் சேர வேண்டும் என்கிற எண்ணமும் என்னோடு சேர்ந்து கொள்ளும். .. கடவுளே நான் அவனிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். . என மனதிற்குள் நினைத்து கொண்டு இருந்தேன். .

தொடரும். .

அப்போது அவன் ரூமில் இருந்து வெளியில் வந்து என் எண்ணங்களுக்கு தடை போட்டான். .

“ஹே”

“என்ன”

“நான் டின்னெர் கு வெஜிடபில்ஸ் வாங்க மறந்துட்டேன்.. .சோ நான் வெளியில போயி சாப்ட போறேன். . ”

“ஓகே பை”

“நீ என்ன பண்ண போற டின்னர் கு”

“எனக்கு பசிக்கல. . ”

என வீம்புக்காக சொல்லிவிட்டேனே தவிர நிஜமாகவே எனக்கு பசித்தது. . இவனால் தான் என்னுடைய மதிய உணவைக் கூட என்னால் சாப்பிட முடியாமல் போனது. .

“எவ்ளோ கல் நெஞ்சக் காரன் இவன். . ஒரு கருணைக்காக கூட என்னையும் டின்னர் க்கு வானு கூப்பிட தோனலையே இவனுக்கு. .ச்சே ”

மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தேன். . ஆனால் சில நொடிகளில்

“ஆனா அவன் எதுக்கு என்ன டின்னர் கு கூப்பிடனும். . அவன் யாரு எனக்கு . . ஏன் அவன் என்னையும் கூப்பிடணும்னு நான் எதிர் பார்க்குறேன். . ஒரு வேல நான் மாறிக்கிட்டு வரேனா. .. நோ. . நான் மாறல. .மாறவும் கூடாது. . அவனோட போறதுக்கு நான் பசியோடவே இருந்துக்கலாம். . ”

நான் இவ்வாறாக யோசித்து கொண்டிருக்கையில் அவன் மீண்டும் பேசினான். .

“உன்னப் பத்தி எனக்குத் தெரியும். .நீ பாதி நைட் ல எழுந்து சாப்பாடு கேட்டடாலும் கேப்ப. . என்னோட வா. . போயி சாப்டு வந்துரலாம். . நான் கார் ல வெயிட் பண்றேன். .வந்து சேரு. . .”
சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான். .

எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கும் பொறுப்பை என்னிடம் தரவே மாட்டான். .எப்போதும் எனக்கு கட்டளை இடுவதே அவனுக்கு வழக்கம். அவன் இன்னும் மாறவே இல்லை என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபித்து கொண்டு இருக்கிறான். . .

அவனது இந்த மூர்க்க தனத்தாலும் ஆணாதிக்க தனத்தாலும் தான் இந்த மூன்று வருடமாக அவனுக்கு எந்த பெண் தோழிகளும் கிடைத்து இருக்க மாட்டார்கள். . ஆனால் எனக்கு அவனிடம் பிடித்ததே இதுதான். . . இந்த குணங்களுக்காக தான் அவனிடம் நான் காதலில் விழுந்தேன். . இனிமேலாவது அவனுக்கு அமைதியாகவும் அன்பாகவும் பேசுவது எப்படி என்பதை யாராவது சொல்லிக் கொடுத்தால் தான் உண்டு. . .

சில நிமிடங்களில் நான் ரெடியாகிக் கொண்டு வெளியில் சென்று காரின் பின் பக்க சீட்டில் அமரச் சென்றேன். . அப்போது அவன்

“ஹலோ மேடம் நான் ஒன்னும் உனக்கு டிரைவர் வேல பாக்கல. . வா வந்து முன்னாடி உக்காரு. . .”

திறந்த கதவை மூடிவிட்டு நான் முன் சீட்டில் சென்று அவனுடன் அமர்ந்தேன். . முதல் தடவையாக அவனுடன் காரில் பயணம். . அதுவும் தனியாக. .நன்றாக தான் இருந்தது. . . நாங்கள் ஹோட்டலுக்கு சென்று சேரும் வரை எந்த பேச்சும் பேசிக்கொள்ள வில்லை. . .

ஹோட்டலை அடைந்ததும் எங்களது உணவை நாங்கள் ஆர்டர் செய்து உணவுக்காக காத்திருந்தோம். . அப்போது நான் நூடுல்ஸ் ஆர்டர் செய்ததைப் பார்த்து அவன் என்னைக் கேட்டான். . .

“சோ இன்னும் நீ நூடுல்ஸ் சாப்ட்டுட்டு தான் இருக்கியா?”
அவனுக்கு தெரியும் எனக்கு நூடுல்ஸ் எனது விருப்பமான உணவு என்று. . .

“ஆமா. . ”
சொல்லிவிட்டு அமைதி ஆனேன். .
அவன் மீண்டும் பேசினான். .

“எனக்கு முன்னாடி உங்க அப்பா உனக்காக பார்த்த மாப்பிள்ளை எல்லாரையும் நீ வேணாம்னு ரிஜெக்ட் பண்ணதா கேள்விப் பட்டேன். . . .எல்லாரையும் ரிஜெக்ட் பண்ணிட்டு எனக்கு மட்டும் எப்டி ஓகே சொன்ன?”

“நான் எப்டி எந்த நெலமையில இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கிட்டேனு உங்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். . அப்புறம் எதுக்கு இப்டி வெட்டித் தனமா கேள்வி கேட்டு இரிட்டேட் பண்ணி கிட்டு இருக்க?”

“சும்மா .ஒரு ஜெனரல் நாலேஜ் கு தான். . .”
சொல்லிவிட்டு அவன் புன்னகை செய்தான். .

அவன் என்னை கேள்வி கேட்கும் போது நான் மட்டும் சும்மா இருந்தால் எப்படி. . .நானும் அவனை ஒரு கேள்வி கேட்டேன். .
அப்போது நாங்கள் ஆர்டர் செய்த உணவுகளை பேரர் கொண்டு வந்து எங்கள் டேபிளில் வைத்தார். . .அவன் சாப்பிட ஆரம்பித்தான். . நான் சாப்பிடாமல் அவனை கேள்வி கேட்க ரெடியானேன்

“நீ ஏன் ட்ரிங்க்ஸ் பண்றத நிறுத்திட்ட? ”

“எனக்கு பிடிக்கல சோ நிறுத்திட்டேன்”
என கோபமாக கூறிவிட்டு அமைதி ஆனான். .

நான் கேட்ட ஒரு கேள்விக்கே அவன் இதுபோல கோபம் கொண்டான் ஆனால் இவ்வளவு நேரம் என்னை அத்தனை கேள்விகள் கேட்டு கொண்டு இருந்தானே எனக்கு எப்படி கோபம் வந்திருக்கும். . இவனை விட கூடாது என்று நினைத்து. நான் மேலும் மேலும் பேசினேன். .

“நீ காலேஜ் படிக்கும் போதெல்லாம் அத விரும்பி விரும்பி குடிப்பியே. . அப்புறம் எப்டி அத விட்ட? குடிக்கிற பழக்கத்த விடுற அளவுக்கு உன் வாழ்க்கையில அப்டி என்ன நடந்தது. .?”
கேட்டு விட்டு நானும் சிரித்தேன். .

“இப்போ நான் சாப்டனும்னு நெனைக்கிறியா சாப்ட கூடாதுன்னு நெனைக்கிறியா? எதுக்கு இப்டி ஸ்டுப்பிடிட்டி யா கேள்வி கேட்டுகிட்டு இருக்க?
அவன் வெறுப்பாக பேசினான். .

நான் ஏன் இவ்வாறு அவனிடம் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறேன். . உண்மையாகவே நான் ஸ்டுபிட் தான். . அதன் பிறகு நாங்கள் இருவருமே எதையும் பேசிக் கொள்ள வில்லை. . . சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் எதார்த்தமாக அவனை பார்த்தேன். .

எதார்த்தமாக பார்த்த நான் சில நொடிகளில் அவனை ஆழ்ந்து கவனித்தேன். . அந்த கருப்பு நிற சட்டையில் அவன் மிகவும் அழகாக தெரிந்தான். .. அந்த இரவில் மெழுகு வர்த்தி ஒளியில் நாங்கள் மட்டும் தனியாக இருந்ததால் வேறு எதையும் பார்க்க எனக்கு வாய்ப்பில்லை. . .சொல்ல போனால் அவனை திருட்டு தனமாக ரசித்து கொண்டு இருந்தேன் என்று கூட சொல்ல லாம் ..

அவன் அவ்வளவு ஸ்மார்ட் ஆக இருந்தான். . . நான் அவனை பார்க்க கூடாதென என் கண்களைத் திருப்பினாலும் என்னை விட பிடிவாத குணம் கொண்ட எனது கண்கள் என் கட்டளைக்கு அடி பணிய மறுத்தது. . .ஒரு கட்டத்தில் நான் அவனை பார்த்து கொண்டு இருப்பதை அவன் பார்த்து விட்டான். .

“எதுக்கு என்ன இப்டி பாத்துகிட்டு இருக்க?”

“நத்திங்
என சொல்லி விட்டு நான் என் முகத்தை திருப்பிக் கொண்டேன். . .

இனிமேல் நான் அவனுடன் தனியாக வருவதை தவிர்த்தே ஆக வேண்டும் இல்லையெனில் அவன் கண்கள் என்னை நிச்சயமாக மயக்கிவிடும். . இனி நான் தான் விழிப்பாக இருக்க வேண்டும். .

நான் அவனுடன் இல்லாத இந்த மூன்று வருடங்களில் அவன் மிகவும் நல்ல வனாக மாறிவிட்டு இருப்பது மட்டும் இன்றி மிகவும் அழகாகவும் மாறி இருப்பது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. .. இந்த மூன்று வருடம் நான் இல்லாலாமல் அவன் சந்தோஷமாக தான் இருந்து இருக்கிறான் . ..

ஆனால் நான் தான் அவனையே நினைத்து நினைத்து இப்படி ஒல்லியாக மாறி என் அழகையே இழந்துள்ளேன். . சாப்பிடாமல் யோசித்துக் கொண்டே இருக்க என் தட்டில் உணவு அப்படியே இருந்தது. . .

” உன் ப்ளேட் ல நூடுல்ஸ் அப்டியே இருக்கு. . . சாப்பிடும் போது அப்டி என்ன யோசனை உனக்கு . . ”

அவன் நினைவு படித்திய பிறகே எனக்கு தெரிந்தது நான் சாப்பிடாமல் அமர்ந்து இருப்பது. . . ..பிறகு நான் என் உணவில் மட்டும் கவனத்தை செலுத்தி சாப்பிட்டு முடித்தேன். . .

next

சாப்பிட்டு முடித்தப் பிறகு நான் காரில் சென்று அமர்ந்துக் கொண்டேன். . அவன் வந்து காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான். . நான் வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். . அப்போது திடீரென அவன் காரை நிறுத்தினான். .

“என்ன ஆச்சு?”

” ஆக்சிடன்ட்னு நெனைக்கிறேன். . ”

இனம் புரியாத பயம் என்னுள் தொற்றிக் கொண்டது. ஆக்சிடன்ட் , டெத் அண்ட் டெட்பாடீஸ் இதையெல்லாம் பார்த்தாலே எனக்கு பயம்.

ஆக்சிடன்ட் ஆனதால் அந்த இடம் முழுவதும் டிராபிக்கில் திணற இவன் காரை மெதுவாக செலுத்திக் கொண்டு இருந்தான். . கார் அந்த ஆக்சிடன்ட் ஆன நபரைக் கடக்கும் போது பார்க்க கூடாது என எவ்வளவோ மனதைக் கட்டு படுத்தியும் நான் அந்த நபரை பார்த்து விட்டேன். . உயிரை இழந்து முற்றிலும் ரத்தத்தால் நனைந்து இறந்து கீழே விழுந்து கிடந்த அந்த நபரை நான் பார்த்து விட்டேன். . .என் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வழிந்து கீழே விழுந்தது. .

“பக்காத கீழே குனிஞ்சிக்கோ ”
என அவன் சொல்ல

“நான் ஆல்ரெடி பாத்துட்டேன். . ”
என கண்களைத் துடைத்தேன். .

அவன் காரை வேகமாக ஒட்டினான். . காரில் வரும் போது அவன் என் கவனத்தை திருப்ப அதிகமாக பேசினான். . .ஆனால் என் மனம் அந்த காட்சியை விட்டு வெளியில் வரவே வில்லை. . .ஒரு ஆழ்ந்த துக்கம் என்னை சூழ்ந்தது. ..

நான் வீட்டிற்கு வந்து என் முகத்தைக் கழுவிக்கொண்டு அலாரம் வைத்து விட்டு மெத்தையில் படுத்தேன். . .ஆனால் என் கண்கள் முழுவதும் அந்த விபத்தின் காட்சியே படர்ந்து இருந்தது. .. தனியாக தூங்குவதற்கு நான் மிகவும் பயந்தேன். . .

கண்டிப்பாக விபத்தில் இறந்த அந்த நபரின் குடும்பம் இவரது இழப்புக்காக கதறும். . எவ்வளவு ரத்தம் கீழே வழிந்துக் கொண்டு இருந்தது. . அவர் சற்று கவனமாக அவரது வாகனத்தை செலுத்தி இருக்கலாம். . இவரை இழந்த அந்த குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகுமோ தெரியவில்லை. . . இது போன்ற நிறைய எண்ணங்கள் என் மனதில் வழிந்து ஓடிக் கொண்டு இருந்தன. .

அந்த இரவு என்னால் சரியாக தூங்கவே முடிய வில்லை. . ஒரு கட்டத்தில் நான் கெட்டக் கனவால் பயந்து எழுந்து விட்டேன். . மனதில் எழுந்த அந்த பயத்தல் என் உடல் முழுவதும் படிந்த வியர்வையால் என் ஆடைகள் ஈரம் ஆகின. . என் மொபைலை எடுத்து நேரத்தைப் பார்த்தேன் . . நேரம் சரியாக ஒரு மணி. .

அஷ்வினிடம் இருந்து 5 மெசேஜ் வந்து இருந்ததை கவனித்தேன். .

“ஆர் யூ ஓகே ?”

“அந்த இன்சிடென்ட் பத்தி நெனைக்காத. .. தூங்கு. . .”

“காட் கிட்ட ப்ரே பண்ணிட்டு தூங்கு. . ”

“தூங்கினியா இல்லையா?”

“ஓகே குட் நைட் ஸ்லீப் வெல்”

சில சில நிமிட இடைவெளியில் இந்த 5 மெசேஜ் களை அனுப்பி விட்டு இருந்தான். . வெகு நாட்களுக்குப் பிறகு அவனது மெசேஜ் ஐ பார்த்து நான் இன்று தான் சிரிக்கிறேன். ..

“நானும் அவனுக்கு குட் நைட் என்று ரிப்ளை செய்தேன். . .

அவனும் விழித்து கொண்டு இருந்தான் போல. .என்னுடைய மெசேஜிற்கு உடனே பதில் மெசேஜ் வந்தது.. .

“நீ இன்னும் தூங்கலையா?”
என என்னைக் கேட்டான். . .

“நான் தூங்கிட்டேன். . ஆனா நடுவுல ஒரு பெரிய கெட்ட கனவு கண்டேன். அதான் முழுச்சிட்டேன். . நீ இன்னும் தூங்காம என்ன பண்றே?”
“நான் புக் படிச்சிகிட்டு இருக்கேன். . உனக்கு தூக்கம் வரலையயா அகேன் ?”

“இல்ல. . எனக்கு ஃபுல்லா அந்த ஆக்சிடன்ட் நியாபகமாவே இருக்கு . . .”

அனுப்பி விட்டு அவனது ரிப்ளைக் காக காத்துக் கொண்டு இருந்தேன் ஆனால் அவன் வெகு நேரம் கழித்து ரிப்ளே செய்தான். .

“உனக்கு எந்த பிரச்னையும் இல்லனா நான் உன்னோட ரூம் கு வரட்டுமா?”
அவனது இந்த மெசேஜ் வந்ததும் எனக்கு என்ன சொல்வது என்றே புரிய வில்லை. .ரிப்ளை செய்யாமல் வெகு நேரமாக நான் அந்த மெசேஜ் ஐயே பார்த்துக் கொண்டு இருந்தேன். . .அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. .

நான் என்ன ரிப்ளை செய்வது. .
எஸ் ஆர் நோ. ..

இப்போது நான் என்ன செய்வது. . அவன் எதற்காக இவ்வாறு கேட்டான் என எனக்கு தெரியவில்லை. .ஒருவேளை நான் வா என்று சொல்லி விட்டால் என்னை மிகவும் மன வலிமை குன்றியவளாக நினைத்து கொள்வனோ. . வேண்டாம் என்று சொன்னால் அவன் என்ன நினைப்பான். . நிச்சயமாக நான் திமிராக நடந்து கொள்வதாகவே நினைப்பான். . என்னால் இதை இரண்டையும் சொல்ல முடியாது. .
“உன் இஷ்டம். . .”
என நான் ரிப்ளை செய்தேன். ..

அவன் ஓகே என்று பதில் அனுப்பினான். .

என்னுடைய பதில் அவனுக்கு கோபத்தை தந்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன். .திருமணம் ஆன பின்பு அவன் இவ்வளவு தூரம் இறங்கி வருவது இது தான் முதல் முறை. . ஆனால் இந்த முறை நான் அதிகமாக நடந்து கொண்டேனோ. . .எது எப்படியோ இப்போதும் இழப்பு எனக்கு தான். .கல்லூரியில் படித்த போது எப்போதும் நான் தான் முதலில் சமாதானத்திற்கு வருவேன். . இப்போதும் அதை நான் தொடர விரும்பவில்லை. .

அவனுக்கு வர வேண்டும் என்று தோன்றினால் வரட்டும் நான் அவனை வா என்று அழைக்க மாட்டேன். . இவ்வாறு நான் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவன் என் கதவை வந்து தட்டினான். . திடீரென்று என் மனதில் ஏதோ படபடப்பு. . அவன் வருவான் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை .

நான் சென்று கதவைத் திறந்தேன். . .

“ஹே ஆர் யூ ஓகே. . ”
அவன் மிகுந்த அக்கறையோடு கேட்டான். .

“கொஞ்சம் பெட்டெர். .. ”

“நான் உள்ள வரலாமா? ”
அவன் பவ்யமாக கேட்டான். .

எவ்வளவு பெரிய முட்டாள் நான். .அவன் எனக்காக அவ்வளவு தூரம் இறங்கி வந்தும் நான் அவனை உள்ளே வா என்று கூட அழைக்காமல் வெளியிலே நிற்க வைத்து பேசிக்கொண்டு இருக்கிறேன். . . .

ஆனால் ஒன்று அவனை நான் மிக அருகில் பார்க்கும் போது என்னுடைய எல்லா பழைய கோபங்களும் மறந்து போகிறேன். . இனி எக்காரணத்தை கொண்டும் அவனுடன் நெருங்கி நின்று பேசி விடவே கூடாது, . .

நான் நகர்ந்தேன். .அவன் உள்ளே வந்து என் மெத்தைக்கு அருகில் இருந்த சேரில் அமர்ந்தான். . நான் என் மெத்தையின் மீது சென்று அமைந்தேன். .

“நான் தான் உங்கிட்ட சொன்னேன் ல அத பாக்காதணு. .அப்புறம் எதுக்கு பாத்த?”

“நீ சொல்றதுக்கு முன்னாடியே நான் பாத்துட்டேன். . ”

“ஹிம்ம்ம் அத பத்தி நினைக்காத. . மார்னிங் ஆபீஸ் போகணும் ல. . நீ வேற ரொம்ப சின்சியரான வொர்க்கர். . .சோ படுத்து கண்ண மூடி தூங்க ட்ரை பண்ணு. . .”

அவன் என் எண்ணத்தை திசை திருப்ப எண்ணிப் பேசினான். . ஆனால் எனக்கு மீண்டும் மீண்டும் அந்த விபத்தின் காட்சியே கண்களில் வந்து சென்று கொண்டு இருந்தது. .

“நான் முழுசா அந்த எண்ணத்துக்குள்ள மூழ்கிட்டேன். .என்னால சீக்கிரம் அதுல இருந்து வெளியில வர முடியது. . அப்டியும் நான் தூங்கினா அந்த தாட் தூக்கத்துல கெட்ட கனவா வந்து மறுபடியும் என்ன எழுப்பி விட தான் போகுது. . அப்டி நான் அகேன் பயந்து எந்திரிக்கிறத விட இப்டி முழிச்சிகிட்டு உக்காந்து இருக்கறது எவ்வளவோ பெட்டர். . . . நீ போயி படு. . என்னவோ புக் படிச்சிகிட்டு இருக்குறதா சொன்னல அந்த புக்க என்கிட்ட குடு நான் அத படிச்சு கிட்டு இருக்கேன். . .”

“புக்கா என்ன புக்?”

“நீ தான மெசேஜ் ல புக் படிச்சிகிட்டு இருக்கறதா சொன்ன?”

“ஓ அதுவா? . .அது ஒரு மன்த்லி மேகசின். . எனக்காக வாங்கினேன். அதனால அத உனக்கு குடுக்க மாட்டேன். . ”
என குறும்புத்தனமாக அவன் சொல்லவே எனக்கு சிரிப்பு வந்து விட்டது. .

“தட்ஸ் ஓகே. . என்கிட்ட கொஞ்சம் புக்ஸ் இருக்கு நான் அத படிசுக்குறேன். உன் புக்க நீயே உன் லாக்கர் ல போட்டு பூட்டி வச்சுக்க?”

