"

கதை 3

 

 

cats-1

சிலநூறு வருடங்களுக்கு முன்னால், காட்டிலிருந்து இரண்டு பூனைகள் ஓரு நகரத்தில் குடியேறின. நகரத்தில், ஒரு செல்வந்தர் வீட்டில், வார்ப்புப் பிராணியாக வாழ்ந்து வந்தன.
தினந்தோரும் வீட்டில் உள்ள நபர்களால் தனக்குத் தரப்படுவதைத் தவிர, அடிக்கடி, அடுக்களையிலிருந்து, வகை வகையான உணவுகளைத் திருடித் தின்பது இந்தப் பூனைகளுக்கு வழக்கமாகிவிட்டது.
ஒரு நாள், இந்த பூனைகளுக்கு மணமும் ருசியும் மிகுந்த ரொட்டித் துண்டு ஒன்று கிடைத்தது. இரண்டு பூனைகளுக்கும் இடையே அந்த ரொட்டியைப் பகிர்ந்து கொள்வதில் சண்டை போடத் தொடங்கியது.
அருகே வசித்த குரங்கு ஒன்று, இந்த பூனைகள் வித விதமான உணவுகளை உண்பதை பல நாட்களாகக் கவனித்து வந்தது. தனக்கும் அப்படி ருசியான உணவுகளை ரசிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியிருந்தது.
இந்த பூனைகளிடையே பூசல் கிளம்பியதும், இதுதான் தக்க தருணமென்று இரண்டு பூனைகளுக்கும் இடையே புகுந்து அவைகளை ஏமாற்றத் திட்டமிட்டது குரங்கு.
பூனைகளை அணுகி, அவர்களுக்கு தான் உதவுவதாகக் கூறியது. தனக்குப் பங்கிடுவதில் தனித் திறமைகள் இருப்பதாகவும். இந்த திறமையைக் கொண்டு தான் ரொட்டியை துல்லிமாக இரு சம பங்காக செய்து தர இயலும் என்றும் கூறியது.
இரண்டு பூனைகளும், மற்றொரு பூனைக்கு தன்னை விட அதிகமாக கிடைத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக நின்றதால், குரங்கிடம் ரொட்டித்துண்டைத் தந்து குரங்கின் இருபக்கமும் ஆவலாக காத்திருந்தன.
முதலில் ரொட்டி துண்டை இரண்டாகப் பிளந்தது குரங்கு.அதில் ஒன்று பெரியதாகவும், மற்றது சிறியதாகவும் இருக்கும்வகையில். பார்த்துக் கொண்டது. இதை பூனைகளிடம் காட்ட, அவைகளை சரிசமம் என ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே, குரங்கு இரண்டில் பெரியதான ஒரு துண்டைக் கடித்து (தின்றது) இப்போது பெரிய துண்டு சிறியதாக, சிறியததோ பெரியதானது. இவைகளைப் பூனைகள் காண, இவைகள் சரிசமமாக இல்லாததால் இதையும் ஒப்புக் கொள்ளவில்லை..
படிப்படியாக, மாற்றி மாற்றி, ரொட்டித் துண்டுகளைக் குரங்கு கடிக்க இரு துண்டுகளும் சிறிது சிறிதாகக் குரங்கின் வயிற்றில் இறங்கின. கையில் எட்டியது வாயிலே எட்டாது போக இரு பூனைகளும் துக்கமாகத் திரும்பின.
பூனைகள் மாறிவிட்டன.
குரங்குகள், பங்கீடு செய்து தருவதாக பூனைகளை ஏமாற்றுவதாக பூனைகள் தங்கள் மூதாதையர் மூலம் அறிந்திருந்தன.
