கதை 6
ஒரு ஊரில், அன்று வாரச் சந்தைகூடும் தினம்.
இந்தக்கால சிறுவர்களுக்கான ஒரு விளக்கம். சந்தை பெரும்பாலும், வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் ஒரு முறையோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரே ஒருநாள் மாத்திரம் நடத்தப்படும் அந்தக்கால ஸூப்பர் மார்க்கெட் அல்லது மெகாமார்ட். வியாபாரிகள், மாட்டு வண்டிகளில் பலவிதமான வியாபாரத்திற்கான பொருள்களை ஏற்றி வருவார்கள். அடுத்துள்ள பல கிராமங்களிலிருந்தும் மக்கள் கூடி, விற்பதும் வாங்குவதும் நாள் முழுவதும் நடந்தேரும்.
இப்போது கதையைப் படிக்கலாம்.
ஏழை ஒருவர், சந்தைக்கு வந்தார். காலில் இடறிய ஒரு பொருளைக் கையில் எடுத்தார். அதிசயப் பட்டார். அது ஓரு சிறிய பணப்பை. அதில் அவர் கண்டது தங்க நாணயங்கள். அதுவும் நூறு தங்க நாணயங்கள்.
அப்போது கூட்டத்தில் ஓரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஓருவர் தனது பணப்பை ஒன்றைக் காணாவில்லை என்றும் அதைக் கண்டுபிடித்துத் தருவருக்கு தகுந்த பரிசு தரப்படும் என்பது அறிவிப்பின் சுருக்கம்.
பணப்பையைக் கண்டெடுத்த ஏழை, அறிவித்தவரை அணுகி, தான் கண்டெடுத்த பணப்பையை அதன் உரிமையாளாரிடம் அளித்தார். ஒரு வியாபாரியும் செல்வந்தருமான பணப்பையின் உரிமையாளர் பையிலிருந்த தங்க நாணயங்களை எண்ணினார். பின்னர், வெகுமதிக்குக் காத்திருந்த ஏழையை, நீ போய்விடு என்று விரட்டினார். பணப்பையில் இருநூறு தங்ககாசுகளை வைத்திருந்தேன். ஆனால் ஒரு நூறு தங்க காசுகளே பையில் எஞ்சியுள்ளன. காவலாளர்களுக்கு அறிவித்து உன்னைக் கைது செய்யப்படும் முன்பாக தப்பி ஒடிவிடு என்று கூறினார் அந்தப் பொல்லாத செல்வந்தர். இவர் பேராசையின் மறு உருவம் தானோ?
ஏழை, அரச சபைக்கு (அந்தக் கால சுப்ரீம் கோர்ட்) தனது வழக்கை எடுத்துச் சென்றார். அந்தக் காலத்தில் அரசர்களே, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வந்தனர்.
ஏழை, செல்வந்தர் இருவரும், மன்னரிடம் தமது வாதங்களை எடுத்துறைத்தனர்.
தாம் கண்டெடுத்த பணப்பையில், ஒரு நூறு காசுகளே இருந்தது என்றும், செல்வந்தர் கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தகுந்த சன்மானம் அல்லது பரிசாக ஒரு தொகை அளிப்பதாகவும் அறிவித்ததை, அரசரிடம் தெரிவித்தார்.
தான் அந்த அறிவிப்பின்படி பணப்பையை உரிமையாளரான அந்த செல்வந்தரிடம் சேர்ப்பித்ததாகவும். ஆனால் வாக்குறுதியின்படி, பரிசுத் தொகையை அளிக்காமல், செல்வந்தர், தன் பணப்பையில் நூறு தங்க நாணயங்கள் குறைவாக இருப்பதாகவும். அதை நானே எடுத்திருப்பதாகவும், என் மீதே குற்றம் கூறினார். அதைக் காரணமாகச் சொல்லி, அறிவித்தபடி வெகுமதி எதுவும் தருவதாக இல்லை என்றும் கூறியதாக, தனது புகாரை மன்னன் முன் வைத்தார்.
செல்வந்தரும், தனது பையில் இருநூறு தங்கக் காசுகள் வைத்திருந்ததாகவும். அதில் நூறுகாசுகள் குறைவதாகவும். இந்த ஏழையே இந்தக் காசுகளை எடுத்திருக்க வேண்டும் என்று பணிவுடன் கூறினார்.
அரசனுக்கு இந்த வழக்கைத் தீர்த்து வைக்க சில வினாடிகள் கூடத் தேவைப்படவில்லை. நீங்கள் இருவருமே, நல்லவர்கள். உண்மை மாத்திரமே பேசுபவர்கள் என்று நான் கருதுகிறேன்.
