கதை 12
கருத்து: வலியோர் எளியோரைத் தின்பார்கள்.
மிகப் பெரிய ஓரு புல் வெளியில் ஒரு ஆடுகள் ஒரு கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு ஆட்டுகுட்டி தன் மந்தையை விடடுப் பிரிந்து, தனியாக மேய்ந்து கொண்டிருந்தது.
அங்கே ஒநாய் ஒன்று இந்த ஆட்டுகுட்டியை பார்த்து அதனருகே வந்தது. ஆடு ஓநாயை கண்டு நடுங்கிய வண்ணமிருந்தது.
இந்த ஒநாய் ஒரு மனிதாபிமானம் கொண்டதோ. ஒரே தட்டாக தட்டி தன் பசியை தீத்துக்கொள்ளாமல், ஆட்டுக்குட்டியிடம் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அந்த இளம் ஆட்டினை ஓரு குற்றவாளியாக குறுக வைத்து, பின்னர் கொன்று தின்றால், தனது மனம் குற்ற உணர்வில்லாமல் செய்ய ஒரு முயற்சியோ?
ஒரு இளம் உயிரை கொல்லப் போகிறோம் என்ற குற்ற உணர்வோ?
ஆட்டுக்குட்டியைப் பார்த்து, கூறியது நீ சென்ற வருடம் என்னை பரிகாசம் செய்தாய் என்று குற்றம் சாட்டியது.
ஆட்டுக்குட்டி பதில் சொன்னது, நான் பிறந்தே ஒரு வருடம் முடியவில்லையே. சற்று சிந்தித்த பின் ஓனாய் நீ எனது நிலத்தில் புல் மேய்ந்தாய் என்று வேறு ஒரு புதிய குற்றத்தை சுமத்தியது.
நான் இதுவரை புற்களை ருசி கண்டதில்லையே என்றது ஆட்டுக்குட்டி.
எனது நீர் ஊற்றிலிருந்து தண்ணீர் குடித்தாய் என்று மேலும் ஒரு புதிய குற்றத்தைச் சாட்டியது ஓனாய்.
இதற்கும் ஆட்டுகுட்டி எதாவது சரியான பதில் வைத்திருக்கும். என் பசி எனக்கல்லவா தெரியும் என்று ஆட்டுக்குட்டியை ஒரே அடியில் வீழ்த்தி அதைக் கபளீகரம் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தது ஓனாய்.
பின் குறிப்பு – பல நாடுகளில் நீதித்துறைகளும் அதிகாரிகள் செயல்படுவது இப்படித்தான். உலகெங்கிலும் ஏழை எளியவர்கள் ஆட்டுக்குட்டியின் நிலையிலும் , செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்கள் ஓனாய்களாகவும் வாழ்ந்து வருவது இந்த கதையில் காணும் விதம்தான்.
உன்னிப்பாகக் கவனித்தால், தினம்தோரும், தொலைக்காட்சிச் செய்திகள் அள்ளித் தருவதும் இந்த உண்மையையே. நல்லவனாக வாழ்வது மிகவும் கடினம்
மனிதன் எல்லா உயிரினங்களை விட உயர்ந்தவன். மிருகங்களுக்கு ஐந்து அறிவென்றால், மனிதனுக்கு ஆறு அறிவு என்றெல்லாம் கூறுவது ஒரே பிதற்றல்கள்.
விலங்குகள், பசித்தபோது மட்டுமே வேட்டையாடும். மனிதன் தனக்கும், தன் குடும்பத்திற்கான இன்றைய, நாளைய, பின்னர் இதுவரை பிறக்காத தன் பல சந்ததிகளுக்காக வேட்டையாடுகிறான். அந்த வகையில் மனிதன் மிருகங்களைவிட மிகவும் கீழானவன்.
விலங்குகளின்-சட்டம், அல்லது காட்டின் நியதி என்று ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அதன் அடிப்படையில், எளியவரை வலியவர் கொள்ளையடிப்பது நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதில் கொடிய விலங்குகள் எளியவைகளை கொன்று தின்பததை நியாயப்படுத்துகிறோம். அதே லாஜிக்கை நமது வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறோம்.
எளியவரின் இயலாமையை, அறியாமையை ஆகிய இரண்டையும் குறிவைத்து வலியவர்களைச் சுரண்டுவதை தற்காலத்தில் ஓரு நியாயமான செயல் என்று கருதும் நிலையை நாம் அடைந்து விட்டோம்.
இதன் முக்கிய அம்சம் – வலியன்தான் வாழ்வான் – என்பதாகும்.
மனிதன் வாழும் சமுதாயம் எந்தவிதத்திலும் இந்த நியதிக்கு விதி விலக்கல்ல. எனவே மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டவன் என்றோ அல்லது உயர்ந்தவன் என்றோ நினைக்க வாய்ப்புகள் அல்லது நியாயங்கள் எதுவுமில்லை.
வலியதான உயிர் ஒன்று எளிமையாக வாழ எண்ணியதின் விளைவை கீழே உள்ள கதையில் பாருங்கள்.