"

கதை 4 .

இந்தக் கதை  உருவான காலத்தில், அரசர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.

story 4 - mds2

ஒரு நாட்டின் தலை நகரத்தில் விளிம்பில், பல ஆண்டுகள் வாழ்ந்த, ஒரு பரந்து விரிந்த ஆலமரம் இருந்தது. அந்த மரத்தில், காலம் காலமாகப்  பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு பெரிய காக்கை கூட்டம் முக்கியமானது.  அந்த காக்கைகளும்   இதர பறவைகளும் அங்கே பல தலைமுறையாக தங்கள் குஞ்சுகளுடன் அமைதியாக வாழ்ந்து வந்தன. மகிழ்ச்சியோ அல்லது துயரமோ இரண்டுமே வெகுநாள் தொடந்து நீடிப்பதில்லை,  இல்லையா?

அந்த வயதான ஆலமரத்தின் அடியில், பல எறும்புகள் கட்டிய கூடுகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன.

இது ஒருபுரம் இருக்க, அந்தத் தலைநகரை அடுத்து இருந்த காட்டில் ஓரு நல்ல பாம்புக் குடும்பம்  நிம்மதியாக வாழ்ந்து வந்தது.  அந்த காலகட்டத்திலும் காடுகளுக்குத் தொல்லை தந்த மனிதர்கள் சிலர்  இருந்தார்கள்.

அவர்கள் காட்டில் மரங்களை வெட்டியபோது ஒரு  பாம்பின் குடியிருப்பு  இடிபாடுகளை  அடைந்தது. அதில் வசித்த ஒர்  நல்லபாம்புக் குடும்பம் இனி அங்கே வாழ்வது கடினம் என்று தீர்மானித்தது.

மனிதர்கள்   கிராமங்களை   விட்டு   நகரங்களுக்கு   நகர்வதைப் போல, பாம்பு, தானும் தன் குடும்பத்தாருடன் அடுத்துள்ள நகரத்திற்கு இடம் பெயர்ந்தது.

நகரத்தில், காக்கைக் குடும்பம் வசித்து வந்த அதே மரத்தடியில் காணப்பட்ட ஒரு பெரிய எறும்புப் புத்தைத் தனதாக்கி, அதில் தன் மிகப்பெரிய குடும்பத்துடன் குடியேறியது.

பாம்புகள் குடியேறிய முதல்நாள் காலையில்,  வழக்கம் போலவே காக்கைகளும் மற்ற பறவைகள் அனைத்தும் ஒலி எழுப்பி, இரைதேடப் பறந்து சென்றன. அதே நேரம், பாம்பும் தன் குடும்பத்துடன் இரை வேட்டைக்குத் தயாரானது.

இதில்,  உணவு வேட்டைக்குத் தகுதி   பெறாத   சிறிய  பறவைக் குஞ்சுகளும்,  சிறிய பாம்புக் குட்டிகளும், தங்கள் இருப்பிடத்திலேயே தங்கிவிடுகின்றன.

பொழுது போகாத பாம்புக்குட்டி ஒன்று,  நமது புதிய  குடியிருப்பின் சுற்றம் சூழலை, சுலபமாகவே  உணரமுடியும் என்ற  பேரறிவோ, புற்றிலிருந்து இறங்கி, அடுத்து இருந்த மரத்தில் ஏறியது.

 உயரத்திலிருந்து கீழே இறங்கிய நல்லபாம்பு குட்டி சுற்றும்   முற்றும் பார்க்கும்போது, மரக்கிளைகளில் பறவைக் கூடுகளையும் அதில் கண்ட பறவைக் குஞ்குகளையும் மற்றும்  முட்டைகளையும்  கண்டு மகிழ்ந்தது.

கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன் முதன் முதலாக ஒரு பெரும் நகரத்திற்கு  வந்து இறங்கி, ஓரு பிட்ஸா கார்னர்,  பாஸ்ட் புட் சென்டர் மற்றும் மல்டிஃப்ளோர் ஷாப்பிங் மால்களை கண்டதில் உண்டாகும் அதிசயம் மற்றும் ஆனந்தம்,  இந்த குட்டிப் பாம்பின் மனத்திலும் அலை மோதியது.

ஒரு பறவைக் கூட்டிலிருந்த முட்டை ஒன்றைக்   குட்டிப் பாம்பு  கபளீகரம்  செய்ய,       பறவைக்         குஞ்சுகளைப்    பயம்  பற்றிக்   கொண்டது.

