"

   கதை14.

ஒரு மறுக்க முடியாத   உண்மை,   அன்றைய பெர்ஷியா – இன்றைய   சிரியா,    இரான், இராக்   நாடுகளை    அடங்கிய பகுதியில் வாழும் மக்களின் கலாசாரம்,  பல   ஆயிரம் ஆண்டுகள் முதிர்ந்தது. இந்த பகுதியை ஆண்ட மன்னர்களும் வாழ்ந்த மக்களும் மிக உயர்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்கள். இதைப்   பிரதிபலிக்கக்கூடியது   அந்த   பகுதியில் வழங்கப்பட்ட பல கதைகள்  உண்டு.     உதாரணத்திற்கு ஒன்று, கீழே.

story 13 mds 2

ஒரு ராஜ சபை. மன்னரும் மதி மந்திரிகளும் கூடியிருக்கிறார்கள்.

அப்போது,  காவலர்கள்,   அவர்க்ளுடையை   நாட்டை ஊடுருவியுள்ள  ஒற்றன் ஒருவனைச் சிறைப்பிடித்து  மன்னன் முன்னால் கொண்டு வருகிறார்கள். ஒற்றன்  பேசும் மொழியை அரச சபையில்,  இரண்டு மந்திரிகள் மாத்திரமே அறிவார்கள்.

விசாரணை  நடத்திய சமயத்தில் மௌனம் சாதித்த அந்த ஒற்றனுக்கு, மரண தண்டனை விதித்தார் மன்னர். ஒற்றன், தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்தான். தனது மொழியில் வசைமொழிகளைப் பொழிந்தான். மன்னர், குறிப்பிட்ட அந்த இரண்டு மந்திரிகளை பார்த்தார்.

மந்திரிகள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

முதலாவது மந்திரி கூறினார். குற்றவாளி, குரானிலிருந்து ஒரு வாசகத்தை கூறுகிறான். என்று.

அது என்ன என்று கேட்டார் மன்னர்.

எந்த மனிதன், தனது கோபத்தை அடக்கி, மன்னிக்கும் குணம் கொண்டிருக்கிறானோ, அவன் வருகையை  சுவர்க்கம்  எதிர் நோக்கி   இருக்கிறது என்பது அதன் சாரம்.  ஏனென்றால் கடவுள் நல்ல   உள்ளம்   கொண்டவனை   நேசிக்கிறார்   என்பதாகும்.

உடனே மன்னர் கைதியைப் பார்த்து, நண்பனே, தக்க சமயத்தில் எனக்கு கடவுளின் விருப்பத்தை நினைவு படுத்தினாய். நல்வழியிலிருந்து தான் தவற இருந்தபோது என்னைக் காப்பாற்றினாய் என்று கூறினார்.

ஒன்றனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இரண்டாவது மந்திரிக்கு பதற்றம்.   முதலாவது   அமைச்சரை   பற்றி   அரசனுக்கு கோபம் கொள்ளச்   செய்ய   இதுவே  தக்க தருணமென்று, பேசத்தொடங்கினார்.   மன்னரே,  அமைச்சர் கூறியது முழுப்பொய்.   அந்த    ஒற்றன் தங்களைத் தகாத வார்த்தைகளால் ஏசினான். அதுவே உண்மை என்றார்.

மன்னர் சிறிது சிந்தனைக்குப் பிறகு, இரண்டவது மந்திரியைப் பார்த்துக் கூறினார். உனது உண்மையை  விட  முதலாவது   அமைச்சரின் பொய்யே மேலானது, என்றார்.

இதன் விளக்கம் என்னவென்றால் :

இரண்டாவது மந்திரி சொல்லப் போவது உண்மையாக   இருக்கலாம். அது போலவே, முதலில் பேசிய அமைசசர் மொழி பெயர்த்ததும் பொய்யாகவும் இருக்கலாம்.

ஆனால் முதல் அமைச்சர் கூறியது, நல்ல எண்ணத்தின் அடிப்படையிலானது (மன்னன், குரான் காட்டிய வழியிலிருந்து தவறிவிடாமல் காப்பாற்றவே, மந்திரியால்  சொல்லப்பட்ட பொய்).

நட்பு, நண்பர்கள்:

இன்று இல்யூஷன் என்ற ஆங்கிலப் பதம் அறியாதவர் மிகவும் குறைவு. இதன் பொருளை, சுருக்கமாக சொன்னால் – மாயை.   விரிவாக சொன்னால் :

இருப்பது இல்லாதது போல   தோன்றுவதும்,    இல்லாதது இருப்பது போலத் தோன்றுவதுமான ஓரு மன நிலைதான் இல்யூஷன் (காட்சிப் பிழை).

மனிதனை  ஆட்டிவைக்கும்  பல மாயை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கியமான இரண்டு –  முதலாவது  காதல், இரண்டாவது நட்பு.

நம்மை கட்டிப்பிடித்து, விடாது தொடரும் இந்த இரண்டும் முக்கியமான நேரத்தில் காணாமல் போய்விடும்.

முக்கியமாக கல்யாணம் ஆனவுடன் காதல் காணாமல் போகும். நாலு காசு லாபம் கிடைக்குமென்றால் ( நஷ்டமாக சந்தர்ப்பம் வருமானால்) நட்பு காணாமல் போகும்.

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் – சில காதலர்களைக் காணும்போது  கண் மட்டுமல்ல, ஆறு அறியும் கருவிகளும் பியூஸ் போனதாக  உணர்வீர்கள்.

அதேபோல, நண்பர்களால் உனக்கு நாசம் விளையும் என்று நீங்கள் எவருக்கும் கூறினால், பிற்காலத்தில் அவர்கள் உங்களை மிகப்பெரிய சோதிடராக நினைப்பார்கள்.

மிக நெருங்கிய நண்பர், நமக்கு, அதிக தீங்கு செய்வதற்கு மிக அருகாமையில்  உள்ளவர்.

நாம் சிலரை உயிர் நண்பன் என்போம். கட்டிப்  புரளுவோம்.   நமது இக்கட்டான நேரங்களில்  நண்பன்தான் உதவுவான் என்று நம்புவோம்.

நமது நட்பினை மற்றவர் கவனித்து வருவார்கள். நம்மேல் கருத்துடையவர்கள் எச்சரிக்கை  செய்வார்கள். நாம்  நம்ப மறுப்போம். எச்சரிக்கைகள்  உண்மைகளாக மாறும்போது, உண்மை  கசக்கிறது.

நமக்கு   இயற்கை   துன்பம் தருவது  நம்  நன்மைக்கே.  நமக்கு துன்பம் வரும்போது மட்டுமே நமது, நண்பர்களை ஒரளவு  அடையாளம் காணமுடியும் என்பது ஒரு உண்மை.

உதாரணத்திற்கு உண்மைச் சம்பவங்களுக்கும் கதைகளுக்கும் கணக்கே இல்லை. கீழே காண்பது, ஒரு பழைய கதை

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book