கதை 17
கருத்து: நலமாக வாழ எவ்வளவு பொருள் வேண்டும்?
மிகக் குறைந்த அளவு நிலத்துக்குச் சொந்தக்காரர் ஒருவர் தீவிர கடவுள் பக்தர். கடவுளை எப்படியாவது கண்டுபிடித்து (காக்காய் பிடித்து) அதிக நிலம் பெற்று நலமாய் வாழத் தீர்மானித்தார். அதை நிரைவேற்ற பல வருடங்கள், கடும் தவமிருந்தார்.
பக்தனின் தவத்தில் மனம் உருகி, கடவுள் ஓருநாள் பக்தன் முன் தோன்றினார். வழக்கம்போல, பக்தனின் விடா முயற்சியைப் பாராட்டி, பக்தன் வேண்டிய வரம் என்ன என்று கேட்டு அறிந்தார்.
பக்தர் தன் வேண்டுகோளைத் தெரிவித்தார்.
கடவுள் சொன்னார், ஒகே. ஆனால் ஒரு கண்டிஷன். நாளை சூரிய உதயத்தில் தொடங்கி, மாலை சூரியன் மறையும் வரை நீ புறப்பட்ட இடத்திற்கே சுற்றி வந்து சேர வேண்டும். வந்து சேர்ந்தால், சுற்றி வந்த நிலம் அனைத்தும் உன்னைச் சேரும்.
சூரியன் மறையும் தருவாயில், சுற்று தொடங்கிய இடத்திற்கு வந்து சேரவில்லையானால் உனக்கு நிலம் எதுவும் கிடைக்காது. என்று கூறி மறைந்தார்.
மறுநாள் சூரியன் உதிக்கும் முன்னால், பக்தன் தனது ஒட்டத்தைத் தொடங்கினார்.
பேராசை கொண்ட மனிதர், உணவோ, ஒய்வோ இல்லாமல் ஒடினார். காடு மேடு, கல், முள் என்று பாராமல் ஒடினார். கொளுத்தும் வெயிலிலும் ஒடினார். மாலைப் பொழுது சாயும் வரை ஒடினார். உடல் தளர்ந்தது. ஆனால் உள்ளம் தவறவில்லை.
ஓட்டம் தொடங்கிய இடத்தை அடைய இன்னும் சில அடிகளே உள்ளது என்ற நிலையில், சூரியன் மறைந்தது. தளர்ந்த உடலோடு, உள்ளமும் தளர வெட்டுண்ட மரமாய், நிலத்தில் சாய்ந்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் இவர் எங்கிருந்தோ தலை தெரிக்க ஓடிவருவதையும் திடிரென விழுந்த காட்சியையும் கண்டு, காரணம் அறியாமல் அதிர்ந்தனர்.
அருகே வந்த போது சுவாசம் நின்றிருப்பதையும் கண்டனர்.
நண்பர்கள் உறவினர் கூடி, பக்தருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்வித்து, அந்த மண்ணில் ஆறு அடி நீளமும், நாலு அடி அகலத்திற்கு ஒரு குழி தோண்டி அவரை அடக்கம் செய்தனர்.
வானத்தில், கடவுள் நாரதருக்கு விளக்கம் சொன்னார். மனிதனுக்கு அவசியமான நிலம் அவ்வளவுதான். ஆனால், அதிக ஆசைபட்டு மனிதர்களில் பலர் நாம் கொடுத்த வாழ்வைக் கெடுத்துவிட்டு அதிவேகமாக நம்மிடமே திரும்பி வந்து விடுகிறார்களே!
வாசக நண்பர்களே ! உங்கள் சிந்தனைக்கு — மனிதன், பேராசை கொண்டு சொத்துகளைக் குவிக்கிறான். அந்தப் பேராசை அடுத்துள்ளவரைப் பாதித்தாலும் அவன் கவலை கொள்வதில்லை.
நமது நாட்டிலும், பல பின் தங்கிய நாடுகளிலும், தலைவர்கள் என்ற போர்வையில். பலர், ஒவ்வொருவரும் ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய்களை வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பதையும், நமது நாட்டிலும் அண்டை மானிலங்களிலும் பல அசையும் மற்றும் அசையா சொத்துகளாகவும் சேமிக்கிறார்கள். இதைப் பல தொலைக்காட்சி செய்திச் சானல்கள் அறிவித்தவண்ணம் உள்ளன.
மந்திரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்பவர்களும் பெரும் செல்வந்தர்களும் பொதுத்துறை வங்கிகளை, அதன் அதிகாரிகளின் கூட்டோடு மொட்டையடித்து பல கோடி ரூபாய்களை விழுங்கி வருக்கிறார்கள். அவைகளை நஷ்டக் கணக்கில் காண்பித்து நிம்மதியாக இருக்கும் கதைகள் அனைவரும் அறிந்ததே.
இது அவசியமா?
உயிரோடு இருப்பவர்களைப் பட்டினி போட்டு, ஏழைகளை எளியவர்களை, வெள்ளம் பஞ்சம் என்று அவதியுரும் திக்கற்றவர்களைச் சுரண்டி, அவதிக்கு உள்ளாக்கி, தவறான வழியில் சொத்து சேமித்த அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் தலைவர்கள் எத்தனை பேர்? இந்த கறை படிந்த, ரத்தம் தோய்ந்த செல்வம், இவர்களது செல்வங்களை, நலமாக வாழ இடம் தருமா? சுரண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய்களும் தீரும்வரை இவர்களுக்கும் இவர்கள் சந்ததிக்கும் உயிர் இருக்குமா?
பதவிகளை பிடித்தவர்கள் தினம் ஒரு முறையேனும். தங்களுக்கு தானே இந்த கேள்விகளை எழுப்பி, பதிலும் சொல்ல வேண்டும். நாடு பலமடையும், ஏழை மக்கள் பலனடைவார்கள். அடுத்ததாக, சிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு சிறுகதை.