"

கதை 5.

கருத்து: பொய்கள் நின்று கொல்லும்.

story 5 mds 2

கதையின்  சூழ்நிலை, சற்றே பழமையானது. கடந்த இரண்டு தலைமுறையைச் சேந்தவர்கள், இப்படியும்  நம் முன்னோர் வாழ்ந்தார்களா, என்று அதிசயிக்க வைக்கும்.

அடர்ந்த காடுகளும், அந்தக் காடுகளின் விளிம்புகளில் அழகான கிராமங்கள் பல இருந்த காலம். மக்களின் வாழ்க்கையின் வேகம் மிக குறைந்தது. அவர்கள் பயணங்களுக்கு உபயோகித்த, மெதுவாக நகரும், மாட்டு வண்டிகளைப் போல.

இயற்கை அள்ளித்தரும் சுகமும் – மனதுக்கும், உடலுக்கும் இதமான சுற்றம் சூழல், நம்மால் இன்று ஊகித்தும்    அறிய முடியாதது. 

யாராவது, பின்வரும் காலங்களில் குடி தண்ணீரை பாட்டிலில் நிரப்பி விலைக்குத் தருவார்கள் என்றால் நாம் நம்பியிருக்கமாட்டோம்.   அதேபோல, சில வருடங்கள்  கழித்து, நாமெல்லாம் சுவாசிக்கும் காற்றை பாட்டிலில் அடைத்து, மூக்கில் சொருகிய குழாயுடன் காட்சி தருவோம் என்றால்  இன்று நம்புவது கடினம் இல்லை .

கடந்த  சில நூற்றாண்டுகளுக்கு  முன்பாக    இயற்கையை   ஒட்டியே அøந்திருந்தது நமது வாழ்க்கை.   பல செயற்கையான சமாச்சாரங்கள், ரசாயன   உரம்    மற்றும்   பூச்சி   கொல்லிகள்  அன்று உபயோகத்தில் இல்லை. இவை கலந்த உணவு உண்ணும் மக்களை,  பல வியாதிகள்  அன்று மக்களைத் தொடரவில்லை. மற்றும் பிட்ஸா, பர்கர், கார், கப்பல், ஆகாய விமானம் போன்ற தற்கால வாழ்கையின்  அவசியங்கள்,   இந்த   நிலத்தில்   வந்து சேரவில்லை.

மாறாக, பல பெரியவர்களும், இளைஞர்களும் வயல் வெளியில் வேலை செய்ய, கோவணம் கட்டிய சிறுவர்கள் காட்டின் எல்லையில் ஆடுமாடுகளை மேய்த்து வருவார்கள். இந்த சிறுவர்கள் பள்ளிக்கு சென்று   படிப்பதில்லை. ஆனாலும் பல கலைகளைப் பயில்வதும் பயிற்சி செய்வதும், விளையாடி மகிழ்வதும் இந்த இயற்கை அன்னையின் அரவணைப்பிலே தான்.

இந்த சிறுவர்கள்  கூட்டத்தில்  ஒரு   சிறுவன்,  சீனு.    ஓரு தனித் தன்மை படைத்தவன். மற்றவர்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டவன்.   மற்ற சிறுவர்கள் அவனைச் சுற்றிவரக் காரணம் அவன் செய்யும் விளையாட்டுகளும் விஷமங்களும் விந்தைகள் பல.

பொய்களை   உண்மையைப்   போலவே   பேசி,    அதில் பெரியவர்களை ஏமாற்றுவது ஒரு வழக்கம்.  அந்த செயல் மற்ற சிறுவர்களிடையே சிரிப்பை உண்டாக்கியதால், தன்னை ஒரு பெரும் நகைச்சுவை மன்னனாக நினைத்துப் பெருமை கொண்டான். சீனுவும், தன் நண்பர்களைப் போலவே, தனது நகைச் சுவை மற்றவர் மனதைப் புண்படுத்துவதை உணரவில்லை. நாட்கள் நகர்ந்தன. ஓரு நாள், மதிய நேரம், நமது நகைச்சுவை மன்னர் மற்ற. சிறுவர்களை அழைத்து, அவர்களிடம்   தனது  அன்றைய திட்டத்தை வெளியிட, சிறுவர்கள் அடுத்த சில நிமிடங்களை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். திட்டப்படி, சீனு, ஐயோ, காப்பாற்றுங்கள், புலி ஒன்று வருகிறது என்று கூச்சலிட்டான். அருகே, வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்கள் கம்பு, வேல், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன், கவலை மேலிட, காட்டில் புகுந்தார்கள்.

