கதை 24
கடவுளைப் பேட்டிகாண்கிறார்.
(இது ஒரு பழைய பேட்டி)
பங்களுருக்கு வரும் ரயிலில் ஏறி, கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்களாதேஷிடம் உதைவாங்கி, உள்ளூருக்குத் திரும்பப் பயந்து, ஓருமாதியாக ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர்களைப் பேட்டிகாண சென்னையிலிருந்து விரைகிறார் ஒரு பிரபல பத்திரிக்கையின் ஸ்போர்ட்ஸ் நிருபர்).
வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு ஏஸி கோச்சில் அமர்ந்த சில நிமிங்களில் உறங்கிவிட்டார். திடீரென்று யாரோ தட்டி எழுப்பி, தவறான இருக்கையில் தான் அமர்ந்திருப்பதை சுட்டிக் காட்டியவரை அடையாளம் கண்டுகொண்டார் நம் நிருபர். அவருக்கு ஓரே அதிர்ச்சி. ஏனென்றால், தட்டி ஏழுப்பியவர், கடவுள்.
உடனே நோட்டும் பேனவும் மின்னல் வேகத்தில் பையிலிருந்து தன் கையை அடைய, நிருபர் தன் பேட்டியைத் தொடங்கினார்.)
நிருபர்: நான் ஓரு புகழ்பெற்ற தமிழ் பத்திரிக்கையின் நிருபர். உங்களுடனான பேட்டி மக்களுக்கு பயன் தரும் என்று நான் நினைப்பதால், நீங்கள் அருள் கூர்ந்து ….
கடவுள் நோ பிராப்ளம். ப்ரொசீட்.
நிருபர் காசில்லை என்றால் கடைக்காரர் மட்டுமில்லை, கடவுளும் கண்டுக்கமாட்டார் என்று பேசப்படுகிறதே. இது எந்த அளவு உண்மை?
கடவுள்: இது பணக்காரர்களால், தன் பணபலத்தை மட்டுமே நம்பியுள்ள சிலரின் கற்பனையில், தனக்குத் தானே உருவாக்கிகொண்ட ஓரு மாயை. இந்த கேள்விக்கு பேட்டியின் முடிவில் தெளிவு கிடைக்கும். நெக்ஸ்ட்.
நிருபர் : ஏழை பணக்காரன், நல்லவர் கெட்டவர், என்ற பல வேறுபாடுள்ள மக்களை படைத்ததேன் ?
கடவுள்: வேறுபாடுகள் எனது விருப்பமிலல்லை. இவை எல்லாம் நீங்கள் விரும்பிக் கேட்டவை.
ரேடியோ சிலோன், விவித்பாரதியைப் போல. பெப்சி உமா உள்படப் பலர் நேயர்களுக்கு அவர்கள் விரும்பிக் கேட்டாவைகளை அளிப்பதைப் போலதான், என்றார்.
புராண இதிகாச திரைப்படங்களைக்கூட நாயகன், நாயகி, வில்லன், டிஷ்யும், டிஷ்யும் இல்லாமல் எந்த மக்களும் விரும்பிப் பார்பார்களா?
படைப்புகள் விரும்பியதை வாரிவழங்குவதே படைத்தவனின் கடமை. நாங்களும் உங்கள் சினிமா டைரக்டர்கள், தயாரிப்பாளர்களைப் போலத்தான் என்று விளக்கமாக விளாசினார்.
ஒரு திரைப்படம் கிளிக்கானால், அதே கதையில் தயாரித்த எத்தனை சினிமாக்களை மக்கள் ஓதுக்கியிருக்கிறார்கள்?
வாழ்கையில் சலிப்பு தட்டாமலிருக்க, நாயகன் வில்லன் உள்ளிட்ட நவரஸங்களையும் பிழிந்து கலந்தால்தானே கதைக்கு ஒரு மரியாதை.
அதுமட்டுமல்ல, கமர்ஷியலாக படம் வெற்றிபெற, கதைக்குக் கதை, இந்த கலவையில் மிகுந்த வேறுபாடு இருப்பதும் மிக மிக அவசியம்.
நிருபர்: கடவுளே, உங்கள் சினிமா உதாரணம் தூள். நீங்கள் பூலோகத்தில் வருகை தருவதே சினிமா பார்ப்பதற்கே என்பது தெளிவாகிறது.
ஆனால் ஏழைகளைப் படைத்து அவர்களை துன்புறவைத்து, பணம் படைத்தவர்களை சுகமாக வாழவைப்பதை கண்டு துயரடைந்த மக்கள், கடவுள் ஓரு சாடிஸ்ட், (பிறர் துயரத்தில் மகிழ்ச்சி அடைபவர்கள்) என்கிறார்களே. இதற்கு என்ன பதில்? (பெரிய லா பாயிண்டை கண்டு பிடித்த மகிழ்ச்சியில் தன் வழுக்கை தலையை கோதிவிட்டு விட்டு, கடவுளை கடைக்கண்ணால் நோக்க …)
கடவுள்: அடே அரை வேக்காடு ஆண்மகனே. இன்றேனும் நன்கு உணர்வாய்.