மாலைநேரம்.  பாம்புகளும் பறவைகளும் தமது இல்லங்களை அடைய. இரண்டிலும் பரபரப்பு காணப்பட்டது.

பறவைக் குஞ்சுகள் தமது கூண்டுக்குள் வேண்டாத ஒரு விருந்தாளி தந்த வருகை, அவை விழுங்கிய முட்டைகளைப் பற்றிய விவரங்களை ஆகியவற்றை அள்ளித்தர, பறவைகள் கோபமும் ஆத்திரமும் அடைந்தன. எதிரடி கொடுக்கச் சூளுரைத்தன. 

வயதில், அனுபவத்தில், அறிவில் முதிர்ந்த காகம் ஒன்று அனைத்து பறவைகளையும் அமைதிகாக்க வைத்து, எல்லா பறவைகளின் கருத்தையும் கேட்டு முடிவாக  தமது திட்டத்தைத் தெரிவித்தது.

அது தெரிவித்த திட்டத்தின்படி, அடுத்த விடியலில், தெரிந்தெடுக்கப்பட்ட  சில காகங்கள் மாத்திரம் அடுத்துள்ள மரங்களில் தங்கி விரோதிகளை அடையாளம் கண்டு கொள்ளும்.

அவற்றின் கண்டுபிடிப்பின் ஆதாரத்தை முன் வைத்து, அன்று மதியம் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. அதுவரை எல்லாக் காகங்களும் அமைதிகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. காகங்கள் அனைத்தும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தன.

மரத்தின் கீழே, பாம்புகளின் குடியிருப்பில் ஒரு கூட்டம். இந்த பாம்புகளின் கூட்டத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை ஒரு சிறிய பாம்பு  செய்தது. தாம் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு செய்ததையும். தனது இந்தக்  கண்டுபிடிப்பினால்    எல்லாப்  பாம்புகளும் அலையாமல், இருந்த   இடத்திலேயே உண்டு உயிர்வாழும் பயனை அடையவிருப்பதாகவும் தெரிவித்தது. அந்த உத்தி அந்த மரத்திலேயே இருப்பது தான் மேலும் ஒரு சிறப்பு என்று முடித்தது.

இதைக் கேட்டு பாம்புகள் சொல்லமுடியாத அளவு மகிழ்ச்சியை  அடைந்தன. மறுநாள் பறவைகள் வெளியேறிய பின்னர் பாம்பில் பெரியதொன்று மரத்திலேயே தங்கி,  சிறிய பாம்பை  பின் தொடர்ந்து   நிலைமையை    தெரிந்து கொள்வது. பிறகு, தெரிந்ததை ஆராய்ந்து   அதன்   பின்னர்   தன் முடிவைச் சொல்வதாக   மூத்த பாம்பு,  முடிவாகக் கூறியது.

அடுத்த நாள் காலையில், மரத்தின் கீழ் இருந்த புற்றிலிருந்து இரண்டு பாம்புகளும் மரத்தில் ஏறுவதை,  கவனித்து வந்த காகங்கள் கண்டன.

காக்கைகள், தங்கள் விரோதி தாங்கள் வசிக்கும் மரத்திலிருந்தே வருவதை அறிந்தன. அவைகளின் குடியிருக்கும் இடத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து தங்கள் தலைவரான  மூத்த காக்கையிடம் உடனடியாகத் தெரிவித்தன.

மூத்த காக்கை,  உடன் இருந்த  காக்கைகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு திட்டத்தை உருவாக்கியது. உடனே, காகங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகின.

எல்லாப் பாம்புகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்பது அல்லது ஒட வைப்பது நமது இலக்கு. ஆனால் அது நம்மால் ஒரு போதும் செய்ய இயலாது. பாம்புகளின் சிறப்பு அம்சங்கள் அப்படிப்பட்ட ஒரு முயற்சிக்குப் பெரும் தடை. அதே சமயம், நாம் இந்த மரத்திலிருந்து இடம்பெயறுவதும் சாத்தியமல்ல.

எனவே, நாம் மூன்றாவது சக்தியை அதாவது பறவைகள், பாம்புகள் இருவரையும் விட,  அதிக சக்திவாய்ந்த ஓருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் இந்த பாம்புகளை அழித்திட ஒரு காரணம் உண்டாக்க வேண்டும்.

மூத்த காக்கை தொடர்ந்தது, மனிதர்களே, இந்த வேலைக்கு மிகவும் தகுதியானவர்கள் என்று முடித்தது.

