உ
கடவுள்துணை 24/04/2011
அன்புள்ள திரு சாரி அவர்களுக்கு
நான் உங்களுக்கு கடிதமாகவே எழுதுகிறேன். நல்ல நண்பர்களுக்குள் அணிந்துரை, முகவுரை, பொழிப்புரை, பதவுரை, எல்லாம் வேண்டாம்.அது நட்புக்கு வில்லனா இருக்கும். அதுக்கு முன்னாடி உங்களைப் பத்தி வாசகர்களுக்கு நான் சொல்ல வேணாமா?
எங்கண்ணன் மறைந்த திரு எம் ஆர் ராஜாமணிக்கு ஒரு நாடகக் குழு இருந்துது. அது MRR தியேட்டர்ஸ், எனக்கு ஒரு நாடகக் குழு இருந்துது, அது விஸ்வசாந்தி. நாங்கள் இருவரும் தனித்தனியே நாடகக் குழுக்கள் வைத்து இருந்தாலும் எங்கண்ணன் நாடகக் குழுவுக்கு நான் அவ்வப்போது கதை, வசனம் எழுதுவேன். அவரது நாடகங்களை இயக்கவும் செய்வேன்.
எனக்கும் எங்கண்ணனுக்கும் மிகப்பெரிய வித்யாசம் உண்டு, கதைக்குத் தகுந்தா மாதிரி ஆட்களைத் தேடுபவர் அவர். எனது நாடகக் குழுவில் இருந்த என் நண்பர்களுக்கு தகுந்தா மாதிரி பாத்திரங்களை உருவாக்குவேன் நான். In Shorts, He who more bothered About The Quality Of His Plays And I Was More Bothered About Retaining My Friends With Me.
“கீழ்வானம் சிவக்கும்” அப்பிடீங்கற கதையை எங்கண்ணன் நாடகமா போட ஆசைப்பட்டு அதை டைரக்ட் பண்ண என்னக் கூப்பிட்டார். அந்த நாடகம்தான் பிற்காலத்தில் சிவாஜி சார் நடிச்சு அதே பேர்லே வெளிவந்த சூபர் ஹிட் படம்.
அப்படி அந்த நாடகத்தை தயாரிக்க நினைச்சபோது படத்தில் சரத்பாபு நடிச்சாரே அந்தக் கதாபாத்திரத்திலே, சிவாஜி சார் மகன் கதாபாத்திரத்திலே சரிதா கணவர் கதா பாத்திரத்திலே, நடிக்க அழைத்து வரப்பட்ட இளஞர்தான் Mr சாரி. அந்தக் காலத்திலே அவர் TVS STAFF. பழகின ஒரே நாள்லே தெரிஞ்சிது பக்கா ஜென்டில்மேன்னு. ஆனா அவருக்கு கொடுக்கப்பட்ட்து பக்கா அயோக்கியன் Role. நல்லா நடிச்சார் ,நல்ல நண்பரானார். இதான் எனக்கும் Mr. சாரிக்கும் பழக்கம் ஆரம்பிச்ச கதை.
இப்ப Mr. சாரிக்கு நேரிடையா எழுதறேன்.
Mr. சாரி இடைப்பட்ட காலங்களில் நீங்க பல குழுக்கள்ல நடிச்சது, பல டெலிவிஷன் சீரியல்கள்ல நடிச்சது , TVS லேருந்து சுய ஓய்வு பெற்றது, குழந்தைகுட்டிகளை Settle பண்ணது எல்லாருமே ஒவ்வொரு கோணத்திலேயும் ( உங்க கடமையை நீங்க ஒழுங்கா செய்யறவர்ன்னு உலகத்துக்கு நிரூபிச்சுக் காட்டியது
இப்ப “தமிழ்த்தேனீ” ங்கற பேர்லே எழுத்தாளனா நீங்க வளந்துட்டு வந்த செய்தி மனதுலே தேனா பாஞ்சுது. “வல்லமை “ அப்பிடீங்கற தலைப்புல
52 சிறுகதைகள் எழுதி அதுக்கு உங்க அணிந்துரை வேணும் சார்ன்னு என் முன்னாடி வந்து நின்னபோது மூணு விஷயங்கள் என் மனசிலே ஓடிச்சு.