“இப்டி நைட் லாம் புக் படிச்சுகிட்டு இருந்தா நைட் ஃபுல்லா லைட் எரிஞ்சி கிட்டே இருக்கணுமா? கரண்ட் வேஸ்ட் பண்ணாத. . . .நீ ஒன்னும் கரண்ட் பில் கட்டல. .நான் தான் கட்டுறேன் . .நீ உன்னோட புக்ஸ நாளைக்கு காலையில ஆபீஸ் கு லீவ் போட்டு கூட படி. . ”

“இப்ப என்ன என்ன தான் பண்ண சொல்ற நீ?”

“நத்திங் தூங்கு. . .”

உண்மையாகவே சொல்கிறேன். . இந்த உலகத்தில் இவனை மாதிரி ஒருவனை நான் பார்த்ததே இல்லை. . .இப்போது நான் தூங்க வேண்டும் அதை தான் அவன் எதிர்ப் பார்க்கிறான். . ஆனால் அவன் அதை ஒரே வார்த்தையில் தூங்கு என்று சொல்லி விட்டு போயிருக்கலாமே. . அதை விட்டு இவ்வளவு பேச வேண்டுமா? .

கடவுளே அவன் நல்ல நேரம் அவனை நான் திருமண செய்து கொண்டேன். இதே வேறு ஒரு பெண்ணாக இருந்து இருந்தால் அவனுடைய இந்த செய்கைகளை சகித்துக் கொள்ள முடியாமல் திருமணமான முதல் வாரத்திலே
இவனிடம் இருந்து டிவர்ஸ் வாங்கிக் கொண்டு போயிருப்பாள். .

“எனக்கு இப்போ தூக்கம் வரல. . ”
அதன் பின்பு அவன் எதுவும் பேச வில்லை. .

“அப்டி கரண்ட் பில் அதிகமா வரும்னு நீ பயந்தா எனக்கு எதாவது கதை சொல்லு.. நா அத கேட்டுகிட்டே தூங்குறேன். இல்லனா நான் புக் தான் படிப்பேன் . ”
நான் அமைதியாகவே பேசினேன். .

“கத சொல்றதுல லாம் நான் எக்ஸ்பெர்ட் கெடையாதே. . .இங்க பாரு நீ தூங்கினா தான் நான் இந்த இடத்த விட்டு நகருவேன். . நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ. ஐ டோன்ட் கேர்.. ”

“குட் நைட்”
என நான் சொல்லிவிட்டு என் மெத்தையில் படுத்தேன். . .

அவன் எனக்கு அருகில் வந்து அமர்ந்தான். . அவன் என் அருகில் இருந்தால் இந்த மாதிரி கெட்டக் கனவுகள் எனக்கு வராது என்று அவன் நினைத்து இருப்பான். . அவனது எண்ணம் சரியே. .துணைக்கு யாராவது இருந்து இருந்தால் நிச்சயமாக எனக்கு இந்த கனவுகள் வந்து இருக்காது. .

அடுத்த நாள் காலை. . அவன் என்னுடைய அறையில் இல்லை. . ஒரு வேலை நான் கனவு ஏதாவது கண்டேனா?. . .நோ. . அது கனவல்ல. . எல்லாமே நிஜம். .ஆனால் அவன் எங்கே போனான்? நான் வெளியில் வந்து அவனது ரூமிற்கு சென்றேன். . அவனது அறை திறந்து இருந்தது. .அவன் உள்ளே தூங்கிக் கொண்டு இருந்தான். . நேற்று இரவு பார்த்த அதே சட்டையுடன். . .

என் அறையில் இருந்து வெளியேறி அவன் எப்போது தூங்கி இருப்பான் என்று எனக்கு தெரியவில்லை. . ஒரு வேளை அவன் மிகவும் தாமதமாக கூட தூங்கி இருக்கலாம். .எனவே அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல் கதவை மூடி விட்டு என் அறைக்கு குளிக்க சென்று விட்டேன். . குளித்து முடித்ததும் அவனுக்கும் ஆபீஸ் கு நேரம் ஆகி விட்டதால் அவனை எழுப்பி விட்டேன். .

அவனும் எழுப்பி விட்டதற்காக எனக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் வேலைகளை பார்க்க சென்றான். .. . அவன் தாமதமாக ரெடியாகி கொண்டு இருந்ததால் அவனால் ஆபிசிற்கு உணவு சமைத்துக் கொண்டு செல்ல முடியாது எனவே அவனுக்கும் சேர்த்து நானே சமைத்து அவனை கொண்டு போக சொல்லி விட்டேன். .

பிறகு நாங்கள் இருவரும் ஆபீசிற்கு கிளம்பினோம். .அவன் என்னை என்னுடைய ஆபீசில் இறக்கி விட்டு அவனது ஆபீசிற்கு சென்றான். .
நேற்றே நிறைய வேலைகள் செய்யாமல் விட்டதால் அதை செய்து முடிக்க நான் விரைவாக சென்று என் வேலைகளை ஆரம்பித்தேன். .

லஞ்ச் பிரேக். .

நான் பூஜாவுடன் சாப்பிட அமர்ந்தேன். . அவள் அவளது காதலனுடன் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தாள். . நானும் ஒரு காலத்தில் என்னை சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் மறந்து இப்படி தான் பேசிக் கொண்டு இருந்தேன். . ஆனால் இப்போது ?. . .. என் முகத்தில் ஒரு விரத்தியான புன்னகை. .

என் மொபைலில் மெசேஜ் டோன் கேட்டது. . அஷ்வின் எனக்கு மெசேஜ் செய்து இருந்தான். .

“இருக்கியா?”

“யா சொல்லு”

“லஞ்ச் நல்லா இருந்துச்சு. . தேங்க்ஸ்”

“இட்ஸ் ஓகே.”

அதன் பின் அவனிடம் இருந்து எந்த ரிப்ளை யும் வர வில்லை. . நான் சாப்பிட்டு முடித்தேன். .

என்னுடைய ப்ராஜெக்ட் மேனேஜர் என்னை அழைத்து எனக்கு டெல்லிக்கு டிரான்ஸ்பர் கிடைத்து இருப்பதாக தெரிவித்தார். . நான் இந்த ஆபீசிற்கு வந்த முதல் நாளே என்னுடைய டிரான்ஸ்பர் காக விண்ணப்பம் செய்து இருந்தேன். .. ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. .

அதுவும் நல்லதுக்கு தான். . இப்போதெல்லாம் நான் அதிகமாக அவனைப் பற்றி நினைத்து கொண்டு இருக்கிறேன். . இது எனக்கு நல்லதல்ல. . அவனது நினைவுகள் என்னை முற்றிலும் மாற்றி விடும் அதற்கு முன்பாகவே நான் இங்கிருந்து செல்ல வேண்டும. .

மறுபடியும் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது. .

“ஹலோ”

“ஹே கீர்த்தி அம்மா இன்னிக்கு ஈவினிங் நம்ம வீட்டுக்கு வராங்க. . இப்போதான் எனக்கு கால் பண்ணி சொன்னங்க. . ”

“என்ன நம்ம கிட்ட கூட சொல்லாம இப்டி திடீர்னு. வராங்க?”

“அம்மா என் தங்கச்சி கல்யாணத்துக்காக இங்க ஷாப்பிங் பண்ண வந்து இருக்காங்க. . அம்மா மட்டும் இல்ல என்னோட ரிலேட்டிவ்ஸ் லாம் நெறைய பேரு வராங்க. .. ”

“ஓ அப்போ ஓகே நான் இன்னிக்கு என்னோட ப்ரெண்ட் பூஜா வீட்லையே தங்கிக்கிறேன். .”

“என்ன வெளையாடுரியா? நமக்கு கல்யாணம் ஆயிருச்சு. . அத நியாபகத்துல வச்சுக்கோ . .நமக்குள்ள இருக்குற பிரச்சனைய அவங்களுக்கு காமிச்சுக்க வேணாம். . நாம இன்னிக்கு சீக்கிரமா வீட்டுக்கு போகணும் எல்லாத்தையும் ஒழுங்கா அரேஞ்ஜ் பண்ணனும். . என்னோட அம்மா எல்லாத்தையும் நோட் பண்ணுவாங்க.. சோ ப்ளீஸ் தயவு செஞ்சு அவங்க முன்னாடி உன்னோட வெறுப்ப காமிச்சிறாத. . ”

“சோ இன்னிக்கும் என் வேலைய பாதியிலேயே விட்டுட்டு வரனுமா?”

“அவங்க உன்னோட மாமியார் கீர்த்தி நீ தான் பாத்துக்கணும். . ”
என ஒரு வித வெட்கத்தோடு சொன்னான். .

“சரி நீ போகும் போது என்னையும் பிக் அப் பண்ணிக்கிட்டு போ..” சொல்லிவிட்டு நான் கால் கட் செய்தேன். . .

இதை பற்றி பூஜாவிற்கு சொல்ல

“உன்னோட கோவத்த எல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு அவங்க முன்னாடி அஷ்வினுக்கு ஒரு நல்ல வைஃப் ஆ அட்லீஸ்ட் நடி. . .. அவங்க போகற வர அஷ்வின் மேல உனக்கு இருக்க கோவத்தையெல்லாம் அவங்க முன்னாடி காமிச்சு இருக்குற பிரச்சனைய இன்னும் பெருசு பண்ணிறாத. .”
என அவள் எனக்கு அறிவுரை கூறி அனுப்பினாள். .. .

நாங்கள் இருவரும் வீட்டிருக்கு வந்தோம்.. என்னுடைய ரூமில் நான் வைத்திருந்த பாதிக்கும் அதிகமான பொருட்களை அவனது ரூமில் அவனது பொருட்களோடு என்னுடையதும் சேர்த்து வைத்தேன். . . நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என பார்ப்பவர்கள் நம்பும் அளவிற்கு எங்களது வீட்டை மாற்றி அமைத்தோம். .

நாங்கள் இருவரும் சேர்ந்து இது போன்ற வேலை களை செய்தது எனக்கு பிடித்தது. . அவன் அவனது அம்மா மற்றும் வந்திருந்த உறவினர்களை அழைத்து வரச் சென்று விட்டான். . நான் அவர்கள் அனைவருக்காகவும் இரவு உணவைத் தயாரித்தேன். .

அரை மணி நேரம் கழித்து அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். . நான் அவர்கள் அனைவரையும் வரவேற்றேன். .சிறிது நேரம் எல்லோருடனும் பேசி விட்டு அவர்களை சாப்பிட அழைத்துச் சென்று நானே உணவை பரிமாறினேன். .அவர்கள் வந்ததில் இருந்து அஷ்வின் என்னை கணவன் போல அதிகாரம் செய்தது ஒரு சில சமயத்தில் எனக்கு சிரிப்பையே வரவைத்தது. . .

நான் அவனது அம்மாவை என்னுடன் படுத்து கொள்ளுங்கள் அஷ்வின் ஹாலில் படுத்து கொள்ளட்டும் என கூறினேன். .ஆனால் அவர்கள் அதை மறுத்து நீங்கள் ஒன்றாக படுத்து கொள்ளுங்கள் நான் பக்கத்து அறையில் படுத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். .

அஷ்வினும் அவரை என்னுடன் படுத்து கொள்ள சொன்னான் அப்போதும் அவர் ஒத்து கொள்ள வில்லை. . அவர் நாங்கள் என்னவோ அவருக்காக எங்களது சந்தோஷத்தை தியாகம் செய்வது போலவே நினைத்தார். . ஆனால் உண்மை என்ன வென்று எங்களுக்கு அல்லவா தெரியும். .

நான் கிட்சனை சுத்தம் செய்து கொண்டு இருந்தேன். . அப்போது அவனது அம்மாவும் அங்கே வந்தார்.. .

“நீ போ கீர்த்தி நான் இதெல்லாம் பண்ணிக்கிறேன். . ”
என ஒரு தாயை போல அவ்வளவு அக்கறையாக சொன்னார்கள் . .

“பரவால்ல ஆண்டி. .நீங்க ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்து இருக்கீங்க
டயார்ட்டா இருக்கும் உங்களுக்கு. ..நீங்க போயி படுங்க நான் பாத்துக்குறேன். . ”
சொல்லிவிட்டு நான் சுத்தம் செய்து கொண்டு இருந்தேன். .அப்போது அவர் என் அருகில் வந்து

“எதாவது நல்ல செய்தி இருக்கா கீர்த்தி?”
என என்னை கேட்க எனக்கு ஒன்றும் புரிய வில்லை. .

“எத பத்தி கேக்றிங்க ஆண்டி?”
நிஜமாகவே அவரது கேள்வியின் அர்த்தம் எனக்கு புரியாமலே நான் அவ்வாறு கேட்டேன். ..

“உங்க ரெண்டு பேருக்குள்ளையும் தான்”
என அவர் சொல்லலி விட்டு ஒரு மாதிரி வெட்க்கப் பட்டுச் சிரித்தார். .

அவரது உடல் மொழியிலும் முக பாவனையிலுமே தெரிந்து கொண்டேன் அவர் எதை பற்றி கேட்கிறார் என்று. . . என்னால் எந்த பதிலும் சொல்ல முடிய வில்லை. . திணறி கொண்டு இருந்த நேரத்தில் சரியாக அஷ்வின் வந்து என்னைக் காப்பாற்றி விட்டான். .

“ஏம்மா அப்பா வரல. .அவரையும் கூட்டிகிட்டு வந்து இருக்கலாம் ல. . .”

“அவர் கல்யாண வேலையில பிசியா இருக்காரு டா. . அவரும் இங்க வந்துட்டா அங்க இருக்க வேலையெல்லாம் யாரு பாத்துப்பாங்க. . சரி அத விடு ? நான் உன் பொண்டாட்டி கிட்ட ஒரு கேள்வி கேட்டேன் ஆனா அவ இப்ப வர எனக்கு எந்த பதிலும் சொல்லல. . ”

அஷ்வின் என்னைப் பார்த்துக் கொண்டே ஆண்டியிடம்

“என்ன கேட்டிங்க”
என ஒரு வித பதற்றத்துடனே கேட்டான். . .

ஆண்டி என்னிடம் கேட்ட அதே கேள்வியை அவனிடமும் கேட்க அவனும் என்னைப் போலவே திணறிக்கொண்டு என்னை மீண்டும் பார்த்தான். . நான் கிட்சனில் இருந்து வெளியில் வந்து விட்டேன். .பிறகு அஷ்வின் என்ன சொல்லி அவரை சமாளித்தான் என எனக்கே தெரிய வில்லை. .

நான் அவனது ரூமிற்கு சென்று தூங்குவதற்காக மெத்தையை சரி செய்து கொண்டு இருந்தேன். .அஷ்வின் ரூமிற்குள் வந்தான். .

” எனக்கு ஜாப் ல ஒரு பெரிய பொசிஷன் கு போகனும் அது மட்டும் தான் எய்ம்.. வேற எதுலையும் இப்போதைக்கு எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னு அம்மா கிட்ட ஓபனா சொல்லிட்டேன். . சப்போஸ் அம்மா மறுபடியும் உங்கிட்ட வந்து இத பத்தி ஏதாவது கேட்டா இது என்னோட முடிவுனு எம்மேலேயை சொல்லு . உன்ன ஏதும் கேக்க மாட்டாங்க. . .

அம்மாக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் பட் என்ன பண்றது. . பாவம் அவங்க . . ரொம்ப நல்லவங்க எனக்கு ஓரு பிரச்சன னா அவங்களால தாங்கிக்கவே முடியாது . .. நாம இப்டி ரெட்ட வாழ்க்க வாழ்ந்துட்டு இருக்குறது அவங்களுக்கு தெரிஞ்சா துடிச்சி போயிருவாங்க. . . ”

மெதுவான குரலில் சொல்லிக்கொண்டு இருந்தான். . நான் அவனுக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை. .

அவன் மேலும் மேலும் அவனது தாயைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தான். அவன் பேச பேச எனக்கு என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. . நான் வேதனையுடன் நொந்து போயிருந்த நாட்களில் எல்லாம் என்னை எவ்வளவு அன்பாக பார்த்து கொண்டார் என் அம்மா. . .இப்போது என் அம்மாவை நான் அதிகமாக இழந்து கொண்டு இருக்கிறேன். . என் கண்கள் கண்ணீரால் நிரம்பின. . .

“ஹே என்ன ஆச்சு. .ஏன் அழற?”

“எனக்கு என் அம்மாவை பாக்கணும் போல இருக்கு”
கண்களை துடைத்துக்க கொண்டே கூறினேன். .

அவன் ஏதும் பேச வில்லை. . .சில நிமிடங்கள் கழித்து. . .

“சரி அடுத்த வாரம் போகலாம். . இப்போ நீ தூங்கு. . .”

“இல்ல. .எனக்கு தூக்கம் வரல . . ”
சொல்லிக்கொண்டே நான் அழுதேன். .

“ஹிம்ம் ஓகே ஓகே வா நான் கத சொல்றேன். . கேட்டுட்டே நீ தூங்கு ”
என அன்பான குரலில் அவன் சொன்னதும் எனக்கு சிறிய ஆச்சர்யம். . . கலந்த அதிர்ச்சி. . அவன் இவ்வாறு சொல்வான் என்று நான் நினைக்கவே இல்லை. . .

நான் எப்போதெல்லாம் அழுகிறேனோ அப்போதெல்லாம் அஷ்வின் முழுமையாக எனது கட்டுபாட்டுக்குள் வந்து விடுவான். .நான் சொல்வதையெல்லாம் கேட்பான். . .ஆனால் அந்த நாள் நான் அவ்வளவு அழுதும் அவன் ஏன் என்னை தனியாக விட்டு விட்டு சென்றான் . .

“ஓகே. .சொல்லு. . ”
நான் மெத்தையில் படுத்துக் கொண்டேன். .அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான். .

“ஒரு ஊர்ல A அண்ட் B னு ரெண்டு பிரதர்ஸ் இருந்தாங்க. . ”

“என்னது A அண்ட் B யா. . . புதுசா தான் இருக்கு பட் நல்லாவே இல்ல.. . நீ நேம் வை ரெண்டு பேருக்கும் . ”

“நான் இத யோசிக்கவே ரொம்ப கஷ்டப்பட்டேன் நீ என்ன இன்னும் யோசிக்க வைக்காத. . .வேணும்னா நீயே நேம் வை. . . ”

“சந்தோஷ் அண்ட் கார்த்திக். . . ”

“ஏன் இந்த பேரு. . இவங்க ரெண்டு பெரும் உனக்கு பிடிச்சவங்களா. . இல்ல உனக்கு தெரிஞ்சவங்களா. . இல்ல உன்னோட ஆபீஸ் ல வொர்க் பண்றாங்களா. ”

எத்தனை குழந்தைத் தனமான கேள்விகள் கேட்கிறான். . அவனை முறைத்துக்கொண்டே

“இப்ப எதுக்கு இத்தன கேள்வி கேக்கற? இந்த ரெண்டு பேரும தமிழ் சினிமால இருக்க காமன் நேம்ஸ். . . .”

“ஓ”

“இப்ப நீ கதைய கன்டினியூ பண்ண போறியா இல்ல உன்னோட கேள்விய கன்டினியூ பண்ண போறியா?”

“ஓகே ஓகே நான் கதைய சொல்றேன். . இவங்க ரெண்டு பேரும் வார் பண்றதுல ரொம்ப எக்ஸ்பெர்ட். . . .ஒரு நாள் . .. . என அவன் சொல்லிக்கொண்டே போனான். .

“எப்ப பாத்தாலும் ஆக் ஷன் ஸ்டோரி தானா . . அது சரி எனக்கு இன்னிக்கு ஆக் ஷன் ட்ரீம் தான் வர போது இந்த ஸ்டோரியால. . ”
என நினைத்துக் கொண்டே திரும்பினேன். .

“தூங்கிட்டியா? ”
அவன் மெதுவான குரலில் கேட்டான். .

“என்ன ஏமாத்துறியா? .நீ இன்னும் கதைய ஆரம்பிக்கவே இல்ல. .. ”

சரி சரி நான் கதைய கன்டினியூ பண்றேன். . . ஒரு நாள் அவங்க நாட்டுக்கு ஒரு பெரிய ஆபத்து வந்துச்சு. . . . வேற நாட்ல இருக்க ஒரு பெரிய கிங் அந்த பிரதர்ஸ் வாழ்ந்துட்டு இருந்த நாட்ட அட்டாக் பண்ண வராங்க. . ”

அவன் கதையை நான் கவனித்ததை விட அவன் அழகான குரலையே நான் ரசித்துக்கொண்டு நான் மெதுவாக என் கண்களை மூடினேன் . . .

தூங்கி கொண்டு இருந்த போது என் காதுக்கு அருகே ஏதோ ஒரு இதமான காற்று வருவதை உணர்ந்தேன். . தூக்கம் என் கண்களை தழுவி கொண்டு இருந்ததால் நான் கண்களை திறந்து என் தூக்கத்தை கெடுத்துக் கொள்ளள விரும்பவில்லை. . .

அவன் மெதுவாக என் கை விரல் களை தொட்டான். . நான் என் கைகளை மெதுவாக விலக்கிக் கொண்டேன். . ஆனால் அவன் மீண்டும் என் கை விரல்களை தொட்டான். . ஒவ்வொரு விரலாக தொட்டுக் கொண்டே வந்து என் கைகளை அவன் கைகளோடு கோர்த்துக் கொண்டான். . நான் என் கைகளை விலக்க எவ்வளவோ முயற்சித்தும் என்னால் முடியவில்லை. அவன் அவ்வளவு இறுக்கமாக பிடித்து கொண்டு இருந்தான். .

கைகளை பிடித்ததோடு மட்டும் அல்லாமல் அவன் என்னை மிகவும் நெருங்கி வந்தான். .இல்லை இதை நான் அனுமதிக்க கூடாது. . நான் அவனை விட்டு விலக முயற்சித்தேன். . அவன் என் தலையை தூக்கி அவனது தோள்களுக்கு எதிராக சாய்த்துக் கொண்டு என்னை இறுக்கமாக கட்டிக் கொண்டான். . அந்த அணைப்பில் அவ்வளவு காதலும் அன்பும் எனக்கு தெரிந்தது. .அந்த அணைப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. .