பின் ஒரு காலத்தில், பூனைகளுக்கிடையே பங்கிடும் தேவை வந்தபோது, அதே வீட்டைச் சேர்ந்த நாய் ஒன்று, சமரசம் செய்து வைக்க முன் வந்தது. பூனைகள், நோ, தாங்ஸ் என்று பணிவாக ஒதுங்கிக்கொண்டன. இப்போது பூனைகள் தமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
ஒப்பந்தம் என்னவென்றால், தங்களுக்குள் எழும் எந்த பிரச்சனைகளுக்கும், எப்போதும், மூன்றாவது நபர் எவரையும் நடுவராக நியமிப்பதில்லை. தங்களுடைய பிரச்சனைகளை தங்களுக்குள் தீர்த்துக்கொள்வதுதான்..
ஆனால் மனிதனோ, நீதிமன்றங்களை வழிய வழிய, புகார்களால் நிரப்பி, பணம் விரயம் செய்து, மனம் நொந்து வாழ்ந்து வருகிறான்.
வாசகர்களே,
எச்சரிக்கையாக இருங்கள். நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள், தம்மிடையே தோன்றிய, காலாவதியான பல விதமான (குலம், ஜாதி, மதம் என்ற) பிரிவுகளைக் காத்து வந்ததோடு, புத்திகெட்ட இந்த பூனைகளைப் போல ஒரு பிரிவினர் மற்றவர் மேல் போட்டி பொறாமை கொள்வதும், சண்டையிடுவதும் வழக்கமாகிவிட்டது.
அந்தப் பிரிவுகளை மையமாக வைத்துக் கதையில் கண்ட குரங்கின் குணமுள்ள சிலர், நண்பர்கள், மற்றும் தலைவர்கள் என்ற போர்வையில் நம் மத்தியில் தோன்றுவார்கள். மக்களைப் பிரித்து, இரு சாராரையும் ஏமாற்றி, பெரும் பயனடையும் தந்திரத்தை உணர வேண்டும்.
கருத்து: எதிரியின் பலம் அறியாது மோதுதல் அழிவைத் தரும். அடுத்ததாக, நாம் எங்கே, எப்பொழுது காக்கைகளைப் பின்பற்றவேண்டும் என்று பார்ப்போமா?
காக்கையை, ஏதோ கருப்பாக இருக்கிறதே என்று குறைத்து மதிப்பிடாதீர்கள். இவைகளுக்கு, மனிதனைவிட அறிவு அதிகமென்று மிகப்பழைய காலத்தில் எழுதப்பட்ட ஒரு கதை.
கதையை தொடங்கும் முன்னால், இந்த காலத்தில், அடிக்கடி நிகழும் சில துயரமான சம்பவங்களை, சற்று உன்னிப்பாகக் கவனிப்போம். அதில் நல்லவர்கள் பலர் அநியாயமாக உயிர் இழந்துவரும் செய்திகளைக் கண்டும் கேட்டும் வருகிறோம்.
அதே சமயம், சமூக துரோகிகள், ஏமாற்றி பிழைப்பவர்கள், அனியாயம் செய்வோர், பல கொடுமையான குற்றங்கள் செய்வோர் என்ற தீயவர் பலர் சுதந்திரமாக திரிவதையும் காண்கிறோம்.
வீரமா, விவேகமா?
உதாரணமாக, நமது நாட்டில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் லஞ்ச ஊழல் புரியாத அதிகாரிகளும், பொதுமக்களைச் சுரண்டாத மக்கள் தலைவர்களும் இல்லை எனலாம்.
லஞ்ச ஊழல்களால் அதிகம் பாதிக்கப் படுவது ஏழைகள் மாத்திரமே. ஆனால் அடி உதை வாங்குவதோ, மத்திய தர வருமானமுள்ள சிலரே. அது ஏன்?
