"

7

விநாயகர் சிலை

விற்பவன் சிலையை கல்லாகவும் வாங்குபவனை கடவுளாகவும் பார்க்கிறான்,

வாங்குபவன் கல்லை சிலையாகவும் விற்பவனை கல்லாகவும் பார்க்கிறான்.

 

 

படி

படிகள் ஏறினால் தான் கடவுளை பார்க்க முடியும் என்று இருந்தேன்,

சிலரை படிக்கும் வரை.

 

 

கதை

என்னவளுக்கோ என் பேச்சில் கதை கேட்க ஆசை,

எனக்கோ அவள் பேச்சை மட்டுமே கேட்க ஆசை–என் வீட்டு குழந்தை.

 

 

ஆசிரியர்

காப்புரிமை பெறாத கருத்து குவியலே,நான் உந்தன் கருத்துக்களின் தொடர்ச்சியே.