என் இதயத்தின் ஒரு பகுதி அந்த அணைப்பு வேண்டும் இதற்காக தான் நான் இவ்வளவு காலம் ஏங்கிக் கொண்டு இருந்தேன் என கேட்க இன்னொரு பகுதி அவனை விட்டு நான் விலகியே ஆக வேண்டும் இது எனக்கு வேண்டாம். . நான் தவறு செய்கிறேன். . என்ற இந்த இரண்டு விதமான எண்ணங்களுக்கு நடுவே நான் சிரமம் அடைந்துக் கொண்டு இருந்தேன் . .

அந்த நிமிடம் கடற்கரையில் அவன் பேசிய வார்த்தைகள் என் மனதில் ஓடியது. . அப்போது அவன் இன்னும் வேகமாக முன்பை விட அதிக அழுத்தத்துடன் என்னை அணைத்தான். . அவனது இதய துடிப்பு எனக்கு தெளிவாக கேட்டது. . அவனது மூச்சு காற்று என் நெற்றியைத் தீண்டியது. . அவன் என்னை முத்தமிட வருகிறான் என்பது எனக்கு புரிந்தது. .

ஆனால் இது நடக்க கூடாது. . நான் இதை அனுமதிக்கவும் கூடாது. . அவன் அவனது தவறுக்காக இப்போது வரை வருந்த வில்லை. . என்னை சந்தேகம் கொண்டு பேசிய அவனது பேச்சுக்கள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. . . .

இவ்வாறு நான் நினைத்துக் கொண்டே இருக்க அவன் மேலும் மேலும் என்னை நெருங்கி வந்துக் கொண்டு இருந்தான். . .அப்போது
“நோ ”
என கத்தி கொண்டே என்னுடைய படுக்கையில் இருந்து எழுந்தேன். ..

“ஹே என்ன ஆச்சு?”
என என்னை அசைத்து மீண்டும் என்னைத் தொட்டான். .

“நோ. .நோ . .வேணா என்ன டச் பண்ணாத. .. ப்ளீஸ். . ”
சொல்லிக்கொண்டே நான் மெத்தையில் இருந்து கீழே விழுந்து விட்டேன். .

அவன் என்னிடம் வந்து
“கீர்த்தி என்ன ஆச்சு உனக்கு? . . கெட்ட கனவு எதாவது கண்டியா?”

என்ன இவன் இப்படி பேசுகிறான்.. உண்மையாகவே அவன் என்னைத் தொட வில்லையா? .. இப்படி ஒன்றும் தெரியாதது போல பேசுகிறானே . . நான் அவனை ஒரு வித குழப்பத்தோடே பார்த்தேன்.. .

“நான் உங்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன். . உன் சத்தம் கேட்டு அம்மா இங்க வரதுக்குள்ள எனக்கு பதில் சொல்லு. . என்ன ஆச்சு?”

“நீ ஏன் என்ன டச் பண்ண?”
கோபத்தோடு கேட்டேன். .

“பின்ன தொடாமையா உன்ன தூக்கி விட முடியும். . ஹெல்ப் தான பண்ணேன். .வேற ஏதும் பண்ணலையே?”

“ஹே நடிக்காத. . . . நான் இப்போ தொட்டத பத்தி கேக்கல. நான் தூங்கிட்டு இருந்தப்போ எதுக்கு என்ன டச் பண்ண. . எதுக்கு என்ன ஹக் பண்ண? எதுக்கு என்ன கிஸ் பண்ண வந்த?”

“நான் ஏதும் பண்ணல. நான் கத மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். . அப்டியே நீ தூங்கிட்ட.. அதுக்கு அப்றமா ஏதோ தூக்கத்துல உலரிக்கிட்டு இருந்த திடீர்னு இப்டி கத்திகிட்டு எழர? என்னாச்சி உனக்கு”

அவன் சொல்வது நிஜமா? . .நான் கண்டது எல்லாம் கனவா? ஒரு வேளை இது கனவாக இருந்தால் என்னுடைய வாழ்நாளிலே இது தான் என்னுடைய
மோசமான கனவாக இருக்கும். .. ஆனால் இது கனவல்ல. . நிஜமாக தான் நடந்தது. .. .இல்லை. . அவன் பேச்சில் உண்மை இல்லை. .

நம் உள் மனதிற்குள் எதை ஆழமாக போட்டு புதைத்து அதை பற்றியே நினைத்து கொண்டு படுக்கிறோமோ அதே தான் கனவிலும் வரும் என என் அம்மா எனக்கு சொல்லி இருக்கிறார். . .ஆனால் நான் அவனைப் பற்றி ஏதும் நினைக்க வில்லையே. . அவன் என்னை தொடுவது போல நான் ஏன் நினைக்க வேண்டும். . ஒரு வேளை அவனது அந்த தொடுதலுக்காகவும் தீண்டல்களுக்காகவும் என்னை அறியாமலே நான் ஏங்கிக் கொண்டு இருக்கிறேனா? . .

இல்லை இல்லை. . நேற்று ஹோட்டலில் நான் அவனை பார்த்து ரசித்தது என்னவோ உண்மைதான். . ஆனால் நான் மீண்டும் அதைப் பற்றி நினைக்கவே இல்லையே. . பிறகு எவ்வாறு இப்படி கனவு வரும். . நான் சற்றே குழம்பி தான் போனேன். . அப்படியே யோசித்துக் கொண்டு இருக்க அவன் மீண்டும் பேசினான். .

“என்ன? கண்ண தொறந்து வச்சுகிட்டே தூங்குறியா?”

“என்கிட்ட பொய் சொல்லாத அஷ்வின். . நடந்தது என்னனு உண்மைய சொல்லு . . .நான் உன்ன மன்னிச்சு விடுறேன். . ”

“கீர்த்தி. . என்ன ஆச்சு உனக்கு? .. நான் வேணும்னா அம்மாவை கூப்பிடட்டுமா?”
என மிகவும் சோகமாக கேட்டான். . அவனது அந்த சோகத்தில் ஏதோ உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றியது. . . நான் அவனது வார்த்தையை நம்பினேன். .ஆமாம் நான் கனவு தான் கண்டிருக்கிறேன். . .

“சாரி. . ஏதோ கெட்டக் கனவு அதன். . !!”

“அந்த ஆக்சிடென்ட் பத்தியா?”

“இல்ல அத விட ரொம்ப ரொம்ப மோசமான கனவு. . ”
சொல்லிக்கொண்டே நான் எழுந்து மெத்தையில் அமர்ந்தேன். .

அவன் எனக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு என் அருகில் அமர்ந்தான். அவனது முகம் மிகவும் வாடிப் போய் காணப் பட்டது. .

“காலேஜ் டேஸ் ல உனக்கு இந்த மாதிரி பிரச்சனைங்க இருந்தது இல்ல தான?”
அவன் குரலில் அக்கறை தெரிந்தது. .

“என்ன பிரச்சன?”

“ரெண்டு நாளா நீ தூங்குறப்போ உன்ன நோட் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். . தூக்கத்துல நெறய உலர்ற . . எதையோ நெனச்சு கஷ்டபடுற. . உனக்கு என்ன ஆச்சு கீர்த்தி?”

“காலேஜ் முடிஞ்சா அப்புறம் தான் இது ஸ்டார்ட் ஆச்சு. . . என் அம்மாவும் நான் தூக்கத்துல பொலம்பறத பத்தி எங்கிட்ட சொல்லி இருக்காங்க. . சில நேரங்கள்ல இப்டி தான் கெட்ட கனவு வந்து பயந்து பாதி தூக்கத்துல பெட் ல இருந்து கீழ விழுந்துருவேன். . என்ன அறியாமலே தூக்கத்துல அழ கூட செய்வேன். . ”

“ஏன் காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் அப்டி என்ன தான் ஆச்சு? . .”
என செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல கேட்டான். .

அவன் அவனது அறிவை இழந்து விட்டு இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்கிறானா? ஒரு வேளை எதாவது ஆக்சிடென்ட் நடந்து பழைய நினைவுகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு இப்படி ஓர் கேள்வியை என்னிடம் கேட்கிறானா? . .

ஆனால் அவன் அவனது ஓவ்வொரு செய்கையிலும் அவனது பிடிவாத குணத்தையும் எல்லாவற்றுக்கும் வாக்கு வாதம் செய்வதையும் மறக்காமல் இப்போதும் தொடர்கிறானே? . . இந்த கேள்வியின் மூலம் என்னை வேண்டும் என்றே அவன் ஏளனம் செய்கிறான் என்பது தெரிந்தது. . .

“நான் காலேஜ் முடுஞ்சதும் நெறைய பேய் படம் பாக்க ஆரம்பிச்சிட்டேன் அஷ்வின் .. அதான் இப்டி எல்லாம். . வேற ஏதும் இல்ல. . குட் நைட்”
என என சொல்லிவிட்டு படுத்துக் கொண்டேன். . உண்மையில் அன்று இரவு அவனது செய்கைகளால் நான் மிகவும் குழப்பம் அடைந்தேன். . . . .

அடுத்த நான் எழுந்ததும் அவனது முகத்தை தான் பார்த்தேன். . அவன் முகத்தை பார்த்துக் கொண்டு தான் என் நாளை நான் துவக்கினேன். . அஷ்வின் எனக்கு அருகில் படுத்துக் கொண்டு இருந்தான். . தூங்கி கொண்டு இருக்கும் போது அவன் முகத்தைப் பார்த்தேன். .

அழகான ஒரு குழந்தை தூங்கிக் கொண்டு இருப்பதை போலவே இருந்தான். . இப்போது தான் அவனை நான் முழுவதுமாக பார்க்கிறேன். . அவன் விழித்து கொண்டு இருக்கையில் இவ்வாறு நான் பார்த்து விட்டால் என்னை கேள்வி கேட்டே கொன்று விடுவான். .

அவன் பேசாத நேரம் கூட அவன் கண்கள் என்னைப் பார்த்து பேசும். . அவன் வாயை விட அவனது கண்கள் அதிகமாகவே பேசும். . என்ன ஆண் இவன்? இதுவரை ஒரு தடவை கூட காதலுடன் என்னிடம் பேசியது கிடையாது. ஆனால் அவன் என்னுடன் இருக்கும் போது அவன் மீது எவ்வளவு அன்பையும் பாசத்தையும் உணர முடிகிறது என்னால். . .

அவன் மூக்கு கோபத்தால் வளர்ந்து கொண்டே போகிறது. .முதலில் அதை அறுத்து அவனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். . அவன் உதடுகளில் ஒன்றும் பெரிதாக மாற்றம் தெரிய வில்லை. . ஆனாலும் இப்போதும் அது அழகு தான். .

என்ன இது நான் அவனை இப்படி ரசித்துக் கொண்டு இருக்கிறேனே? . ஆனால் அவனது முகத்தை பார்க்கையில் எனக்கு காதல் வரவில்லை. அவ்வாறு காதல் உணர்வு எனக்கு வந்து விட்டால் எல்லாமே குழப்பம் ஆகிவிடும். . .

அவனது இந்த குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவன் செய்தது எல்லாம் நான் மறந்து விட மாட்டேன். . அவனுக்கு அழகான கண்கள் உண்டு. . . ஆனால் இது வரையில் எனக்காக அவன் கண்களில் இருந்து துளி கண்ணீரையும் நான் பார்த்தது இல்லை. . .

நான் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்தேன். .
“எங்க போற கீர்த்தி”
என அவன் கண்களை திறக்காமலே கேட்டான். .

அட கடவுளே இவன் விழித்துக் கொண்டு தான் இருக்கிறானா?. . . அதை அறியாமல் நான் தான் இவ்வளவு நேரம் அவனை ரசித்துக் கொண்டு இருந்தேனா. . . நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவன் எழுந்து இருப்பானோ. . நான் பார்த்ததை அவன் தெரிந்து கொண்டானா? மனதில் ஆயிரம் கேள்விகளுடன்

“நீ எப்போ எழுந்த?”
பதற்றத்துடன் அவனைக் கேட்டேன். .

“உனக்கு முன்னாடியே!!”

சந்தேகமே இல்லை.. . . நிச்சயமாக நான் அவனை ரசித்ததுப் பார்த்ததை அவன் பார்த்து தான் இருப்பான். . .கடவுளே இந்த நாளை ஏன் எனக்கு இவ்வாறு துவக்கி விட்டீர்கள். . .இருந்தாலும் நான் ஒன்றும் நடக்காதது போல் சமாளித்தேன். .

“அப்புறம் ஏன் ஆபீஸ் கு கெளம்பாம இன்னும் படுத்துகிட்டே இருக்க?”

“என்னது ஆபீஸா? . .என்னோட எல்லா சொந்த காரங்களும் இங்க வந்து இருக்காங்க . .அவங்களுக்கு சென்னை பத்தி ஒன்னும் தெரியாது. .நாம தான் அவங்கள கூட்டிகிட்டு போகணும் எல்லா இடத்துக்கும். .

“சோ நீ ஆபீஸ் கு போகலையா?”

“நாம ரெண்டு பெரும் தான் போகல. . ஒரு வேள நீ ஆபீஸ் கு போனா கண்டிப்பா எல்லாருக்குமே உம்மேல ஒரு தப்பான அபிப்ராயம் வரும். .அது உங்க அப்பா அம்மா வர போகும் . . .எதுக்கு தேவ இல்லாத பிரச்சன. . ஒரு நாள் தான . .லீவ் போடு. . .தென் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு போயி எல்லாருக்கும் டிபன் பண்ணு. . தயவு செஞ்சி நல்லா குக் பண்ணு நேத்து செஞ்ச லஞ்ச் மாத்ரி செஞ்சிராத. . ”

என காலையிலே என்னை வம்புக்கு இழுத்து என்னை பேச வைக்க ஆரம்பித்தான். .

“நேத்து லண்ச் நல்லா இருக்குனு சொன்ன. . இப்போ இப்டி சொல்ற? . . ”

“என்ன பண்றது எல்லா நேரத்துலயும் பொய் சொல்லிகிட்டேவா இருக்க முடியும்? உண்மைய பேச வேண்டிய நேரத்துல பேசி தான ஆகனும். .தூங்கு மை டியர் வைஃப். . .”
என சிரித்து விட்டு திரும்பிகொண்டான். .

நான் பூஜாவிற்கு கால் செய்து என்னால் இன்று ஆபீசிற்கு வர முடியாது என்று தகவல் தெரிவித்து விட்டேன். . மீண்டும் அவனுடன் சேர்ந்து படுக்க விரும்பாமல் எழுந்து சமைக்க ஆரம்பித்தேன். .

அவனது விருந்தினர்களாக அவன் தாய் மற்றும் தங்கை நித்யா உள்பட மொத்தம் 7 பேர் வீட்டிற்கு வந்து இருந்தனர். .

நான் அவர்களுடன் ஷாப்பிங்கிற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடலாம் என்று தான் எண்ணிக்கொண்டு இருந்தேன் . . .ஆனால் அவர்கள் என்னையும் வர சொல்லி கட்டாய படுத்தவே நானும் அவர்களோடு கிளம்ப வேண்டியதாயிற்று. . .

நான் காரில் முன் சீட்டில் அமர்ந்தேன். .பிறகு அவன் உறவினர்கள் அனைவரும் வந்து காரை நிரப்ப அவன் மேலும் உற்சாக மாகி விட்டான். . அவர்கள் இங்கு வந்ததில் இருந்து அஷ்வின் முகத்தில் அடிக்கடி நான் சிரிப்பையும் சந்தோஷத்தையும் பார்க்கிறேன். .

ஒரு பெரிய டெக்ஸ்டைல் ஷாப்பிற்கு வந்து இறங்கி புடவைகள் இருக்கும் தளத்துக்கு சென்றோம். .அவர்கள் புடவையை எடுக்க நான் உதவி செய்தேன். . மொத்தம் 10 புடவைகள் எடுக்க அவர்கள் அனைவரும் எடுத்து கொண்ட நேரம் 5 மணி நேரம். .

அஷ்வின் சில நேரம் அவன் தாயுடனும் சில நேரம் அவன் தங்கையுடனும் மாறி மாறி சென்று இங்கேயும் அங்கேயும் பரபரப்பாக ஓடிக் கொண்டு இருந்தான். .அவனை இவ்வளவு சுறுசுறுப்பாக நான் இது வரைப் பார்த்ததே இல்லை. .

கல்லூரிக் காலங்களில் அஷ்வின் எனக்காக டிரஸ் எடுப்பது என்றால் நாங்கள் செல்லும் அந்த கடையையே அலசி ஆராய்ந்து எனக்கு பொறுத்த மான உடையை தேடி கண்டு பிடிப்பான். . ஒரு டிரஸ் எடுக்க ஏன் இவ்வளவு நேரம் என்று நான் கேட்டால் அவன் எப்போதும் சொல்லும் பதில் இது தான்.

“நான் உனக்காக வாங்குற டிரஸ் இங்க இருக்கறதுலையே பெஸ்ட்டா இருக்கணும் ” எவ்ளோ நேரம் ஆனாலும் பரவல்ல. .”
என சொல்லிக் கொண்டே தேடுவான். . அவன் அவனது தங்கைக்காக புடவையை தேடி தேடி வாங்குவதைப் பார்க்கையில் எனக்கு அந்த நினைவு வரவே நான் அதை நினைத்து சிரிக்க

“ஏன் இப்போ சிரிச்ச?”
அவன் கேட்டான். .

அப்போது தான் அவன் என் அருகில் இருப்பது எனக்கு நினைவிற்கு வந்தது. . நான் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு நித்யா வுடன் சென்று நின்று கொண்டேன். .

“என்னமா நீ எந்த புடவையும் எடுத்துகலையா?”
என அஷ்வினின் தாயார் என்னைக் கேட்க எங்களுடன் வந்திருந்த உறவினர்களில் ஒருவர்

“ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் தனியா வந்து பர்சேஸ் பண்ணணிக்கலாம் னு நெனைக்கிறாங்களோ என்னவோ. . ”
சிரித்து கொண்டே சொன்னார். . .

அவர் சிரிப்பு அடங்கும் முன்னரே

“அப்டியெல்லாம் ஒன்னும் இல்ல ஆண்டி. . ”
என அவருக்கு பதில் கூறினேன். .

“அப்புறம் என்ன அண்ணி நீங்களும் இப்பவே சேரி எடுத்துகோங்க. .. அண்ணா நீ வந்து அண்ணிக்கு ஹெல்ப் பண்ணு. . .”

நித்யா எங்களை மாட்டிவிட நானும் அஷ்வினும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். .வேறு வழி இல்லாமல் அஷ்வின் என் அருகில் வந்து எனக்காக புடவையைத் தேடினான். .

எனக்கு தெரியவில்லை அவன் நடிக்கிறானா இல்லை நிஜமாகவே அன்போடு தான் எனக்காக இவ்வளவு ஆர்வமாக தேடுகிறானா என்று. .ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு சிறு மகிழ்ச்சி. . அவன் முதல் முதலாக எனக்காக புடவை வாங்கித் தரப் போகிறான் என்பதை எண்ணி.

ஒரு மணி நேரம் கழித்து அவன் எனக்கான புடவையை தேர்வு செய்து என்னிடம் காட்டி எனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டான். . சிகப்பு நிறத்தில் தங்க நிற ஜரிகை வைத்து மிக பிரமாண்டமாகவும் அழகாகவும் இருந்தது அந்த புடவை. . . உண்மையாகவே எனக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. . நான் ஓகே என்று சொல்ல அஷ்வினும் அவனது அம்மாவும் எடுத்த எல்லா புடவைகளையும் பில்லிங் செக்ஷனுக்கு கொண்டு சென்றனர். . . நானும் அவர்களுடன் சென்றேன். .

எல்லா புடவைகளுக்கும் அஷ்வின் மற்றும் அவனது அம்மாவும் சேர்த்தே பணத்தை பகிர்ந்து கொடுத்தனர். . . ஆனால் எனக்காக எடுத்த புடவையை மட்டும் அஷ்வின் தனியாக பில் போட சொல்லி முழு பணத்தையும் அவனே கொடுத்தான் . . .

என்னால் என் சந்தோஷத்தை கட்டுப் படுத்த முடிய வில்லை. . அதே நேரம் என்னால் எல்லார் முன்பாகவும் சிரித்து சந்தோஷ படவும் முடியவில்லை அதனால் நான் ஷாப்பிற்கு வெளியில் வந்து காரை நோக்கி நடந்து சென்றேன். வானத்தில் பறப்பது போல இருந்தது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி . .

அவன் கடமைக்காகவும் அவன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணியும் எனக்கு புடவை வாங்கித் தந்து இருந்தால் அவன் ஏன் அதை தனியாக பில் போட சொல்லி அவனே முழுப் பணத்தையும் கொடுக்க வேண்டும் . . . இதில் இருந்தே தெரிகிறதே அஷ்வின் உண்மையாக ஆசையோடே அந்த புடவையை எனக்காக எடுத்து இருக்கிறான். .

வீட்டிற்கு போனதும் இதை கட்டிப் பார்த்து விட வேண்டும் என்று எண்ணி என்னை மறந்து சென்று கொண்டு இருந்தேன். . அப்போது எல்லோரும்

“கீர்த்தி”
என என்னை உரக்கக அழைக்க நான் அப்போது தான் இந்த உலகிற்கு வந்தேன் . .

கடவுளே என்ன சொல்வது நான் அந்த பரபரப்பான சாலையின் நடுவே தனி ஆளாக நின்றுக் கொண்டு இருந்தேன். .எனக்கு முன்னாலும் பின்னாலும் கார் வேன் என இரு சக்கர வாகனம் எல்லாம் வேகமாக என்னைக் கடந்து சென்று கொண்டு இருந்தன. .