•ஒரே தலைப்புல பத்து கதாசிரியர்கள் கிட்ட பத்து விதமான கதைகள் வாங்கி , ஒவ்வொரு கதையையும் இரண்டு மணி நேர டீ வீ சீரியல் நாடகமா எடுத்து, அதை ஜெயா டீவீல ஒளிபரப்ப Proposal கொடுத்திருக்கற விஷயம் Mr. சாரிக்கு எப்பிடித் தெரிஞ்சிது? அதுதான் நட்பின் ஒரே கோண சிந்தனையா?
• ஒரு கதையை யோசிச்சு 52 பக்கம் எழுதறது ரொம்ப Easy. ஆனா 52 விதமான கதைகளை யோசிச்சு ,அதுக்கு ஒரு ஆரம்பம் ஒரு நடு, ஒரு முடிவு கொடுத்து எழுதற “இம்சை” இருக்கே . Mr. சாரி தைரியசாலி சார் நீங்க. உங்ககிட்ட “வல்லமை “ இருக்கு .
•52 கதைகளையும் படிச்சேன், ஒவ்வொண்ணா விமர்சனம் எழுதினா அது அறுக்கும். ஒட்டு மொத்தமா எழுதறேன். நிறையையும் எழுதறேன், குறையையும் எழுதறேன்.
•டீ வீ தயாரிப்பாளர்களுக்கு ஏன் நீங்க உங்களை கதாசிரியரா அறிமுகப் படுத்திக்கலை, அப்பிடி Proper ஆ அறிமுகப் படுத்திகிட்டு இருந்தா ராடன் டீ வீ லேயோ ,அல்லது அந்த மாதிரி ஒரு பெரிய தயாரிப்பு கம்பனியிலேயோ நீங்கதான் பர்மனன்ட் “கிரீயேட்டிவ் ஹெட்” அந்தத் திறமை உங்ககிட்ட இருக்கு.
•வசனங்களுக்கு கொடுக்கற அழுத்தத்தைவிட மனப் போராட்டங்களுக்கு ,மன உணர்வுகளுக்கு ,மன அழுத்தங்களுக்கு நீங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கறதுனால் Re Recording க்கு Importance கொடுத்து Visuval ஆ ஒரு சீனைப் பார்க்க முடியுது.
•கதைகளுக்கு ஆரம்பம் இருக்கு , Build up இருக்கு , Cinima இருக்கு so பூரணமா இருக்கு, பர்சனல் லைப்ல உங்க Character மாதிரியே
குறைகள்:- ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அழகு நல்ல எடிட்டரா இருக்கணும். உங்க கதைகளை நீங்களே மறுபடியும் படிச்சுப் பாருங்க, 10 கதைகளையாவது நீங்களே வீசி கடாசிடுவீங்க.
•Family Subject தான் நல்லா வருதே, எதுக்காக புதுசு புதுசா Frame பண்ண ஆசைப்படறீங்க? Readers Srilanka வுக்கு Visa கொடுத்தா Srilanka தான் போகணும் Malaysia போகக் கூடாது.
•திருவல்லிக்கேணி, மைலாப்பூர், ,மாம்பலம், தாண்டி தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் இங்கெல்லாம் போங்க,
•“மன்னி “ யைப் பத்தி எழுதுங்க ஆனா “அண்ணியைப் “பத்தியும் எழுதுங்க .அதே சமயம் “மாமா”வைப் பத்தியும் எழுதுங்க.நான் அந்தக் காலத்தில பண்ணின தப்பை பண்ணாதீங்க. Brahminism தலைதூக்குது.
• இயக்குனர்
விசு