கண்ணால் கண்டதும் பொய். காதால் கேட்டதும் பொய். உணர்ந்து அறிவதே மெய். காசு இருந்தால் வாழ்வில் வளம் பெறலாம் என்று தவறாக எண்ணி காசின் மேல் ஆசை கொண்டவர் பொருட் செல்வம் மாத்திரமே பெற்றார்.
அறிவுள்ள மற்ற மனிதர்கள் அன்பான, ஆரோக்கியமான இனிமையான வாழ்வு பெற்றாலும், (அனைவரின் அறியாமையால்,) அந்த அனைவரையும் ஏழை என்றே அழைக்கிறார்கள்.
ஏன், அந்த வகையில் நானே ஏழைகளின் நண்பன்தானே.
நான் வசிக்குமிடமோ, இந்த ஏழைகளின் சிரிப்பில்தானே?
நிருபர்: அது எப்படி. ? ஏழைகள் துன்புறுவது கற்பனயோ? செல்வந்தர் சுகமாக வாழ்வது கனவோ?
கடவுள் : கற்பனைதான், கனவுதான்.
உழைப்பில் ஒளிந்திருப்பது உடல் ஆரோக்கியம். உழைத்தபின் வரும் ஓய்வில் கிடைக்குமே அந்த நல்ல உறக்கம் செல்வந்தருக்குக் கிடையாது. வெட்ட வெளியிலும் காற்றிலும் மழையிலும் இயற்கை அன்னையின் அன்பணைப்பாலும் அரவணைப்பாலும் உறுதி கொண்ட அவர்கள் மேனியை கண்டு அஞ்சுமையா அனைத்து வியாதிகளும்.
செல்வந்தருக்கே உரிமையான உழைக்காத ஓய்வில் ஒளிந்திருக்குதய்யா எண்ணிக்கையற்ற நோய் நொடிகள்.
கொட்டிக்கொழிக்கும் செல்வத்தில் அவர்கள் தேடுவதோ பாதுகாப்பு. ஆனால் அதில் புதைந்து கிடப்பதோ வகை வகையன ஆபத்துகள்.
செல்வத்தை கருத்தில் கொண்டு தொடரும் சொந்த பந்தங்கள், அவர்கள் நடத்தும் போலியான, நிரைவற்ற வாழ்க்கை. இதுதான் செல்வந்தர் கேட்டது, கொண்டது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமென்றால் உண்மையான செல்வந்தர் யாரென நீயே சொல்வாய்.
பெரும் செல்வம் ஈட்டிய பலர் ஈகையில் பின் நிற்க, உழைக்கும் கரங்கள் பலவற்றை முன்னே காணலாம்.
நிருபர் : மிஸ்டர் கடவுள், நன்றாகவே சமாளிக்கிறீர். போகட்டும். நீங்கள் பர்சனலாக, ஏழையா, செல்வந்தரா?
கடவுள் அது, நான் படைத்த மனிதனின் பார்வையைப் பொருத்தது. செல்வந்தர்கள் என்னை ஏழைதாக, அடியாளாக, கமிஷன் வாங்கிக்கொண்டு தவறான காரியங்களுக்கும் உதவும் தரகறாக என்னை உணர்ந்து பணத்தை உண்டியலில் கொட்ட, அதை நான் ஏழைகளில் நலனுக்குச் சேர்க்கிறேன்.
செல்வத்தை நாடாதவன் ஏழை, ஏழைகள் எல்லோரும் என்னை செல்வந்தனாக, அருள் பாலிக்கும் வள்ளலாக பார்க்கிறார்கள். இப்போது, சொல் நான் ஏழையா? பணக்காரனா? .
25 பைசா சூடம் கொளுத்தி உளமார செய்யும் ஏழையின் பிரார்தனைகள் முன்பு, அநியாயமாய் சம்பாதித்த பணத்தை, கோடிக்கணக்கில் உண்டியலில் கொட்டும், செல்வந்தர்களின் பிரார்த்தனைகள் சிறிதும் வலுவில்லாதவை.
நிருபர்: … மேலும் ஒரு கேள்வி … ..
கடவுள்: வர வர இந்த மீடியாக்காரர்கள் சிண்டுமுடிவதில் தீவிரம் காட்டுகிறீர்கள். இத்துடன் நான் கழண்டு கொள்ளாவிட்டால், என் பாடு திண்டாட்டமாகிவிடும். குட்பை .என்று கூறியவாரே மறைந்துவிட்டார்.
(ரயில் பெட்டியை சுத்தம் செய்ய உள்ளே நுழைந்த சத்ததில், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பங்களூர் சிட்டியை டிரெயின் வந்தடைந்து சில நிமிடங்களானதை உணர்ந்த நிருபர், தானும் இறங்கத் தயாராகிறார்.)