(1) செல்வந்தர்களுக்கு ஊழல் ஓரு வரப்பிரசாதம். வரி கொடுக்காமல் தப்பிப்பதிலிருந்து, வேகமாக ஸ்போர்ட்ஸ் கார்களை ஒட்டி நடைபாதை வாசிகளை நசுக்கி கொல்லும் தன் பிள்ளைகளைக் காப்பாற்றவும், போதை மருந்து, கொலை, கற்பழிப்பு, உள்பட, பல குற்றங்கள் செய்த பின்னும் புத்திரச் செல்வங்களை, சட்டத்தின் பிடியிலிருந்து கப்பாற்றி, பின்னர், அவர்களை ஒரு மக்கள் தலைவராகவோ, தொழில் அதிபராகவோ உருவாக்கும் வரை இந்த லஞ்சம் துனை வருகிறது.
சுருக்கமாக சொன்னால், செல்வந்தர்களின் வாழ்வின் ஆரம்பம் முதல் மயானம் வரை, இந்த லஞ்சம், கைகொடுக்கும்.
இவர்களின் தனித் தன்மை கல்வி-கேள்விகளில் தேர்ந்தவர்களாக இருப்பது. உலக அறிவு மிகுந்திருப்பது.
எனவே, பெரும் செல்வந்தர்களை ஊழல்கள் பாதிப்பதில்லை, மாறாக அவர்களுக்கு ஊழல் ஒரு வரப்பிரசாதம். அதோடு மட்டுமில்லை, ஊழல் இல்லாத சமுதாயத்தில் இவர்களால் வாழவே முடியாதென்பது ஓரு மிகப் பெரிய உண்மை.
செல்வந்தர்களால் ஊழல் புரிவோருக்கு எந்த விதமான தொல்லையும் இல்லை.
(2) ஊழல்களால் அதிகம் பாதிக்கபட்டவர்கள், ஏழைகளே.
ஏழைகளுக்கு அறியாமை மிகப்பெரிய பலவீனம். ஒரு வேளை உணவு தந்தவனை கடவுளாக மதிக்கும் நல்லவர்கள். இவர்களுக்கு ஏமாற்றங்கள் தான் வாழ்வின் ஆதாரம். ஏழைகளுக்கு, தானாக அறியும் சக்தியோ, எடுத்துச் சொன்னால் சீரணிக்கும் சக்தியோ, பலமுறை அடிபட்டாலும் உருவாவதில்லை.
இவர்களுக்கு சாதிகள், சாராயம், பொய்யான வாக்குறுதிகள், பரிவான வார்த்தைகள், இவைகள் மிகவும் முக்கியமானவை. சாதிக்கும், சாராயத்திற்குமே இவர்களுக்கு 24 மணி நேரம் போதாது. அதனால், இவர்களாலும் ஊழல் புரிவோருக்கு தொல்லைகளில்லை.
(3) மேலே கண்ட இரண்டு பொருளாதார வர்கங்களுக்கு நடுவில் ஒரு கூட்டம். இவர்கள்தான் மத்திய (பொருளாதார அடிப்படையில்) தரத்தினர் – கற்பதில் ஈடுபாடும் உள்ளவர்கள். இந்த மக்கள் கூட்டத்திடம் தேவைக்கு அதிகமான பணமும் பொருளும் உண்டு. இவர்கள் நாலும் அறிந்தவர்கள். அவர்களை லஞ்சம் ஒரளவு பாதித்தாலும், ஏழைகளை பாதிப்பது போல அவ்வளவு பாதிப்பது இல்லை என்பது உண்மை.
ஆனாலும், நாட்டு நடப்புகளை செய்திதாளில் படித்து, தெரு மூலையில் ஆவேசமாக விவாதித்துவிட்டு பிறகு எல்லாவற்றையும் மறந்து தனது அன்றாட பிரச்சினைகளில் மூழ்கிவிடுவது சராசரி மத்யதர மனிதர்களின் தினசரி வேலை. கேட்கவே வேடிக்கையாக இல்லை? இவர்களெல்லாம், ஒரு மாதிரியான கர்ம யோகிகள்.