நான் சுதாரித்துக் கொண்டு ரோட்டைக் கடக்க எண்ணி நகரும் போது ஒரு கார் வேகமாக என்னை நோக்கி வந்தது அதை பார்த்து கொண்டே பயந்து நான் அப்படியே நின்று விட்டேன். . எனக்கு என்ன செய்வது என்றே தெரிய வில்லை. . வேக மாக வந்த அந்த காருக்கும் எனக்கும் சிறு இடைவெளியே இருக்க அது என்னை லேசாக உரசிக் கொண்டு என்னை கடந்துகச் சென்றது. . நூலிழையில் உயிர் பிழைத்தேன். .

பயத்தில் உணர்வுகள் அற்று உறைந்துப் போய் நின்று கொண்டு இருந்த என்னை என் கையை பிடித்து வேகமாக யாரோ ரோட்டை கடந்து செல்வது போல இருந்தது. .அது வேறு யாரும் இல்லை அஷ்வின் தான். .

“உனக்கு என்ன பைத்தியமா? . .நிதானத்தோட தான் இருக்கியா?.. . ரோட்ட எப்டி க்ராஸ் பண்ணனும் னு கூட உனக்கு தெரியாதா? . .எதுக்காக இப்போ நீ மட்டும் தனியா வெளிய வந்த. .”

அஷ்வின் கோபமாக என்னைத் திட்டி கொண்டு இருக்க என் கண்களில் கண்ணீர் வழிந்தது. .

நான் என்ன நடந்தது என்று யோசிக்கும் முன்னரே அவன் என்னை திட்டி தீர்த்து விட்டான். . திட்டி கொண்டே இருந்தானே தவிர நான் எந்த நிலையில் இருக்கிறேன் எப்படி இருக்கிறேன் என்று அவன் என்னை ஏதும் கேட்க வில்லை. .

“அஷ்வின் விடுப்பா அவ வேகமா போயிரலாம் னு போயிருப்பா. .. திடீர்னு அந்த கார் வரவோ அவ பயந்து போய் அப்டியே நின்னுட்டா. . .அவள சமாதானம் பண்றத விட்டு இப்டி திட்டாத டா அமைதியா இரு . . ”
என அவனது தாயார் எனக்கு ஆதரவவாக பேச அப்போதும் அஷ்வின் அமைதியாக வில்லை. .

“நீ என்ன கொழந்தையா கீர்த்தி? . . . அறிவு இல்ல உனக்கு . கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும் . . ரோட்ட க்ராஸ் பண்ணும் போது கண்ணு ரோட்ட தான் பாக்கணும். . நீ எங்க பாத்துகிட்டு போன என்ன நெனப்புல போன?”

நான் எவ்வளவு பயந்து உறைந்து போனேன் என்பது பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. . இப்போது கூட எரிச்சலுடன் அவன் கோபத்தை மட்டுமே என் மீது காட்டிக் கொண்டு மீண்டும் மீண்டும் எனக்கு வலியையே கொடுக்கிறான். . அது பர பரப்பான சாலை என்பதால் இவ்வாறு நடந்த உடனே கூட்டம் சேர்ந்து விட்டது. . அவன் என்னைத் திட்டுவதை அங்கிருந்தவர்கள் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். . ஆனால் அஷ்வின் அதை பற்றி கூட கவலை கொள்ளாமல் என்னை திட்டிக் கொண்டு இருந்தான். .

“அஷ்வின் அவள நீ வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் திட்டிகோ. . . இங்க இருந்து வா மொதல்ல வீட்டுக்கு போகலாம். . . .எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க பாரு. . வா கெளம்பு ”
என அவனது தாயார் மீண்டும் அவனை அமைதியாக்க எண்ணினார். .

“இது ஓன்னும் அவனுக்கு புதுசு இல்ல . . .எல்லார் முன்னாடியும் நிக்க வச்சு திட்டி கத்தி அசிங்கப் படுத்துறதுல அஷ்வின் ரொம்ப பெரிய எக்ஸ்பெர்ட் ஆண்டி. . ”
என கோபமாக சொல்லிவிட்டு என் கையை பிடித்து கொண்டு இருந்த அவனது கையை உதறி விட்டு காரில் சென்று அமர்த்தேன். . எல்லோரும் அமைதியாக இருக்க அவன் காரை வேகமாக ஓட்டினான். . .

பிறகு தான் எனக்கு புரிந்தது. . நான் தான் முட்டாள். . அவன் பயத்தில் லும் என் மீது இருந்த அக்கறையிலும் தான் என்னைத் திட்டி அவ்வாறு கத்தினான். . அவனை புரிந்து கொள்ளாமல் நானும் அவனை அவனது அம்மாவின் முன்பு அலட்சியமாக பேசிவிட்டேன். . நான் தவறு செய்து விட்டேன். . அவனது பயம் கலந்த அந்த அக்கறையை புரிந்து கொள்ளாமல் அவனிடம் நானும் கோபத்தை காட்டி விட்டேன். . இதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு. . .

நாங்கள் வீட்டை அடைந்தோம். . எல்லோரும் இறங்கி உள்ளே சென்றனர் அவன் மட்டும் கீழே இறங்காமல் அவன் சீட்டிலே அமர்ந்து கொண்டு இருந்தான். .

“ஏதாவது அடி பட்டுச்சா? . .ஹாஸ்பிட்டல் போலாமா?”

“வேணாம் நான் நல்லா தான் இருக்கேன். . ”

“நான் அப்டி கத்தி உன்ன திட்டி இருக்க கூடாது தான். . பட் நான் ரொம்ப பயந்துட்டேன்.. எத்தன தடவ கீர்த்தி கீர்த்தினு கத்தினேன் ஆனா நீ காதுல வாங்கிக்காம போயிட்டே இருந்த. . அதான் கோவத்துல. . அம் சாரி ”

“பரவால்ல. . உன்னோட கோவம் எனக்கு புரியுது. .”

“நீ எங்க வேணாலும் எப்டி வேணாலும் வேடிக்க பாத்துட்டு போ. . . . ஆனா அப்டி நீ போகும் போது என் கைய்ய மட்டும் டைட்டா ஹோல்ட் பண்ணிகிட்டு போ . உன்ன நான் பத்ரமா கூட்டிகிட்டு போவேன். . ஆனா தனியா போகும் போது இவ்ளோ அலட்சியமா போகாத கீர்த்தி!!!”

எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. . அவன் இதுபோல இவ்வளவு பாசமாக எங்களது கல்லூரி காலத்தில் கூட என்னிடம் பேசியது கிடையாது. .ஆனால் இதெயெல்லாம் கேட்டு மெய் மறந்து போய் மீண்டும் நான் அவன் அன்பில் விழுந்து விட்டு அழ விரும்ப வில்லை.
“டோன்ட் வொரி அஷ்வின். . எனக்கு டெல்லிக்கு ட்ரான்ஸ்பர் கெடச்சு இருக்கு . . நேத்து தான் என் ப்ராஜெக்ட் மேனேஜர் சொன்னாரு. . கூடிய சீக்கிரம் நான் டெல்லிக்கு போயிருவேன். . ”

இதைத் தவிர எனக்கு அவனிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. .
சொல்லிவிட்டு நான் காரில் இருந்து இறங்கி சென்றேன். .

என் உதடுகள் உதிர்த்த அந்த வார்த்தயில் எனக்கு முழு சந்தோசம் இல்லை. எனக்குத் தெரியும் நான் சொன்ன இந்த செய்தி அவனை மிகவும் கஷ்டப் படுத்தி இருக்கும். .மனம் முழுக்க வலியோடு நான் என் ரூமிற்கு வந்தேன். . எல்லாருடைய சந்தோஷமான மன நிலைமையையும் கொஞ்ச நேரத்தில் மாற்றி விட்டேன். . ரூமில் இருந்து வெளி வந்து வந்த என் அத்தையிடம் சென்றேன். .

“என்ன மன்னிச்சிருங்க ஆண்டி . .உங்க எல்லாரோட சந்தோஷமான மூடையும் நான் கெடுத்துட்டேன். . ”

“அட விடுமா. . உனக்கு எதும் ஆகலயை அதுவே எனக்கு போதும் . . அஷ்வின் திட்டிட்டானேனு ஃபீல் பண்ணாத. . .எனக்கு தெரியும் அஷ்வின பத்தி. அவன் கோவத்துல தான் உங்கிட்ட அப்டியெல்லாம் பேசிட்டான். . . அவன் பேசினதையைல்லாம் மனசுல வச்சுக்காத. . அவன சமாதனம் பண்ணு. . . ஆமா எங்க அவன்?”

தெரியாது என எப்படி சொல்வது அதனால்
“பெட்ரோல் பங்க் வர போயிருக்காரு. . ”
என நான் அவரிடம் பொய் சொன்னேன். .

“சரி நீ போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. .மைன்ட் ரிலாக்ஸ் பண்ணு. .”
என என் கன்னத்தில் பாசமாக கை வைத்து சொல்லி விட்டுச் சென்றார். . .

நான் மீண்டும் என் ரூமிற்க்கு வந்து அமர்ந்து கொண்டேன். . .என்னுடைய எண்ணங்கள் முழுவதும் அஷ்வினைச் சுற்றியே இருந்தன.. .

“உம்மேல இருக்க பழைய லவ்வோட ஒன்னும் நான் உன்ன கல்யாணம் பண்ணிகலணு அவன் தான என்கிட்ட சொன்னான் . .அவனும் கட்டாயத்துக்காக தான என்ன கல்யாணம் பண்ணிகிட்டான். . இந்த கல்யாணம் எங்க ரெண்டு பேருக்குமே பிரச்சனையா தான் இருக்கு. ,. .. . இந்த கல்யாணம் எங்க ரெண்டு பேர மட்டும் இல்ல எங்கள சுத்தி இருக்க எல்லாரையும் இது பாதிக்குது. . இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள நான் இங்க இருந்து போயே ஆகனும். . கண்டிப்பா அத்தையும் அவங்க சொந்த காரங்களும் இங்க இருந்து கெளம்பி போனதுக்கு அப்பறம் நா பூஜா வீட்ல போயி தங்கிக போறேன். . மறுபடியும் மறுபடியும் என்னோட ஹார்ட் ஒடையுற வலிய என்னால தாங்கிக்கவே முடியாது. .

நிச்சயமா இதுக்கு அப்றம் என்னோட ஒவ்வொரு வார்த்தையும் அவன கஷ்ட படுத்தும் . . நான் அவனுக்கு சரியான பேர் இல்ல. . அவங்க தங்கச்சி கல்யாணம் முடிஞ்ச உடனே நா அவன் கிட்ட இருந்து டிவர்ஸ் வாங்கிக்கனும். அதான் எங்க ரெண்டு பேருக்குமே நல்லது.. ”

எனக்கு நானே பேசி கொண்டு இருந்தேன். .அப்போது ஹாலில் இருந்த டெலி போன் ஒலித்தது. .. ஆணடி என்னை அழைக்க நான் வெளியில் வந்து அழைப்பை ஏற்று பேசத் துவங்கினேன். .

“ஹலோ”

“இது அஷ்வின் வீடா? ”
யாரோ தெரியாத நபரின் குரல். .

“ஆமா நீங்க யாரு?”

“நீங்க யாருன்னு நான் தெரிஞ்சிகலாம சிஸ்டர்?”

“நான் அஷ்வின் வைஃப். . ”
என முதல் முறையாக நான் இந்த வார்த்தையை சொல்கிறேன். .

“ஓகே மேடம். .அவருக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட். . ”

“வாட். . அஷ்வினுக்கு என்ன ஆச்சு. . .?”
என கண்களில் கண்ணீர் தேங்கியது. . .

“நீங்க கே கே நகர் ல இருக்க வி.எம் ஹாஸ்பிட்டலுக்கு வந்துருங்க. . ”

“என்ன அச்சு அஷ்வின் கு. . தயவு செஞ்சு சொல்லுங்க அவன் இப்போ எப்டி இருக்கான். . ப்ளீஸ் சொல்லயுங்க சார். .”
அது தான் நான் பேசிய கடைசி வார்த்தை. .

அதன் பின்பு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. .என் தலையில் ஏதோ அழுத்தம் ஏற்பட்டதை உணர்ந்தேன். .. . அவ்வளவு தான். . நான் அப்படியே மயங்கி கீழே விழுந்து விட்டேன். .

ஒரு ஒரு மணி நேரம் கழித்தது நான் என் கண்களை திறக்கிறேன். . என்னைச் சுற்றி எல்லாரும் நின்று கொண்டு இருந்தனர். . நான் ஹாஸ்பிடலில் இருப்பது அப்போது தான் தெரிந்தது. . நித்யா என் அருகில் அமர்ந்துக் கொண்டு இருந்தாள் ஆனால் எனக்கு அவள முகம் சரியாக தெரிய வில்லை. .ஏதோ அரைகுறையான நிழல் போலவே அவள் என் கண்ணனுக்குத் தெரிந்தாள். .

எல்லோரும் என் அருகில் வந்து நலம் விசாரித்தனர் ஆனால் அஷ்வின் பற்றிய நினைவுகள் மட்டுமே எனக்குள் ஓடியது. .

“அஷ்வின் ப்ளீஸ் என்கிட்ட வா. . .நான் என்னோட லவ் வ உங்கிட்ட சொல்லணும்”
என என் சோர்ந்து போன குரலில் மெதுவாக சொல்லிவிட்டு கண்களை மூடினேன். .

“கீர்த்தி நான் இங்க இருக்கேன். . ”

அது அஷ்வினின் குரல். .

நான் குரல் வந்த திசை நோக்கி திரும்பினேன். . அவன் எனக்கு அருகில் வெள்ளை நிற சட்டையும் ப்ளூ ஜீன் பேண்டும் அணிந்து இருந்தான். .
மூன்று வருடத்திற்கு முன்பாக என் காதலை சொல்ல தேர்ந்தெடுத்த அதே இடத்தில் நாங்கள் அமர்ந்து கொண்டு இருந்தோம். . .நான் அவன் அருகே சென்று அவன் கன்னத்தில் ஒரு அரை விட்டு அவனை கட்டி அணைத்துக் கொண்டேன். .

“ஏன் என்ன விட்டுட்டு போன அஷ்வின். . ?”
என அவன் கைகளை பிடித்து கொண்டு அழுதேன். .

“ஐ அம் சாரி கீர்த்தி. . ”
சொல்லிக்கொண்டே அவனும் என்னை கட்டிக் கொண்டான். .

“நீ சாரி கேக்காத அஷ்வின். .உம்மேல எந்த தப்பும் இல்ல. .நான் உனக்கு தெரியாம அவன் கிட்ட பேசி இருக்கவே கூடாது. . தப்பு எல்லாமே எம்மேல தான். . பாய்ஸ் அவங்களோட லவ்வ பொசசிவ்நெஸ் ல தான் காமிப்பாங்க. உன்னோட பொசசிவ்நெஸ் ல இருந்த அந்த லவ் எனக்கு அந்த நேரம் புரியாம போச்சு. .என்ன மன்னிச்சிரு அஷ்வின். . ப்ளீஸ் மறுபடியும் என்ன விட்டு இனி எங்கயும் வெலகி போயிராத . . எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போ. .நானும் உன்னோட வந்துடறேன். ”

“சத்தியமா இனி உன்ன விட்டு நான் எங்கையும் போக மாட்டேன் கீர்த்தி.. . . . ஆனா . . . . . . . ”

“என்ன ஆனா”

“இந்த நிமிஷம் வரைக்கும் நான் எதிர் பாக்குற அந்த மூணு வார்த்தைய நீ இன்னும் எங்கிட்ட சொல்லவே இல்லையே?”

நான் சிரித்து கொண்டே அவன் அணைப்பில் இருந்து விலகி

“நீ என் பக்கத்துல உக்காந்தா தான் நான் சொல்லுவேன். . ”
என அந்த கடல் மண்ணில் போய் அமர்ந்தேன். .
“எழுதிரு கீர்த்தி ”
என அழுத்தமான குரலில் அவன் சொன்னான். .

“என்ன ஆச்சு அஷ்வின்? ”
நான் ஆச்சர்யத்துடன் கேட்க ஏதோ ஓர் மாயை என்னை விட்டு விலகியது. . .

“கீர்த்தி ப்ளீஸ் உன் கண்ண தொறந்து பரு. . .”
அவனது குரல் மிகவும் சோகமாகவும் அழுகையும் கலந்து இருந்தது. .

“நான் கண்ண தொறந்துகிட்டு தான் இருக்கேன். . உனக்கு என்ன ஆச்சு அஷ்வின். . ?”

கேட்டுகொண்டே எழுந்து அவன் கன்னங்களைத் தொட்டேன். .அவன் என் கைகளை பிடித்து கொண்டு அசைத்தான். .
கடற்கரை முழுதும் திடீரென மருத்துவ மனையாக மாறியது .. நான் அமர்ந்து கொண்டு இருந்த இடம் மெத்தை யாக இருந்தது நான் அதன் மீது படுத்துக் கொண்டு இருந்தேன். . .

அஷ்வின் மட்டும் என் அருகில் நின்றுக் கொண்டு இருந்தான். . நான் என் கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்க்க அங்கே அஷ்வின் கையிலும் தலையிலும் பேண்ட் எய்ட் போடப் பட்டு இருந்தது. . . . அவனுக்கு ஒன்றும் ஆக வில்லை . . அவனை கண்களால் கண்ட பிறகே மனதில் ஒரு நிம்மதி தவழ்ந்தது. . .. .

“ஆர் யூ ஓகே ?”

“ஹிம்ம் யா ஐ அம் ஓகே.. நீ எப்டி இருக்க? ”
என மிகவும் அன்பக அக்கறையாக கேட்டான். . அவன் முகம் என் நிலைமையைப் பார்த்து மிகவும் சோகமாகி இருந்தது. . .

“பரவால்ல.. உனக்கு என்ன ஆச்சு. . ?”

“ஒன்னும் இல்ல கீர்த்தி இப்போ நான் நல்லா தான் இருக்கேன். . அதப் பத்தி யோசிக்காத. .இப்போ உனக்கு தேவையானது ரெஸ்ட் தான். .அமைதியா படு. நான் போயி டாக்டர் கிட்ட பேசிட்டு வந்துடறேன். .நித்யா அண்ணி கூடவே இரு எங்கயும் போகாத!!!”
சொல்லிவிட்டு நடந்தான்.

கதவின் அருகே சென்றதும் திரும்பி காதலுடன் என்னை ஒரு பார்வை பார்த்தான். . எனக்கு இது போதும் என்று தோன்றியது. .

அஷ்வினுக்கு அக்சிடென்ட் என்று சொன்னதும் நான் எப்படி துடித்துப் போய் விட்டேன். . என் வாழ்கையே இருட்டாகி வெற்றிடம் ஆனது போன்ற ஒரு உணர்வு . . ஒரு கணம் எனக்கு எதிர்காலமே இல்லாமல் போனது போல் ஆகிவிட்டது. . அந்த செய்தியை கேட்டதும் என்னால் மூச்சு கூட விட முடியாமல் போனதே. .

இப்போது அவனைப் பார்த்த பிறகு தான் என் வாழ்க்கை எனக்கு திரும்ப கிடைத்தது போல இருக்கிறது. . வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்ததாக தோன்றுகிறது. .என்னுடைய வாழ்கையில் ஒவ்வொரு நிமிடங்களையும் அவன் தான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதில் தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். . .

எங்கள் இருவருக்குள்ளும் சண்டைகள் வந்தாலும் கூட இப்போதும் அவன் என்னுடனே தான் இருக்கிறான். . . நான் மட்டும் ஏன் அவனை விட்டுப் போக வேண்டும் என்று நினைத்தேன். . அன்று நடந்த அந்த பதினைந்து நிமிட சண்டைக்காக நான் எப்படி எங்களுடைய நான்கு வருட அந்த சந்தோஷமான சொர்க்க வாழ்க்கையை மறந்துப் போனேன். . .

அவன் வருகையால் என் வாழ்கையே எவ்வளவு அழகாக மாறியது. . எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் அதில் தவறு அவன் மீதே இருந்தாலும் அவன் சமாதானத்திற்கு வரவே மாட்டான் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தும் இந்த மூன்று வருடத்தில் ஒரு தடவை கூட அவனை நான் அழைக்காமல் விட்டு விட்டேனே. . .எவ்வளவு பெரிய முட்டாள் நான்.

எல்லாம் என்னுடைய ஈகோ வால் தான். . இந்த ஈகோ வால் தான் என்னுடைய வாழ்வை நான் இழந்தேன். . என்னுடைய சந்தோஷமே அவன் தான் என்பதை உணராமல் இந்த மூன்று வருடமாக என்னுடைய சந்தோஷத்தையே தொலைத்து விட்டு முட்டாளாக இருந்து இருக்கிறேனே. .

அவன் மீதான என் காதல் இந்த மூன்று வருடத்தில் செத்து போயிருந்தால் மணமேடையில் அவனை நான் பார்த்த போதே அங்கிருந்து எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு நான் வந்து இருக்க வேண்டும் அல்லவா. . .ஆனால் நான் ஏன் அவ்வாறு செய்யவில்லை. .

அப்படி என்றால் அவன் மீதான என் காதல் இன்னும் சாகவில்லை என்று தானே அர்த்தம். .இதை கூட புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே. . . . என் இதயத்தில் இருந்த அவன் மீதான அந்த காதல் குறையவில்லை. . மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே தான் இருந்து உள்ளது. . இவ்வளவு நாளாக அவனை நான் வெறுத்து விட்டதாக நினைத்து என்னையே நான் ஏமாற்றிக் கொண்டு இருந்துள்ளேன். . . .

