தகவல் பெறும் உரிமைச் சட்டம் தறுதலைச் சட்டமே என்பதும், நமக்கு தேவையான தகவல்களை சான்று நகல்களாகப்பெற சாட்சிய சட்டமே சரியானது என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிவீர்கள்.

அடிப்படைச் சட்ட அறிவே இல்லாது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தகவலைக் கேட்கும் தறுதலைகள் குறித்து, அரசூழியர்கள் சொல்லும் போது, தங்களுக்கு தேவையான முக்கியமான தகவலைக் கேட்காமல், உங்கள் அலுவலகத்தில் எத்தனை நாற்காலி, மேஜை, துடப்பம் உள்ளது, எப்போது வெள்ளை மற்றும் ஒட்டை அடிக்கப்பட்டது என்பன போன்ற கேள்விகளை கேட்பதாக குறிப்பிடுகின்றனர்.

மேலும், அவர்களுக்கு வரும் தகவல் கோரும் கடிதங்களுக்கு பெரும்பாலும், அடுத்த சில நாட்களிலேயே பதிலை தயார் செய்துவிட்டு, இறுதி நாளன்று அல்லது அதற்கு பின்னரே, முன்தேதியிட்டு அனுப்பவே வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார்களாம்.

சாட்சிய சட்டத்தின் கீழ் சான்று நகலைக் கோருவது எப்படி என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கவே செய்கிறது. இதனை தெளிவுப்படுத்தும் வகையில் பொதுநலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் தனிப்பிரிவு குறித்து அவர்களிடமே சான்று நகல் கோரப்பட்டுள்ளது, உங்களின் பார்வைக்காக பதிவிடப்படுகிறது.

நகலர்கள் விதிப்படி, மிகவும் அவசரமென்று சான்று நகல் கேட்டால், மூன்று நாட்களுக்குள்ளும், சாதாரணமாக கேட்டால் ஒரு வாரத்திற்கு உள்ளாகவும் வழங்கிட வேண்டும். அப்படி வழங்கிடவில்லையென்றால் அடுத்தடுத்து என்னென்ன சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005 இரண்டாவது சுதந்திரமா? அரசின் தந்திரமா! என்ற தலைப்பில் திருத்தி எழுதப்படும் நூலில் சொல்கிறேன்.

கேசொ / நிக / 19-2015 தேதி 23-04-2015

பெறுதல்
முதலமைச்சர் தனிப்பிரிவு
தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகம்.
சென்னை -9

பொருள்: நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சியச் சட்டம் 1872 இன் பிரிவு 76 இன் கீழ், முதலமைச்சர் தனிப்பிரிவு குறித்து சான்று நகல் கோருதல்…

அய்யா வணக்கம்.
கீழே குறிப்பிடும் ஆவணங்களானது, ‘நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சியச் சட்டம் 1872 இன் உறுபு 74 இன்கீழ், பொது ஆவணமாகும். இதனை இச்சட்டத்தின் உறுபு 76 இன்கீழ் சான்று நகலாகப் பெறுவதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது’.

எங்களுக்கு தேவையான சான்று ஆவணங்களாவன…

1. இம்முதலமைச்சரின் தனிப்பிரிவு எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

2. எந்த சட்ட அதிகாரத்தின்படி ஆரம்பிக்கப்பட்டது?

3. இம்முதலமைச்சரின் தனிப்பிரிவின் கொள்கையை குடிமக்களுக்கு விளக்கும் வகையில் மக்கள் சாசனம் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா?

4. வெளியிடப்பட்டிருந்தால் அது எங்கு கிடைக்கும், அதன் விலையென்ன அல்லது வெளியிடப்படவில்லை என்றால் அதற்கான சட்டக் காரணம் அல்லது அதிகாரம் என்ன?

5. மக்களின் சட்டரீதியான கோரிக்கைகளை நிறைவேற்றவென்றே பல்வேறு துறைகள் இருக்கும் போதும், அத்துறைகளில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் போதும், இத்தனிப்பிரிவின் அவசியத் தேவையென்ன?

6. இத்தனிப்பிரிவு நிர்வாகம் யாருடைய பொறுப்பில் அல்லது தலைமையின் கீழ் செயல்படுகிறது?

7. இத்தனிப்பிரிவில் மொத்தம் எத்தனைபேர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்?

8. பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்த கடிதத்தை எடுத்த எடுப்பிலேயே அனுப்பலாமா அல்லது சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குத்தான் முதலில் அனுப்ப வேண்டுமா அல்லது ஒரே நேரத்தில் இருவருக்கும் அனுப்பலாமா?

