கருத்து: வலியோர் எளியோரை தின்பார்கள்.
உலகம் முழுவதும் எளியோராக, ஏழையாக, பலர் காலம் காலமாக வாழ்வதன் ரகசியம் என்னவாயிருக்கும் என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.
எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும், ஆடு மாடுகளை குறைவான எண்ணிக்கை உள்ள பல மிருகங்கள், மனித மிருகம் உள்பட, வேட்டையாடுகின்றன.
எளியோரான மனிதர்கள் மாத்திரம், கார், விமானம் இரயில் பயணம் செய்ய தேவையான பொருள் இல்லாததோ, இல்லை, பயணம் செய்யவே எந்தத் தேவையும் இல்லாத காரணத்தாலோ என்னவோ, கால் நடையாகவே தன் பயணங்கள் செய்கிறார்கள்.
அதனால், தானும் மற்ற கால் நடைகளான ஆடு, மாடு இனத்தில் ஒன்றாகி விட்டார்களோ?
மனிதனின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்தால் மனிதனுள் பல உருவகங்கள் உள்ளன.
ஒரு ஆடு, ஒரு மாடு ஒரு சிங்கம், நரி,நாய், புலி, மரம், செடி கொடிகள், நடிகன், பாடகன், கவிஞன், வீரன், கோழை, ஞானி, கொலைகாரன், என்று இந்த அண்டசராசரத்தில் உள்ள எண்ணற்ற உயிர்களின் அனைத்து குணங்களையும் இந்த உருவகங்களில் அடங்கியுள்ளன. இது மனிதன் மட்டுமல்லாது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு தனிப்பட்ட உயிருக்கும், இதில் எந்தெந்த குணங்கள் எந்த அளவில் இருக்கும் என்ற கலவையில் மாத்திரமே மாறுபட்டிருக்குமோ?
உயர்ந்த மனிதரின் குணங்களை கொண்ட சில பிராணி வகைகளையும், மிருகங்களின் குணங்களை கொண்ட சில மனிதர்களையும் நாம் வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம்.
கால்நடை மனிதர்கள் :
இதனால் நாம் தீர்மானிப்பது என்னவென்றால், மனிதரில் கால்நடைககே உரித்தான குறைந்த அறிவோடு வாழும் மனிதர்களும் உண்டு..
எந்தக் காலகட்டத்திலும் கால் நடையைகள் கொண்ட அளவிலேயான அறிவும் ஆற்றல்லும் கொண்ட மனிதர்கள் அதிகமாகவும், கொடிய மிருகங்களின் குணமும் அதிக செயலாற்றம் மற்ரும் அறிவு படைத்த மனிதர்கள் சிறிதளாவிலும் இருக்கிறார்கள்.
சிறிதளவிலிருந்தாலும் அவர்களின் பலம், அவர்கள் பெற்ற அறிவு, எண்ணிக்கையில் அதிகமான எளியவருக்கு அனியாயம் செய்வதிலிந்து தெரிந்து கொள்ளலாம்.
எண்ணிக்கையில் அதிகம் இருந்தும், ஆடு மாடுகள், என்றுமே புலி சிங்கங்களை வேட்டையாடியதாக வரலாறு இல்லை. சக்தி இருந்தும், தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாக நாம் கேட்டதில்லை.
ஆடு மாடுகள் தன்னிலை உயர, தங்களை புலி-சிங்கங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். கீழே நீங்கள் படிக்கப்போகும் கதைகளுக்கு கருத்தை அறிய மேலே கண்ட விளக்கம் உதவ வேண்டும்.