"

5

அடுக்கு மாடி கட்டிடங்கள்

அடுக்கு மாடி கட்டிடங்கள்–ஆனால் இங்கு அடுக்கப்படுவது மாடிகள் அல்ல வீடுகள் மட்டுமே,

இதில் பெரிதும் இருப்பது கருத்துப்பிழை அல்ல கட்டிட பிழை மட்டுமே.

 

 

நிலத்தின் நிலையாமை

அன்று நான் விலைமதிப்பற்ற விளை நிலம்,

நேற்று நான் விதியற்ற விளையாட்டு நிலம்,

இன்று நான் விலை போன வீட்டு மனை நிலம்.

 

மறுசுழற்சி மண்ணிற்கு வேண்டாம்,மனிதனுக்கு தான் வேண்டும்.

 

 

 

நகர வாழ்க்கையின் நிலையாமை

நகரும் நட்சத்திரங்களாய் வானூர்திகள்,

நகர வாழ்க்கையின் நிலையாமை.

 

 

இன்றைய மனிதர்கள்

வண்ண விளக்குகளை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகள்–மனிதர்கள்.