9. பெரும்பாலும், பொதுமக்களால் முதலில் ஊழியர்களிடம் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மீது, அவ்வூழியர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே, அக்கோரிக்கைகள் குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும் நிலையில், இதனை மீண்டும் அதே அரசூழியர்களுக்குத்தான் அனுப்பி வைக்கவேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வமான காரணங்கள் என்னென்ன?

10. இந்திய அஞ்சல் சட்டவிதிகளின்படி, அத்துறைக்கு சமர்ப்பிக்கும் கடிதங்களைஅவர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டுவாடா செய்தாலே போதுமானது என்ற அடிப்படையில்தான், குடிமக்களின் கோரிக்கை கடிதங்கள் உங்களிடம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அஞ்சல்துறை அதன்மீது சம்பந்தப்பட்டவர்களால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்பது யாவரும் அறிந்ததே!

11. இதேபோலவே, உங்களிடம் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கை மனுக்களை பட்டுவாடா செய்வதுதான் இம்முதலமைச்சர் தனிப்பிரிவின் அதிகாரமா அல்லது ஏன் முதலில் நடவடிக்கை எடுக்கவில்லையென கேட்கும் அதிகாரம் உண்டா அல்லது சமர்ப்பித்தப்பின் சம்பந்தப்பட்ட ஊழியர்களை, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் அதிகாரம்தான் உண்டா? எந்த சட்ட அதிகாரத்தின் கீழ்?

12. இம்முதலமைச்சர் தனிப்பிரிவுக்கான பிரத்தியோக இணையப்பக்கத்தில், மக்கள் கருத்து என்ற ஒருபகுதியை வைத்திருக்கிறீர்கள். அதில் மக்கள் தங்களின் கருத்தை பதிவுச் செய்யத்தான் வழிவகை செய்யப்பட்டுளதே ஒழிய, பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படிக்கவோ அல்லது பார்வையிடவோ வசதி செய்யப்படவில்லையே ஏன்? எந்த சட்ட அதிகாரத்தின் கீழ்?

13. இத்தனிப்பிரிவு எப்படி செயல்படுகிறது என்பது குறித்த குடிமக்களின் கருத்தை அறிந்து கொள்ள, குடிமக்களுக்கே உரிமையில்லையா? எந்த சட்ட அதிகாரத்தின் கீழ்?

14. 01-01-2014 முதல் 31-12-2014 வரை குடிமக்களிடம் இருந்து, அஞ்சல் மூலமாகவும், இணையத்தின் வழியாகவும் வரப்பெற்ற கோரிக்கைகள் எத்தனை?

15. இக்கோரிக்கைகளில் எத்தனை கோரிக்கை நியாயமானதென முடிக்கப்பட்டுள்ளது மற்றும் நியாயமில்லையென எத்தனை நிராகரிக்கப்பட்டு உள்ளது?

16. நியாயமானதென்று முடிவெடுக்கப்பட கோரிக்கை குறித்து, குடிமக்கள் எத்தனைபேர் தங்களின் கருத்தை அஞ்சல் வழியாகவும், இ¬ணையத்தின் வழியாகவும் பதிவு செய்துள்ளனர்? அவை குறித்த முழுமையான விபரமென்ன?

என்பனவற்றுக்கான சான்று நகல்களை நகலர்கள் விதிகள் 1971 இன்கீழ், மிகவும் அவசரமாக இம்மின்னஞ்சல் வழியே அல்லது அஞ்சல் வழியெனில் கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர். அஞ்சல் குறியீட்டு எண் 635109 என்கிற முகவரிக்கு வழங்கிட கோருகிறோம்.

இதற்காக கட்டணம் எதையுஞ்செலுத்த வேண்டியிருந்தால், அதுகுறித்த தகவலை உரிய சட்ட வழியில் தெரிவித்தால், அதனை சரிப்பார்த்து செலுத்திட தயாராய் இருக்கிறோம். நன்றி!

ஒப்பம்
சரவணன், நடராஜன், அய்யப்பன், வேலு
புவனா, பிரேமா, சுகுணா, (நிர்வாகிகள்)
(கேர் சொசைட்டிக்கான நிர்வாகிகளில் சிலர்…)

நகல் பிரசுரிக்கப்படுகிறது:

இந்திய சாசனக் கோட்பாடு 51 அ-இன் கீழான குடிமக்களின் கடமை நோக்கத்திற்காக, சமூகத்தின் சுமூகத்திற்கென, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடும், குடிமக்களின் பங்களிப்பு நிதியோடும் எங்களால் பொதுவுடைமை நோக்கில் வெளியிடப்பட இருக்கிற சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களுக்கு…

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book