ஆகவே, செல்வந்தர் தனது பணப்பையில் இருநூறு காசுகளை வைத்திருந்தார். அது பொய்யாக இருக்க நியாயம் இல்லை. எனவே, ஏழை கொண்டு வந்த பணப்பை செல்வந்தருடையது இல்லை. எனவே நூறு தங்க காசுகள் கொண்ட பணப்பையை, செல்வந்தர் ஏழையிடம் சேர்ப்பிக்க வேண்டும். காணாமல் போன செல்வந்தரின் பணப்பையைத் தேட புதிய முயற்சி செய்ய வேண்டும் என்று தனது தீர்ப்பை அறிவித்தார்.
தான் கூறிய பொய்யினால், தவறவிட்டும் திரும்பக் கிடைத்த செல்வத்தை இழந்தார், செல்வந்தர்.
தனது நேர்மையினால், ஏழை, தான் எதிர்பார்த்ததை விட அதிகமாக பயன் அடைந்தார்.
இந்த கதையை இங்கே எழுதியதின் காரணம், பல சந்தர்பங்களில் பேராசையில் கூறும் பொய்யினால் லாபம் அடைய நினைத்து உள்ளதையும் இழந்த பல சம்பவங்களை நான் நேரில் கண்டதுண்டு. இப்படிபட்ட பொய்கள் சில சமயங்களில் பொய்யர்களுக்கு, தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்குத் தண்டனைகள் பெற்றுதந்த உண்மை சம்பவங்களும் உண்டு.
தலையின் மேலே ஓரு உடை .
தலைப்பாகை, முண்டாசு, டர்பன், தொப்பி, குல்லாய் என்று பல பெயர்கள், பல வகைகள். அது ரெடிமேட் தொப்பியாகட்டும், துண்டினால் அவ்வப்போது கட்டி அவிழ்க்கப்படும் இன்ஸ்டண்ட் வகையாகட்டும், அதற்கான மரியாதையே தனி. கிராமங்களில் பல தலைவர்களை இந்த தலைக்கட்டு இல்லாமல் இனம் கண்டுகொள்ளவே முடியாது,
நமது நாட்டில், முக்கியமாக தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான கவிஞர் ஒருவரையும், மகாராட்டிர மானிலத்தைச் சேர்ந்த பெரும் இந்திய விடுதலை வீரர் ஒருவரையும் அவர்களது தலைப்பாகை இல்லாமல் அடையாளம் காண முடியாது. (மகா கவி பாரதி, பால கங்காதர திலகர்)
அரசியலுக்காக அணியும் தொப்பியும், ஆன்மிகத்திற்கு அணியும் தொப்பிகளும் தனித்தன்மை பெற்றவை.
எல்லா மதங்களுக்கும் தனித் தலைப்பாகை வகைகள் உண்டு. இவைகள் விதவிதமான கை வண்ணங்களில், வண்ணக்கலவைகளில், உலோகங்கள் மற்றும் கணக்கில்லாத பொருள்களைக் கொண்டு தயாராகிறது. மதத் தலைவர்களுக்கு ஒரு வகைத் தலைப்பாகை என்றால், மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு வேறொன்றும் வேண்டுமே !
தலையை காப்பாற்றிக்கொள்ள என்று ஒருவகைத் தொப்பி. சுரங்கமோ அல்லது கனரகத் தொழில் செய்யுமிடமாகட்டும், கட்டுமானத் தளங்களாகட்டும் தன் தலையைக் காப்பாற்றிக் கொள்ள ஓருவகை தொப்பி – ஹெல்மெட்.
சாலை விபத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறுவித ஹெல்மெட். விண்வெளியில் பரந்திடும் வீரருக்கும், விளையாட்டில் தலையை பாதுகாக்க அணியும் தொப்பி வகைகள் அரசாங்க ஆராய்சி நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றவை.
அரசு ஊழியர் பலருக்குப் பலவகை, பல வண்ண தொப்பிகள் உண்டு.
ஒருவர், தன்னை விட உயர்ந்த பதவியில் உள்ள மற்றவருக்கு தன் மரியாதையை தெரிவிக்க மிகவும் உதவுவது இந்தத் தலைப்பாகையே. சிறியவர், பெரியவரின் முன்னிலையில் தனது தலைப்பாகையை அகற்றிவிடுவது ஒரு மரியாதை அல்லது மரபு.
இந்த தொப்பியைப் பற்றி சில நூறு-ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் தீராது. தொப்பியால், இந்த தலை அணிகளால் அடைந்த நன்மைகள், நடந்த கொலைகள், தற்கொலைகள் என்று பல வகையாக சரித்திரங்கள் உள்ளன.