பெரியவர்களின் கண்கள் புலியைத் தேட, சிறுவர்கள் சிரிக்கலானார்கள். இது சிறுவர்களின் விளையாட்டு என்று புரிந்து கொள்ள, பெரியவர்களுக்குச் சில        வினாடிகளே    எடுத்தது.   கூடியிருந்த    கிராம மக்கள் கோபத்தில் கொந்தளித்தனர். இனிமேல், இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டால் பின்வினை கடுமையாக இருக்குமென்று  எச்சரித்துவிட்டு காட்டிலிருந்து வெளியேறினார்கள்.

மேலும் சில நாட்கள்  சென்றது. இந்த நிகழ்ச்சியை பலர்  மறந்திருப்பார்கள் என்று கணக்கிட்டு இரண்டாவது முறையாக, சீனு, புலியின் வருகையை அறிவித்தான். பலர் கிராம மக்கள், இது சிறுவர்களின் விளையாட்டு என்று  ஒதுக்கி  தன் வேலையில் ஈடுபட, வெகு சிலரே காட்டை நோக்கி விரைந்தனர்.

காட்டை அடைந்த அந்த வெகு சிலருக்கும் ஏமாற்றம் காத்திருந்தது. சிறுவர்களின் குதூகலமும் சிரிப்பும் வந்திருந்த சிலரை மிகுந்த கோபம் கொள்ள வைத்தது.

மூன்றாவது முறை.

காட்டில் வேட்டையாடி உண்ணும் தனது வலிமையை  இழந்த கிழப்புலி ஒன்று  (மேன் ஈட்டர் – என்பார்கள்)  ஒளிந்திருந்து இதையெல்லாம் கவனித்து வந்திருக்குமோ?

அடுத்த தினமே மதிய நேரத்தில் சிறுவர்கள் ஓடிவிளையாடி, களைத்து உறங்கும் வேளையில், இந்த கிழப்புலி,  சீனுவை குறிவைத்து நகர்ந்தது.  சீனு, பயத்தால் என்ன செய்வது என்று அறியாமல்  உறைந்தான்.  விளைவு, சீனுவின் பல உடல் பாகங்கள் புலியின் வயிற்றில் குடியேறியது. அதைக் கண்டு அஞ்சிய, மற்ற சிறுவர்களும், மிரண்ட ஆடு மாடுகளும் பல திசையில் பறந்தன.

இப்போது சிறுவர்கள் எழுப்பிய அலரலை கிராம மக்கள் கேட்டபோதும் எவரும் உண்மை என்று நினைக்கவில்லை. இந்தப் பிள்ளைகளுக்கு அறிவு வளரவில்லை. விளையாட்டு ஒருநாள் வினையாகும் என்ற பழமொழி அவர்கள் அறிந்திடவில்லை என்று   அவர்களின் மனம் வேதனைப்பட்டது..

மாலையில் சூரியன் மறைந்தது. இருள் வானத்தை விழுங்க நினைத்தபோது  மெதுவாக நிலா எழுந்தது. வெகு நேரமாகியும் வீடு திரும்பாத சிறுவன் சீனுவைத்  தேடிச் சிலரும்,   தங்கள் ஆடுமாடுகளைத் தேடி வேறு சிலரும் காட்டை அடைந்தனர்.

சின்னா-பின்னமாக கிடந்த சீனுவின்  சில பாகங்களை கண்டு, விளையாட்டு வினையான நாள்  அன்றே வந்து விட்டதென்பதை உணர்நதனர்.

பொய் பொய்யர்களைக் கொல்லும். 

இந்த உண்மையைக்  கிராமச் சிறுவர்கள் அனைவரும் உணர்ந்ததார்கள். அதனால், பல வருடங்களாக, கிழப்புலிகள், மனிதர்களை வேட்டையாட அந்த கிராமத்தை நெருங்குவதில்லை என்கிறார்கள் கிராம மக்கள்.

வாசகர்களே ! நல்ல வாழ்கை முறைகள் என்ற அந்த பட்டியல் மிகவும் சிறியதுதான். அந்த பட்டியலில்  பொய் பேசாதிருத்தல் என்பதும் ஒன்று.    நான்   என்  வாழ்வில்   பொய்   பேசுவதில்லை  என்ற  ஒன்றே ஒன்று உறுதியை மேற்கொண்டு, உங்கள் வாழ்க்கைப் பயணதைத் தொடருங்கள். அதில் கிடைக்கும் பலனில், விரைவிலேயே, மற்ற உறுதிகளையும்  தேடிப் பிடித்து நல்ல வாழ்வை நீங்கள் அடைவீர்கள்.

பொதுவாக பொய்கள்  லாபத்திற்காகப் பேசப் படுகின்றன, இல்லையா? பொய்கள் பெரிய இழப்பையும் தரலாம் என்று நாம் உணர்வதில்லை. கீழே காணும் கதை யூதர்கள் மத்தியில் உருவானது.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book