என் இதயம் உடைந்து விட்டதாக நினைத்தேன் ஆனால் அந்த உடைந்து போன துண்டுகளில் இருப்பது கூட என் அஷ்வின் தான் என்பது இப்போது எனக்கு புரிகிறது. .

அவன் என்னிடம் கத்தினாலும் , சண்டைப் போட்டாலும் , கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினாலும் , என்னை சந்தேகப் பட்டாலும் , என்னை விட்டு விலகிப் போனாலும் , நான் அவனைக் காதலித்து கொண்டு தான் இருந்து இருக்கிறேன். .அவன் என்னை விட்டு ஆயிரம் தடவை விலகி போனாலும் என் காதல் அவன் மீது இம்மி அளவும் குறையவில்லை. . .

எப்படி எப்படியோ என் வாழ்க்கை திசை திரும்பிப் போனாலும் கடைசியில் அது அவனுடனே தான் முடிகிறது. . முழுமையாக ஆத்மார்த்தமாக அவனது காதலில் சிக்கி இருக்கிறேன். . விலக முடியாத அளவிற்கு . .

பிறகு ஏன் அவனை விட்டு பிரிந்தேன். . என் தவறுதான். .
“அட்லீஸ்ட் அவனுக்காவது உண்மையா இரு ” என்று அவன் சொன்ன அடுத்த நொடி நான் அவனை பளார்ரென ஒரு அறை விட்டு இருக்க வேண்டும் . .. . அப்டி செய்து இருந்தால் இந்த பிரச்சனை ஏதும் இவ்வளவு தூரம் வந்தே இருக்காது. .

இரவு நேரங்களில் கெட்ட கேட்ட கனவுகள் வந்து என்னை தொல்லை செய்த காரணம் நான் அவனை வெறுத்தக் காரணத்தால் அல்ல. .அவன் என் அருகில் இல்லாமையே என்பது இப்போது எனக்கு புரிகிறது. . .மூன்று வருடம் அவன் இல்லாமல் நான் எப்படி இருந்தேன். .

நான் இனி என் காதலை அவனிடம் சொல்லப் போவது இல்லை. . நான் ஏன் சொல்ல வேண்டும் . .நான் ஒன்றும் அவன் தோழி இல்லை , அவன் காதலியும் இல்லை இப்போது நான் அவனது மனைவி. . . அவனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவன் என்னோடு தான் வாழ்ந்து ஆக வேண்டும் அவனுக்கு வேறு வழியே இல்லை. . .அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது எனக்கு தெரியும் . . . .

நான் அவனிடம் என் காதலைப் பற்றி சொன்னால் தான் நான் அவனை நேசிப்பதாக அர்த்தமா என்ன? இல்லை.. என் காதல் சொல்லபடாமலே இருக்கட்டும். . .அவனாகவே வந்து என்னிடம் அவன் காதலை சொல்ல வேண்டும். .அஷ்வினை இனி என்னை காதலிக்க வைப்பது தான் என் வேலை.

இப்போது தான் இந்த நிமிடம் தான் என் வழக்கை ஆரம்பித்தது போல இருக்கிறது எனக்கு. . நான் வேண்டாம் என்று நினைத்திருந்தால் எனது போட்டோவை பார்த்த போதே அவன் என்னை வேண்டாம் என்று நிராகரித்து வேறு பெண்ணைப் பார்க்குமாறு அவன் தந்தையிடம் சொல்லி இருப்பான். .திருமணம் வரை வந்து இருக்க மாட்டான். .ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. . அவன் என்னை இப்போதும் நேசித்துக் கொண்டு தான் இருக்கிறான். .

அந்த நேசம் தான் இன்று ரோட்டில் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பதற்றத்தில் என்னை திட்ட வைத்தது. . முதல் தடவையாக என்னை தூங்க வைக்க அவனை கதை சொல்ல வைத்தது. . முதல் முதலாக அவனை அன்பாக பேச வைத்தது காதலுடன் என்னைப் பார்க்க வைத்தது. . எல்லாமே என் மீது இருந்த அன்பும் அக்கறையும் தான். .இதை வேறென்ன சொல்ல. . .

ஒரு வேளை கல்லூரி காலத்தில் நினைத்ததை போலவே இப்போதும் என்னை நெருக்கமான தோழி என்று மட்டுமே அவன் எண்ணுகிறானா? எது எப்படியோ எனக்கு என் அஷ்வின் மீண்டும் வேண்டும். . .

நித்யா என்னை எழுப்பி ஜூஸ் குடிக்கக் கொடுத்தாள். .

நித்யா நேத்து அஷ்வினுக்கு என்ன ஆச்சு?

“ஏதோ நெனப்புல கார ஒட்டி மரத்துல மோதி இருக்கான் அண்ணி. . தலையில லேசான அடி அங்க அங்க சில கீறல் மத்த படி பெரிய காயம் ஒன்னும் இல்ல. . ”

ஏதோ ஒரு நினைப்பல்ல நான் டெல்லிக்கு செல்லப் போகிறேன் என்று அவனிடம் சொன்னதால் வந்த விளைவே இது. . . .

“ஆனா நீங்க தான் இந்த நியூஸ் கேட்டதும் டக்குனு மயக்கம் போட்டு விழுந்துடீங்க . . .விழுந்ததுல கைல மசில் காண்ட்ராக் ஷன் ஆகி போயிருச்சு. ப்ப்ப்ப்ப்ப்பா அவ்ளோ லவ்வா அண்ணா மேல .. ”
சொல்லிவிட்டு கண்களை சிமிட்டிக்கொண்டே சிரித்தாள். .

தசை சுருக்கமா. . என என் கையை பார்த்த போது தான் எனக்கு தெரிந்தது . அதில் பெரிய பேண்ட எய்ட் ஓட்டப் பட்டு இருந்தது. . . கால் களிலும் வலி தெரிந்தது. . இந்த வலி என்னை மீண்டும் அஷ்வினை புரிந்து கொள்ள உதவியதால் இது எனக்கு நிச்சயமாக தேவை என்றே நினைத்தேன். . .

அவளிடம் இல்லை என்று சொல்லி விட்டு நானும் சிரித்தேன். . அஷ்வின் உள்ளே வந்து நித்யாவை வீட்டிற்கு போக சொல்ல அவள் கிளம்பிவிட்டாள்.

“இப்போ பெய்ன் எப்டி இருக்கு?”
அவன் சாதரணமாக கேட்டான். . .

“அஞ்சி நிமிஷத்துக்கு ஒரு தடவ இப்டி கேட்டுகிட்டே இருந்தா வலி போயிருமா? ”
நான் வெறுப்பாக பேசுவது போல நடித்தேன்.

நான் அன்பாக பேசும் போதெல்லாம் அவனும் என்னிடம் அவ்வாறு பேச மாட்டான். . நான் வெறுப்பாக பேசவேண்டிய நேரம் வந்தால் தான் அவன் என்னிடம் பாசமாக பேசுவான். . இனிமேல் அவனை என்னிடம் அன்பாக பேச வைக்க வேண்டும் இல்லையா. . அதனால் நான் என் குரலை உயர்த்தி கோபமாக பேசுவது போல நடித்தேன்..

“உன்னால தான் நான் கார கொண்டு போயி மரத்துல விட்டேன். . மனசுக்குள்ள என்ன நல்லா திட்டி இருப்ப.. சாபம் குடுத்து இருப்ப. .ஆமா தான ”
சொல்லிவிட்டு அவன் லேசாக முகம் சுழித்தான். .

“உன்ன திட்டுறதும் உனக்கு சாபம் குடுக்கறதும் தான் எனக்கு இருக்க வேலையா. . எனக்கு வேற வொர்க்கே இல்லன்னு நெனச்சிகிட்டு இருக்கியா? சொல்ல போனா உன்ன விட என்னக்கு தான் இங்க அதிகமா அடி பட்டு இருக்கு . . ”

“இன்னும் ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்து அவர் என்ன சொல்றாருனு கேட்டு இருந்தா உனக்கு இந்த நெலம வந்து இருக்குமா? ஆனாலும் நீ ரொம்ப தான் நடிக்கிற. . அதனால தான் இப்டி கீழ விழுந்துட்ட. . அடுத்த தடவ இப்டி ஓவர் ஆக்ட் பண்ணாத சரியா? ”

சொல்லிவிட்டு அமைதி ஆனான் .

“இடியட் உனக்கு ஒன்னுனா என்னால தாங்கிக்கவே முடியாது டா . . அத புரிஞ்சிக்காம நடிகிறேனு சொல்றான் பாரு. . . எனக்கு தாண்டா தெரியும் என் தவிப்பு ”
என்று நினைத்துக் கொண்டு நான் ஏதும் பேச வில்லை.. . .

இரண்டு வாரங்கள் கடந்தன. . என் கை வலியும் சற்று குறைந்தது. .அவனும் முழுமையாக குணமாகினான். . . . அஷ்வின் என்னை கவனமாக பார்த்து கொள்வதாக அவன் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தி ஊருக்கு சென்று நித்யாவின் திருமண வேலைகளை கவனிக்குமாறு கூறி அவனது தாய் தங்கை மற்றும் உறவினர்களை ஊருக்கு அனுப்பி வைத்தான். . .

மூன்று நாட்களாக நான் அஷ்வினிடம் நல்ல முறையில் நடந்துக் கொண்டேன். . அவன் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான். . எனக்காக எல்லா வேலைகளையும் அவனே செய்தான். . சமைப்பது வீட்டை சுத்தம் செய்வது என்னுடைய பொருட்களை எடுத்து அடுக்கி வைப்பது சில சமயங்களில் எனக்கு தலை கூட வாரி விட்டான். ..

என்னால் ஒரு சில வேலை செய்ய முடிந்தாலும் முடியாதது போலவே நான் காட்டிகொள்வேன் ஏன் என்றால் அப்போது தான் அந்த வேலையை அஷ்வின் எனக்காக வந்து செய்வான். .இல்லை என்றால் அவன் அவனது ரூமிலேயே ஆபீஸ் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்து விடுவான். . அவனை அவனது ரூமை விட்டு வெளியில் வர வைக்கவும் என்னுடனே இருக்க வைக்கவும் ஒரு சில வேலைகளை செய்ய முடிந்தும் என்னால் ஒன்று செய்ய முடியாதது போல காட்டிக் கொண்டேன். . .

நாட்கள் சென்றன . . . நான் முழுமையாக குணம் அடைந்தேன். .நான் ஆபீசிற்கு செல்வதாக கூற அஷ்வின் அதற்கு சம்மதிக்க வில்லை. .என்னை இன்னும் சில நாட்களுக்கு வீட்டிலேயே தங்கி ஒய்வு எடுக்க சொன்னான். உடல் நிலை முழுதும் சரி ஆகி விட்ட பிறகு நான் வீட்டிலேயே இருந்து என்ன செய்ய. . அவனை சமாதனம் செய்து நான் அன்று ஆபீசிற்கு கிளம்பினேன். .

அன்று இரவு என் மன மாறுதல் உள்பட நடந்த எல்லா வற்றையும் ஒன்று விடாமல் நான் பூஜா விடம் பகிர்ந்து கொண்டேன். . அவள் என்னை அடுத்த நாள் விரைவாக ஆபீசிற்கு வருமாறு கூறினாள். . .

அடுத்த நாள் ஆபீசில். .. .

பூஜா என்னை பார்த்ததும் சந்தோஷத்தில் வந்து என்னை கட்டி பிடித்து கொண்டாள் . .

“எப்டி இருக்க கீர்த்தி?”

“நான் பெர்பெக்ட்லி ஆல் ரைட் .. அப்புறம் பூஜா நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும். . எனக்கு அஷ்வின் வேணும் . . நானும் அவனும் காலேஜ் டேஸ் ல ஒன்னா சந்தோஷமா இருந்தது போல இனிமே இருக்கணும். . அதுக்கு நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். . .”

“கண்டிப்பா டியர். .நீ இந்த வார்த்த சொல்லணும் னு தான் நான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன். . டோன்ட் வொரி அஷ்வின உன் வழிக்கு கொண்டு வந்துரலாம் .. வா”

அவள் என்னை அவளது கேபினுக்கு அழைத்துச் சென்றாள். . நாங்கள் இருவரும் ஒரு சோபாவில் அமர அவள் லேப்டாப்பில் ஆண்களிடம் நெருக்கமாக பழகுவது எப்படி என கூகுளில் டைப் செய்து தேடினாள். .
எனக்கு கோபம் வந்து விட்டது. .

“பூஜா என் வாழ்கயில வெளையாடணும்னு எண்ணம் இருந்தா இந்த நிமிஷமே அத விட்டுரு. .இதுக்காக தான் என்ன உன் கேபின் கு கூட்டிகிட்டு வந்தியா? இத போயி நெட் ல சேர்ச் பண்ணிக்கிட்டு இருக்க. . உனக்கு இன்னும் கொஞ்சம் கூட மெச்சுரிட்டியே வரல . . நெட் ல இப்போ காமிக்ற இந்த ரிசல்ட்ஸ் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வரும்னு நீ நெனைக்கிறியா? ”

“ஹே கீர்த்தி. .கொஞ்சம் அமைதியா இரு. . நான் என்னோட பாய் ப்ரெண்ட் கிட்ட க்லோஸ் ஆக இந்த வே ரொம்ப யூஸ் ஃபுல்லா இருந்துச்சு தெரியுமா?”

“அடடா ரொம்ப சூப்பர். .பட் இதெல்லாம் உன்னோட வச்சுக்கோ. ..என் லைப் ல இத இம்பிமென்ட் பண்ணாத. . .”

“சரி சரி கூல். . .நீ உன்னோட வழியிலேயே உன்னோட லவ் வ சொல்லணும்னு நெனைக்குற. . . . தப்பு இல்ல. . .ஆனா இப்போதைக்கு அது சரி வராதுன்னு தான் நான் சொல்றேன். .. . அதனால என்னோட ஐடியாவ நீ ஃபாலோ பண்ணு. . கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும் ..

“அப்டியா? .. சரி உன் வழிக்கே நான் வந்து நீ குடுக்குற ஐடியா வையே ஃபாலோ பண்றேன். .பட் உனக்கு ஃபைவ் டேஸ் தான் தான் டைம். . இந்த அஞ்சி நாளுக்குள்ள உன்னோட ஐடியா வொர்க் அவுட் ஆகலனு வையேன். . .. .நான் உன்ன என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது . . .சொல்லிட்டேன். .”

“சரி சரி .. மொத்தல்ல நீ பண்ண வேண்டியது என்னனா அவனுக்கு இன்னும் உம்மேல கோவம் இருக்கா இல்லையானு கண்டுபிடிக்கணும். . ”

“நிச்சயமா இல்ல. . எனக்கு தெரியும். .!!!”

“ஓகே ஒரு டவுட் க்ளியர். . .. நெக்ஸ்ட் காலேஜ் ல இருந்த மாதிரியே இப்பவும் அதே ஃபீலிங் அவனுக்கு உம்மேல இருக்காணு கண்டு பிடிக்கணும். . .”

“ஓ அதுக்கு நான் என்ன பண்ணணும்”

“இந்த அஞ்சி நாளும் நான் சொல்றத மட்டும் செய். .அவன் என ரியாக்ட் பண்றாண்னு பாக்கலாம்… . ”

அவள் மூச்சு விடாமல் எல்லா யோசனைகளையும் சொல்லிக் கொண்டு இருந்தாள். . நான் அமைதியாக அதைக் கேட்டு கொண்டு இருந்தேன். நாளையில் இருந்து அவளது யோசனைகளை செயல்படுத்த சொல்லி அறிவுறுத்தினாள் பூஜா. . .

நான் மாலை வீட்டிற்கு வந்தேன். . அவன் லேப்டாப்பில் அவனது வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தான். .

“எதாவது வலி தெரிஞ்ஜதா? . . எப்டி இருந்துச்சு உன்னோட வொர்க் எல்லாம். . ரொம்ப ஹெவியா?”

“இல்ல இல்ல. . எல்லாமே ஃபைன். . உனக்கு எப்டி இருந்துச்சு?”

“குட். . . அடுத்த வாரம் நம்ம காலேஜ் ல அலும்னி மீட்டிங். .இப்போதான் எனக்கு மெயில் வந்தது. . ”

அவன் கல்லூரியை பற்றி சொல்லும் போது தான் இத்தனை வருடங்களாக மறந்து போன என் கல்லூரியின் நினைவை நான் மீண்டும் தூசி தட்டி எடுத்தேன். . இவ்வளவு நாளாக நான் என் கல்லூரியை மட்டும் அல்ல என் நண்பர்களையும் தான் முற்றிலும் மறந்து போய் இருந்தேன். .

“நீ இப்பவும் உன்னோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் கூட காண்டாக்ட் ல இருக்கியா?”

“யா. . அவங்க எப்பவும் என்னோட ப்ரெண்ட்ஸ் தான். . இதென்ன கேள்வி. . ஏன் நீ யாரோடையும் காண்டக்ட் ல இல்லையா?”

“இல்ல..யாரோடையும் காண்டக்ட் ல இல்ல. . ”

“ரேணு கிட்ட கூடவா?”

“எஸ். . நான் சென்னை விட்டு கெளம்பும் போது பேசினதுதான். .அதுக்கு அப்புறம் அவளோட எந்த காண்டாக்ட்டும் இல்ல. . ”

சொல்லிவிட்டு என் ரூமிற்கு வந்து விட்டேன். . அதன் பிறகு அவனும் என்னை ஏதும் கேட்கவில்லை. . அடுத்த நாள் நான் புத்துணர்ச்சியுடன் எழுந்தேன். . பூஜா என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நன்றாகவே சொல்லி இருந்தாள்.. .அதை நான் இன்று முதல் செயல் படுத்த போகிறேன். .

முதல் நாள். . .
அன்று மாலை ஆபிஸ் முடிந்ததும் நான் என்னுடன் பணி புரியும் அஜய் ஐ என் வீட்டிருக்கு வந்து என்னுடைய விடுமுறை கால கிடப்பில் இருந்த வேலைகளை என்னுடன் சேர்ந்து செய்து விரைவில் முடிக்க வேண்டும் என வற்புறுத்தி கூட்டி கொண்டு வந்தேன். .

நான் அஜய் யுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் அஷ்வினின் கண்கள் எங்களைப் பார்த்து பெரிதானது. . அவன் அவ்வாறு பார்த்ததும் நான் என் சிரிப்பை மறைத்ததுக் கொண்டு அஜய் யுடன் வேகமாக உள்ளே வந்தேன். . அஷ்வின் அஜயை கண் இமைக்காமல் முறைக்கும் தோரணையுடன் பார்த்து கொண்டுக் இருந்தான்.

நானும் அஜய் யும் டைனிங் டேபிள் மீது அமர்ந்து எங்கள் லேப் டாப் ஐ திறந்து வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தோம். . எனக்கு தெரியும் அஷ்வின் எங்களை தான் பார்த்து கொண்டு இருப்பான் என்று. . ஆனால் நான் அவனை கண்டு கொள்ளவே இல்லை. .

அவன் சோபா வில் இருந்து எழுந்து என்னிடம் வந்து . .

“கீர்த்தி”
என கோபமான குரலில் என்னை அழைத்தான். .

“என்ன”
அவனை பார்க்காமல் என்னுடைய லேப்டாப்பை பார்த்து கொண்டே கேட்டேன். .

“ஒரு நிமிஷம் ரூமுக்கு வா! உங்கிட்ட கொஞ்சம் பேசணும் . .”
அவன் கோபமாக பேச எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி அவனது கோபத்தை பார்த்து. . இதைத் தானே நான் எதிர்பார்த்தேன். .

“நான் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன் அஷ்வின். . உங்கிட்ட அப்றமா பேசறேன். . நாளைக்குள்ள இந்த வேலைய முடிச்சாகணும். . ”
இப்போதும் நான் அவனை பார்க்கவே இல்லையே. .. லேப்டாப்பை பார்த்து கொண்டே பேசினேன். . அஷ்வின் என்னையும் அஜய் யையும் முறைத்து பார்த்தான். .

“அவர் தான் கூப்டுட்டு இருக்காருல.. போயிட்டு வா கீர்த்தி இத நான் பாத்துக்குறேன். . ”
என அஜய் சொல்ல நான் ரூமிற்கு வந்தேன். .

“என்ன அஷ்வின். .”
என வெறுப்பாக கேட்டேன். .

“வாட் தி ஹெல் யு ஆர் டூயிங். .. அவன இங்க இருந்து போக சொல்லு இல்ல நான் போயி சொல்ல வேண்டி வரும். . ”

அழகான கோபத்துடன் அவன் பேச பேச என்னக்கு அப்படி ஒரு சந்தோசம். .

“இவ்ளோ நாள் லீவ் போட்டு இருந்ததால என் வொர்க்ஸ் எல்லாம் பெண்டிங் ல இருக்கு அஷ்வின். .கோ வொர்கர்ஸ் கூட எவ்ளோ தான் செய்வாங்க. .அவங்க அவங்களோட வேலையும் பாக்கணும் என்னோட வேலையும் பாக்கணும் பாவம் ல அவங்க.. அதான் நான் இப்ப சரி ஆகிட்டேனே இனி நானே பாத்துக்குறேனு சொல்லி இன்னும் டூ டேஸ் ல எல்லா பெண்டிங் வொர்க்கும் முடிச்சி தரதா நான் என் டீம் லீடர் கிட்ட அஸ்யூரன்ஸ் குடுத்துட்டு வந்து இருக்கேன். .

