"

கதை 22

கருத்து: பிடியை விட, பிணிகள் போகும்

story 22 mds 2

மனிதன், தனது வால்களை இழந்து, தனது முன்னோரான வான்-நரர்களிடமிருந்து மாறுபட்டு, கற்றறிந்த போதிலும், குரங்குகளின் சில அடிபடைக் குணங்களை மட்டும் விடவே இல்லை. அதில் ஒன்று – பிடித்ததை விடாதது. அதுவும், குரங்குப்பிடி என்று கேட்டிருக்கிறீர்களா?

தாம் பிடித்தை, விடாத (பிடிவாத) குணத்தினால் குரங்குகள் படும் அவதியை, கீழே காணும் உண்மை நிகழ்வுகளிலிருந்து அறியலாம். பிடித்ததை விடாததன் பின் விளைவுகளை அறியுங்கள்.

ஆப்பிரிக்கக் காடுகளில் ஆனந்தமாகவும் சுதந்திரமாக வசிக்கும் பலவகைக் குரங்குகளுக்கு பல  உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பு.    உலக நாடுகள்   அனைத்திலும்    உள்ள    மிருககாட்சி சாலைளுக்கு  இவைகள்  இடம் மாறி,  கூண்டுகள் என்ற   சிறையில் அடைக்கப்பட்டும்.    காட்சிப் பொருளாக   மாறிவிடும்.   

சுதந்திரத்தை     இழந்து, போதிய உணவும் கிடைக்காமல் தவிக்கும் பல உயிரினங்களில், இந்த ஆப்பிரிக்க குரங்குகளும் உண்டு.

முந்தைய காலங்களில், குரங்குகளைப் பிடிக்க பலவிதமான இயந்திரப் பொரிகளைப் பயன்படுத்தி வந்தனர். இந்தப் பொரிகளை, ஆப்பிரிக்கக் காடுகளில், குரங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில், பொருத்தினார்கள்.

இந்த வகைப் பொரிகளில் சிக்கும் குரங்குகள் பல சமயங்களில் காயங்கள் அடைவதுண்டு. இந்த காயங்களுக்கு உடனடியாக சரியான மருத்துவம் செய்யப்படாததால் பயணத்தின் போது பல குரங்குகள் இறந்துபோகும் அபாயங்களும் உண்டு.

பிராணிகளை நன்றாக அறிய பல விஞ்ஞானிகள் உலகெங்கிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

அவர்கள் நடத்திய ஒரு சோதனையில்,  குரங்குகள் வசித்த காடுகளில் குறுகிய வாய்கள் கொண்ட சில பாட்டில்கள் வைக்கப்படும். அவற்றில் குரங்குகளுக்குப் பிடித்தமான நிலக்கடலை பாதி பாட்டில் வரை நிறப்பட்டன.

பாட்டில்களின் வாயின் அமைப்பு, குரங்கின் கை சுலபமாக உள்ளே நுழைய போதுமானதாக வடிவமைக்கப்பட்டது. அதே சமயம் தனது கைகளில் கடலையைப் பற்றினால், கையை வெளியே எடுக்க இயலாததாக இருக்கும்.

கடலையைக்  கையில் எடுத்த  குரங்குகள்   எவ்வளவு   நேரமானாலும் விடுவதில்லை. அதாவது நகரமுடியாமல் பலமணி நேரங்கள், பாட்டில் அணிந்த கையோடு இருக்கும்.

பணியாளர்கள் இவற்றை உயிருடன்,  காயம் எதுவும் ஏற்படாமல், பிடிப்பது எவ்வளவு  சுலபம்? இந்த முறையில் பலநூறு குரங்குகளைப் பிடித்து பல நாடுகளுக்கு ஏற்றிமதி செய்வது இன்றும் தொடர்கிறது.

குரங்குகள் தங்கள் விடுதலைக்குச் செய்ய வேண்டியதெல்லாம், தானாகப் பிடித்ததை, தானாக விட்டுவிட வேண்டும் அவ்வளவு தான்.

வாசக அன்பரே!   நம்முடைய மிக பெரும் எதிரிகள் நாமேதான். நாம்  ஐங்கருவிகளால் உணர்ந்து, அதை மனதால் ஏற்றி, பிடித்து வைத்திருக்கும் பல  விஷயங்கள் (குரங்கின் கையில் உள்ள நிலக்கடலையைப் போல) — பதவிகள், நண்பர்கள், வழக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாமே  நம்மைச் சிறைப் படுத்துகின்றன.  இந்த சிறிய உண்மையை மனிதரில்  பலர் உணர்வதில்லை.