வெகு விரைவிலேயே – குறிப்பாக – அன்றே,  அப்படி ஒரு சந்தர்ப்பம் காகங்களுக்குக் கிடைத்தது. அந்த நாட்டு இளவரசி, தனது மாளிகையின் குளத்தில் நீராட தனது வைரம் முத்து முதலியவைகளால் செய்யப்பட்ட விலை உயர்ந்த மாலைகளை கரையோரமாக அவிழ்த்து வைத்துவிட்டு, நீராடச் சென்றாள். காத்திருந்த காக்கைகளில் ஒன்று, தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், ஒரு மாலையை கவர்ந்து, அருகிலுள்ள மரத்தை அடைந்தது.

அதே சமையம்  உடனிருந்த  காக்கைகள்  சில   கூட்டாக   ஒலி எழுப்ப. இளவரசியும் காவலர்களும் ஒரு காகம்   மாலையைக் கொண்டு செல்வதையும், பிறகு  அது  அடுத்துள்ள மரத்தில் அமர்ந்ததையும் கண்டனர்.  அதை வாளேந்திய வீரர்கள் தொடர, காக்கைக் கூட்டம் சிறிய தூரத்திலுள்ள மரத்தை அடைவது. இப்படியாக, பல தவணைகளில், காக்கைகளும் வீரர்களும் காக்கைகள் வாழ்ந்து வந்த மரத்தை அடைந்தன.

இந்த காக்கைகளின் தந்திரம், காவலர்கள் மரத்தை அடைய ஏதுவாக்கியது.

காவலர் காணும் வகையில்,  காகம் முத்து மாலையைப் பாம்பின் புற்றில் இட்டு விட்டு, எல்லாக் காகங்களும் அந்தக்  காட்சியிலிருந்து உடனடி மறைந்தன.

காவலர் புற்றை உடைத்து மாலையைத் தேட, பாம்புகள் சீறியவாறு வெளியே வந்தன.  சீறிய பாம்புகளைச் சீவித்தள்ளிய காவலர்கள் புற்றை உடைத்து, மாலையைக் கைப்பற்றி மாலையுடன் அரண்மனையை அடைந்தனர்.

மாலையில் காகங்களும், பாம்புகளும் தம் இல்லங்களுக்குத் திரும்பின. தனது குட்டிகள் சின்னா-பின்னமாக்கப்பட்டு  வீடுகள் முற்றிலும் சிதைந்ததைக் கண்ட பாம்புகள் அனைத்தும் இரவோடு இரவாக இடம் பெயர்ந்து  ஓடி  ஒளிந்தன.

காகங்களுக்கும், மற்ற பறவைகளுக்கும் கிடைத்த மகிழ்ச்சியைக் கேட்பானேன்.

வாசகர்களே ! சமூக   சிந்தனை    மிகவும்      அவசியமானது.   தவறு செய்பவர்களை   தண்டனை கிடைக்க வழி செய்வதும் மிகவும்  அவசியமானது. ஆனால், அதில் வேகம் கூடாது. விவேகமே  அவசியம். வேகம் குறைத்து, சிந்தித்து, சிறப்பாக செயல்பட்டு, எடுத்த காரியத்தில் வெற்றி பெருவது அவசியம். மாறாக, தானும், அதே சூழ்ச்சியாளார்கள் வலையில் சிக்கி, உயிரை இழப்பது சமூகத்திற்கு நன்மை தராது.

 இந்த காகங்களின் அறிவு நமது மனிதர்களுக்கு இனிமேல் கிடைததுவிடும்! காத்திருப்போம்.


 

கருத்து : பொய்கள் நின்று கொல்லும்

அரசன் அன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான் என்பது முது மொழி.

இதன் விளக்கமாவது, தவறுகள் செய்யும் மக்களை நீதி தவறாத அரசன் உடனடி தண்டிப்பது இயல்பு. அப்படித் தவறினால், காலம் தாழ்ந்தலும், இறைவன் அந்தத்  தண்டனையை வழங்குவான் என்பதே ஆகும், இல்லையா? (இறைவன் கொடுக்கும் தண்டனை  எப்பொழுதும் காலம் தாழ்ந்து வரும். அப்படி  வந்த தண்டனைகள் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்).

இந்த சமுதாயத்தில், பொய்கள் எந்த சூழ்நிலைகளிலும் ஒருவர் பேசுவதில்லை என்றால், அவரை அதிசய மனிதராகப் பார்ப்பது  நமக்கு புதியதில்லை.