அதனால அஜய் எனக்கு ஹெல்ப் பண்ண வந்து இருக்கான். . நீயும் இதே ஃபீல்ட் ல தான இருக்க . . என் கஷ்டத்த்த கொஞ்சமாவது புரிஞ்சிக்கோ . . .அப்டி புரிஞ்சிக்க முடியலைனா அஜய் போற வரைக்கு கொஞ்சம் அமைதியா இரு. .தேவ இல்லாம என் கேரியர் ல வெளையாடாத. . ”

என அவனது கண்களை பார்க்கமால் அப்படி இப்படி என்று திரும்பி பார்த்து பேசி முடித்து விட்டேன். . நான் மட்டும் அவன் முகத்தையும் கண்ணையும் பார்த்து இருந்தால் ஓகே டியர் இப்பவே அனுப்ப விட்டுறேன் என சொல்லி இருப்பேன். . . .

அவன் என்னை சில நொடிகள் முறைத்து விட்டு சென்று விட்டான். . நான் மீண்டும் வந்து அஜய் யுடன் அமர்ந்துக் கொண்டேன். . . .அஷ்வின் முழுவதுமாக எங்கள் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டான். . டி.வி சப்தத்தை அதிகமாக வைத்தும் போனில் சத்தமாக பேசி கொண்டும் எங்கள் வேலைக்கு இடையூறு செய்வதாக நினைத்து கொண்டு பல கிறுக்கு தனங்களை செய்து கொண்டு இருந்தான்.. . ஆனால் நான் எதையும் கண்டு கொள்ளாமல் என் வேளையில் மட்டுமே கவனம் செலுத்தினேன். . .

“கீர்த்தி எனக்கு ரொம்ப பசிக்குது. . போயி எதாவது குக் பண்ணு போ. . ”

“நான் பிசி யா இருக்கேன் பாத்துட்டு தான இருக்க. . இன்னிக்கு நம்ம மூணு பேருக்கும் சேர்த்து நீயே குக் பண்ணு. . ”
சொல்லிவிட்டு நான் திரும்பி விட்டேன். . .

மூன்று பேருக்கும் சேர்த்து செய் என்று சொன்னதும் அவன் கோபம் அதிகமாகி விட்டது. .. அவனிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ்

“நீ இப்போ அவன போக சொல்லல. . நானே அவன கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிருவேன். . ”

“புரிஞ்சிக்கோ அஷ்வின். . எனக்கு இன்னும் நெறைய வொர்க் லோட் இருக்கு. . ப்ளீஸ்”

“நானும் உன்னோட ஃபீல்டு ல தான இருக்கேன். . நான் ப்ரீ யா தான் இருக்கேன் இப்போ எனக்கு எந்த வேலையும் இல்ல. .. என்ன பண்ணும்னு என்கிட்ட சொல்லு நான் செய்றேன். அவன மொதல்ல போக சொல்லு. .”

எல்லாவற்றுக்கும் ஓரு எல்லை இருக்கிறது அல்லவா. ..அதற்க்கு மேல் அஷ்வினை வெறுப்பேற்ற விரும்பாமல் நான்
ஓகே
என அவனுக்கு ரிப்ளே செய்து விட்டு பத்து நிமிடங்களில் அஜய் யை அனுப்பி விட்டேன். .

கல்லூரியில் என் மீது இருந்த அதே பொசசிவ்நேச்ஸ் இன்றும் அவனிடம் . . ஆனால் அன்று கடற்கரயில் இதே பொசசிவ்நேச்ஸ் காரணமாக ஏற்பட்ட கோவத்தைப் போல் இப்போது என் மீது காட்டாமல் அவனது கோபத்தை அடக்கி கொண்டு இருந்ததை நான் கவனித்தேன். . அவன் சற்றே மாறி இருக்கிறான். . மாற்றம் என் மீது உள்ள அன்பில் இல்ல. . என்னை யார்முன்பும் இனி திட்ட கூடாது என்பதில் .. . முதல் நான் இவ்வாறு மகிழ்ச்சியாக முடிந்தது. .

இரண்டாம் நாள்:

இன்றைய நாளுக்குரிய செயல் கொஞ்சம் கடினமானது மட்டும் இல்லாமல் என்னை சற்றே பயம் கொள்ளவும் செய்தது. .

இரவு பதினோரு மணி. . அவன் ரூமிற்கு சென்று

“அஷ்வின்”
என அவனை அழைத்தேன். .

“ஹே இன்னும் தூங்கலையா நீ?”

“இல்ல. . ஈவினிங் லேப்டாப் ல ஒரு பேய் படம் பாத்தேன். சோ இன்னிக்கு என்னால தனியா படுக்க முடியாது. . .
என பொய் சாதரணமாக என் வாயில் இருந்து வெளியில் வந்தது. .

அஷ்வின் கோபமானான். . .
“ஹே மொதல்ல உன் லேப்டாப் ல இருக்க கோஸ்ட் மூவீஸ் எல்லாத்தையும் டெலிட் பண்ணு. . .எவ்ளோ சொன்னாலும் கேக்றதே இல்ல. . . . ஏன் கீர்த்தி நல்லது சொன்னா கூட காதுல வாங்கிக்க மாட்ற. . .

நான் அமைதியாகவே நின்றுக் கொண்டு இருந்தேன். .

சரி வா . . என் ரூம் லயே வந்து படுத்துக்கோ . .”

அவன் நகர்ந்து மெத்தையில் அவனது பொருட்களை எல்லாம் தள்ளி வைத்து எனக்கு படுப்பதற்காக இடத்தை சரி செய்து கொடுத்தான். . .

நான் முகத்தில் போர்வையை போர்த்தி கொண்டு படுத்தேன். . .

“தூங்கும் போது பெட்ஷீட் ல மொகத்த ஃபுல்லா மூடாத. அது ஹெல்த் கு நல்லது இல்ல. . . . ”

“ஓ. .. சரி”
என போர்வையை எடுத்து உடம்பில் மட்டும் போட்டுக் கொண்டு படுத்து கண்களை மூடி தூங்குவது போல நடித்தேன். . சில நிமிடங்களுக்கு பிறகு நான் எழுந்து கொண்டேன். .

“என்ன ஆச்சு?”

“லைட் ஆப் பண்ணு லைட் எறிஞ்சிட்டே இருந்தா என்னால தூங்க முடியாது. . ”
அவன் அவனது ஆபீஸ் வேலையைத்தான் செய்து கொண்டு இருந்தான். . இருந்தாலும் இரவு நேரத்தில் தூங்காமல் இப்படி கணினியை பார்த்து கொண்டு இருப்பது உடம்பிற்கு நல்லது இல்லை அல்லவா. . அதனால் அவனை தூங்க வைக்கவே அவ்வாறு சொன்னேன். . அவனும் அவனது லேப்டாப்பை மூடி விட்டு என் அருகில் படுத்தான். . .

“நான் தெனமுன் இங்கையே வந்து படுத்துகட்டுமா?”
மெதுவாக தயங்கி கொண்டே கேட்டேன். .

“யாரு வேணாம்னு சொன்னா. . .படுத்துக்கோ. . ”

ஹைய்யா என்னுடைய இன்றைய திட்டமும் நிறைவேறியது. . நாங்கள் இருவரும் ஒன்றாக படுத்தோம். . பாதி இரவில் என் தூக்கம் கலைந்து போக நான் விழித்துக் கொண்டேன்.. .

அஷ்வின் நன்றாக தூங்கி கொண்டு இருந்தான். . .எங்களுக்கு சில இன்ச் இடைவெளி இருந்தது. . நான் அஷ்வினின் கைகளை கோர்த்து கொண்டு அவனிடம் நெருங்கி படுத்துக் கொண்டேன். . இது பூஜா சொன்ன திட்டம் இல்லை. . இது என் ஆசை. . அவனது முகத்தை மிக அருகில் பார்த்து கொண்டே என் கண்களை மூடித் தூங்கினேன். .

மூன்றாம் நாள்:

இரவு 9 மணிக்கு நான் வெளியில் செல்ல தயாராகி கொண்டு இருந்ததை பார்த்து அஷ்வின் என்னிடம்

“எங்க போற?”
என கேட்டான். .

“மூவி க்கு”

“யாரோட போற?”

“தனியா தான்”

“இப்போ டைம் என்னனு தெரியுமா? . .9 மணி. . இந்த நேரத்துல தனியா போறேனு சொல்ற. .. நாளைக்கு மார்னிங் உன்னோட ப்ரெண்ட்ஸ் கூட போ. .இப்போ வேணாம். .”

“நோ. . நாளைக்கு நான் ஆபீஸ் போகணும். .”

“சரி அப்போ வீக் எண்ட் போ. . ”
அவன் சீரியஸ் ஆக சொன்னான் .. .நான் அவனை கண்டு கொள்ளாமல் என் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கதவு வரை சென்றேன் . .

அவன் மிகவும் தவிப்படன்
“ஹே இரு நானும் வரேன். . ”
சொல்லிவிட்டு அவனது ரூமிற்கு சென்றான். .

என்னுடைய இன்றைய திட்டமும் நிறைவேறியது. .நான்கு வருடங்களுக்கு பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக தியேடேர் சென்று படம் பார்த்தோம். .
ஒரு கட்டத்தில் அவன் தூங்கி விட்டான். . நானும் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டு அவனை பார்க்க ஆரம்பித்தேன். .

படம் முடிந்ததும் நாங்கள் வீட்டிற்கு செல்ல புறப்பட்டோம். .நான் மிகவும் சோர்ந்து போய் கார் ஜன்னலில் தலையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினேன். .

“இந்த நேரத்துல மூவி போயிட்டு வானு உனக்கு யாரு சொல்லி கொடுத்தது. . ”
அவன் என்னுடைய எல்லா திட்டங்களையும் தெரிந்து கொண்டது போல இந்த கேள்வியை என்னிடம் கேட்டான். .

“எனக்கு மூவி பாக்கணும் போல இருந்தது அதான் .. வேற ஒன்னும் இல. . ” சொல்லிவிட்டு நான் வெளியில் வேடிக்கை பார்த்தேன். .

“எப்பவுமே நீ நீயா இரு. . .கூட வொர்க் பண்றவனாவே இருந்தாலும் அவன வீடு வரைக்கும் கூட்டிகிட்டு வர பொண்ணு இல்ல நீ. . .இந்த மிட் நைட் ல மூவி க்கு போகணும் னு ஆச படுறவளும் இல்ல நீ. . இவ்ளோ நாள் இல்லாம திடீர்னு ஏன் இப்டி பண்ற . .ஐ திங்க் நீ எதுக்காகவோ நடிக்கிற கீர்த்தி. . யாராவது உங்கிட்ட எதாவது சொன்னாகளா?”

அவனுக்கு என்னை பற்றி நன்றாகவே தெரியும். . இவ்வாறெல்லாம் செய்வது ஏதோ ஒரு உள் நோக்கத்துடன் தான் என்பதை அவன் கண்டு கொண்டான். . இருந்தாலும் நான் அதை ஆமோதிக்க கூடாது அல்லவா . ..

“இல்ல. .அன்னிக்கு எனக்கு நெறய வேல இருந்துச்சு. . அதனால தான் அவன கூட்டிகிட்டு வந்தேன். .”

“இத என்ன நம்ப சொல்றியா? எனக்கு தெரியும் யாரோ உங்கிட்ட எதையோ சொல்லி இருக்காங்க. .இத நீயா பண்ணல அதனால தான் நீ அவன கூட்டிகிட்டு வரும் போது நான் உம்மேல கோவப் படல. .இல்லனா அவன உள்ள வரவே விட்டு இருக்க மாட்டேன். .

வர விட்டிருக்க மாட்டேனா?. .அவனது இந்த பேச்சிலே புரிந்தது அவன் இன்னும் மாற வில்லை என்று. .நல்ல வேளை அவன் அன்று இது போல ஏதும் செய்யாமல் போனான். .செய்து இருந்தால் பாவம் அஜய். . என்னால் அவமானம் பட்டு இருப்பான். .
அவன் மேலும் தொடர்ந்து பேசினான். .

“நீ ஏன் இப்டி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கணு எனக்கு தெரியல கீர்த்தி. . ஆனா ஒன்னு இது உனக்கு சுத்தமா பொருந்தல. . வேணா இப்டியெல்லாம் பண்ணாத. .உனக்கு செட் ஆகல. . இதுக்கு அப்புறமும் இந்த மாதிரி எதாவது பிளான் இருந்தா அத இப்பவே விட்டுரு. . ”

இதை அவன் சொல்லி முடிக்கும் போது நாங்கள் வீட்டை அடைந்தோம். .நான் என் அறைக்கு வந்து மெத்தையில் அமர்ந்தேன். .இனி அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் போட்ட திட்டங்களை நான் நிறுத்தி விட முடிவு செய்தேன். . என்னுடைய எல்லா திட்டங்களும் வெற்றி பெற்றன ஆனால் கடைசி கட்டத்தில் இப்படி அது தோற்று போகும் என நான் நினைக்க வில்லை. . நான் அப்போதே பூஜாவிடம் சொன்னேன் இதெல்லாம் சரி வராது என்று. .இப்போது மட்டும் அவள் என் முன்பாக இருந்து இருந்தால் நான் அவளை என் வாய் வலிக்க தீட்டி தீர்த்து இருப்பேன். .

என்ன செய்வது இந்த முட்டாள் என்னுடன் ஒழுங்காக பேசி மகிழ்ச்சியாக இருந்தால் நான் ஏன் தேவை இல்லாமல் இவ்வாறு செய்ய போகிறேன். .

அவன் வேகமாக என் ரூமிற்கு வந்து

“ஹே ஏன் இங்க வந்து உக்காந்து இருக்க. .வா வந்து என் ரூம் ல படு. . ”
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரிய வில்லை. . நான் அமைதியாகவே இருந்தேன். .

“வா வந்து என் ரூம் ல படு. . ”

“பரவால்ல. . நான் இங்கயே படுத்துக்குறேன். . ”

” நீ தூங்கறியா இல்ல தூங்காம பயந்துகிட்டு இருக்கியா. . கனவு வந்து முழிசிப்பியானு நான் யோசிச்சு இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்கும் அடிக்கடி வந்து பாத்துட்டு இருக்க முடியாது. .. ஓழுங்கா வந்து என் ரூம்ல படு. .
என சொல்லிவிட்டு சென்றான். .

நான் அவனது ரூமிற்கு சென்று படுத்தேன். .என்னால் என் அழுகையை அடக்கவே முடிய வில்லை.. அவன் மீது மீண்டும் நான் என் காதலை உணர்ந்துவிட்டதால் அவனுடனான இந்த இடைவெளியை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை. . நான் இப்போது அவனுடைய மனைவி . . ஆனால் நான் இதுவரை அப்படி நடித்து கொண்டு இருப்பதாவகே அவன் நினைத்துக் கொண்டு இருக்கிறான். . .

ஏன் என் கண்களில் தெரியும் உண்மையான காதலை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. . எப்போதும் நான் தான் அவனை நோக்கி செல்ல வேண்டுமா? ஆமாம் எனக்கு என் காதல் மீண்டும் வேண்டும் என்றால் என் ஈகோ வை துறந்து விட்டு நான் தான் அவனிடம் செல்ல வேண்டும். .

“அஷ்வின்”
நான் அவனை அழைத்தேன். .

“என்ன?”

“நான் உங்கிட்ட மூணு கேள்வி கேக்கணும். . அதுல ஒரு கேள்விக்காவது உன்னால பதில் சொல்ல முடியுமா?”

“ஹிம்ம் கேளு”

“ஏன் என்னோட ஒழுங்கா பேச மாட்ற? இப்பவும் எம்மேல உனக்கு அதே பாசம் இருக்க? ஏன் அந்த மூணு வருஷத்துல நீ என்ன காண்டக்ட் பண்ணவே இல்ல?”

நான் கேட்டு முடித்து விட்டேன். .ஆனால் அவனிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை. . அவன் என் பக்கம் திரும்பி என் கண்களை பார்த்தான். . அவன் என் அன்பை மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து நான் கேட்ட அந்த முதல் இரண்டு கேள்வியை தவிர்த்து மூன்றவதாக கேட்ட அந்த கேள்விக்கு மட்டுமே பதில் கூறினான். .

“அந்த மூணு வருஷத்துல நீயும் தான் என்ன காண்டக்ட் பண்ணல. . ”

அவன் இவ்வாறு சொன்னதும் நான் இந்த பக்கம் திரும்பி கொண்டு சப்தம் வராமல் அழுதேன்.. அவன் இப்போதும் நடந்த பழைய நிகழ்வுகளையே நினைத்து கொண்டு இருக்கிறான். . .அவன் என்னை மன்னிக்கலாம் அல்லவா. . அவனது அன்பை பெற ஒரு தகுதி கூட இல்லாதவளாகவா நான் இருக்கிறேன்.
நான் அழுது கொண்டிருக்க அவன் என் பக்கம் திரும்பாமலே என்னை அழைத்தான். .

“கீர்த்தி”

“ஹிம்மம்ம்ம்ம்”

“நீ டெல்லி போக போறியா?”

நான் எதையும் யோசிக்காமல்
“ஆமாம்”
என்று சொல்ல அதற்கு மேல் அவன் ஏதும் பேச வில்லை நானும் அமைதியாக அழுது கொண்டே படுத்துக் கொண்டேன். .

அடுத்த நான்கு நாட்கள் நான் அவனுடன் பேசவே இல்லை . .. அவன் என்னுடன் பேச வந்தாலும் நான் என் ரூமிற்கு சென்று நான் பிசியாக இருப்பதாகவே காட்டி கொள்வேன். .தினமும் காலையில் அவன் எழும் முன்னரே நான் எழுந்து ஆபீசிற்கு கிளம்பி விடுவேன். .காலை மாலை இரண்டையும் நான் ஆபீசிலேயே கழித்தேன். . மாலை ஆபீஸ் முடிந்ததும் நான் பூஜாவின் வீட்டிற்கு சென்று இரவில் தான் வீடு திரும்புவேன்.. சில சமயங்களில் பாதி இரவில் கூட நான் வீடிற்கு வந்து ஹாலில் சோபாவிலே படுத்து தூங்கி விடுவேன். .

இந்த காரணத்திற்காக அவன் என்னை பல முறை தீட்டி நேரத்திற்கு வீட்டிற்கு வருமாறு சண்டை போட்டன் ஆனால் நான் எதையும் காதில் வாங்கி கொள்ள வில்லை. . கண்டு கொள்ளவும் இல்லை. .

அன்று காலை என் ப்ராஜெக்ட் மேனேஜர் அன்னை அழைத்து நான் இன்னும் ஒரு வாரத்தில் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பை எனக்கு கொடுத்தார். . நான் மாலை வீட்டிருக்கு வந்து அதை அஷ்வினிடம் சொல்ல அவன் எந்த பதிலும் பேச வில்லை. .

நான் டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக என் நண்பர்களை சந்திக்க வேண்டும். . குறிப்பாக ரேணுவை நான் சந்தித்தே ஆக வேண்டும். .. அஷ்வினும் ரேணுவிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வில்லை. . நான் அவளது லேன்ட் லைன் நம்பருக்கு கால் செய்ய முயற்சித்தேன். . ஆனால் யாரும் அழைப்பை ஏற்க வில்லை. . நான் அவளை சந்திப்பர்தற்கே மிகவும் பயந்தேன். .எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் நான் அவளிடம் பேசி இருக்க வேண்டும். ..அவளது மின் அஞ்சல் களுக்கு கூட நான் எந்த பதிலும் அனுப்ப வில்லை. .

ஒரு நாள் நான் அவளது வீட்டிற்கு சென்றேன் .. ஆனால் கதவு பூட்டப்பட்டு இருந்தது. . நான் அருகில் இருந்தவர்களை விசாரித்த போது அவர்களில் ஒருவர் எனக்கு அவளது மொபைல் நம்பரை கொடுத்தார். . நான் அந்த நம்பரை டயல் செய்தேன். .

“ஹலோ”
என்று அவள் சொன்னதும் கண்டு பிடித்து விட்டேன். .அது ரேணு தான். .

“ஹாய் ரேணு திஸ் இஸ் கீர்த்தி”
என் குரலை கேட்டதும் அவள மிகுந்த உற்சாகத்துடன்

“ஹே கீர்த்தி. . ஹய்யோ என்னால நம்பவே முடியல. . .. எப்டி டி இருக்க? .. எங்க இருக்க நீ இப்போ? ”

“ஹிம்ம் நல்லா இருக்கேன் ரேணு. . நான் சென்னை ல தான் இருக்கேன். . .உன்ன பாக்குறதுக்காக உன் வீட்டுக்கு போனேன் ஆனா நீ அங்க இல்ல. . .”

“நான் எங்க சொந்த ஊருக்கு பெரிப்பா பொண்ணு கல்யாணத்துக்காக வந்து இருக்கேன் . . நாளைக்கு அடுத்த நாள் நான் சென்னை ல இருப்பேன். . அத விடு நீ அலும்னி மீட்டிங் கு வர தான?”

“இல்ல ரேணு எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல?”

“ஏதும் பேசாத. . ஏற்கனவே நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் உம்மேல பயங்கர கோவமா இருக்காங்க.. நீ வர அவ்ளோ தான். . நாம காலேஜ் ல மீட் பண்றோம். . உங்கிட்ட நெறய விஷயங்கள் பேசணும். .இங்க கொஞ்சம் வேல இருக்கு டா. .நான் உங்கிட்ட அப்றமா ப்ரீ ஆனதும் பேசறேன். . வச்சிரட்டுமா . .”

“ஓகே ஓகே யூ கேரியான் ரேணு பை”

நான் என் நண்பர்களை சந்திப்பதை எண்ணி சந்தோஷப்பட்டேன். . ஆனால் நான் அஷ்வினை தான் திருமணம் செய்து கொண்டென் என்று அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள். . .ஏன் எனக்கு திருமணம் ஆகி விட்டது என்று கூட அவர்களுக்கு தெரியாதே. . நான் அவர்கள் முகத்தில் எவ்வாறு முழிக்க போகிறேன். .

நாட்கள் கடந்து சென்றன. . அந்த நாளும் வந்தது. . .