இந்த   உண்மையை      உணர்ந்து      வாழ்பவரை      நாம்      ஞானிகளாக அறிகிறோம்.

இதை உணராதவர்கள் சாதாரண மக்கள். தனது துன்பங்களுக்கு அறியமைக்கு, நாளை, கோளை, கடவுளை, உற்றாரை, மற்றோரை  குற்றம் கண்டு, தீராத துயரத்தில் வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்வதாக அறிகிறோம்.

(1)  இலவசங்களை விரும்பிப் பிடிக்கிறோம்: நாம் இன்று காபி,  டீ, சிகரெட், மதுபாணம் என்று தேவையே இல்லாத  பல  பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம்  நமது முன்னோர்களின் குரங்குப்பிடிகள்.

அவர்கள் முதலில் இவற்றுக்கு அடிமையாகி, பின்னர் அவர்களின் பல சந்ததிகளை, தன்னை அறியாமல், அடிமையாக்கி இருக்கிறார்கள்.  அவர்கள் அடிமையாகிய கதை நம்மில் பலருக்கு தெரியமல் இருக்கலாம்.  இதோ !.

இவைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்த பல பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க, கடைபிடித்த வழி  இலவசங்கள்.  இவர்கள்  ஆரம்ப காலங்களில் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை  சில காலம் வரை  இலவசமாகமே வினியோகம் செய்தனர்.

இலவசம் என்றால் மகிழ்ச்சியோடு வரவேற்பது மனித இனத்தின் மீது ஒரு சாபம் போலும்.

பலரும்  இவற்றை     இலவசமாகப்    பெற்று, உபயோகிக்கப் பழகி,     சிறிது காலத்தில், இந்த    இலவசங்களுக்கு  முழுவதும் அடிமையாகி விடுகிறார்கள்,  இதைத் தொடர்ந்து,  உற்பத்தி   மற்றும்   விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஓரு சிறிய விலைக்கு விற்கத் தொடங்கி, படிப்படியாக விலையை   உயர்த்தி  இன்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதை நாம் அறிவோம்.

சிகரெட்டினால் மக்கள் கான்சர் போன்ற  கொடிய நோய்கள் தோன்றி, அவதிப்பட்டு ஆண்டுதோரும் லக்ஷக்கணக்கான மக்கள் இறப்பது நாம் அறியாததில்லை.

(2)நம்மை பிடிக்க வைக்கிறார்கள் :   பெரும்பாலான மக்களின் மோசமான பொருளாதார சமூக சூழ்நிலைகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, சில அரசியல் அமைப்புகளும். சில தனிப்பட்ட மனிதர்களும் அதிகம் அறிவில்லாத மக்களின் கைகளில், ஜாதி, மதம் ஆகியவற்றை கொடுத்துப் பிடிக்க வைத்திருக்கிறார்கள். 

நாம் அவற்றைக் கையில் பிடித்ததால் பயன் அடைவது,   நாம் இல்லை.  உங்கள் கையில் (மனதில்) யாராவது எதையாவது பிடிக்கக்  கொடுத்தால், எச்சரிக்கையாக இருங்கள். அதோடு அடிக்கடி ஆப்பிரிக்க குரங்குகளின்  நிலமையை நினைவு கூறுங்கள். 

அடுத்த கருத்து: பெற்றோர் தவறும் கடமைகள் :

இன்றய இளைஞர் சமுதாயத்தின் துன்பங்களுக்கு பெற்றோர்  தன் கடமை தவறுவதும்.  கலாசார சீரழிவு என்ற இரு முக்கிய காரணங்களாகக் கணிக்கலாம்.

இத்துப்  போன கலாசாரங்களின் இறக்குமதி.

காலங்கள்   மாறி  வருகின்றன. அதுவும்  அதிரடியாக.   ஒரு    கலாச்சாரம் மற்றொன்றை காப்பி அடிப்பது ஒன்றும் புதியதில்லை. மேலை நாட்டுமக்கள் நம் கலாச்சாரத்தை அதிகமாக பின்பற்றிவர, நாமோ மேலை நாட்டிலிருந்து, முக்கியமாக, பல இத்துப்போன ஐட்டங்களைத் தேடிப்பிடித்து, நம் நாட்டுக்கு கொண்டு வருகிறோம்.

தண்ங்கள் குழந்தைகளை நல்ல குடிமக்கனாக வளர்க்க நேரம் எங்கே இருக்கிறது? வழி தவறும் குழந்தைகளின் தவறுகளுக்கு யார் பொருப்பு?

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book