நான், எனது 40 வருட, அனேகமாக ஒரு அகில இந்திய அனுபவத்தில்  அப்படிப்பட்ட மனிதர்கள் இருவரை மாத்திரமே எனக்கு தெரியும்.

இவர்கள் தங்கள்   அலுவலங்களில், சமுதாயத்தில், குடும்பத்தில் பொய்களை  தவறியும் கூறாதவர் என்ற பெயர் எடுத்தவர்கள்.  சில இக்கட்டான  சமயங்களில்    உண்மையைக்   கூறாமல்    மௌனம் சாதிக்கலாம். ஆனால் இவர்கள் ஒரு போதும் பொய் பேசுவதில்லை. இவர்களுடைய வாழ்க்கையின் பல வெற்றிகளுக்கும் (சில தோல்விகளுக்கும்) இந்த தனித்தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. இவர்கள் முதல்வகை மக்கள்.

இரண்டவது வகையினர், பொய்கள் கூறுவதை,  ஒரு அனிச்சைச் செயலாகக் கொண்டதை, நாம் அறிவோம். 

வேறு சிலரோ  காலையில்  உறக்கத்திலிருந்து விழித்ததிலிருந்து இரவு  உறங்கும் வரை,   சுவாசிப்பதைப் போல,        இடைவிடாது பொய் பேசும் வழக்கத்தைக்   கொண்டுள்ளவர்கள். இந்த பொய்களில் ஒரு குறிக்கோள் இருக்காது. இப்படிப்பட்ட பொய்யர்கள், தம்மைத் தாமே இழிவாக்கிக் கொண்டவர்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தன்னம்பிக்கை இழந்து,  பிறர்மேல் பொறாமை கொண்டு வாழ்பவர்கள். இவர்களை எந்த            சக்தியோ, தண்டனைகளோ திருத்தவே முடியாது.

இந்த இரு முகாம்களுக்கு  இடையே,  இரண்டு தர மக்களிலும் சேராத மூணாம் தர மக்களை நாம் காணாலாம். இவர்கள் சில குறிக்கோள்களை முன் வைத்துப் பொய்  சொல்லும் மக்கள். நாம் அறிந்த,  அந்த முக்கிய குறிக்கோள்கள் கீழே வருமாறு,

பொய் கூறி மற்றவர்களை ஏமாற்றி அதில் மகிழ்ச்சி  அடையும் மக்கள் (ஸாடிஸம்). தண்டனைகளிலிருந்த தப்பிக்க, சிறிய  ஆதாயங்கள் பெற்றிட, தாம் விரும்பாதவர் ஆதாயம் பெறுவதைத் தடுத்திட தமது நண்பர்களை, சிக்கல்களிலிருந்து காப்பாற்ற. விரும்பியதை அடைந்திட, மற்றும் விரும்பாததை விலக்கிட, பிறரை விட தாம் அதிக அறிவு படைத்தவரென்று  காட்டிக்கொள்ள. வேறு சிலருக்கு, பொய், ஒரு தீராத நோய்.

இது போன்ற காரணங்களை அடுக்கிக் கொண்டே  போகலாம்.

பொய்    சொல்பவர்கள்,   எல்லோருமே தங்களை   அறிவு மிகுந்தவர்கள் என்றும், மற்றவரை அறிவு இல்லாதவர்களாகவும் நினைத்துக் கொள்வது வழக்கம்.   இவர்களுக்கு   ஒரே   ஓரு பிரச்சனை, யார் யாரிடம் என்ன   பொய்களைச் சொன்னோம் என்பது நினைவில்லாதது.

சுருங்கச்சொன்னால் –

சிலருக்கு பொய் ஒரு தாற்காலிக மருந்து – முதலுதவி.   

சிலருக்கு,  தங்கள் தொழிலுக்கு   ஆதாரமான ஒரு கருவி, சிலருக்கு,  தங்கள் தொழிலுக்கு ஆதாரமான ஒர் கருவி   ஆதாரமான ஒரு கருவி,

அதிகம் மக்கள் கருதுவது, பொய்   ஒரு   பொழுது  போக்குச் சாதனம்.

வாசகர்களே !  இந்த நான்கு வித மக்களும், நினைவில் கொள்ளாதது  –  பொய்கள் தண்டனைகளைக் கொண்டு வரும்.  தாமதித்து வரும் தண்டனைகள்  தாங்க முடியாத அளவுக்கு வரும் என்றும். அவ்வாறு தாமதம் அதிகமாக வரும் தண்டனைகள் எல்லாமே மிகவும் பலமாக இருக்கும் என்ற உண்மையையும்.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book