நான் காலை முதலே மிகவும் பயந்து கொண்டே இருந்தேன் எல்லாரையும் எவ்வாறு சந்திக்க போகிறேன் என்று. . . கல்லூரியில் நேஷனல் கான்ப்ரென்ஸ் அன்று கட்டிய அதே புடவையை கட்டிக் கொண்டேன். . மீட்டிங் நேரம் மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை. . . .

அஷ்வின் எனக்கு முன்பாகவே ரெட்யாகி நின்று கொண்டு இருந்தான் . .அவன் மிகவும் அமைதியாகவும் ஒரு வித பதற்றத்துடனும் இருந்தான். . ஒருவேளை அவனது இந்த மௌனத்திற்கும் பதற்றத்துக்கும் நான் கூட காரணமாக இருக்கலாம். .

நான் காரில் அமர்ந்தேன். .அவன் கண்கள் மட்டுமே ரோட்டை பார்த்து கொண்டு இருந்தன ஆனால் அவன் கவனம் முழுவதும் வேறெங்கோ இருந்தது. . இது தான் நான் அவனுடன் செல்லும் கடைசி பயணம். . செவ்வாய் கிழமை நான் டெல்லிக்குக் கிளம்பி விடுவேன். . இந்த முறையும் நான் என் காதலை சொல்லாமலே அவனை விட்டு வெகு தூரம் விலகி போகப் போகிறேன். . .

என் அன்பு பாசம் காதல் என எல்லாமும் அவனுடன் தான். . . எல்லாம் இருந்தும் எனக்கு எதுவும் கிடைக்க வில்லை. . . மிசஸ் அஷ்வின் என்ற இந்த பட்டத்தை மட்டுமே அவனிடம் இருந்து கொண்டு செல்ல போகிறேன். . மூன்று வருடம் அவனுடைய நினைப்பிலும் அது மட்டும் இல்லாமல் பிடித்தும் பிடிக்காமலும் ஒரு வருடம் நான் அவனுடன் வாழ்ந்தும் விட்டேன். . இது போதும் எனக்கு. . இந்த சந்தோஷத்திலே நான் என் நாட்களைக் கழித்து விடுவேன். .

நாங்கள் கல்லூரியை அடைந்தோம். . .அவன் காரை பார்க் செய்ய சென்று விட்டான். . நான் ரேணு விற்கு கால் செய்ய போனை எடுத்தேன் .. அவள் ஏற்கனவே வந்து விட்டதாகவும் என்னை ஆடிடோரியத்திற்கு வர சொல்லியும்
எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாள். .

மெசேஜ் பார்த்து விட்டு அப்படியே மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். . அஷ்வினுடன் நான் நடந்து அதே பாதைகளில் நான் நடந்து சென்றேன். . இந்த கல்லூரி என் அஷ்வினை எனக்கு கொடுத்த இடம். . . நான் கடந்து சென்ற ஒவ்வொரு இடமும் அவனை மீண்டும் மீண்டும் எனக்குள் திணித்தன . . .நங்கள் எங்கள் உணவை பகிர்ந்து கொண்ட கேண்டீன். . நாங்கள் அமர்ந்து பேசும் புல்வெளி. . . ஒன்றாக சேர்ந்து படித்த அந்த இடம். .இரவெல்லாம் பேசி விட்டு பகலில் தூங்கிய என்னுடைய வகுப்பறை. . அஷ்வின் என் கையில் பிரேஸ்லெட் கட்டி விட்டு என்னை சிரிக்க வைத்து முதல் முதலாக அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு அழுத என்னுடைய விருப்பம்மான பாஸ்கட் பால் கிரௌண்ட். .அவன் எனக்காக காத்து கொண்டு நிற்கின்ற இடம். . என எல்லாமும் என் கண்களை கலங்க செய்தன. .
கடைசியாக நான் முதல் முதலாக அஷ்வினை பார்த்த அந்த இடத்திற்கு வந்து விட்டேன். .ஆடிடோரியம் . .

நான் ரேணுவை தேட அவள் என்னைப் பார்த்து விட்டு கைகளால் சைகை காட்டி என்னை அழைத்தாள். . சற்றே குண்டாகி ரேணு பார்ப்பதற்கே மிகவும் மாறி போய் தெரிந்தாள்.என்னுடைய வகுப்புத் தோழிகள் அனைவரும் ரேணுவுடன் அமர்ந்து இருந்தனர். . .. ரேணு என்னிடம் ஓடி வந்து என்னை அணைத்து கொண்டாள். . அவ்வளவு நேரம் சோகமாகி போன நான் அவளை பார்த்ததும் என்னை அறியாமல் சிரித்தேன். . . .
ரேணு என்னைப் பார்த்ததும் எனக்கு திருமணம் ஆனதைக் கண்டு பிடித்து விட்டாள். . .

“ஹே கீர்த்தி. . உனக்கு கல்யாணம் ஆயிருச்சா. . ?
அவள் கோபம் கலந்த ஆச்சர்யத்தில் என்னை கேட்க நான் பதில் சொல்ல முடியாமல் தலையை கீழே தொங்க போட்டுக் கொண்டேன். .

“என்ன ஆச்சு கீர்த்தி. . ஏன் அமைதியா இருக்க. . ”
நான் சில நிமிட மெளனத்திற்கு பிறகு ஆமாம் என தலை ஆட்டினேன். .

உன் கல்யாணத்துக்கு கூட எங்கள கூப்பிடணும்னு உனக்கு தோணல ல. .
என்ன மன்னிச்சிரு ரேணு என் சூழ்நில அப்டி ஆகிருச்சி.. . . அத விடு இந்த நாலு வருஷம் நீ என்ன பண்ண ரேணு?”

“நீ போனதுக்கு அப்பறம் நான் நம்ம காலேஜ் ப்ரெண்ட்ஸ் கூட எந்த காண்டாக்டும் வச்சிக்கல. . தென் பெங்களூர் ல எம்.பி.ஏ ரெண்டு வருசம் படிச்சேன். . லாஸ்ட் மன்த் வர அங்க தான் இருந்தேன். .இந்த மன்த் தான் சென்னைக்கு வந்தேன். ..

மைசூர் போனதுக்கு அப்புறம் நீ என்ன மறந்துட ல. . உன்ன காண்டேக்ட் பண்ண நெறைய தடவ ட்ரை பண்ணேன். . பட் உங்கிட்ட இருந்து எந்த வழியிலையும் ரெஸ்பான்ஸ் இல்ல. . . அஷ்வின் பண்ண தப்புக்கு நீ எங்கள தண்டிசிட்ட ல. .ஐ தினக் அந்த இடியட்டும் இங்க வந்து இருப்பான். . ”

“அவன இடியட் னு சொல்லாத ரேணு”

“நீ இன்னும் அவன் மேல பைத்தியமா இருக்கியா கீர்த்தி .. . . அவனால தான் நீ இப்டி இருக்க . .அத மறந்துறாத. . ”

“நீ யார்கிட்டயும் என்ன பத்தியும் அஷ்வின் பத்தியும் விசரிக்கலையா?”

“எல்லாரும் உன்ன பத்தி தான் என்கிட்ட விசாரிச்சாங்க. .ஏன் அஷ்வினும் என்கிட்ட உன்ன பத்தி கேட்டான். . எனக்கே ஒன்னும் தெரியாத போது நான் என்னத்த சொல்ல. எல்லாருக்கும், . . .அண்ட் உன்ன பத்தி தெரிஞ்சா போதும் நான் ஏன் அவன பத்தி தெரிஞ்சிக்கணும். . ?”

“அஷ்வின் என்ன பத்தி விசாரிச்சான? எப்போ. . . . என்ன விசாரிச்சான், ..என்ன கேட்டான் . .”
நான் மிகவும் ஆர்வத்துடன் ரேணுவை கேட்டேன் . . ஆனால் ரேணு என்னை கோபமாகவே பார்த்து கொண்டு இருந்தாள் .
“கீர்த்தி நீ இன்னும் மாறவே இல்ல. . . இத இத்தோட விடு. . எப்போ உனக்கு கல்யாணம் ஆச்சு. . உன் ஹஸ்பண்ட் இங்க வந்து இருக்காரா? ”

“ப்ளீஸ் ரேணு பதில் சொல்லு. . ”
என நான் பாவமாக கேட்க ரேணு சலித்தது கொண்டே பேசினாள். .

“நீ போனதுக்கு அப்புறம் அவன் ஒரு நாள் எனக்கு கால் பண்ணி இருந்தான். . நான் கோவ பட்டு திட்டிட்டு அவன் கால் கட் பண்ணிட்டேன். . ஆனா கொஞ்ச நாள் கழிச்சு அவன் அடிக்கடி உன்ன பத்தி கேட்டு என்னக்கு கால் பண்ணி தொல்ல பண்ணான். . வேற வழி இல்லாம நான் உனக்கு வேற ஒருத்தரோட என்கேஜ்மென்ட் ஆயிருச்சு அவள டிஸ்டர்ப் பண்ணி அவ வாழ்க்கைய கெடுத்துறாதனு பொய் சொல்லி நல்லா திட்டிட்டேன்.”

எனக்கு அதை கேட்டதும் துக்கம் என் தொண்டையை அடைத்து குரல் தழுதழுத்தது. .

“ஏன் ரேணு அவன்கிட்ட இப்டி சொன்ன? .. ஒரு வார்த்தையால எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டியே ரேணு. . ”

“நீ என்ன சொல்ற கீர்த்தி. . நா உனக்கு ஹெல்ப் தான பண்ணேன். .நா அப்டி சொல்லாம இருந்து இருந்தா அவன் உன்ன காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணி இருப்பான். . அவனால தான நீ இவ்ளோ கஷ்டப் பட்ட. . . ஏன் எங்களையும் மறந்து போற அளவுக்கு அவன் உன்ன எவ்ளோ கஷ்ட டுத்தி இருக்கான். ..இப்பவும் நீ அவன நெனச்சு அழறது நாட் குட் கீர்த்தி , ,உனக்கு கல்யாணம் ஆயிருச்சு. . மைன்ட் இட். .”

“எல்லா தப்பும் எம்மேல தான் ரேணு. . நான் அவன லவ் பண்ணேன். .அவன் கிட்ட எல்லாத்துலையும் நான் உண்மையா இருந்து இருக்கணும் . .ஷக்தி யோட நான் மெயிண்டெய்ன் பண்ண ப்ரெண்ட்ஷிப் ப நான் அவன் கிட்ட சொல்லி இருக்கணும். . . அவன் இடத்துல வேற எந்த பையனா இருந்தாலும் நான் பண்ண இந்த தப்புக்கு இப்டி தான் ரியாக்ட் பண்ணி இருப்பாங்க. .

உனக்கு ஒன்னு தெரியுமா ரேணு. . அஷ்வின் தான் என்னோட ஹஸ்பண்ட். நான் அவன தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். .

ரேணு உறைந்து போய் என்னைப் பார்த்தாள். .

கீர்த்தி எனக்கு எதுமே புரியல

நான் இப்பவும் அவன லவ் பண்றேன். . எனக்கு அவன் வேணும் நான் அவன்கிட்டா சாரி கேக்கணும். . .அட்லீஸ்ட் இப்போவாச்சும் என் லவ்வ நான் அவன் கிட்ட சொல்லணும் ”

“கீர்த்தி நீ என்ன சொல்ற. . நீ எப்டி அஷ்வின கல்யாணம் பண்ண?”

“அது ஒரு பெரிய கதை நான் உனக்கு அப்றமா சொல்றேன். . நான் இப்ப உடனே அவன பத்தாகணும் ”

சொல்லிவிட்டு நான் அந்த இடத்தில் இருந்து வெளியிஇல் வந்து அஷ்வினை தேடினேன். . அவன் அங்கு இல்லை. .அவனுக்கு கால் செய்தேன் அவன் அழைப்பை ஏற்க வில்லை. . அவனை எல்லா இடங்களிலும் தேடினேன். .ஆனால் அவன் என் கண்ணுக்கு தென்படவே இல்லை.. . நான் அவனது காரின் அருகே நின்று கொண்டு இருந்தேன்.

எல்லா தவறும் என் மீது தான். . நான் ஷக்தி யுடன் பேசி இருக்கவே கூடாது. . அன்று ஒரு நாள் காரில் அவனுடன் வேறு பெண் அமர்ந்து இருப்பதை கண்டு நான் எவ்வளவு பயந்தேன் பயந்தது மட்டும் இல்லாமல் மறைமுகமாக அவன் மேல் எவ்வளவு கோபம் கொண்டேன். . .அவனோடு சேர்த்து அந்த பெண்ணைப் பார்த்த தால் அன்றைய நாள் முழுதும் எனக்குள் எவ்வளவு தடுமாற்றம். . .

எனக்கே இப்படி இருக்கும் போது அவன் ஒரு ஆண். .அவனுக்கு தெரியாமல் அவனுக்கு பிடிக்கதவனிடம் நான் பேசிக்கொண்டு இருப்பது அவனுக்கு தெரிந்ததும் அவன் அவ்வாறு நடந்து கொண்டதில் என்ன தவறு இருக்கிறது. . எனக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா?

அவனது கோபத்தில் அர்த்தம் இருக்கிறது. . எனக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக ரேணு கூறியதால் தான் அஷ்வின் என்னை அதன் பிறகு தொடர்பு கொள்ளாமல் இருந்து இருக்கிறான். எல்லாவற்றியும் நினைக்க நினைக்க எனக்கு கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. .

அப்போது என் மொபைலில் மெசேஜ் டோன் வந்தது.. அஷ்வின் தான் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான். .

“எங்க இருக்க?”

“இன் கார் பார்கிங் ஏரியா. .நீ எங்க இருக்க? உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். . ”

“பேஸ்கட் பால் கிரௌண்ட் கு வா. . நான் அங்க தான் இருக்கேன். . ”
கண்ணீரிலும் என் முகத்தில் ஒரு புன்னகை. .

சிரித்துக் கொண்டே ஓடி இரண்டு நிமிடத்தில் பேஸ்கட் பால் க்ரௌண்டை அடைந்தேன். . அவன் நாங்கள் வழக்கமாக அமரும் அந்த ஸ்டோன் பெஞ்சிலே அமர்ந்து இருந்தான். . கண்கள் முழுதும் கண்ணீருடனும் இதயம் நிறைந்த காதலுடனும் நான் அவன் அருகில் அமர்ந்தேன். . அவனை கட்டி அணைத்து கொண்டு அவன் மார்பில் சாய்ந்து அழ வேண்டும் போல இருந்தது எனக்கு . . ஆனால் நாங்கள் இருவரும் சில நொடிகள் அமைதியாகவே இருந்தோம். . பின் நானே பேச ஆரம்பித்தேன். .

“உன்ன எங்க லாம் தேடறது . இங்க என்ன பண்ற?

“நானும் உன்ன தேடிட்டு தான் இருந்தேன். . .”
அவன் குரல் தழு தழுத்தது. . . .இருட்டில் அவன் முகத்தை என்னால் சரியாக பார்க்க முடிய வில்லை. .

“ஏன் என்ன தேடின?”
நான் கேட்டேன். .ஆனால் அவன் எந்த பதிலும் சொல்ல வில்லை. .

“உன்ன தான் கேக்றேன் அஷ்வின். . ஏன் என்ன தேடின?”

“ஐ அம் சாரி கீர்த்தி. . ”
அவன் முதல் முறையாக என்னிடம் மன்னிப்பு கேட்கிறான். . இதை நான் எதிர்பார்த்த நேரம் அவன் கேட்க வில்லை. . .ஆனால் இப்போது இந்த மன்னிப்பு எனக்கு தேவை இல்லை. . அது இந்த நிமிடம் எனக்கு உபயோகமே இல்லாத ஒன்று. . அவனுடைய சமாதானம் இப்போது எனக்கு தேவை இல்லை எனக்கு தேவை அவனது காதல். .காதல் மட்டுமே .. இப்போது மட்டும் இல்ல என் வாழ்நாள் முழுவது. . .

“இப்ப எதுக்கு சாரி கேக்ற?”

“மூணு வருஷத்துக்கு முன்னாடி பீச் ல நம்ம சண்ட போட்ட போது என்னால கேக்க முடியல. .அப்டி அப்பவே நான் சாரி கேட்டு இருந்தா நீ என்ன விட்டு போயிருக்க மாட்டல. . ”
அவன் என் முகத்தை பார்க்காமலே பேசி கொண்டு இருந்தான். .

“நான் உனக்காக அடுத்த நாள் ட்ரெயின் ஏறுற வரைக்கும் காத்துட்டு இருந்தேன். . நீ வருவியா னு கண்ணு வலிக்க வலிக்க உன்ன எதிர்பார்த்துட்டு இருந்தேன். . ஆனா நீ கடைசி வர வரவே இல்ல. . ”

“உனக்கு தெரியாத கீர்த்தி நா ஸ்ட்ரெஸ் ல இருந்தா குடிப்பேனு. .நமக்குள்ள இவ்ளோ பெரிய சண்ட வந்த அப்புறம் நான் எப்டி குடிக்காம இருப்பேன். .”
என குரலை உயர்த்தி கோபமாக பேசி விட்டு அடுத்த நொடியே சாந்தம் ஆகி மேலும் பேசினான். .

அந்த டே ஃபுல்லா நான் குடிச்சு குடிச்சு ரூம் லையே விழுந்து கெடந்தேன். . அதனால தான் என்னால வர முடியல. . தொடர்ந்து ரெண்டு நாளா நான் குடிச்சிட்டே இருந்தேன். .மூனாவது நாள் போத தெளிஞ்சதும் பதறியடிச்சிகிட்டு ரேணு கிட்ட கேட்டேன் ஆனா அவ எனக்கு ஒழுங்காவே எந்த பதிலும் சொல்ல. .”

“சோ அதுக்கு அப்புறம் என்ன மறந்துட்ட அப்டித்தான?”

“நீ இப்போவர என்ன புரிஞ்சிகிட்டது அவளோ தானா கீர்த்தி. .? நீ போனதுக்கு அப்புறம் நான் மைசூர் கு வந்து ஒரு இடம் விடாம உன்ன தேடினேன். . ஆனா என்னால உன்ன கண்டு பிடிக்க முடியல. .உன்ன பாக்காம போகவே கூடாதுன்னு தான் நான் ரேணு கு கால் பண்ணி மறுபடியும் உன்ன பத்தி கேட்டேன். . அப்போதான் அவன் உனக்கு நிச்சயம் ஆகிட்டாத என்கிட்ட சொன்னா. . ஆனா அதுக்கு அப்புறம் கூட நான் உன்ன தேடிட்டு தான் இருந்தேன் கீர்த்தி. . என் கெட்ட நேரம் ஒரு எடத்துல கூட உன்ன என்னால பாக்கவே முடியல. . நீ எங்க போன கீர்த்தி?”

“இடியட் உன்ன நெனச்சு நெனச்சு அழுது அழுது என் ரூம் குள்ளேயேதான் மொடங்கி போயிருந்தேன் டா நான். . . ”
என மனதில் சொல்லி கொண்டேன். .

“சரி அத விடு. . சாரி சொல்றதுக்காகவா நீ அவ்ளோ தூரம் என்ன தேடி வந்த?”
அவன் சில நொடிகள் மௌனமானான். . .

“அன்னிக்கு நான் ஏன் மைசூர் வந்தேன் ஏன் பைத்திய காரன் மாதிரி உன்ன தேடி அலைஞ்சேன்னு எனக்கு தெரியல . .நீ உன்னோட சின்ன வயசுல யாரும் இல்லாம ஹாஸ்டல்ல தனியா இருந்து எவ்ளோ கஷ்ட பட்டனு அடிக்கடி என்கிட்டே சொல்லிக்கிட்டு இருப்ப. . .நீ சொல்லும் போது உன்னோட வார்த்தைங்கள மட்டும் தான் என்னால கேட்க முடிஞ்சது ஆனா உன்னோட அந்த தனிமை எப்டி இருக்கும் அது எவ்ளோ ஒரு கொடுமையான ஒன்னுனு நீ என்னோட இருந்த வரைக்கும் எனக்கு தெரியல. . நீ என்ன விட்டு போன அடுத்தா நாள் ல இருந்து நான் அந்த வலியையும் தனிமையையும் உணர ஆரம்பிச்சேன் கீர்த்தி. .

தனிமை எப்படி பட்டது னு உன்னோட பிரிவால எனக்கு சொல்லி குடுத்துட்டு போயிட்ட நீ .. அதுக்கு அப்புறம் தெனமும் நான் இங்க வந்து இப்டிதான் உக்காந்துட்டு இருப்பேன் லைப் ல எல்லாத்தையும் இழந்தவன் மாதிரி . . நீ மைசூர் க்கு கெளம்பி போனப்போ நான் குடிச்சி இருந்த தால தான் உன்ன பக்க முடியாம போச்சு. . அதனால் அதுக்கு அப்புறம் நான் குடிக்கிறதையே விட்டுட்டேன் கீர்த்தி. . ”

ஒரு சில நிமிடங்கள் என்னால் என் காதுகளையே நம்ப முடிய வில்லை. . அவனது வார்த்தை கள் என் கண்களில் கண்ணீரை மட்டும் அல்ல. .என் இதயத்தில் வலியையும் கொடுத்து கொண்டு இருந்தன. .அவன் எனக்காக குடிப்பதை நிறுத்தி இருக்கிறான் .. . எனக்காக மைசூர் வரை வந்து என்னை தேடி இருக்கிறான். .கிட்ட தட்ட நான் அனுபவித்த எல்லா மன வலி களையும் அவனும் அனுபவித்து உள்ளான் . . . .அவன் மனதில் உள்ளவற்றை இப்போதாவது சொல்கிறானே. . அதுவே எனக்கு பெரிய ஆறுதல். .