எவ்வளவு கல்வி பெற்றாலும், இவர்களில் அதிகமானோர், ஏழைகளைப்போலவே, தங்களைச் சுற்றி பல சிறிய வட்டங்களை உருவாக்கி, அதற்குள்ளே வாழ்பவர்கள்தான் .
இவர்களில் சிலர், சமுதாய நலனில் தீவிரமான அக்கரை உள்ளாவர்கள். இவர்களே. அவ்வப்போது நாட்டில் நிகழும் தவறுகளை சுட்டிக்காடுபவர்கள். இந்த வகையினர். ஆங்கில பத்திரிக்கைகளில் ஆசிரியருக்கு கடிதங்கள் என்ற தலைப்பில் செய்தி பத்திரிக்கையில் வரும் கடிதங்களை எழுதித் தள்ளும் மக்கள், இந்த வகையினர் மட்டுமே !.
பெரும் குற்றம் இழைப்பவர் பலரை சட்டத்தின் நீண்ட கரங்கள் அடைவதில்லை. அடைந்தாலும் சட்டம் விழித்து தண்டனைகள் வழங்க தயாராகும்போது ஒன்று குற்றவாளிகள் முதிய வயதை அடைந்திருப்பார்கள். அப்போது, சட்டம், நாடு எல்லாமே இந்த குற்றங்களை மறந்திருக்கும். அதோடு, சாட்சிகளை விலைக்கு வாங்கும் சட்ட நிபுணர்களும், சிறிய விலைக்கு தங்கள் அதிகாரங்களை விற்கும் அதிகாரிகளின் தயவும் இருக்கும்போது சட்டம் என்ன செய்ய முடியும்?
அவ்வப்போது சில கீழ்த்தரமான அரசியல்வாதிகளும் மற்றும் அவரோடு இணைந்து செயல்படும் அலுவர்களும் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதை பலவிதங்களில் அறிகிறோம். அப்படி, இந்த தீய செயலிகளை மக்களுக்கு வெளிச்சமிட்டும் காட்டும் சிலர், நடுத்தர வகை மக்கள் மாத்திரமே.
இவர்கள் குரலால், பெரியதாக குற்றங்கள் குறைந்ததாகவோ, குற்றமிழைத்தவர் பலர் தண்டிக்கப் படுவதாகவோ நாம் அறிந்ததில்லை.
அப்படியே சிறையில் அடைக்கப் பட்டாலும், குற்றவாளிகளின் திருந்த வாய்ப்பில்லை. பல சிறைசாலைகள் அயோக்கியர்களின் கூடாரமாக செயல் படுவதை தினந்தோரும் செய்திகள் அறிவித்த வண்ணம் உள்ளன. தண்டனை காலத்தின் நடுவே காணாமல் போன கைதிகள் பலரை சட்டம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. செய்த குற்றங்களைச் சிறைச்சாலையிலிருந்தே நடத்துவதும், அப்படி வெளிவந்த செய்திகளின் காரணமாக எந்தவித மாற்றங்கள் உண்டாக்காததும் நாம் அறிந்ததே !
இவற்றில் குற்றமிழைத்த கும்பல், குரல் கொடுத்த பலரை, திட்டமிட்டு கொல்வதும், கொன்றவர் சட்டத்திற்கு வெளியே காலம் காலமாக உலாவதும் நாம் காண்பதே.
நல்லவர்கள் அநியாயமாக சமுக விரோதிகளின் கையில் சாவானேன் என்ற காரணத்தை முன்னிட்டு சொல்லப்பட்ட கதையோ, இது?
வீரத்தைவிட விவேகமே அவசியம் என்பதை சுட்டிக் காண்பிக்கிறதோ இந்த கதை? கோபத்தைவிட ஆக்கபூர்வமாக செயல்பட சிந்திக்க வைக்க நமது மூதாதையாரின் உருவாக்கிய உத்தியோ, இந்த கதை ? இதோ, அந்தக் கதை

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book