"

இணைப்புகள் என் அருமை மகனுக்கு - பாகம் 2

நடராஜன் நாகரெத்தினம்

வாசகர்களே!

காலம் காலமாக,  நாமெல்லாம் சிறுவர்களாயிருந்த பொழுது படித்தும் கேட்டும் வந்த சில பழைய கதைகளை, திரும்பவும் ஒரு முறை,   நீங்கள்   இங்கே படிக்கலாம்.

ஏன் பழைய கதைகளைத்  திரும்ப எழுதுகிறேன், தெரியுமா? இவற்றில் பொதிந்துள்ள அறிவு நம் வாழ்வை வளப்படுத்தும்.

உங்களில் பலருக்கு  இந்தக் கதைகள் எல்லாவற்றையும்  படிக்கும் அல்லது கேட்கும் வாய்ப்புகள் இருந்திருக்காது.     அப்படியே சிலர் கேட்டிருந்தாலும்  அல்லது படித்திருந்தாலும், பெரும்பாலானோர்,   அதன் பயனை அனேகமாக இழந்திருக்கலாம்.

படித்த அல்லது கேட்ட கதைகளை நம் வாழ்க்கை நிகழ்வுகளில் இணைத்துப் பார்க்கும் பயிற்சி பலருக்கு இருப்பதில்லை.

நாம் கேட்ட, படித்த, பார்த்து ரசித்த எல்லாக் கதைகளையும் நமது வாழ்கையில் இணைத்துப் பாரத்தால். உங்கள் வாழ்கையில் பல புதிய குழப்பங்கள் தவிர்க்கப்படும், பல இழப்புகள் மீட்கப்படும், எல்லாத் துன்பங்கள் துரத்தப்படும்.

கதையின் முக்கியத்துவம் எல்லாம் சரி. இந்தப் புத்தகத்தின் சிறப்பு அம்சம்தான் என்ன?

கதைகளின் கருத்தை,  படிப்பவர்களின்   மனதில்   நிறுத்தி  அவற்றை வாழ்கையில் இணைக்க   சில   உத்திகளை   உருவாக்கி சில,  பரிசோதனைகளைச் செய்திருக்கிறேன்.

அதில்,  சில பழைய கதைகளை  மாற்றி அமைத்ததும், அந்த பழங்கதைகளுக்கு  தற்கால வடிவமும் தந்துள்ளதும் ஆகும். நடாராஜன் நாகரெத்தினம்.  இணைப்புகள். குழந்தைகளாக இருந்தபோது, பலர் இந்த கதைகளைக் கேட்டிருக்கலாம்.  அப்பொழுது  வாழ்கையின் அனுபவங்கள் ஆரம்பிக்கவில்லை.

வாழ்க்கை அனுவங்கள் ஆரம்பித்தபின் கதைகள் மறந்து விட்டன. எனவே கதைகள், ஒரு வெட்டிப் பேச்சாக, மனதின் இருட்டான ஓரு மூலையில் சேர்ந்துள்ளன.   அதனால்,  சேர்த்து வைத்துள்ள அறிவு நமக்குப் பயனாகவில்லை.  அவற்றைத் தூசி தட்டி, வாழ்கைக்குப் பயன் தரும் வகையில், கதையையும் வாழ்க்கையையும் இணைக்க இது  ஒரு சிறிய முயற்சி.

நடராஜன் நாகரெத்தினம்.

பங்களூரு.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book