“எனக்கு யாரோடையோ கல்யாணம் ஆயிருச்சுனு தான நீ நம்பிட்டு இருந்த? . .அதுக்கு அப்புறமும் ஏன் என்ன கல்யாணம் பண்ணிகிட்ட?”

“என் அப்பா இவ தான் கல்யாண பொண்ணுனு உன்னோட போட்டோ வ காட்டும் போது எனக்கே கொஞ்சம் ஷாக்கிங்கா தான் இருந்துச்சு. .ஒரு வேல நீங்க பிரிஞ்சி இருப்பிங்களோ னு எனக்கு தோனுச்சு. .

பாசம் வச்சி பிரிஞ்சி போனா எவ்ளோ கஷ்டம்னு எனக்கு தெரியும் கீர்த்தி. . உன்னால நான் அத புரிஞ்சி கிட்டேன். . அது மட்டும் இல்ல. . நீ உன்னோட ஹஸ்பண்ட எப்டி நேசிச்சு இருப்ப அவன் மேல எவ்ளோ பாசம் வச்சு இருப்பனு எனக்கு தெரியும் . . நிச்சயமா என்ன மாதிரி அவன் தான் உன்ன புரிஞ்சிகாம உன்ன விட்டு பிரிஞ்சிபோயிருப்பாணும் எனக்கு தெரியும். . . .

உன்னோட சந்தோஷத்த உனக்கு திருப்பி குடுத்து அவனோட உன்ன மறுபடியும் சேர்த்து வச்சு நான் உன்ன படுத்தின பாடுக்கெல்லாம் ஒரு ஆறுதல் தேடிக்காலம் நெனச்சேன். . . முக்கியமா நான் இந்த மேரேஜ் கு ஒத்துகிட்டதே பிரிஞ்சி இருந்த உங்கள சேர்த்து வைக்கறதுக்காக தான் ..அதனால எல்லாத்தையும் எனக்குள்ளையே போட்டு மறச்சி வச்சுக்கிட்டு உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன். . ”
என அவன் எனக்காக அவன் வாழ்க்கையை தியாகம் செய்ததை போல கூறினான். .

“சோ நெஜமாவே எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க தான் நீ என்ன கல்யாணம் பண்ணிகிட்டியா?”

“ஆமா”

“எம்மேல ப்ரோமிஸ் பண்ணி சொல்லு?”

“ஹிம்ம் நான் உன்ன என் முழு மனசோட தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். .இதனால நான் சந்தோஷப் பட்டேனே தவிர ஃபீல் பண்ணல. . . . ஆனா உங்க ரெண்டு பேருக்குள்ளையும் என்ன பிரச்சன ஆகி இருக்கும் எதுக்காக நீங்க பிரிஞ்சிங்க அத பத்தி நான் எப்டி தெரிஞ்சிக்கப் போறேன் தெரிஞ்சிகிட்ட அப்புறம் அத சால்வ் பண்ண நான் என்ன பண்ண போறேன் இதெல்லாம் நெனச்சு கொஞ்சம் பயமாவும் கஷ்டமாவும் இருந்தது. .

ஏன் னா எனக்கு தெரியும் உன்னோட பாசத்த பத்தியும் உன்னோட கேர் பத்தியும் . .நீ உன் ஹஸ்பண்ட் மேல பாசம் வச்சு அந்த பாசத்துல ஏதாவது பிரச்சன வந்தா நீ எவ்ளோ ஹர்ட் ஆவ னு எனக்கு தெரியும் .. நீங்க பிரிஞ்ச அப்புறம் நீ எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பனு நெனச்சு அப்டிகடி பீல் பண்ணுவேன். . !!!”

“அப்புறம் ஏன் எங்க ரெண்டு போரையும் சேர்ந்து வைக்க நீ ட்ரை பண்ணல. ? அதுக்காக தான என்ன கல்யாணம் பண்ணிகிட்ட?”

“உன்ன கல்யாணம் பண்ணிகறதுக்கு முன்னாடி இப்டி நெறைய யோசிச்சேன். . . உன் புருஷனோட உன்ன எப்டியாவது சேர்த்து வச்சிரணும்னு தீவிரமா நெனச்சிகிட்டு இருந்தேன். . ஆனா உன்ன கல்யணம் பண்ணிகிட்டதுக்கு அப்றமா நான் மறுபடியும் உம்மேல பைத்தியம் ஆகிட்டேன் கீர்த்தி. .

காலேஜ் ல இருந்த அதே கீர்த்தியா உன்ன நான் பாக்க ஆரம்பிச்சுட்டேன் . . ப்ரெண்டா இருக்கும் போதே உன்ன யாருக்கும் என்னால விட்டு குடுக்க முடியல. . அப்டி இருக்கும் போது என்னோட பொண்டாட்டிய என்னால எப்டி இன்னோருத்தனுக்கு விட்டு குடுக்க முடியும்? . . . . நீயே என்ன விட்டு போகணும்னு நெனச்சாலும் என்னால உன்ன விட முடியாது கீர்த்தி. . .ஒரு தடவ உன்ன விட்டு குடுத்தே நான் பட்ட கஷ்டம் போதும் . . மருபடியும் உன்ன எழந்து நான் இன்னொரு தடவ சாக விரும்பல .. ”

அவன் குரல் மிகவும் குழந்தை தனமாக இருந்தது. . .

கடவுளே நல்ல வேளையாக அவன் இவ்வளவு நேரம் என் கண்களைப் பார்த்து பேச வில்லை. . ஒரு வேளை அவன் என் கண்களைப் பார்த்து இதையெல்லாம் சொல்லி இருந்தான் என்றால் நிச்சயமாக அவனுக்கு ஒரு அன்பு முத்தத்தை பரிசாக கொடுத்து அவனை பேச விடாமல் தடுத்து இருப்பேன். .

“சோ நீ என்ன உன் பேமிலி கட்டாய படுத்துனதால தான் கல்யாணம் பண்ணிகிட்டேனு என்கிட்ட பொய் சொல்லி இருக்க ல. . ?”
அவன் அமைதியாகவே இருந்தான். .

“சொல்லு .. ஏன் அமைதியாவே இருக்க?”

என் குரலில் பொய்யான கோபத்தை திணித்துக் கொண்டு அவனை மிரட்டும் விதமாக என் குரலை உயர்த்திப் பேசினேன். . இருட்டு என்பதால் நான் என் சிரிப்பை மறைக்க அவ்வளவாக சிரம பட வில்லை. . முதல் முறையாக நான் கேள்வி கேட்க அவன் அன்பாகவும் பொறுமையாகவும் எனக்கு பதில் அளித்து கொண்டு இருக்கிறான். . .

“இங்க பாரு கீர்த்தி . . சில விஷயங்கள சொல்லி புரிஞ்சிகறத விட சொல்லாமலே இருக்கறது தான் விளக்கமான பதிலா இருக்கும். . . உன்னால என்ன புரிஞ்சிக்க முடியல அவ்ளோ தான். . . .விடு !!”

என் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இப்படி பேசி என்னை திசை திருப்புகிறான். .

“ஓகே. . இத தவிர்த்து வேற எதுக்காகவாவது என்கிட்ட நீ பொய் சொல்லி இருக்கியா ?”

“பொய் சொல்றது தான் என்னுடைய ஃபுல் டைம் ஜாப் னு நெனச்சிட்டு இருக்கியா?”

“சரி நான் உன்ன நம்புறேன்.. ஆனா உண்மைய சொன்னா எங்க இவ நம்மகிட்ட பேசாம போயிருவாளோனு பயந்து எப்பவாச்சும் எதாவது எங்கிட்ட இருந்து மறச்சி இருக்கியா?”

“யா ஒரு தடவ நீயும் நானும் தூங்கிட்டு இருக்கும் போது தூக்கத்துல கூட நீ ரொம்ப டிஸ்டர்பா இருந்த. .. அதனால உன்ன தொட்டேன். என் கைய உம்மேல போட்டு உங்கிட்ட நெருங்கி வரும் போது நீ திடீர்னு எழுந்துட்ட . . உனக்கு என்னோட நெருக்கம் பிடிக்கலன்னு நெனச்சேன். . அதனால தான் நான் உங்கிட்ட அது கனவு நான் உன்ன தொடலனு பொய் சொன்னேன். . . .தட்ஸ் ஆல். . . .வேற எதுக்கும் உங்கிட்ட பொய் சொன்னது இல்ல மரச்சதும் இல்ல..
அவன் சொல்லி முடித்தான். .

எனக்கு தெரியும் அது கனவல்ல என என்னால் உணர முடிந்தது. . . .

“உண்மையிலேயே உனக்கு என்னோட டச் பிடிக்கலையா ?”
அவன் மிகவும் சோகமாக கேட்டான்

அவனது அந்த தீண்டலை நான் எவ்வளவு ரசித்தேன். . மீண்டும் வேண்டும் என்று எவ்வளவு விரும்பினேன் என்பதை அவனுக்கு வார்த்தைகளால் எப்படி சொல்லி புரிய வைப்பது. .

“நான் ஏதோ ஒரு திங்கிங் ல இருந்தேன். . அத விடு நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் . .ரேணு எனக்கு இன்னொருத்தர் கூட நிச்சயம் ஆகிருச்சுனு உங்கிட்ட பொய் சொல்லி இருக்கா. . நீ என்னோட பேசாம பழகாம இருந்தா நான் சந்தோஷமா இருப்பேன்னு அவ நெனச்சு இருக்கா அதனால தான் உங்கிட்ட அப்டி பொய் சொல்லி இருக்கா. . நான் யாரோடையும் நிச்சயதார்த்தம் பண்ணிக்கல இதுவர மைசூர் ரோடு ல நான் நடந்ததே இல்ல. . நீ என்ன தேடி மைசூர் வந்த டேஸ் ல நான் என்னோட ரூம் ல தான் அடைஞ்சி கெடந்தேன். . . .”

எனக்கு நிச்சயம் ஆக வில்லை என்று சொன்னதும் அவன் சந்தோஷப் படுவான் என்று நினைத்தேன். .ஆனால் அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை . .

“சோ நான் தான் உன்னோட எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு நீ எம்மேல கோவமா இருந்து இருப்ப ல. . ”

அவனுடைய இந்த வார்த்தைகளில் இருந்த குற்ற உணர்ச்சியை என்னால் உணர முடிந்தது. .

“இல்ல உம்மேல எந்த கோவமும் இல்ல. . நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிகிட்டேன். . ”
அவனை சமாதனம் செய்தேன். .

“நான் என்ன விட உன்ன அதிகமா நம்பினேன் கீர்த்தி. .ஆனா எங்க உன்ன இழந்துருவேனோ அப்டின்குற அந்த பயத்துல தான் நான் அவ்ளோ ஹர்ஷா பேசிட்டேன் உங்கிட்ட. .ஷக்தியோட அந்த மெசேஜ் பாத்ததும் எனக்கு பைத்தியமே பிடிச்சிருச்சு. . நான் நானாவே இல்ல. . என்னோட ஒவ்வொரு வார்த்தையும் உன்ன எவ்ளோ ஹர்ட் பண்ணி இருக்கும்னு என்னால உணர முடியுது ..

நான் ஒரு முட்டாள் கீர்த்தி. .நீ சொல்ற மாதிரி யாரோட பீலிங்க்சையும் புரிஞ்சிக்க தெரியாத ஒரு பெரிய முட்டாள்.. என்னால் உன்ன யாருக்கும் விட்டு குடுக்க முடியாது கீர்த்தி. .ஷக்தி உனக்கு ப்ரப்போஸ் பண்றதுக்கு முன்னாடி அவன் உன்ன எப்டியெல்லாம் ரசிச்சு இருப்பானு என்னால யோசிச்சு பாக்க கூட முடியல. . அத என்னால ஜீரணிச்சிக்கவும் முடியாது. . . .அவன நான் வெருக்குறதுக்கான மொதல் காரணமே இது தான். .

நான் மட்டும் தான் உன்ன ரசிக்கணும். . என் ஹார்ட் ல மட்டும் தா உன்ன வச்சிருக்கணும் . .நீ எனக்காக மட்டும் தான் இருக்கணும்னு எப்பவும் நெனைச்சிட்டு இருப்பேன் . . அதனால தான் நான் அப்டியெல்லாம் நடந்துகிட்டேன் அன்னிக்கு. . ஐ அம் ரியலி சாரி கீர்த்தி. . ”
துக்கத்தால் அவன் குரல் முன்பை விட மேலும் மேலும் தடுமாறியது. . .

“இட்ஸ் ஓகே அஷ்வின்.. அத விடு.. உன்னோட பீலிங்ஸ என்னால உணர முடியுது. .”
நான் அவனை சமாதனம் செய்ய முயற்சித்தேன். .

“அட்லீஸ்ட் நீயாவது எனக்கு சொல்லி இருக்கலாம் ல கீர்த்தி. .எத்தன நாள் நாம ஒன்னா இருந்தோம். . ஏன் நீ இத பத்தி என்கிட்ட பேசவே இல்ல. . எப்பவும் எல்லா தப்பும் உம்மேல மட்டும் தான் இருக்கும்னு யோசிக்கிற அரகண்ட்டா நான்?”

“நமக்குள்ள நடக்குற எல்லா பிரச்சனைக்கு அப்றமும் நாந்தான் மோதல் ஆளா சமாதானத்துக்கு வருவேன். .ஆனா நீ ஒரு தடவையாவது எறங்கி வந்து என்கிட்ட இத பத்தி ஒரு வார்த்த கேட்டு இருக்கலாம் ல. . ”

“என்ன தப்பு சொல்லாத கீர்த்தி. . நீ டிஸ்டர்ப்டா இருக்கும் போதெல்லாம் எத்தன தடவ என்ன நடந்துச்சுனு நான் உங்கிட்ட கேட்டு இருப்பேன். . அப்போலாம் கூட நீ உன்னோட பீலிங்க்ச மறசி கோஸ்ட் மூவி பார்த்தேன் கெட்ட கனவு வந்துச்சினு சொல்லி பொய் சொல்லி உன்னோட பீலிங்ச மறச்சல.?”

“கொழந்த மாதிரி பேசாத அஷ்வின். . கோஸ்ட் மூவி பாத்தேனு உங்கிட்ட சொன்னது எல்லாம் சும்மா வெளயாட்டுக்கு தான். . ஏன் இதெல்லாம் சீரியஸா எடுத்துக்குற?”

“ஆமா நான் இடியட் தான். . எல்லாரையும் இப்டி கண் மூடித் தனமா நம்பிகிட்டு இருக்கேன் பாரு அதனால தான் நீ பொய் சொல்ற உன் ப்ரெண்ட் பொய் சொல்றா எல்லாரும் இப்டி பொய் சொல்லி சொல்லி என்ன சீட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. . ”

“ப்ரெண்டா? நீ ரேணு சொன்னத பத்தி சொல்றியா? . .அஷ்வின் இதெல்லாம் என்ன மூவினு நெனசிகிட்டு இருக்கியா? உன்ன விட்டு வெலகி போனதும் நான் இன்னொருதன கல்யாணம் பண்ண? என்ன இன்னொருத்தனுக்கு தியாகம் பண்ணிட்டு உன்ன ஹீரோனு நென்சுகிட்டு இருக்கியா? எப்டி உன்னால இப்டியெல்லாம் யோசிக்க முடியுது .. .நீ பிராக்டிக்கலா யோசிச்சு பார்த்து இருந்தாலே ரேணு சொன்னது பொய்னு நீயே புரிஞ்சிகிட்டு இருப்ப. ..”
அவன் இப்போதும் என்னை திரும்பி என் முகத்தைப் பார்க்க வில்லை. .
அவன் என்னை பார்க்க வேண்டும் அதற்க்கு நான் என்ன செய்ய. .

“ஓகே இப்போவாச்சும் எல்லாத்தையும் சொல்லணும்னு உனக்கு தோனுச்சே. .தேங்க்ஸ் ஃபார் ஆல். . நான் டெல்லிக்கு போறேன். நான் போனதுக்கு அப்புறம் நீ ஹேப்பியா உன்னோட லைப் என்ஜாய் பண்ணு. . .”

சொல்லிவிட்டு நான் எழுந்து சில அடிகள் நடந்து சென்றேன் . அவனை பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே பொய்யான வார்த்தைகளை பேசி விட்டு பொய்யான கோபத்துடன் நான் செல்வது போல மெதுவாக நடந்தேன். .

பிறகு அவனும் எழுந்து விட்டான். .

“நீ என்ன லூச? . .நீ என்ன விட்டு போகணும்னா நான் இவ்ளோவும் சொல்லிக்கிட்டு இருக்கேன். .ஏற்கனவே ஒரு தடவ என்ன விட்டு போயி என்ன சாவடிச்சது போதும். . இனிமே வேணாம். .உனக்கு ஜாப் போகணும் னு ஆச இருந்தா இங்க இருந்தே போ. . அப்டி இல்லனா வேலைய ரிசைன் பண்ணிட்டு வீட்லயே இரு.. ”

“இங்க இருந்து நான் என்ன பண்ண போறேன அஷ்வின். . ? . முடியாது நான் டெல்லி போக தான் போறேன்”

“போகாத. . ”
அவனது குரல் கம்பீரமானது ..

“எதுக்காக நான் இங்க இருக்கணும்.? ஏன் நான் டெல்லிக்கு போக கூடாது? ”

“எனக்காக? ”

“உனக்காகவா? ஏன்?”

“ஏன்ன நீ இல்லாம என்னால இருக்க முடியாது கீர்த்தி?”

“என்ன காரணம் . .ஏன் உன்னால என்ன விட்டு இருக்க முடியாது. . ?”

“ஏன்னா. .என்னால முடியாது அவளோ தான். . என்ன விட்டு போகாத. .”
அவன் குரலில் மீண்டும் துக்கம். .

“உனக்காக நான் ஏன் இங்க இருக்கணும். .எனக்கு ரீசன் சொல்லு மொதல்ல. . ”

“என்ன சொல்ல சொல்ற? நெஜமா கீர்த்தி . எனக்கு . .. .. எனக்கு எப்போ இந்த ஃபீல் ஆரம்பிச்சதுன்னு தெரியல. . ஆனா நீ இல்லாம என்னால இருக்க முடியாது கீர்த்தி. . ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. . !!!”

“ஆரம்பிச்சதா? . .என்ன ஆரம்பிச்சது எதுக்காக ஆரம்பிச்சது. . ?”
இவ்வாறு கேட்கும் போதே எனது இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.. நான் அவனிடம் இருந்து எதிர் பார்க்கும் அந்த வார்த்தை இப்போது வர போகிறது. .

ஆனால் அவன் இப்போதும் கீழே குனிந்து கொண்டு தான் இருக்கிறான். . நான் அவனது பதிலுக்காக காத்து கொண்டு இருந்தேன். . கடைசியாக நான் எதிர்பார்த்த அந்த வார்த்தை அவன் வாயில் இருந்து மெதுவான குரலில் வந்தது. .

“லவ்”

“என்னது. .எனக்கு சரியா கேக்கல. ..”
பொய் சொன்னேன். .

“லவ்” என அவன் வேகமாக அதே நேரம் சத்தமாக கூறினான். .ஆனால் அவன் கண்கள் வேறெங்கோ பார்த்துக் கொண்டு இருந்தன. . இந்த வார்த்தைக்கா தானே நான் ஏழு வருடங்களாக ஏங்கி காத்து கொண்டு இருந்தேன். . அவன் சொன்னதும் என் கண்களில் கண்ணீர் வழிந்து என் கன்னங்களை தொட்டது. . முதல் முறையாக சந்தோஷத்தில் என் கண்களில் கண்ணீர் வருகிறது. . .

என்னுடைய இத்தனை வருட கஷ்டம் துயரம் வலி எல்லாம் இந்த ஒரே வார்த்தையில் மறைந்தே போனது. ..

“என் கண்ண பாத்து ஒழுங்கா சொல்லு இல்லனா நான் போயிருவேன். . .”
செல்லமாக அவனை மிரட்டினேன். .
அவன் என் பக்கம் திரும்பி என் கண்களைப் பார்த்தான். . அவன் சொன்ன அந்த வார்த்தையை விட அவனது அந்த பார்வையில் அவ்வளவு காதல் இருந்தது. .இந்த உலகத்தை மறந்து நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தோம். . சில நொடிகளில் அவன்

“ஐ லவ் யூ கீர்த்தி. . . .ப்ளீஸ் என் கூடவே இரு. .என்ன விட்டு எங்கயும் போயிறாத. . நீ இல்லாம என்னால இருக்கவே முடியாது. . ”
நான் கண்ணீருடன் சிரித்துக் கொண்டே அவனை வேகமாக சென்று அணைத்து கொண்டேன். . என்னை விட அஷ்வின் என்னை இறுக்கமாக அணைத்து கொண்டான். .

“நீ இவ்ளோ இறுக்கமா என்ன பிடிச்சிகிட்டு இருந்தா என்னால எங்கயும் போக முடியாது அஷ்வின். . ”
சிரித்து கொண்டே நான் சொன்னேன். .

“நான் சொல்லிட்டேன் ஆனா நீ இன்னும் உன்னோட லவ் வ சொல்லவே இல்லையே ”
என அவன் எனக்கு நினைவு படுத்தினான். .

நான் அவன் முகத்தைப் பார்த்தேன். . அவன் கண்களில் முதல் முறையாக கண்ணீர்.. .. . அவன் முதல் முதலாக அழுது நான் பார்க்கிறேன் அதுவும் எனக்காக. . ”

“வார்த்தைகளில் சொன்ன அவனது காதலை விட என்னுடைய காதல் எவ்வளவு அழுத்தமானது என்பதை என் முத்தத்தின் மூலமாக அவனுக்கு காட்டினேன். . இல்லை இல்லை அவனுக்கு உணர்த்தினேன். . . . . . .